ENQUIRY geetanjaliglobalgurukulam

Thursday, 19 October 2023

40 சத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரார்த²னா

 






40 சத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரார்த²னா

ஆத்³யேதி வித்³யேதி ச கத்²யதே யா யா சோத³யேத்³பு³த்³தி⁴முபாஸகஸ்ய . த்⁴யாயாமி தாமேவ ஸதா³(அ)பி ஸர்வசைதன்யரூபாம்ʼ ப⁴வமோசனீம்ʼ த்வாம் .. 40-1.. ப்ரதிஷ்டி²தா(அ)ந்த꞉கரணே(அ)ஸ்து வாங்மே வதா³மி ஸத்யம்ʼ ந வதா³ம்யஸத்யம் . ஸத்யோக்திரேனம்ʼ பரிபாது மாம்ʼ மே ஶ்ருதம்ʼ ச மா விஸ்ம்ருʼதிமேது மாத꞉ .. 40-2.. தேஜஸ்வி மே(அ)தீ⁴தமஜஸ்ரமஸ்து மா மா பரத்³வேஷமதிஶ்ச தே³வி . கரோமி வீர்யாணி ஸமம்ʼ ஸுஹ்ருʼத்³பி⁴ர்வித்³யா பரா ஸா(அ)வது மாம்ʼ ப்ரமாதா³த் .. 40-3.. த்வம்ʼ ரக்ஷ மே ப்ராணஶரீரகர்மஜ்ஞானேந்த்³ரியாந்த꞉கரணானி தே³வி . ப⁴வந்து த⁴ர்மா மயி வைதி³காஸ்தே நிராக்ருʼதிர்மா(அ)ஸ்து மித²꞉ க்ருʼபார்த்³ரே .. 40-4.. யச்ச்²ரூயதே யத்க²லு த்³ருʼஶ்யதே ச தத³ஸ்து ப⁴த்³ரம்ʼ ஸகலம்ʼ யஜத்ரே . த்வாம்ʼ ஸம்ʼஸ்துவன்னஸ்தஸமஸ்தரோக³ ஆயு꞉ ஶிவே தே³வஹிதம்ʼ நயானி .. 40-5.. அவிக்⁴னமாயாத்விஹ விஶ்வதோ மே ஜ்ஞானம்ʼ ப்ரஸன்னா மம பு³த்³தி⁴ரஸ்து . நாவேவ ஸிந்து⁴ம்ʼ து³ரிதம்ʼ ஸமஸ்தம்ʼ த்வத்ஸேவயைவாதிதராமி தே³வி .. 40-6.. உர்வாருகம்ʼ ப³ந்த⁴னதோ யதை²வ ததை²வ முச்யேய ச கர்மபாஶாத் . த்வாம்ʼ த்ர்யம்ப³காம்ʼ கீர்திமதீம்ʼ யஜேய ஸன்மார்க³தோ மாம்ʼ நய விஶ்வமாத꞉ .. 40-7.. க்ஷீணாயுஷோ ம்ருʼத்யுக³தான் ஸ்வஶக்த்யா தீ³ர்கா⁴யுஷோ வீதப⁴யான் கரோஷி . ஸங்க³ச்ச²த꞉ ஸம்ʼவத³தஶ்ச ஸர்வான் பரோபகாரைகரதான் குருஷ்வ .. 40-8..ஹம்ʼ பா³லிஶபு³த்³தி⁴ரேவ த⁴ர்மானபி⁴ஜ்ஞோ(அ)ப்யபராத⁴க்ருʼச்ச . ஹா து³ர்லப⁴ம்ʼ மே கபிஹஸ்த
மர்த்யோ ஹ்யபுஷ்பஸுமால்யவச்சீ²ர்ணமித³ம்ʼ ந்ருʼஜன்ம .. 40-9.. யதா² பதா² வாரி யதா² ச கௌ³꞉ ஸ்வம்ʼ வத்ஸம்ʼ ததா²(ஆ)தா⁴வது மாம்ʼ மனஸ்தே . விஶ்வானி பாபானி விநாஶ்ய மே யத்³ப⁴த்³ரம்ʼ ஶிவே தே³ஹி ததா³ர்திஹந்த்ரி .. 40-10.. ப³ஹூக்திபி⁴꞉ கிம்ʼ விதி³தஸ்த்வயா(அ)ஹம்ʼ புத்ர꞉ ஶிஶுஸ்தே ந ச வேத்³மி கிஞ்சித் . 

ஆக³ச்ச² பஶ்யானி முகா²ரவிந்த³ம்ʼ பதா³ம்பு³ஜாப்⁴யாம்ʼ ஸததம்ʼ நமஸ்தே .. 40-11..



தசகம் 40

இந்த 40 ஆவது தசகமும் 41 ஆவது தசகமும் நித்ய ஜபத்திற்கு உகந்தது. 40 ஆவது தசகத்தில் தேவி பாகவதத்திலுள்ள தேவீ காயத்ரீ மந்திரத்தை முதல் ஸ்லோகத்தில் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து உபநிஷத் மந்திரங்களைக் குறிக்கும் பிரார்த்தனைகள். “வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்” இது 2 ஆவது ஸ்லோகத்தில் வருணிக்கப் படுகிறது. “ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” இது 3 ஆவ்து ஸ்லோகத்திலும் “அணிதாகரணமஸ்து” இது 4 ஆவது ஸ்லோகத்திலும், “ஸ்திரைர் அங்கை சுற்றுவாம் ஸஷ்டுதிர் வஸே தேவஹிதம் யதாது” இது 5 ஆவது ஸ்லோகத்திலும், “ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் ஊர்வாருகமிவ பந்தனாத், ம்ருத்யோர் முக்ஷீய மாம் ருதாத்” என்னும் மிருத்யுஞ்ய மந்திரத்தை நினைவு கூ றும் 7 ஆவது ஸ்லோகம், இவைகள் எல்லாம் தினமும் சொல்வதற்கு உகந்தது

”ஸர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் வித்யாம் சதீமஹீ புத்திம் யோன: ப்ரோசோதயாது” இதுதான் தேவி காயத்ரீ.

1. ஆத்யேதி வித்யேதி, ச கத்யதே யா
யா சோதயேத் புத்தி,முபாஸகஸ்ய
த்யாயாமி தாமேவ, ஸதாSபி ஸர்வ
சைதன்ய ரூபாம், பவமோசனீ த்வாம்

அம்பாள் ஆத்யை. அவள் இல்லை என்ற காலமே இல்லை. அதனால் தான் அவள் ஆத்யை. வித்யையும் அவித்யையும் அவளே. யாரிடம் வித்யா ஸ்வ்ரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு முக்தியையும், யாரிடம் அவித்யா ஸ்வரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு பந்தத்தையும் தருகிறாள். எல்லா ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான். இதுதான் தேவி காயத்ரியின் அர்த்தம்.

2. ப்ரதிஷ்டிதாSந்த:, கரணேஸ்து வாங் மே;
வதாமி ஸத்யம், ந வதாம்ய ஸத்யம்;
ஸத்யோக்திரேனம், பரிபாது மாம், மே
ச்ருதம் ச மா விஸ்,ம்ருதிமேது மாதஹ

ஒருவன் எப்படி நினைக்கிறானோ அதற்கு ஏற்ப அவன் வார்த்தைகளும் இருக்கும். வார்த்தைகள் எப்படியோ செயலும் அப்படியே. சொல், செயல், சிந்தனை எல்லாம் ஒன்று போல் இருந்தால் அவன் அதிர்ஷ்டசாலி. நல்ல சிந்தனை இருந்தால் தான், சொல்லும் செயலும் நல்லதாக இருக்கும். இதை இயக்கும் சக்தி நம்முடைய உள்மனம். தன்னுடைய உள்மனமும் நல்ல சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். இந்த நல்ல எண்ணம் தன்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறார். எவ்வளவு நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ அத்தனை அறிவும் வளரும். கேட்டதை மறந்தால் எந்த பயனும் இல்லை. அம்பாளின் அனுக்ரஹம் இருந்தால் கேட்டவைகள் மனதில் நிலைக்கும். நிறைய ஸ்ருதி வாக்யங்களின் அர்த்தம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ” வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்” இதற்கு இதுதான் அர்த்தம்.

3. தேஜஸ்வி மேSதீத,மஜஸ்ரமஸ்து;
மா மா பரத்வேஷ,ம திஸ்ச தேவி!
கரோமி வீர்யாணி, ஸமம் ஸுஹ்ருத்பிர்;
வித்யா பரா ஸாSவது மாம் ப்ரமாதாது

எதைக் படிக்கிறோமோ, அதாவது கற்றுக் கொள்கிறோமோ அதை இயன்றவரையில் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாராயணீயம், தேவீ நாராயணீயம், பகவத் கீதை எல்லாம் படித்துவிட்டு, நல்ல தத்துவங்களை அறிந்து கொண்டு, பிறரிடம் அன்பில்லாமல் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் அதனால் பயன் இல்லை. பிறரிடம் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் மன அமைதி இருக்காது. இதை அனுபவத்தில் உணரலாம். அன்பிருந்தால் மன அமைதி கிடைக்கும். தனக்கு மன அமைதி இல்லாமல் போய்விடக் கூடாது என்று ஆசிரியர் பிரார்த்திக்கிறார். எல்லோரும் ஒன்று போல் ஸத் கர்மங்களைச் செய்து ஒன்று போல் பயனைப் பெற வேண்டும். அப்பொழுதான் ஜீவசமூகத்தில் சாந்தி இருக்கும். நம்முடைய செயல் தவறாக ஆகாமல் இருக்க பரமவித்யையை அப்யாசம் செய்ய வேண்டும். பரம ஞானம் வந்தால் தவறு செய்ய மாட்டான். ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” என்பதன் பொருள் இதுதான்.

4. த்வம் ரக்ஷ மே, ப்ராணசரீர கர்ம
ஞானேந்த்ரியாந்த:, கரணானி தேவி!
பவந்து தர்மா, மயி வைதிகாஸ்தே;
நிராக்ருதிர்மாSஸ்து, மித: க்ருபார்த்ரே!

பிராண சக்தி ஒருவனை சக்தனாக்கும். பிராணன் துர்பலன் ஆனால் சரீரமும் மனசும் துர்பலன் ஆகும். வாக்கு, கை, கால், ஆண்-பெண் குறி, புட்டம் இவைகள் செயற்புலன்கள். காது, சருமம், கண், நாக்கு, மூக்கு இவைகள் அறிவுப்புலன்கள். சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் இவைகள் அந்தகரணத்தின் விருத்தி பேதங்கள். இவை எல்லாம் சேர்ந்தது இந்த சரீரம். இந்த ச்ரீரத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யார் செய்வது? நாம் எவ்வளவு முயற்சித்தாலும் நம்மால் அது முடியாது. அம்பாள் தான் அதைச் செய்ய வேண்டும். இந்த ஸ்தோத்திரதின் ஆசிரியர் அதை அம்பாள் பொறுப்பில் விட்டு விடுகிறார். வேதம் செய்யக் கூடிய, செய்யக் கூடாத கர்மங்களைப் பற்றிச் சொல்கிறது. வேதம் சொல்லும் செய்யக்கூடிய கர்மங்களை நான் செய்ய வேண்டும். செய்யக்கூடாத கர்மங்களை நான் செய்யக்கூடாது. அப்படியான புத்தியை எனக்குத் தா என வேண்டுகிறார். எனக்கு அம்பாளிடம் பக்தியும், அம்பாளுக்கு என்னிடம் கருணையும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.

5. யத் ச்ரூயதே யத், கலு த்ருச்யதே ச;
ததஸ்து பத்ரம், ஸகலம் யஜத்ரே!
த்வாம் ஸம்ஸ்துவன் அஸ்த ஸமஸ்தரோக
ஆயு: சிவே! தேவ,ஹிதம் நயானி

யாரைத் திருப்தி படுத்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது அம்பாள் தான். அவள் கேட்பதும் காண்பதும் நல்லதாக இருக்க வேண்டும். அந்த தேவியிடம் தனக்கு தேவஹிதமான ஆயுள் வேண்டும் என வேண்டிக்கொள்கிறார். அதாவது தான் செய்ய நினைத்திருக்கும் காரியங்கள் நிறைவேறும் வரை ( பூஜை, பாராயணம் போன்ற கடமைகளும் ஆசைகளும்) எந்த காரணத்தாலும் அதாவது நோய் போன்றவைகளால் பீடிக்கப்பட்டுத் தன் ஆயுள் முடிந்து விடக்கூடாது என வேண்டிக்கொள்கிறார்.

6. அவிக்னமாயாத்,விஹ விச்வதோ மே
ஞானம், ப்ரஸன்னா, மம புத்திரஸ்து;
நாவேவ ஸிந்தும், துரிதம் ஸமஸ்தம்
த்வஸேவயைவாதி,தராமி தேவி

காண்பவைகளும், கேட்பவைகளும் புதுப் புது அறிவைத் தரவேண்டும். எல்லாவிதத்திலிருந்தும் அறிவு வளர வேண்டும். அறிவு வளர வளர புத்திப் பிரகாஸமாகும். புத்தி தெளிந்தால் பாப வாஸனைகள் நசிக்கும். ஒரு கடலைக் கடக்க ஒரு கப்பல் வேண்டும். அதுபோல தேவி த்யானம் என்ற கப்பலின் உதவியால் துரித ஸாகரத்தைக் கடக்கலாம். அதாவது துன்பம் தரும் ஸம்சார ஸாகரத்தைக் கடக்கலாம்.

7. உர்வாருகம் பந்,தனதோ யதைவ
ததைவ முச்யேய, ச கர்மபாசாத்
த்வாம் த்ர்யம்பகாம் கீர்த்தி,மதிம் யஜேய;
ஸன்மார்க்கதோ மாம், நய விச்வமாதஹ

பழைய நாட்களில் பூஷணிக்காய், பறங்கிக்காய் போன்றவைகளை ஒரு உறி போன்ற கயிற்றில் கட்டி வைத்திருப்பார்கள். குளிர் சாதனப் பெட்டி இல்லாத காலம் அது. நாட்கள் பல ஆனாலும் பூசனிக்காய் ஒன்றும் ஆகாது. ஆனால் அதைக் கட்டி இருக்கும் கயிறு நைந்து போனால் பூசணிக்காய் கீழே விழுந்து உடைந்துவிடும். அதைப் போல நம்முடைய கர்மம் தீரும் வரை நாமும் பூசணிக்காய் போலத்தான். கர்மம் முடிந்ததும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று விடுவோம். கர்மம் என்ற கயிற்றிலிருந்துத் தனக்கு விமோசனம் வேண்டும் என்று ஆசிரியர் வேண்டிக் கொள்கிறார். அதாவது தன்னுடைய கர்மம் தீரும் வரை, என்னை இந்த உலகில் விட்டு வை என்று வேண்டிக் கொள்கிறார். ( கர்மம் முடியாவிட்டால் மீண்டும் பிறக்க வேண்டும்) தேவிக்கு மூன்று கண். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம். ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுசுக்தி. பூதம், வர்த்தமானம், பாவி (past, present, future). இப்படி எல்லாவற்றிலும் தேவியின் பார்வை இருக்கிறது. அவள் திருஷ்டி படாத இடமே இல்லை. என்னை நீ நேர்வழியில் நடத்த வேண்டும் என்று வேண்டுகிறார்.

8. க்ஷீணாயுஷோ ம்ருத்யுகதான் ஸ்வசக்த்யா
தீர்க்காயுஷோ வீத,பயான் கரோஷி;
ஸங்கச்சத: ஸம்,வதஸ் ச ஸர்வான்
பரோபகாரை, கரதான் குருஷ்வ

இறந்தவனுக்கும் உயிர் கொடுக்க தேவியால் முடியும். 36 ஆவது தசகத்தில் பிரியவிரதனின் இறந்த மகனுக்கு தேவஸேனா உயிர் கொடுத்தாள் என்பதைப் பார்த்தோம். எல்லோரையும் பரோபகாரர்களாக்க அன்னையால் முடியும். மனித வாழ்க்கையின் யாத்திரையிலும், அனைவருக்கும் ஒற்றுமை வேண்டும்.அந்த ஒற்றுமை உணர்வை அனைவருக்கும் உண்டாக்க அம்பாளால் முடியும். அதனால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க தேவியை ஆசிரியர் வேண்டுகிறார்.

9. மர்த்யோ ஹ்யஹம் பாலிச,புத்திரேவ
தர்மானபிஞ்ஞோ, ப்யபராத க்ருச்ச;
ஹா! துர்லபம் மே, கபிஹஸ்த புஷ்ப
ஸுமால்யவத் சீர்ண,மிதம் ந்ருஜன்ம

ஒரு ஜீவன் மனிதனாகப் பிறப்பது அவனுடைய பாக்யம். அப்படிக் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை விவேகியானவன் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவுள்ள மனிதர்களைத் தேடி, ஸ்வதர்மத்தைத் தெரிந்து கொண்டு, அதைத் தவறாமல் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் ராக த்வேஷம் என்ற அழுக்கு அழியும், மனம் தூய்மை யாகும். தூய்மையான மனதில் தூய்மையான தேவி பக்தி வளரும். அவன் பரமபதம் அடைவான். இதையெல்லாம் அடையாத மனித ஜன்மம் வீண். அவன் பிறப்பு குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல் ஆகும். தன் ஜன்மம் அப்படி ஆகிவிடக் கூடாது என ஆசிரியர் வேண்டுகிறார்.

10. யதா பதா வாரி, யதா ச கௌ: ஸ்வம்
வத்ஸம் ததாSSதாவது மாம் மனஸ்தே;
விச்வானி பாபானி, வினாச்ய மே யது
பத்ரம் சிவே! தேஹி ததார்த்திஹந்த்ரி!

ஆறு, குளம் போன்ற இடங்களிலிருந்து தண்ணீரை ஒரு குழாயின் மூலம் திறந்து விட்டால் தண்ணீர் சீராக வீணாகாமல் வரும்.அதைப் போல ஒரு பசுவை அவிழ்த்துவிட்டால் அது கன்றைத் தேடி வரும். இதைப் போல அம்பாளின் கருணையும் என்னை நோக்கி வரவேண்டும். நான் ஏதும் பாபம் செய்திருந்தால் அதையும் நீ போக்கி விடு .அது உன் கருணைக்குத் தடையாக இருக்கக் கூடாதுஎன்று பிரார்த்திக்கிறார்.

11. பஹூக்திபி: கிம்? விதிதஸ்த்வயாSஹம்
புத்ர: சிசுஸ்தே, ந ச வேத்மி கிஞ்சிது;
ஆ கச்ச பச்யானி, முகாரவிந்தம்;
பதாம்புஜாப்யாம், ஸததம் நமஸ்தே

அம்பாள் லோகமாதா. ஸகல ஜீவன்களுக்கும் அன்னை. இந்த ஸ்தோத்திரக்காரர் ஒரு குழந்தை. அவரால் அதிகமாகப் பேச முடியாது. அதனால் தேவியைக் கண்முன் வருமாறு அழைக்கிறார். எனக்கு ஒரு தரிசனம் தரகூடாதா? உன் முகத்தை ஒருமுறை காட்டக் கூடாதா? என்று கேட்கிறார். அதற்காக மனமுருகி தேவியின் பாதத்தில் நமஸ்கரிக்கிறார்.

நாற்பதாம் தசகம் முடிந்தது

39 ஏகோனசத்வாரிம்ʼஶத³ஶக꞉ - மணித்³வீபநிவாஸினீ

39 ஏகோனசத்வாரிம்ʼஶத³ஶக꞉ - மணித்³வீபநிவாஸினீ

ஸுதா⁴ஸமுத்³ரோ ஜக³தாம்ʼ த்ரயாணாம்ʼ ச²த்ரீப⁴வன் மஞ்ஜுதரங்க³பே²ன꞉ . ஸவாலுகாஶங்க²விசித்ரரத்ன꞉ ஸதாரகவ்யோமஸமோ விபா⁴தி .. 39-1.. தன்மத்⁴யதே³ஶே விமலம்ʼ மணித்³வீபாக்²யாம்ʼ பத³ம்ʼ தே³வி விராஜதே தே . யது³ச்யதே ஸம்ʼஸ்ருʼதிநாஶகாரி ஸர்வோத்தரம்ʼ பாவனபாவனம்ʼ ச .. 39-2.. தத்ராஸ்த்யயோதா⁴துமயோ மனோஜ்ஞ꞉ ஸாலோ மஹாஸாரமயஸ்ததஶ்ச . ஏவம்ʼ ச தாம்ராதி³மயா꞉ கிலாஷ்டாத³ஶாதிசித்ரா வரணா லஸந்தி .. 39-3.. தைராவ்ருʼதம்ʼ தே பத³மத்³விதீயம்ʼ விபா⁴தி சிந்தாமணிஸத்³ம தே³வி . ஸந்த்யத்ர ஸத்ஸ்தம்ப⁴ஸஹஸ்ரரம்யஶ்ருʼங்கா³ரமுக்த்யாதி³கமண்ட³பாஶ்ச .. 39-4.. ப்³ரஹ்மாண்ட³கோடீ꞉ ஸுக²மாவஸந்த உபாஸகாஸ்தே மனுஜா꞉ ஸுராஶ்ச . தை³த்யாஶ்ச ஸித்³தா⁴ஶ்ச ததே²தரே ச யத³ந்ததோ யாந்தி பத³ம்ʼ ததே³தத் .. 39-5.. த்வம்ʼ மண்ட³பஸ்தா² ப³ஹுஶக்தியுக்தா ஶ்ருʼணோஷி தே³வீகலகீ³தகானி . ஜ்ஞானம்ʼ விமுக்திம்ʼ ச த³தா³ஸி லோகரக்ஷாமஜஸ்ரம்ʼ குருஷே ச தே³வி .. 39-6.. மஞ்சோ(அ)ஸ்தி சிந்தாமணிகே³ஹதஸ்தே ப்³ரஹ்மா ஹரீ ருத்³ர இஹேஶ்வரஶ்ச . கு²ரா ப⁴வந்த்யஸ்ய ஸதா³ஶிவஸ்து விராஜதே ஸத்ப²லகத்வமாப்த꞉ .. 39-7.. தஸ்யோபரி ஶ்ரீபு⁴வனேஶ்வரி த்வம்ʼ ஸர்வேஶவாமாங்கதலே நிஷண்ணா . சதுர்பு⁴ஜா பூ⁴ஷணபூ⁴ஷிதாங்கீ³ நிர்வ்யாஜகாருண்யவதீ விபா⁴ஸி .. 39-8.. ப்ரதிக்ஷணம்ʼ காரயஸி த்வமிச்சா²ஜ்ஞானக்ரியாஶக்திஸமன்விதா(அ)த்ர . த்ரிமூர்திபி⁴꞉ ஶக்திஸஹஸ்ரயுக்தா ப்³ரஹ்மாண்ட³ஸர்க³ஸ்தி²திஸம்ʼஹ்ருʼதீஶ்ச .. 39-9.. ஸா த்வம்ʼ ஹி வாசாம்ʼ மனஸோ(அ)ப்யக³ம்யா விசித்ரரூபா(அ)ஸி ஸதா³(அ)ப்யரூபா . புர꞉ ஸதாம்ʼ ஸந்நிஹிதா க்ருʼபார்த்³ரா ஸதா³ மணித்³வீபநிவாஸினீ ச .. 39-10.. மாதர்மத³ந்த꞉கரணே நிஷண்ணா வித்³யாமயம்ʼ மாம்ʼ குரு ப³ந்த⁴முக்தம் . ப³ந்த⁴ம்ʼ ச மோக்ஷம்ʼ ச த³தா³ஸ்யஸக்தா தா³ஸோ(அ)ஸ்மி தே தே³வி நமோ நமஸ்தே .. 39-11..

 

தசகம் 39

மணித்வீபநிவாஸினி

1. ஸுதாஸமுத்ரோ, ஜகதாம் த்ரயாணாம்
சத்ரீபவன் மஞ்சு தரங்க: பேனஹ
ஸவாலுகாசக,விசித்ரரத்னஹ
ஸதாரகவ்யோ,மஸமோ விபாதி

ஸுதா⁴ஸமுத்³ரோ ஜக³தாம்ʼ த்ரயாணாம்ʼ ச²த்ரீப⁴வன் மஞ்ஜுதரங்க³பே²ன꞉ . ஸவாலுகாஶங்க²விசித்ரரத்ன꞉ ஸதாரகவ்யோமஸமோ விபா⁴தி .. 39-1.

பூமிக்கு மேலே ஸ்வர்க்க லோகம், பிரம்மலோகம், கைலாயம், வைகுண்டம் அதற்கும் மேல் அமுத ஸமுத்திரம். பிரம்மாண்டங்கள் கோடிக்கணக்கில் உண்டு. ஒவ்வொன்றிலும் சிவனும் விஷ்ணுவும் அவரவர் உலகங்களும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலே அமுத ஸமுத்திரம். அதனால் அதை பிரம்மாண்டங்களின் குடை என்று சொல்லப்படுகிறது. இந்த அமுத ஸமுத்திரத்தைப் பார்த்தால் நக்ஷத்திரங்களோடு கூடிய ஆகாயம் போல் தோன்றும். அமுத ஸமுத்திரத்தில் உள்ள ரத்தினங்களும் முத்துக்களும் சங்குகளும் ஆகாய நக்ஷத்திரங்கள் போல் ஜொலிக்கின்றன. இரண்டும் பிரகாசமான இடம் தான்.

2. தன்மத்யதேசே, விமலம் மணித்வீ-
-பாக்யம் பதம் தேவி!, விராஜதே தே;
யதுச்யதே ஸம்,ஸ்ருதி நாசகாரி
ஸர்வோக்தரம் பா,வனபாவனம் ச

தன்மத்⁴யதே³ஶே விமலம்ʼ மணித்³வீபாக்²யாம்ʼ பத³ம்ʼ தே³வி விராஜதே தே .
யது³ச்யதே ஸம்ʼஸ்ருʼதிநாஶகாரி ஸர்வோத்தரம்ʼ பாவனபாவனம்ʼ ச .. 39-2..

அமுதக் கடலின் நடுவில் மணித்வீபம் இருக்கிறது. அதுதான் புவனேஸ்வரியின் இருப்பிடம். மும்மூர்த்திகளும் இங்குதான் விமானத்தில் வந்து புவனேஸ்வரியை தரிசித்தார்கள். இங்கு வந்தால் ஜீவனின் ஸம்சார துக்கம் தீரும். கிருஷ்ணனும் ராதையும் கோலோகத்தில் ராஸமாடினார்கள். அதைவிட மகத்தான இடம் மணித்வீபம்.

3. தத்ராஸ்த்யயோதா,துமயோ மனோஜ்ஞஹ
ஸாலோ; மஹாஸார,மயஸ்த தச்ச
ஏவம் ச தாம்ராது,மயா: கிலாஷ்டா-
தசாதி சித்ரா, வரணா லஸந்தி

தத்ராஸ்த்யயோதா⁴துமயோ மனோஜ்ஞ꞉ ஸாலோ மஹாஸாரமயஸ்ததஶ்ச .
ஏவம்ʼ ச தாம்ராதி³மயா꞉ கிலாஷ்டாத³ஶாதிசித்ரா வரணா லஸந்தி .. 39-3..

மணித்வீபத்தைச் சுற்றி அமுத ஸமுத்திரம். அதைச் சுற்றி 18 கோட்டைகள். இரும்பு, வெண்கலம், தாமிரம், ஈயம், பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம், கோமேதகம், வஜ்ரம், வைடூர்யம், இந்திரநீலம், முத்து, மரகதம், பவழம், நவரத்னம், அடுத்து இருப்பது சிந்தாமணி கிருஹம். இந்த ஒவ்வொரு கோட்டையிலும் ஒவ்வொருவிதமான காட்சிகளைக் காணலாம். காவல் வீரர்கள், நடமாடும் மயில் கூட்டங்கள், கிணறுகள், தடாகங்கள், அழகான வீடுகள், ஒட்யாணங்கள், சித்தர்கள், திக்பாலர்கள், ஆயுதங்கள், சக்திகள், தேவியின் சேடிகள், மஹேஸ்வரியின் வாகனங்கள், தாமரை மலர், இதுபோன்று பல காட்சிகள் காணலாம். இதுதான் சோடசீ பூஜை என்பதாகும். சாதகன் அம்பாளை மனதில் நிலை நிறுத்தி, பிந்துவைக் குறிவைத்து, ஒவ்வொரு கோட்டையாகத் தாண்டி தேவியிடம் செல்கிறான். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம். இறுதியில் வரும் போது தடைகள் அதிகமாகவே வரக்கூடும். அதுதான் யுத்தம் செய்யத் தயாராக இருக்கும் சக்திகள்.

4. தைராவ்ருதம் தே, பதமத்விதீயம்
விபாதி சிந்தா,மணி ஸத்ம தேவி!
ஸந்த்யத்ர ஸத்ஸ்தம்ப, ஸஹஸ்ரரம்ய
ச்ருங்கார முக்த்யா,தித மண்டபாச்ச

தைராவ்ருʼதம்ʼ தே பத³மத்³விதீயம்ʼ விபா⁴தி சிந்தாமணிஸத்³ம தே³வி . 

ஸந்த்யத்ர ஸத்ஸ்தம்ப⁴ஸஹஸ்ரரம்யஶ்ருʼங்கா³ரமுக்த்யாதி³கமண்ட³பாஶ்ச .. 39-4..

18 மதில்களையும் தாண்டினால் சிந்தாமணி கிருஹம். அதன் மத்தியில் தேவியின் இருப்பிடமான, ஆயிரங்கால் மண்டபம். அம்மண்டபத்தின் நான்கு பக்கத்திலும் 4 மண்டபங்கள். சிருங்கார மண்டபம், முக்திமண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம். அவைகள் பலவிதமான நறுமணங்களோடும், சூரியனுக்குச் சமமான காந்தியுடனும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

5. ப்ரஹ்மாண்டகோடீ;, ஸுகமாவஸந்த
உபாஸகாஸ்தே, மனுஜா: ஸுராச்ச
தைத்யாச்ச ஸித்தாச்ச, ததே தரே ச
யதந்ததோ யாந்தி, பதம், ததேதது

ப்³ரஹ்மாண்ட³கோடீ꞉ ஸுக²மாவஸந்த உபாஸகாஸ்தே மனுஜா꞉ ஸுராஶ்ச . 

தை³த்யாஶ்ச ஸித்³தா⁴ஶ்ச ததே²தரே ச யத³ந்ததோ யாந்தி பத³ம்ʼ ததே³தத் .. 39-5..

மனிதர்கள் பூமியிலும், தேவர்கள் தேவலோகத்திலும் அவரவர்கள் இடத்திலிருந்து தேவியை த்யானம் செய்கிறார்கள். எல்லோரும் விரும்புவது பரமபதம். அதுதான் மணித்வீபம். இதைவிட மஹத்தான இடம் எதுவும் இல்லை.

6. த்வம் மண்டபஸ்தா, பஹுசக்தியுக்தா
ச்ருணோஷி தேவீ, களகீதகானி,
ஞானம், விமுக்திம், ச ததாஸி, லோக
ரக்ஷாமஜஸ்ரம், குருஷே ச தேவி!

த்வம்ʼ மண்ட³பஸ்தா² ப³ஹுஶக்தியுக்தா ஶ்ருʼணோஷி தே³வீகலகீ³தகானி . 

ஜ்ஞானம்ʼ விமுக்திம்ʼ ச த³தா³ஸி லோகரக்ஷாமஜஸ்ரம்ʼ குருஷே ச தே³வி .. 39-6..

மண்டபங்களின் 4 பக்கத்திலும் நறுமணம் கொண்ட மல்லிகை, குந்தம் போன்றவனங்களும், தாமரைத் தடாகங்களும், அமிர்த ரசத்தோடு ரீங்காரம் செய்யும் வண்டுகளும், அன்னங்களும் நிறைந்து இருக்கும்.சிருங்கார மண்டபத்தில் தேவியின் கணங்களின் கானங்கள். மத்தியில் அமர்ந்திருக்கும் தேவியும் மற்றவர்களும் அதைக் கேட்டு மகிழ்வார்கள். முக்தி மண்டபத்தில் ஆத்மாக்களின் பாசத்தை மோசனம் செய்யும் விதத்தை எண்ணியிருப்பாள். ஞான மண்டபத்தில் பாச மோசனத்திற்கான ஞான உபதேசம் செய்கிறாள். அங்கு வருபவர்களுக்கு அருகதை இருந்தால் முக்தியும், ஞானமும் தருகிறாள். ஏகாந்த மண்டபத்தில், இந்த உலகை ரக்ஷிப்பதற்காக மந்திரிணிகளோடு கூடி சிந்திப்பாள். இவைகள் எல்லாம் அம்பாளுக்கு ஒரு லீலைதான்.

7. மஞ்சோஸ்தி சிந்தா,மணிகேஹதஸ்தே;
ப்ரம்மா ஹரீ ருத்ர, இஹே ச்வரச்ச
குரா பவந்த்யஸ்ய;, ஸதாசிவஸ்து
விராஜதே ஸத்,பல கத்வமாப்தஹ

மஞ்சோ(அ)ஸ்தி சிந்தாமணிகே³ஹதஸ்தே ப்³ரஹ்மா ஹரீ ருத்³ர இஹேஶ்வரஶ்ச . 

கு²ரா ப⁴வந்த்யஸ்ய ஸதா³ஶிவஸ்து விராஜதே ஸத்ப²லகத்வமாப்த꞉ .. 39-7..

சிந்தாமணிக்ரஹத்தில் சக்தி தத்வாத்மகமாக இருக்கின்ற 10 படிகளோடு கூடிய ஒரு கட்டில். பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், ஈஸ்வரன் ஆகிய நால்வரும் அதன் கால்கள். சதாசிவன் அந்த நால்வரையும் இணைக்கும் பலகை. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்ரஹம் இவைகளைச் செய்கிறார்கள். சைவர்கள் இந்த ஈஸ்வர ஸ்வரூபங்களைத் தான் சங்கல்பமாக வணங்கிறார்கள்.

8. தஸ்யோபரி ஸ்ரீ, புவனேஸ்வரி! த்வம்
ஸர்வேசவாமா,கதலே நிஷண்ணா
சதுர்புஜா பூ,ஷண பூஷிதாங்கீ
நிர்வ்யாஜ காருண்யவதீ விபாஸி

தஸ்யோபரி ஶ்ரீபு⁴வனேஶ்வரி த்வம்ʼ ஸர்வேஶவாமாங்கதலே நிஷண்ணா . 

சதுர்பு⁴ஜா பூ⁴ஷணபூ⁴ஷிதாங்கீ³ நிர்வ்யாஜகாருண்யவதீ விபா⁴ஸி .. 39-8..

புவனேஸ்வரி இந்த மஞ்சத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். சர்வ சௌந்தர்யத்தின் ஒருமித்த ரூபம் தான் அம்பாள். எல்லா பிரம்மாண்டங்களுக்கும் மணித்வீபம் ஒன்றுதான். புவனேஸ்வரியும் ஒன்றுதான். மணித்வீபம் பிரம்மாண்ட கோடிகளின் ஸமஷ்டி. ஸமஷ்டியின் பிரதிபலிப்பே வெஷ்டி. இதுதான் பிரம்மாண்டத்தில் நடக்கிறது.

9. ப்ரதிக்ஷணம் கார,யஸி த்வமிச்சா –
– ஞானக்ரியா- சக்தி,ஸமன்விதாSத்ர
த்ரிமூர்த்திபி! சக்தி,ஸஹஸ்ரயுக்தா
ப்ரமாண்ட ஸர்க்,ஸ்திதி, ஸம்ஹ்ருதீச்ச

ப்ரதிக்ஷணம்ʼ காரயஸி த்வமிச்சா²ஜ்ஞானக்ரியாஶக்திஸமன்விதா(அ)த்ர .
த்ரிமூர்திபி⁴꞉ ஶக்திஸஹஸ்ரயுக்தா ப்³ரஹ்மாண்ட³ஸர்க³ஸ்தி²திஸம்ʼஹ்ருʼதீஶ்ச .. 39-9..

பிரதானமான இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளும் தேவியின் கூடவே இருப்பார்கள். நிறைய சக்திகள் உண்டு. ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் அவரவருக்குத் தேவையான சக்திகளை அம்பாள் தருகிறாள். இந்த சக்திகள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. மணித்வீப வாஸியே அனைத்திற்கும் ஆதாரம். இவள் கண் திறந்தால் ஸ்ருஷ்டியும், கண்மூடினால் பிரளயமும் உண்டாகிறது.

10. ஸா த்வம் ஹி வாசாம், மனஸோSப்யகம்யா
விசித்ரரூபாSஸி, ஸதாSப்ய ரூபா
புர: ஸதாம் ஸன்னி,ஹிதா க்ருபார்த்ரா
ஸதா மனுத்வீப, நிவாஸினீச

ஸா த்வம்ʼ ஹி வாசாம்ʼ மனஸோ(அ)ப்யக³ம்யா விசித்ரரூபா(அ)ஸி ஸதா³(அ)ப்யரூபா . 

புர꞉ ஸதாம்ʼ ஸந்நிஹிதா க்ருʼபார்த்³ரா ஸதா³ மணித்³வீபநிவாஸினீ ச .. 39-10..

ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபி வாடீ பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே/
சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த லஹரீம்//

அந்த தேவியை வருணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. மனதாலும் எட்டமுடியாது. அவள் ஸகுணை அல்ல. நிர்குணை. உண்மை பக்தர்கள் அழைத்தால் உடன், எப்பொழுதும் அவர்கள் முன் வருவாள். அவளே எப்பொழுதும் மணித்வீபத்திலும் இருக்கிறாள். இப்படிப் பெருமைகளைக் கொண்ட அம்பாளை வார்த்தைகளால் வருணிக்க முடியுமா? 18 கோட்டைகளைத் தாண்டி சிந்தாமணி க்ரஹம். அதில் தேவியைக் காண்கிறோம். அது நம்முடைய சிந்தனைச் சக்தியை தட்டி எழுப்புகிறது. பஞ்ச பூதங்களால் ஆனது இந்த சரீரம். அதற்குள் ஒரு ஸூஷ்ம சரீரம். அதில் 5 பிராணன்கள் இருக்கிறது. பிராணன், அபாணன், வியாணன், உதாணன் , ஸமாணன். 10 இந்திரியங்கள். மனம், புத்தி இவைகளுடன் 17 ஆகிறது. அதற்குப் பிறகு அவித்தையால் சூழப்பட்ட காரண சரீரம். மொத்தம் 18. இதற்கும் மேல் தேவி. பிராணன்களையும் இந்திரியங்களையும் அடக்கி, கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் அந்த யோகிக்கு ஆத்ம தரிசனம் கிடைக்கும். நமது உடலே மணித்வீபம். அதில் இருக்கும் ஆத்மாதான் அம்பாள். உபாஸனையினால் ஆத்ம தரிசனம் கிடைக்கும். அதனால் கிடைக்கும் ஆனந்தமே அமுத ஸமுத்திரம்.

11. மாதர் மதந்தஹ, கரணே நிஷண்ணா
வித்யாமயம் மாம், குரு பந்தமுக்தம்
பந்தம் ச மோக்ஷம், ச ததாஸ்ய ஸக்தா
தாஸோSஸ்மி தே தேவி!, நமோ நமஸ்தே

மாதர்மத³ந்த꞉கரணே நிஷண்ணா வித்³யாமயம்ʼ மாம்ʼ குரு ப³ந்த⁴முக்தம் .
ப³ந்த⁴ம்ʼ ச மோக்ஷம்ʼ ச த³தா³ஸ்யஸக்தா தா³ஸோ(அ)ஸ்மி தே தே³வி நமோ நமஸ்தே .. 39-11.. 

 சிந்தாமணிக் ரஹத்தில் தேவீ எப்படி இருக்கிறாளோ அப்படியே தன் மனதிலும் இருக்க வேண்டும் என்று இதன் ஆசிரியரான பாலேலி நம்பூதிரி ஆசைப்படுகிறார். தேவிக்கு யாரிடமும் ராகமோ த்வேஷமோ இல்லை. தனக்கு அவித்யையை நீக்கி வித்யையைத் தருமாறு வேண்டிக் கொள்கிறார். அதற்காக மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்.

முப்பத்தி ஒன்பதாம் தசகம் முடிந்தது

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்

 

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்



https://clipchamp.com/watch/8352lgPce6m

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்

அந்தர்முகோ² ய꞉ ஸ்வஶுபே⁴ச்ச²யைவ ஸ்வயம்ʼ விமர்ஶேன மனோமலானி . த்³ருʼஷ்ட்வா ஶமாத்³யைர்து⁴னுதே ஸமூலம்ʼ ஸ பா⁴க்³யவாந்தே³வி தவ ப்ரியஶ்ச .. 38-1.. ந வேத³ஶாஸ்த்ராத்⁴யயனேன தீர்த²ஸம்ʼஸேவயா தா³னதபோவ்ரதைர்வா . ஶுத்³தி⁴ம்ʼ மனோ யாதி தவ ஸ்ம்ருʼதேஸ்தத்³வைஶத்³யமாத³ர்ஶவதே³தி மாத꞉ .. 38-2.. ஶுத்³தி⁴ர்ன யஜ்ஞேன யஜன் ஶஶாங்க꞉ பத்னீம்ʼ கு³ரோ꞉ ப்ராப ப்⁴ருʼஶம்ʼ ஸ்மரார்த꞉ . ஶதக்ரதுர்கௌ³தமத⁴ர்மபத்னீமகா³த³ஹல்யாம்ʼ மத³னேஷு வித்³த⁴꞉ .. 38-3.. ஸ விக்⁴னகாரீ தபஸாம்ʼ முனீனாம்ʼ க³தஸ்ப்ருʼஹம்ʼ யோகி³வரம்ʼ ப்ரஶாந்தம் . ஹா விஶ்வரூபம்ʼ பவினா ஜகா⁴ன ந கிஞ்சனாகார்யமத⁴ர்மபு³த்³தே⁴꞉ .. 38-4.. முநிர்வஸிஷ்ட²꞉ க²லு தீர்த²ஸேவீ தபோநிதி⁴ர்கா³தி⁴ஸுதஶ்ச கோபாத் . உபௌ⁴ மித²꞉ ஶேபதுராடி³பா⁴வம்ʼ ப்ராப்த꞉ கிலைகோ ப³கதாம்ʼ பரஶ்ச .. 38-5.. த⁴னானி ப்ருʼஷ்டானி கு³ரூனதா³த்ரூʼன் ஸ்வான் பா⁴ர்க³வான் புத்ரகலத்ரபா⁴ஜ꞉ . க்ருத்³தா⁴꞉ பரம்ʼ ஹைஹயபூ⁴மிபாலா ந்யபீட³யன் கோ(அ)த்ர விஶுத்³த⁴சித்த꞉ .. 38-6.. குர்யான்ன கிம்ʼ லோப⁴ஹதோ மனுஷ்யோ யுதி⁴ஷ்டி²ராத்³யா அபி த⁴ர்மநிஷ்டா²꞉ . பிதாமஹம்ʼ ப³ந்து⁴ஜனான் கு³ரூம்ʼஶ்ச ரணே நிஜக்⁴னு꞉ க²லு ராஜ்யலோபா⁴த் .. 38-7.. க்ருʼஷ்ணோபதி³ஷ்டோ ஜனமேஜயஸ்து ஶுத்³தா⁴ந்தரங்க³꞉ பிதரம்ʼ மகே²ன . பரீக்ஷிதம்ʼ பாபவிமுக்தமார்யம்ʼ விதா⁴ய தே ப்ராபயதிஸ்ம லோகம் .. 38-8.. ஸதா³ ஸதா³சாரரதோ விவிக்தே தே³ஶே நிஷண்ணஶ்சரணாம்பு³ஜே தே . த்⁴யாயன்னஜஸ்ரம்ʼ நிஜவாஸனா யோ நிர்மார்ஷ்டி ஸ த்வன்மயதாமுபைதி .. 38-9.. ஜ்ஞானம்ʼ ந ப⁴க்திர்ன தபோ ந யோக³பு³த்³தி⁴ர்ன மே சித்தஜயோ(அ)பி மாத꞉ . அந்த⁴ம்ʼ தமோ(அ)ஹம்ʼ ப்ரவிஶாமி ம்ருʼத்யோ꞉ ஸமுத்³த⁴ரேமம்ʼ வரதே³ நமஸ்தே .. 38-10..

தசகம் 38

சித்த சுத்திப்ராதான்யம்

1. அந்தர்முகோ ய: ஸ்வ,சுபேச்சயைவ
ஸ்வயம் விமர்சேன, மனோமலானி
த்ருஷ்ட்வா சமாத்யைர், துனுதே ஸமூலம்
ஸ பாக்யவான்; தேவி! , தவ பிரியச்ச

அந்தர்முகோ² ய꞉ ஸ்வஶுபே⁴ச்ச²யைவ ஸ்வயம்ʼ விமர்ஶேன மனோமலானி . 

த்³ருʼஷ்ட்வா ஶமாத்³யைர்து⁴னுதே ஸமூலம்ʼ ஸ பா⁴க்³யவாந்தே³வி தவ ப்ரியஶ்ச .. 38-1..

அனேக மனிதர்கள் பணம் ,பதவி, மனைவி, மக்கள் என்று இவைகளில் மோஹம் கொண்டு காலத்தைப் பாழாகக் கழிக்கிறார்கள். துச்சமாக நினைக்க வேண்டிய இந்த விஷயங்களில் மன நாட்டம் இல்லாமல் யாரேனும் ஒருவன் தான் மனிதப் பிறவி எடுத்ததை சரியாகப் பயன் படுத்திக் கொண்டால் அது அற்புதம் தான். அதுதான் அவனின் ஆசையும் கூட. அப்படி மோகத்திற்கும் காமத்திற்கும் அடிமையாகாமல் சுதந்திரமாக இருக்க நினைப்பவன் முதலில் தன் மனதைத் தானே விமர்சனம் செய்து கொண்டு, மனதைத் தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மனதில் உள்ள அழுக்குகளான காமம், க்ரோதம் போன்றவைகளையும், இது போலவே நல்ல செயல், சொல், சிந்தனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல செயல்களையும் சிந்தனைகளையும் அதிகரிக்க மனதை ஸமப் படுத்திக்கொள்ள வேண்டும். ஸமம், தமம் இவைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மன அழுக்குகளைக் களையலாம். இப்படித் தன்னைத் தானே தூய்மைபடுத்திக் கொள்பவன் தேவிக்கு மிகவும் பிரியமானவன் ஆகிறான்.

2. ந வேதசாஸ்த்ராத், யயனேன தீர்த்த
ஸம்ஸேவயா தான, தபோ வ்ரதைர் வா
சுத்திம் மனோ யாதி, தவ ஸ்ம்ருதே ஸ்தத்
வைசத்யமாதர், சவதேதி மாத ஹ!

ந வேத³ஶாஸ்த்ராத்⁴யயனேன தீர்த²ஸம்ʼஸேவயா தா³னதபோவ்ரதைர்வா . 

ஶுத்³தி⁴ம்ʼ மனோ யாதி தவ ஸ்ம்ருʼதேஸ்தத்³வைஶத்³யமாத³ர்ஶவதே³தி மாத꞉ .. 38-2..

தன்னைத் தானே விமர்சித்துக் கொள்ளாவிட்டால் மன அழுக்கைக் களைய முடியாது. புண்ணியதீர்த்த ஸ்நானம், விரதம், தானதருமம், வேத சாஸ்திரங்களைப் படிப்பது இவைகள் நல்லவைகள் தான். ஆனால் மனம் தூய்மை அடையாது. நிரந்தர தேவி த்யானம் தான் சிறந்த வழி.

3. சுத்திர் ந யக்ஞேன – யஜன் சசாங்கஹ
பத்னீம் குரோ: ப்ராப, ப்ருசம் ஸ்மரார்த்தஹ
சதக்ரதுர் கௌ,தம தர்ம பத்னீம்
அகாத ஹல்யாம், மதனேஷு வித்தஹ

ஶுத்³தி⁴ர்ன யஜ்ஞேன யஜன் ஶஶாங்க꞉ பத்னீம்ʼ கு³ரோ꞉ ப்ராப ப்⁴ருʼஶம்ʼ ஸ்மரார்த꞉ . 

ஶதக்ரதுர்கௌ³தமத⁴ர்மபத்னீமகா³த³ஹல்யாம்ʼ மத³னேஷு வித்³த⁴꞉ .. 38-3..

ஒருவன் யக்ஞம் செய்வதால் மட்டும் மனத்தூய்மை பெறமுடியாது என்பதற்கு சந்திரனின் கதை ஒரு உதாரணமாகிறது. சந்திரன் யக்ஞம் செய்தான். ஆனால் தன் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் ஆசை கொண்டு ஒரு மகனையும் பெற்றான். தேவேந்திரன் 100 யாகம் செய்தான். ஆனால் கௌதமரின் மனைவி அகலிகையை மயக்கினான். யாகமும் செய்த இந்திரனும் சந்திரனும் காமத்தை ஜெயிக்கவில்லை.

4. ஸ விக்னகாரீ, தபஸாம் முனீனாம்;
கதஸ்ப்ருஹம் யோகி,வரம் ப்ரசாந்தம்
ஹா! விச்வரூபம், பவினா ஜகான;
ந கிஞ்சனா கார்ய, மதர்ம புத்தேஹே

ஸ விக்⁴னகாரீ தபஸாம்ʼ முனீனாம்ʼ க³தஸ்ப்ருʼஹம்ʼ யோகி³வரம்ʼ ப்ரஶாந்தம் .
ஹா விஶ்வரூபம்ʼ பவினா ஜகா⁴ன ந கிஞ்சனாகார்யமத⁴ர்மபு³த்³தே⁴꞉ .. 38-4..

100 யாகம் செய்த இந்திரன் மனதில் காமம், குரோதம், பொறாமை எல்லாம் இருந்தது. பூமியில் நடக்கும் நல்ல கர்மங்களைத் தடுக்க இந்திரன் செய்த முயற்சிகளைப் புராணங்கள் சொல்கின்றன. நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த முயற்சி தோல்வியை அடைந்தது. எதிலும் விருப்பம் இல்லாமல் தவம் செய்த விஸ்வரூபன் தலையைக் காரணமில்லாமல் இந்திரன் வெட்டினான். புத்தியில் அதர்மம் புகுந்தால் யாரும் எதையும் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம்.

5. முனிர் வஸிஷ்ட:, கலு தீர்த்தஸேவீ
தபோநிதிர் காதி, ஸுதச்ச கோபாது
உபௌ மித: சேப,து; ராடி பாவம்
ப்ராப்த: கிலைகோ, பகதாம் பரச்ச

முநிர்வஸிஷ்ட²꞉ க²லு தீர்த²ஸேவீ தபோநிதி⁴ர்கா³தி⁴ஸுதஶ்ச கோபாத் . 

உபௌ⁴ மித²꞉ ஶேபதுராடி³பா⁴வம்ʼ ப்ராப்த꞉ கிலைகோ ப³கதாம்ʼ பரஶ்ச .. 38-5..

புண்ணிய தீர்த்தத்தில் நீராடினாலும் மனம் சுத்தியாகாது. உதாரணம் வஸிஷ்டர். வஸிஷ்டர் கங்கை கரையில் வசித்து, கங்கையில் நீராடி, கங்கை நீரையே பருகியும் வந்தார். ஆனாலும் ராகத்வேஷம் நீங்கவில்லை. அதனால் தானே விஸ்வாமித்திரருடன் விவாதம் செய்தார். நிறைய தவங்கள் செய்த விஸ்வாமித்திரர்க்கும் மனத் தூய்மை இல்லை. சூர்ய வம்சத்து ராஜாவான ஸத்யவிரதனை வஸிஷ்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விஸ்வாமித்திரன் அவனை உடலுடன் ஸ்வர்க்கம் அனுப்பினார். ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். இவனை வஸிஷ்டருக்குப் பிடிக்கும். ஆனால் விஸ்வாமித்திரர் அவனைப் பொய்சொல்ல வைக்கிறேன் என்று அவன் ராஜ்யம் முழுவதையும் எழுதி வாங்கினார். வஸிஷ்டர் விஸ்வாமித்திரரைக் கொக்காகப் போகச் சாபம் தந்தார். விஸ்வாமித்திரர் வஸிஷ்டரைப் சபித்தார். இருவரும் தனித்தனி மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தார்கள். வருஷங்கள் பல ஓடின. பிரம்மா இருவரையும் சமாதானம் செய்தார். சாபவிமோசனம் பெற்றார்கள்ஹரிச்சந்திரன் புத்திர பாக்யம் பெறுவதற்காக வஸிஷ்டர் உபதேசப்படி வருணனை உபாஸித்தான். புத்திரனை யாகத்தில் தானமாகத் தர வேண்டும் என்று வருணன் சொன்னான். ஹரிச்சந்திரனும் புத்திரன் பிறந்தால் போதும் என்று அப்பொழுது சம்மதித்தான். லோகிதாஸனும் பிறந்தான். ஆனால் ஒவ்வொரு சமயமும் குழைந்தைக்குப் பத்து நாள் கூட ஆகவில்லை, பசுவிற்குப் பல் முளைக்கவில்லை, உபநயனம் நடக்கவில்லை என்று இப்படி சாக்குகள் சொல்லி வந்தான். லோகிதன் வருணனுக்குப் பயந்துத் தலைமறைவானான். வருண சாபத்தால் அரசனுக்கு மஹோதரம் என்னும் நோய் வந்தது. ஒரு அந்தணப் பையனைப் பணம் கொடுத்து வாங்கி வருணனுக்குத் தந்தார். அதனால் விஸ்வாமித்திரர் ஹரிச்சந்திரனிடம் கோபம் கொண்டார்.

தனானீ ப்ருஷ்டானி, குரூன் அதாத்ருன்
ஸ்வான் பார்க்கவான் புத்ர,களத்ர பாஜஹ
க்ருத்தா: பரம் ஹை,ஹைய,பூமிபாலா
ன்யபீடயன்; கோத்ர, விசுத்த சித்தஹ?

த⁴னானி ப்ருʼஷ்டானி கு³ரூனதா³த்ரூʼன் ஸ்வான் பா⁴ர்க³வான் புத்ரகலத்ரபா⁴ஜ꞉ .
க்ருத்³தா⁴꞉ பரம்ʼ ஹைஹயபூ⁴மிபாலா ந்யபீட³யன் கோ(அ)த்ர விஶுத்³த⁴சித்த꞉ .. 38-6..

காமம், குரோதம், லோபம் மனதில் வந்தால் அவர்கள் எதையும் செய்யும் துணிவைப் பெறுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹைஹயமார்கள். கார்த்தவிராஜன் காலம் கழிந்ததும் ஹைஹயமார்கள் வறுமையால் கஷ்டப்பட்டர்கள். தன் தந்தையிடம் நிறைய தக்ஷணைகள் பெற்ற அந்தணர்களை அணுகிய போது அவர்களும் ஏதும் தர மறுத்தனர். அதனால் ஹைஹயமார்கள் அவர்களையும், அவர்களின் மனைவிகளையும் துன்புறுத்தினார்கள். இறுதியில் தேவியின் அனுக்ரஹத்தால் காப்பாற்றப் பட்டார்கள். ஹைஹயர்களுக்கு மனதில் தூய்மை இருந்திருந்தால் அந்தணர்களைத் துன்புறுத்துவார்களா?அந்தணர்களும் மனதில் சுத்தம் இருந்தால் உதவி செய்திருப்பார்கள் அல்லவா? காம குரோதத்தால் இருவருமே கஷ்டத்தைத் தான் அனுபவித்தார்கள்.

7. குர்யான்ன கிம் லோப,ஹதோ மனுஷ்யோ;
யுதிஷ்டிராத்யா, அபி தர்மநிஷ்டாஹா
பிதாமஹம் பந்து,ஜனான் குரூம்ச்ச
ரணே நிஜக்னுஹு, கலு ராஜ்யலோபாது

குர்யான்ன கிம்ʼ லோப⁴ஹதோ மனுஷ்யோ யுதி⁴ஷ்டி²ராத்³யா அபி த⁴ர்மநிஷ்டா²꞉ . 

பிதாமஹம்ʼ ப³ந்து⁴ஜனான் கு³ரூம்ʼஶ்ச ரணே நிஜக்⁴னு꞉ க²லு ராஜ்யலோபா⁴த் .. 38-7.

.லோபம் மனதில் இருந்தால் என்ன ஆகும்? சிநேகம், பந்தம் இல்லை என்று ஆகும். இதற்குப் பாண்டவர்களே உதாரணம். யுதிஷ்ட்ராதிகள் தர்மிஷ்டர்கள். ஆனால் லோபத்தால் தர்மத்தையும் மறந்தனர். பிதாமகர் பீஷ்மர். குரு த்ரோணாச்சாரியார், சகோதரகளான துரியோதனாதிகள் அனைவரும் யுத்தத்தில் இறந்தனர். இதற்குக் காரணம் என்ன? ராஜ்ய ஆசைதான். ஆசை வந்துவிட்டால் நல்லவர்கள் கூட எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

8. க்ருஷ்ணோபதிஷ்டோ, ஜனமேஜயஸ்து
சுத்தாந்தரங்கஹ, பிதரம் மகேன
பரீக்ஷிதம் பாப, விமுக்த மார்யம்
விதாய தே ப்ராப,யதிஸ்ம லோகம்

க்ருʼஷ்ணோபதி³ஷ்டோ ஜனமேஜயஸ்து ஶுத்³தா⁴ந்தரங்க³꞉ பிதரம்ʼ மகே²ன . 

பரீக்ஷிதம்ʼ பாபவிமுக்தமார்யம்ʼ விதா⁴ய தே ப்ராபயதிஸ்ம லோகம் .. 38-8..

பாண்டவர்களுக்கு ராஜ்ய ஆசை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பேரனான பரீக்ஷித்து லோபி அல்ல. தெரியாமல் ஒரு முனிவரை அவமதித்தான். அதனால் தக்ஷகன் அவனைக் கடித்து துர் மரணம் அடைந்தான். அவர் மகனான ஜனமேஜயன் வேத வ்யாஸரிடமிருந்து தேவியின் மகிமையை அறிந்து கொண்டான். காம, குரோத லோபங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்தான். மகன் செய்த யக்ஞத்தால், பரீக்ஷித்து பாபங்கள் அழிந்து நற்கதி அடைந்தான். பாண்டவர்கள் ஆடம்பரமாக செய்த ராஜசூய யாகம் நல்லமுறையில் சம்பாதித்த பொருள்களால் செய்யப் படவில்லை. ஆகவே அதன் பலனை அவர்கள் அடையவில்லை. ஆனால் எளிய முறையில் சுத்தமான மனதுடன் செய்த யக்ஞம் பலன் தந்தது. மனத்தூய்மைதான் எதற்கும் முக்கியம்.

9. ஸதா ஸதாசார,ரதோ விவிக்தே
தேசே நிஷண்ணச்,சரணாம்புஜே தே
த்யாயன்ன ஜஸ்ரம், நிஜவாஸனாயோ
நிமார்ஷ்டி ஸ த்வன், மயதாமுபைதி

ஸதா³ ஸதா³சாரரதோ விவிக்தே தே³ஶே நிஷண்ணஶ்சரணாம்பு³ஜே தே .
த்⁴யாயன்னஜஸ்ரம்ʼ நிஜவாஸனா யோ நிர்மார்ஷ்டி ஸ த்வன்மயதாமுபைதி .. 38-9..

தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு மனதில் உள்ள தோஷங்களைக் களைய வேண்டும். ராக த்வேஷங்களை நீக்க வேண்டும். ஸத்கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர்கள் ஸாயுஜ்ய முக்தி அடைவார்கள்.

10. ஞானம் ந பக்திர் ந, தபோ ந, யோக
புத்திர் ந மே சித்த,ஜயோSபி மாத ஹ!
அந்தம் தமோஹம், ப்ரவிசாமி; ம்ருத்யோஹோ
ஸமுத்தரேமம்;, வரதே! நமஸ்தே

இது போன்ற மன சுத்தியோ, பக்தியோ, ஞானமோ எதுவுமே தனக்கு இல்லை. enave தன்னுடைய காலம் முடிவதற்கு முன் தன்னைக் காப்பாற்று என்று இதன் ஆசிரியர் தேவியை வேண்டிக் கொள்கிறார்.

முப்பத்தி எட்டாம் தசகம் முடிந்தது

37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ - விஷ்ணுமஹத்த்வம்

37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ விஷ்ணுமஹத்த்வம்  



37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ - விஷ்ணுமஹத்த்வம்

புரா ஹரிஸ்த்வாம்ʼ கில ஸாத்த்விகேன ப்ரஸாத³யாமாஸ மகே²ன தே³வி . ஸுரேஷு தம்ʼ ஶ்ரேஷ்ட²தமம்ʼ சகர்த² ஸ தேன ஸர்வத்ர ப³பூ⁴வ பூஜ்ய꞉ .. 37-1.. அத⁴ர்மவ்ருʼத்³தி⁴ஶ்ச யதா³ த்ரிலோகே த⁴ர்மக்ஷயஶ்சாபி ததா³ ப⁴வத்யா . த⁴ர்மம்ʼ ஸமுத்³த⁴ர்துமத⁴ர்மம்ருʼத்³த⁴ம்ʼ மார்ஷ்டும்ʼ ச தே³வ்யேஷ நியுஜ்யதே ஹி .. 37-2.. ஸ ஈட்³யதே ஸர்வத ஏவ ஸர்வை꞉ பத்ன்யா ச பூ⁴தைஶ்ச ஸமம்ʼ கி³ரீஶ꞉ . இலாவ்ருʼதே(அ)பூருஷஸந்நிதா⁴னே ஸங்கர்ஷணாக்²யம்ʼ ப⁴ஜதே முராரிம் .. 37-3.. தமேவ ப⁴த்³ரஶ்ரவஸோ ஹயாஸ்யம்ʼ ப⁴த்³ராஶ்வவர்ஷே முனய꞉ ஸ்துவந்தி . ப்ரஹ்லாத³ உச்சைர்ஹரிவர்ஷவாஸீ விஶ்வார்திஶாந்த்யை ந்ருʼஹரிம்ʼ ச நௌதி .. 37-4.. ஶ்ரீ꞉ கேதுமாலே க²லு காமரூபம்ʼ தம்ʼ ரம்யகே மத்ஸ்யதனும்ʼ மனுஶ்ச . ஹிரண்மயே கூர்மஶரீரபா⁴ஜம்ʼ ஸ்துவந்தி நாராயணமர்யமா ச .. 37-5.. மஹாவராஹம்ʼ குருஷூத்தரேஷு பூ⁴ ராக⁴வம்ʼ கிம்புருஷே ஹனூமான் . தம்ʼ நாரதோ³ பா⁴ரதவர்ஷவர்தீ நரம்ʼ ச நாராயணமாஶ்ரயந்தே .. 37-6.. ஸத்கர்மபூ⁴மிர்ப⁴ரதஸ்ய ராஜ்யம்ʼ ஸந்த்யத்ர வைகுண்ட²கதை²கஸக்தா꞉ . தீர்தா²னி புண்யாஶ்ரமபர்வதாஶ்ச ஜன்மாத்ர தே³வா꞉ ஸ்ப்ருʼஹயந்த்யஜஸ்ரம் .. 37-7.. ப்ரஹ்லாத³பௌத்ர꞉ ஸுதலாதி⁴வாஸ꞉ ஸுரக்ஷிதஶ்சாத்மநிவேத³னேன . வார்த⁴க்யரோக³க்லமபீ⁴திமுக்தோ மஹாப³லிர்வாமனமேவ நௌதி .. 37-8.. ஸஹஸ்ரஶீர்ஷ꞉ ஶிரஸா த³த⁴த் க்ஷ்மாம்ʼ ஹலீ ஹரேஸ்தாமஸமூர்திரார்யை꞉ . ஸம்ʼஸ்தூயமான꞉ ஸஹநாக³கன்ய꞉ பாதாலமூலே ச ஸலீலமாஸ்தே .. 37-9.. விசித்ரரூபம்ʼ ஜக³தாம்ʼ ஹிதாய ஸர்வே ஸ்துவந்த்யச்யுதமித்³த⁴ப⁴க்த்யா . ஏனம்ʼ குரு த்வம்ʼ வரதா³னத³க்ஷம்ʼ மாத꞉ க்ருʼபார்த்³ரே வரதே³ நமஸ்தே .. 37-10..

தசகம் 37

விஷ்ணுமஹத்வம்

1. புரா ஹரிஸ்த்வாம், கில ஸாத்விகேன
ப்ரஸாதயாமஸ, மகேன தேவி!
ஸுரேஷு தம் ஸ்ரேஷ்ட, தமம் ச கர்த்த
ஸ தேன ஸர்வத்ர, பபூவ பூஜ்யஹ

புரா ஹரிஸ்த்வாம்ʼ கில ஸாத்த்விகேன ப்ரஸாத³யாமாஸ மகே²ன தே³வி . 

ஸுரேஷு தம்ʼ ஶ்ரேஷ்ட²தமம்ʼ சகர்த² ஸ தேன ஸர்வத்ர ப³பூ⁴வ பூஜ்ய꞉ .. 37-1..

அம்பாளை பூஜித்தாலும், தியானம் செய்தாலும், யக்ஜம் செய்தாலும், தவம் செய்தாலும் கிடைக்கும் பலன்களை இதுவரை பார்த்தோம். அம்பாளை மட்டுமில்லாமல் அவள் பக்தனைத் துதித்தாலும் இந்த பயன்கள் கிடைக்கும் என்று இந்த தசகத்தில் சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் விமானத்தில் மணித்வீபம் சென்றதும், தேவி மூன்று சக்திகளை அவர்களுக்குத் தந்ததையும் முன்பே 10 ஆவது தசகத்தில் பார்த்தோம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மூவரும், ஸத்யலோகம், வைகுண்டம், கைலாயம் சிருஷ்டித்துத், தங்களின் சக்திகளை உபயோகித்து, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய தொழிலைச் செய்தார்கள். இந்த சமயம் விஷ்ணு வைகுண்டத்தில் தேவியைக் குறித்து ஒரு ஸாத்வீக யக்ஞம் செய்தார். யக்ஞம் முடிந்ததும் ஒரு அசரீரி கேட்டது. “விஷ்ணு சர்வ தேவர்களிலும் மிக்க சிறந்தவன்” என்று சகல உலகிற்கும் தெரிவிக்கும் செய்தி அது. யக்ஞத்தில் பங்கு பெற்ற அனைவரும் சந்தோஷமடைந்தனர். அன்றுமுதல் விஷ்ணு அனைவராலும் பூஜிக்கத்தக்கவர் ஆனார்.

2. அதர்மவ்ருத்திச்ச, யதா த்ரிலோகே
தர்மக்ஷயச்சாபி, ததா பவத்யா
தர்மம் ஸமுத்தர்த்தும் அதர்மம்ருத்தம்
மார்ஷ்டும் ச தேவ்யே,ஷ நியுஜ்யதே ஹி

அத⁴ர்மவ்ருʼத்³தி⁴ஶ்ச யதா³ த்ரிலோகே த⁴ர்மக்ஷயஶ்சாபி ததா³ ப⁴வத்யா .
த⁴ர்மம்ʼ ஸமுத்³த⁴ர்துமத⁴ர்மம்ருʼத்³த⁴ம்ʼ மார்ஷ்டும்ʼ ச தே³வ்யேஷ நியுஜ்யதே ஹி .. 37-2..

விஷ்ணு தேவர்களில் முக்யத்துவம் கொண்டவர். அனைவரையும் ரக்ஷிக்கக் கூடியவர். அதனால் காக்கும் கடவுள் என்று பெயர் பெறுவார். அதர்மம் எப்பொழுது தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அவதாரம் செய்து தர்மத்தைக் காப்பார். சிறுமையுடைய அவதாரமானாலும் அவை எல்லோராலும் புகழப்படும். எல்லா அவதாரத்திலும் என் அம்சம் கலந்திருக்கும். அவரின் வெற்றிக்கான சக்தியை நான் கொடுப்பேனென்று தேவி சொன்னவுடன் அனைவரும் மகிழ்ந்தார்கள். விஷ்ணு தேவி பக்தன் என புரிந்துகொண்டு அவரை துதிக்கவும், பூஜிக்கவும் ஆரம்பித்தார்கள்.

3. ஸ ஈட்யதே ஸர்,வத ஏவ ஸர்வைஹி
பத்ன்யா ச பூதைச்ச, ஸமம் கிரீசஹ
இளாவ்ருதேSபூருஷஸன்னிதானே
ஸங்கர்ஷணாக்யம், பஜதே முராரிம்

ஸ ஈட்³யதே ஸர்வத ஏவ ஸர்வை꞉ பத்ன்யா ச பூ⁴தைஶ்ச ஸமம்ʼ கி³ரீஶ꞉ .
இலாவ்ருʼதே(அ)பூருஷஸந்நிதா⁴னே ஸங்கர்ஷணாக்²யம்ʼ ப⁴ஜதே முராரிம் .. 37-3..

தேவியையும், தேவி பக்தனான விஷ்ணுவையும் துதித்து அவர்களின் அனுக்ரஹத்தை இவ்வுலக மக்கள் விரும்பினார்கள். உதாரணமாக, இளாவ்ருதம் என்னும் இடத்தில் சிவன் பார்வதியுடனும் பூதகணங்களுடனும் விஷ்ணுவைத் துதிக்கிறார். இந்த இடத்தில் சிவன் மாட்டும் தான் ஆண். எந்த ஆண்மகன் அங்கு வந்தாலும் அவன் பெண்ணாக மாறிவிடுவான். விரிவாக இதை 5 ஆவது தசகத்தில் பார்த்தோம். ப்ரம்மா ஸத்யலோகத்தில் சிருஷ்டி ஆரம்பத்தில் தாவரங்களையும், பசு, பக்ஷி முதலிவைகளையும் அதன்பின் மனிதனையும் சிருஷ்டித்தார். முதல் மனிதன் ஸ்வாயம்புவன். அவனுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என இரண்டு மகன்களும், ஆஹூதி தேவஹூதி, பிரசூதி என மூன்று பெண்களும் பிறந்தனர். பிரியவிரதனுக்கு இரண்டு மனைவிகள் 13 புத்திரர்களும் 1 பெண்ணும் பிறந்தார்கள். 3 பேர் மன்வந்திராதிபதிகள், 3 பேர் சந்யாஸிகள், வாரிசுகள் 7 பேர் மட்டுமே.

பிரியவிரதன் அரசாண்டு வரும் காலத்தில், தன் அரசாட்சியில், சூரியன் உதயமானால் வெளிச்சமும், மறைந்தால் இருளும் ஏன் ஏற்பட வேண்டும். எப்பொழுதும் பிரகாசமாகத்தானே இருக்கவேண்டும் என்று, தன் யோக சக்தியால் இருளை விரட்டுவோம் என்று சூரியனைப் போல் ஒளி கொண்ட ஒரு தேரில் ஏறி, பூமியை 7 முறை சுற்றி வந்தான். பூமியில் அந்த தேர்ச் சக்கரம் அழுந்திய இடம் 7 ஸமுத்திரம் என்று சொல்லப்படுகிறது. சக்கரம் பதியாத இடங்கள் ஜம்பு த்வீபம், பிலக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று கூறப்படுகின்றன. 7 ஸமுத்திரமும், 7 தீவும் ஆனது. 7 புத்திரர்களுக்கும் 7 தீவைக் கொடுத்தார். பெண்ணை சுக்ராச்சாரியாருக்குக் கொடுத்தார். முதல் மகனான ஆக்னீதரனுக்கு ஜம்புத்வீபம் கிடைத்தது. அவர் தன்னுடைய 9 புத்திரர்களுக்கு அதை 9 பாகமாகப் பிரித்துக் கொடுத்தார். அதில் ஒரு பாகம் இளாவ்ருதம். இது மஹாமேரு மலையைச் சுற்றி இருக்கிறது. இங்கு இருந்து கொண்டு சிவன் சங்கர்ஷணரைத் துதிக்கிறார்.

4. தமேவ பத்ரச்ர,வஸோ ஹயாஸ்யம்
பத்ராச்வவர்ஷே, முனய: ஸ்துவந்தி:
ப்ரஹ்ளாத உச்சைர், ஹரிவர்ஷ வாஸீ
விச்வார்த்தி சாந்த்யை, ந்ருஹரிம் ச நௌதி

தமேவ ப⁴த்³ரஶ்ரவஸோ ஹயாஸ்யம்ʼ ப⁴த்³ராஶ்வவர்ஷே முனய꞉ ஸ்துவந்தி .
ப்ரஹ்லாத³ உச்சைர்ஹரிவர்ஷவாஸீ விஶ்வார்திஶாந்த்யை ந்ருʼஹரிம்ʼ ச நௌதி .. 37-4..

இளாவ்ருதத்தில் 4 பக்கமும் துதிக்கும் வைஷ்ணவ ரூபங்கள். கிழக்கில் பத்ராஸ்வ்வர்ஷம். இங்குள்ள முனிவர்கள் ஹயக்ரீவராக விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தெற்கே ஹரிவர்ஷம். இங்கே ப்ரஹ்லாதன் உலக நன்மைக்காக விஷ்ணுவை நரசிம்ஹ ரூபத்தில் துதிக்கிறார்.

5. ஸ்ரீ: கேதுமாலே, கலு காமரூபம்
தம் ரம்யகே மத்ஸ்,யதனும் மனுச்ச
ஹிரண்மயே கூர்ம,சரீரபாஜம்
ஸ்துவந்தி நாரா,யண மர்யமா ச

ஶ்ரீ꞉ கேதுமாலே க²லு காமரூபம்ʼ தம்ʼ ரம்யகே மத்ஸ்யதனும்ʼ மனுஶ்ச .
ஹிரண்மயே கூர்மஶரீரபா⁴ஜம்ʼ ஸ்துவந்தி நாராயணமர்யமா ச .. 37-5..

மேற்கே கேதுமாலம். அங்கே லக்ஷ்மிதேவி காமரூபமாகவும், வடக்கே ரம்யகம். இதில் வைவஸ்வத மனுவானவர் மத்ஸ்ய மூர்த்தியாகவும், அதற்கும் வடக்கே ஹிரண்மயம். இதில் பித்ரு தேவதையான அர்யமா பகவானை கூர்ம ரூபத்தில் துதிக்கிறார். இப்படியாக பகவானைப் பலபக்தர்கள், பலரூபங்களில், பல இடங்களில் துதிக்கிறார்கள்.

6. மஹாவராகம், குருஷுத்தரேஷு
பூ: ராகவம் கிம்,புருஷே ஹனுமான்
தம் நாரதோ பா,ரதவர்ஷவர்த்தீ
நரம் ச நாரா,யண மாச்ரயந்தே

மஹாவராஹம்ʼ குருஷூத்தரேஷு பூ⁴ ராக⁴வம்ʼ கிம்புருஷே ஹனூமான் .
தம்ʼ நாரதோ³ பா⁴ரதவர்ஷவர்தீ நரம்ʼ ச நாராயணமாஶ்ரயந்தே .. 37-6..

ஹிரண்மயத்திற்கு வடக்கே உத்தர குருவருஷம். இங்கே ஆதிவராக ரூபத்தில் பூதேவி துதிக்கிறாள். இளாவ்ருதத்திற்குத் தெற்கே ஹரிவர்ஷம். அதற்கும் தெற்கே கிம்புருஷம்.இதில் ஸர்வேஸ்வரரான தசரத புத்திரனான ஸ்ரீராமரை ஹனுமன் துதிக்கிறார். அதற்கும் தெற்கே பாரதவர்ஷம். இதில் நாரதர் நர நாராயணராக துதிக்கிறார். இப்படி 9 கண்டங்கள், 9 ஸ்தோத்திரக்காரர்கள், 9 வைஷ்ணவ ரூபங்கள்.

7. ஸத்கர்மபூமிர், பரதஸ்ய ராஜ்யம்;
ஸந்த்யத்ர வைகுண்ட, கதைக ஸக்தாஹா
தீர்த்தானி புண்யா,ச்ரமபர்வதாச்ச;
ஜன்மாத்ர தேவா:, ஸ்ப்ருஹயந்த்யஜஸ்ரம்

ஸத்கர்மபூ⁴மிர்ப⁴ரதஸ்ய ராஜ்யம்ʼ ஸந்த்யத்ர வைகுண்ட²கதை²கஸக்தா꞉ .
தீர்தா²னி புண்யாஶ்ரமபர்வதாஶ்ச ஜன்மாத்ர தே³வா꞉ ஸ்ப்ருʼஹயந்த்யஜஸ்ரம் .. 37-7..

இளாவ்ருதத்தின் இந்த இடங்கள் பூமியின் ஸ்வர்க்கம். ஸத்கர்மங்கள் அனுஷ்டிக்கும் பூமி போகபூமி. பாரதம் ஸத்கர்மம் அனுஷ்டிப்பதற்கான பூமி. இதுதான் பாரதத்தின் தனிச் சிறப்பு. விஷ்ணுவின் கதைகளும் தேவியின் கதைகளும் கூறும் பக்தர்கள் பாரதத்தில் உண்டு. தேவலோகத்தில் இல்லை. பாரதத்தில் தாமிரபரணி, காவேரி, கோதாவரி, நர்மதா, சிந்து, யமுனை, மந்தாகினீ, சரயூ போன்ற பல புண்ணிய நதிகளும், புண்ணிய ஆஸ்ரமங்களும் இருக்கின்றன. அதனால் தான் தேவர்களும் இந்த பூமியில் பிறக்கவும், வாழவும் ஆசைப் படுகிறார்கள். மற்ற 6 தீவுகளையும் 6 புத்திரர்களும் காத்து வந்தார்கள். இந்த இடங்களிலும் பகவானின் ஸ்துதி இருந்தது. ஒவ்வொருவிதமாக இருந்தது. ஆகாயத்தில் உள்ள அனேக கோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், உப கிரகங்கள் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் துருவன். இவன் யார். விஷ்ணு பக்தன். விஷ்ணுபக்தன் எதையும் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

8. ப்ரஹ்ளாதபௌத்ர, ஸுதலாதி வாஸஹ
ஸீரக்ஷிதச்சாSSத்ம, நிவேதனேன
வார்த்தக்யரோக, க்ளமபீதீமுக்தோ
மஹாபலிர் வா, வனமேவ நௌதி.

ப்ரஹ்லாத³பௌத்ர꞉ ஸுதலாதி⁴வாஸ꞉ ஸுரக்ஷிதஶ்சாத்மநிவேத³னேன . 

வார்த⁴க்யரோக³க்லமபீ⁴திமுக்தோ மஹாப³லிர்வாமனமேவ நௌதி .. 37-8..

பூமிக்குக் கீழே 7 லோகம். அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம்.. சுதலத்தைத் தவிர மற்ற 6 லோகங்களிலும் இது எப்பொழுது அழியுமோ என்ற பயம் உண்டு. ஏனென்றால் சுதலத்தில் பலிச்சக்ரவர்த்திக்கு விஷ்ணு மூர்த்தி அங்கு காவலாளியாக இருக்கிறார். சுதலத்தில் மகாபலிக்கு ரோகமோ, களைப்போ, இல்லை. அவர் பிரஹ்லாதனின் பேரனல்லவா? அவரை விஷ்ணு எப்படிக் கைவிடுவார்? மகாபலியும் வாமனரைத் துதித்துக் கொண்டு சுகமாக இருக்கிறார். தாத்தா பிரஹ்லாதன் செய்த புண்ணியம் பேரனுக்கும் வருகிறது.

9. ஸஹஸ்ர சீர்ஷ , சிரஸா ததத் க்ஷ்மாம்
ஹலீ ஹரேஸ்தாமஸமூர்த்திரார்யைஹி
ஸம்ஸ்தூயமான: ஸஹநாககன்யஹ
பாதள மூலே, ச ஸலீலமாஸ்தே

ஸஹஸ்ரஶீர்ஷ꞉ ஶிரஸா த³த⁴த் க்ஷ்மாம்ʼ ஹலீ ஹரேஸ்தாமஸமூர்திரார்யை꞉ . 

ஸம்ʼஸ்தூயமான꞉ ஸஹநாக³கன்ய꞉ பாதாலமூலே ச ஸலீலமாஸ்தே .. 37-9..

பாதாள லோகத்தின் மூலஸ்தானத்தில் அனந்தன் என்னும் பெயரில் பகவான் பூஜிக்கப் படுகிறார். ஸங்கர்ஷணர் என்னும் ருத்திரர் அங்கு 11 கணங்களுடனும், மூன்று கண்களுடனும், கையில் திரிசூலத்துடனும், மஹா பூதங்களை நாசம் செய்பவராக எழுந்தருளியிருந்தார். நாகங்கள் அவர் பாதத்தை நமஸ்கரித்துக் கொண்டிருந்தன. விஷ்ணுவின் தமோ குண ப்ரதான மூர்த்தி இவர். இவர் மஹத்துவத்தை நாரதர் பிரம்ம லோகத்தில் கூறுகிறார்.

10. விசித்ர ரூபம், ஜகதாம் ஹிதாய
ஸர்வே ஸ்துவந்த்யச், யுதமித்தபக்த்யா
ஏனம் குரு த்வம், வரதானதக்ஷம்
மாத:! க்ருபார்த்ரே!, வரதே! நமஸ்தே

விசித்ரரூபம்ʼ ஜக³தாம்ʼ ஹிதாய ஸர்வே ஸ்துவந்த்யச்யுதமித்³த⁴ப⁴க்த்யா . 

ஏனம்ʼ குரு த்வம்ʼ வரதா³னத³க்ஷம்ʼ மாத꞉ க்ருʼபார்த்³ரே வரதே³ நமஸ்தே .. 37-10..

எல்லோரும் உலகத்தின் நன்மைக்காக பலரூபத்தில் பலரூபம் கொண்ட விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தேவீ! எல்லோரும் தங்கள் பக்தனான விஷ்ணுவைத் துதித்ததால், தங்களையேத் துதித்ததாக நினைத்து, எல்லோரையும் திருப்தி படுத்த விஷ்ணுவுக்குச் சக்தி தரவேண்டும் என ஆசிரியர் வேண்டுகிறார்.

முப்பத்தி ஏழாம் தசகம் முடிந்தது.

Saturday, 30 September 2023

vIribONi

 P: vIribONi ninnE kOri cAla marulu konnadirA

(muktAyisvara sAhitya)
sarasa vitaraNa suguNa catura tagaligina doreyanucu maguva madini dalaci
madhu virisaramula paravashamai viraha bharamunanu alasi solasi nanu galayuDakidi
taruNamani pilice parAku valadurA ikanu prANa manasAradanu sAreku rammanara
A: sarasuDau dakSiNa dvAraka sAmi shrI rAjagOpAla dEva
C: ciru navvu mOmuna
1: rA jANapai inta nIki tEDi calamA valaduraganumA celiya virALigoni
alasiyunnadira ikanu dAni nElukonumu sAmiga
2: sogasu nI hoyalu nI karuNa nI ghanatala tAnnennucunu nirantaramu
manamuna valacinadi nidu padamulAna vinu celuvuDA krpa salupa
3: sAmika ninukOri mOhamu madi mIriyunnadi jAgElarA vEra bAgAyenidi
tagunaTarA maguva rUpu maruni yEpu mukhambu sarOjamu vADi kurulanu
madhu karambugaLa mukhambu marALambu naTa hita mati rA ati maruniyala
virishara nikaramulaku veraci ninu sharaNamaniye neratanamunu doratanamunu
neravaDi viDici guriniliyA sudati mudamodana ghanamuka madavatiniyetanu tagadaya
kaligi bigi kavugiliya nerasara sada samambuga rati salupa nidi taruNamE vinavara sundara
anubandham: ciru cemaTalUraga garima mIraga tEjinekki gamakimpucura ganeravairi
ninu jUci I nelata nannentO vEDunura marukELi IdAni nElukO mA cakkani shrI rAjagOpAla dEva
||pdns rgmg rs ndpm gr sndp mpd nsrgm nsrgm pdp mndm ggrn sndn srgmp,,n|| ||smgrs pmgrs dpmgr ndp mgr sndpmgr srgm pd mpdn sr ngrn dm gm pd nns,,,|| ||ndpm grs, rgmpd mpdns rg mgrs ndn, mgrn dnpd mgrg nsrg mpdn srn s,s pd || mp, smgrg