ENQUIRY geetanjaliglobalgurukulam

Thursday, 19 October 2023

37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ - விஷ்ணுமஹத்த்வம்

37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ விஷ்ணுமஹத்த்வம்  



37 ஸப்தத்ரிம்ʼஶத³ஶக꞉ - விஷ்ணுமஹத்த்வம்

புரா ஹரிஸ்த்வாம்ʼ கில ஸாத்த்விகேன ப்ரஸாத³யாமாஸ மகே²ன தே³வி . ஸுரேஷு தம்ʼ ஶ்ரேஷ்ட²தமம்ʼ சகர்த² ஸ தேன ஸர்வத்ர ப³பூ⁴வ பூஜ்ய꞉ .. 37-1.. அத⁴ர்மவ்ருʼத்³தி⁴ஶ்ச யதா³ த்ரிலோகே த⁴ர்மக்ஷயஶ்சாபி ததா³ ப⁴வத்யா . த⁴ர்மம்ʼ ஸமுத்³த⁴ர்துமத⁴ர்மம்ருʼத்³த⁴ம்ʼ மார்ஷ்டும்ʼ ச தே³வ்யேஷ நியுஜ்யதே ஹி .. 37-2.. ஸ ஈட்³யதே ஸர்வத ஏவ ஸர்வை꞉ பத்ன்யா ச பூ⁴தைஶ்ச ஸமம்ʼ கி³ரீஶ꞉ . இலாவ்ருʼதே(அ)பூருஷஸந்நிதா⁴னே ஸங்கர்ஷணாக்²யம்ʼ ப⁴ஜதே முராரிம் .. 37-3.. தமேவ ப⁴த்³ரஶ்ரவஸோ ஹயாஸ்யம்ʼ ப⁴த்³ராஶ்வவர்ஷே முனய꞉ ஸ்துவந்தி . ப்ரஹ்லாத³ உச்சைர்ஹரிவர்ஷவாஸீ விஶ்வார்திஶாந்த்யை ந்ருʼஹரிம்ʼ ச நௌதி .. 37-4.. ஶ்ரீ꞉ கேதுமாலே க²லு காமரூபம்ʼ தம்ʼ ரம்யகே மத்ஸ்யதனும்ʼ மனுஶ்ச . ஹிரண்மயே கூர்மஶரீரபா⁴ஜம்ʼ ஸ்துவந்தி நாராயணமர்யமா ச .. 37-5.. மஹாவராஹம்ʼ குருஷூத்தரேஷு பூ⁴ ராக⁴வம்ʼ கிம்புருஷே ஹனூமான் . தம்ʼ நாரதோ³ பா⁴ரதவர்ஷவர்தீ நரம்ʼ ச நாராயணமாஶ்ரயந்தே .. 37-6.. ஸத்கர்மபூ⁴மிர்ப⁴ரதஸ்ய ராஜ்யம்ʼ ஸந்த்யத்ர வைகுண்ட²கதை²கஸக்தா꞉ . தீர்தா²னி புண்யாஶ்ரமபர்வதாஶ்ச ஜன்மாத்ர தே³வா꞉ ஸ்ப்ருʼஹயந்த்யஜஸ்ரம் .. 37-7.. ப்ரஹ்லாத³பௌத்ர꞉ ஸுதலாதி⁴வாஸ꞉ ஸுரக்ஷிதஶ்சாத்மநிவேத³னேன . வார்த⁴க்யரோக³க்லமபீ⁴திமுக்தோ மஹாப³லிர்வாமனமேவ நௌதி .. 37-8.. ஸஹஸ்ரஶீர்ஷ꞉ ஶிரஸா த³த⁴த் க்ஷ்மாம்ʼ ஹலீ ஹரேஸ்தாமஸமூர்திரார்யை꞉ . ஸம்ʼஸ்தூயமான꞉ ஸஹநாக³கன்ய꞉ பாதாலமூலே ச ஸலீலமாஸ்தே .. 37-9.. விசித்ரரூபம்ʼ ஜக³தாம்ʼ ஹிதாய ஸர்வே ஸ்துவந்த்யச்யுதமித்³த⁴ப⁴க்த்யா . ஏனம்ʼ குரு த்வம்ʼ வரதா³னத³க்ஷம்ʼ மாத꞉ க்ருʼபார்த்³ரே வரதே³ நமஸ்தே .. 37-10..

தசகம் 37

விஷ்ணுமஹத்வம்

1. புரா ஹரிஸ்த்வாம், கில ஸாத்விகேன
ப்ரஸாதயாமஸ, மகேன தேவி!
ஸுரேஷு தம் ஸ்ரேஷ்ட, தமம் ச கர்த்த
ஸ தேன ஸர்வத்ர, பபூவ பூஜ்யஹ

புரா ஹரிஸ்த்வாம்ʼ கில ஸாத்த்விகேன ப்ரஸாத³யாமாஸ மகே²ன தே³வி . 

ஸுரேஷு தம்ʼ ஶ்ரேஷ்ட²தமம்ʼ சகர்த² ஸ தேன ஸர்வத்ர ப³பூ⁴வ பூஜ்ய꞉ .. 37-1..

அம்பாளை பூஜித்தாலும், தியானம் செய்தாலும், யக்ஜம் செய்தாலும், தவம் செய்தாலும் கிடைக்கும் பலன்களை இதுவரை பார்த்தோம். அம்பாளை மட்டுமில்லாமல் அவள் பக்தனைத் துதித்தாலும் இந்த பயன்கள் கிடைக்கும் என்று இந்த தசகத்தில் சொல்லப்படுகிறது. மும்மூர்த்திகளும் விமானத்தில் மணித்வீபம் சென்றதும், தேவி மூன்று சக்திகளை அவர்களுக்குத் தந்ததையும் முன்பே 10 ஆவது தசகத்தில் பார்த்தோம். பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் மூவரும், ஸத்யலோகம், வைகுண்டம், கைலாயம் சிருஷ்டித்துத், தங்களின் சக்திகளை உபயோகித்து, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் ஆகிய தொழிலைச் செய்தார்கள். இந்த சமயம் விஷ்ணு வைகுண்டத்தில் தேவியைக் குறித்து ஒரு ஸாத்வீக யக்ஞம் செய்தார். யக்ஞம் முடிந்ததும் ஒரு அசரீரி கேட்டது. “விஷ்ணு சர்வ தேவர்களிலும் மிக்க சிறந்தவன்” என்று சகல உலகிற்கும் தெரிவிக்கும் செய்தி அது. யக்ஞத்தில் பங்கு பெற்ற அனைவரும் சந்தோஷமடைந்தனர். அன்றுமுதல் விஷ்ணு அனைவராலும் பூஜிக்கத்தக்கவர் ஆனார்.

2. அதர்மவ்ருத்திச்ச, யதா த்ரிலோகே
தர்மக்ஷயச்சாபி, ததா பவத்யா
தர்மம் ஸமுத்தர்த்தும் அதர்மம்ருத்தம்
மார்ஷ்டும் ச தேவ்யே,ஷ நியுஜ்யதே ஹி

அத⁴ர்மவ்ருʼத்³தி⁴ஶ்ச யதா³ த்ரிலோகே த⁴ர்மக்ஷயஶ்சாபி ததா³ ப⁴வத்யா .
த⁴ர்மம்ʼ ஸமுத்³த⁴ர்துமத⁴ர்மம்ருʼத்³த⁴ம்ʼ மார்ஷ்டும்ʼ ச தே³வ்யேஷ நியுஜ்யதே ஹி .. 37-2..

விஷ்ணு தேவர்களில் முக்யத்துவம் கொண்டவர். அனைவரையும் ரக்ஷிக்கக் கூடியவர். அதனால் காக்கும் கடவுள் என்று பெயர் பெறுவார். அதர்மம் எப்பொழுது தலை தூக்குகிறதோ, அப்பொழுதெல்லாம் அவதாரம் செய்து தர்மத்தைக் காப்பார். சிறுமையுடைய அவதாரமானாலும் அவை எல்லோராலும் புகழப்படும். எல்லா அவதாரத்திலும் என் அம்சம் கலந்திருக்கும். அவரின் வெற்றிக்கான சக்தியை நான் கொடுப்பேனென்று தேவி சொன்னவுடன் அனைவரும் மகிழ்ந்தார்கள். விஷ்ணு தேவி பக்தன் என புரிந்துகொண்டு அவரை துதிக்கவும், பூஜிக்கவும் ஆரம்பித்தார்கள்.

3. ஸ ஈட்யதே ஸர்,வத ஏவ ஸர்வைஹி
பத்ன்யா ச பூதைச்ச, ஸமம் கிரீசஹ
இளாவ்ருதேSபூருஷஸன்னிதானே
ஸங்கர்ஷணாக்யம், பஜதே முராரிம்

ஸ ஈட்³யதே ஸர்வத ஏவ ஸர்வை꞉ பத்ன்யா ச பூ⁴தைஶ்ச ஸமம்ʼ கி³ரீஶ꞉ .
இலாவ்ருʼதே(அ)பூருஷஸந்நிதா⁴னே ஸங்கர்ஷணாக்²யம்ʼ ப⁴ஜதே முராரிம் .. 37-3..

தேவியையும், தேவி பக்தனான விஷ்ணுவையும் துதித்து அவர்களின் அனுக்ரஹத்தை இவ்வுலக மக்கள் விரும்பினார்கள். உதாரணமாக, இளாவ்ருதம் என்னும் இடத்தில் சிவன் பார்வதியுடனும் பூதகணங்களுடனும் விஷ்ணுவைத் துதிக்கிறார். இந்த இடத்தில் சிவன் மாட்டும் தான் ஆண். எந்த ஆண்மகன் அங்கு வந்தாலும் அவன் பெண்ணாக மாறிவிடுவான். விரிவாக இதை 5 ஆவது தசகத்தில் பார்த்தோம். ப்ரம்மா ஸத்யலோகத்தில் சிருஷ்டி ஆரம்பத்தில் தாவரங்களையும், பசு, பக்ஷி முதலிவைகளையும் அதன்பின் மனிதனையும் சிருஷ்டித்தார். முதல் மனிதன் ஸ்வாயம்புவன். அவனுக்குப் பிரியவிரதன், உத்தானபாதன் என இரண்டு மகன்களும், ஆஹூதி தேவஹூதி, பிரசூதி என மூன்று பெண்களும் பிறந்தனர். பிரியவிரதனுக்கு இரண்டு மனைவிகள் 13 புத்திரர்களும் 1 பெண்ணும் பிறந்தார்கள். 3 பேர் மன்வந்திராதிபதிகள், 3 பேர் சந்யாஸிகள், வாரிசுகள் 7 பேர் மட்டுமே.

பிரியவிரதன் அரசாண்டு வரும் காலத்தில், தன் அரசாட்சியில், சூரியன் உதயமானால் வெளிச்சமும், மறைந்தால் இருளும் ஏன் ஏற்பட வேண்டும். எப்பொழுதும் பிரகாசமாகத்தானே இருக்கவேண்டும் என்று, தன் யோக சக்தியால் இருளை விரட்டுவோம் என்று சூரியனைப் போல் ஒளி கொண்ட ஒரு தேரில் ஏறி, பூமியை 7 முறை சுற்றி வந்தான். பூமியில் அந்த தேர்ச் சக்கரம் அழுந்திய இடம் 7 ஸமுத்திரம் என்று சொல்லப்படுகிறது. சக்கரம் பதியாத இடங்கள் ஜம்பு த்வீபம், பிலக்ஷத்வீபம், சால்மலித்வீபம், குசத்வீபம், கிரௌஞ்சத்வீபம், சாகத்வீபம், புஷ்கரத்வீபம் என்று கூறப்படுகின்றன. 7 ஸமுத்திரமும், 7 தீவும் ஆனது. 7 புத்திரர்களுக்கும் 7 தீவைக் கொடுத்தார். பெண்ணை சுக்ராச்சாரியாருக்குக் கொடுத்தார். முதல் மகனான ஆக்னீதரனுக்கு ஜம்புத்வீபம் கிடைத்தது. அவர் தன்னுடைய 9 புத்திரர்களுக்கு அதை 9 பாகமாகப் பிரித்துக் கொடுத்தார். அதில் ஒரு பாகம் இளாவ்ருதம். இது மஹாமேரு மலையைச் சுற்றி இருக்கிறது. இங்கு இருந்து கொண்டு சிவன் சங்கர்ஷணரைத் துதிக்கிறார்.

4. தமேவ பத்ரச்ர,வஸோ ஹயாஸ்யம்
பத்ராச்வவர்ஷே, முனய: ஸ்துவந்தி:
ப்ரஹ்ளாத உச்சைர், ஹரிவர்ஷ வாஸீ
விச்வார்த்தி சாந்த்யை, ந்ருஹரிம் ச நௌதி

தமேவ ப⁴த்³ரஶ்ரவஸோ ஹயாஸ்யம்ʼ ப⁴த்³ராஶ்வவர்ஷே முனய꞉ ஸ்துவந்தி .
ப்ரஹ்லாத³ உச்சைர்ஹரிவர்ஷவாஸீ விஶ்வார்திஶாந்த்யை ந்ருʼஹரிம்ʼ ச நௌதி .. 37-4..

இளாவ்ருதத்தில் 4 பக்கமும் துதிக்கும் வைஷ்ணவ ரூபங்கள். கிழக்கில் பத்ராஸ்வ்வர்ஷம். இங்குள்ள முனிவர்கள் ஹயக்ரீவராக விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தெற்கே ஹரிவர்ஷம். இங்கே ப்ரஹ்லாதன் உலக நன்மைக்காக விஷ்ணுவை நரசிம்ஹ ரூபத்தில் துதிக்கிறார்.

5. ஸ்ரீ: கேதுமாலே, கலு காமரூபம்
தம் ரம்யகே மத்ஸ்,யதனும் மனுச்ச
ஹிரண்மயே கூர்ம,சரீரபாஜம்
ஸ்துவந்தி நாரா,யண மர்யமா ச

ஶ்ரீ꞉ கேதுமாலே க²லு காமரூபம்ʼ தம்ʼ ரம்யகே மத்ஸ்யதனும்ʼ மனுஶ்ச .
ஹிரண்மயே கூர்மஶரீரபா⁴ஜம்ʼ ஸ்துவந்தி நாராயணமர்யமா ச .. 37-5..

மேற்கே கேதுமாலம். அங்கே லக்ஷ்மிதேவி காமரூபமாகவும், வடக்கே ரம்யகம். இதில் வைவஸ்வத மனுவானவர் மத்ஸ்ய மூர்த்தியாகவும், அதற்கும் வடக்கே ஹிரண்மயம். இதில் பித்ரு தேவதையான அர்யமா பகவானை கூர்ம ரூபத்தில் துதிக்கிறார். இப்படியாக பகவானைப் பலபக்தர்கள், பலரூபங்களில், பல இடங்களில் துதிக்கிறார்கள்.

6. மஹாவராகம், குருஷுத்தரேஷு
பூ: ராகவம் கிம்,புருஷே ஹனுமான்
தம் நாரதோ பா,ரதவர்ஷவர்த்தீ
நரம் ச நாரா,யண மாச்ரயந்தே

மஹாவராஹம்ʼ குருஷூத்தரேஷு பூ⁴ ராக⁴வம்ʼ கிம்புருஷே ஹனூமான் .
தம்ʼ நாரதோ³ பா⁴ரதவர்ஷவர்தீ நரம்ʼ ச நாராயணமாஶ்ரயந்தே .. 37-6..

ஹிரண்மயத்திற்கு வடக்கே உத்தர குருவருஷம். இங்கே ஆதிவராக ரூபத்தில் பூதேவி துதிக்கிறாள். இளாவ்ருதத்திற்குத் தெற்கே ஹரிவர்ஷம். அதற்கும் தெற்கே கிம்புருஷம்.இதில் ஸர்வேஸ்வரரான தசரத புத்திரனான ஸ்ரீராமரை ஹனுமன் துதிக்கிறார். அதற்கும் தெற்கே பாரதவர்ஷம். இதில் நாரதர் நர நாராயணராக துதிக்கிறார். இப்படி 9 கண்டங்கள், 9 ஸ்தோத்திரக்காரர்கள், 9 வைஷ்ணவ ரூபங்கள்.

7. ஸத்கர்மபூமிர், பரதஸ்ய ராஜ்யம்;
ஸந்த்யத்ர வைகுண்ட, கதைக ஸக்தாஹா
தீர்த்தானி புண்யா,ச்ரமபர்வதாச்ச;
ஜன்மாத்ர தேவா:, ஸ்ப்ருஹயந்த்யஜஸ்ரம்

ஸத்கர்மபூ⁴மிர்ப⁴ரதஸ்ய ராஜ்யம்ʼ ஸந்த்யத்ர வைகுண்ட²கதை²கஸக்தா꞉ .
தீர்தா²னி புண்யாஶ்ரமபர்வதாஶ்ச ஜன்மாத்ர தே³வா꞉ ஸ்ப்ருʼஹயந்த்யஜஸ்ரம் .. 37-7..

இளாவ்ருதத்தின் இந்த இடங்கள் பூமியின் ஸ்வர்க்கம். ஸத்கர்மங்கள் அனுஷ்டிக்கும் பூமி போகபூமி. பாரதம் ஸத்கர்மம் அனுஷ்டிப்பதற்கான பூமி. இதுதான் பாரதத்தின் தனிச் சிறப்பு. விஷ்ணுவின் கதைகளும் தேவியின் கதைகளும் கூறும் பக்தர்கள் பாரதத்தில் உண்டு. தேவலோகத்தில் இல்லை. பாரதத்தில் தாமிரபரணி, காவேரி, கோதாவரி, நர்மதா, சிந்து, யமுனை, மந்தாகினீ, சரயூ போன்ற பல புண்ணிய நதிகளும், புண்ணிய ஆஸ்ரமங்களும் இருக்கின்றன. அதனால் தான் தேவர்களும் இந்த பூமியில் பிறக்கவும், வாழவும் ஆசைப் படுகிறார்கள். மற்ற 6 தீவுகளையும் 6 புத்திரர்களும் காத்து வந்தார்கள். இந்த இடங்களிலும் பகவானின் ஸ்துதி இருந்தது. ஒவ்வொருவிதமாக இருந்தது. ஆகாயத்தில் உள்ள அனேக கோடி நட்சத்திரங்கள், கிரகங்கள், உப கிரகங்கள் இவைகளைக் கட்டுப்படுத்துபவன் துருவன். இவன் யார். விஷ்ணு பக்தன். விஷ்ணுபக்தன் எதையும் கட்டுப்படுத்தமுடியும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

8. ப்ரஹ்ளாதபௌத்ர, ஸுதலாதி வாஸஹ
ஸீரக்ஷிதச்சாSSத்ம, நிவேதனேன
வார்த்தக்யரோக, க்ளமபீதீமுக்தோ
மஹாபலிர் வா, வனமேவ நௌதி.

ப்ரஹ்லாத³பௌத்ர꞉ ஸுதலாதி⁴வாஸ꞉ ஸுரக்ஷிதஶ்சாத்மநிவேத³னேன . 

வார்த⁴க்யரோக³க்லமபீ⁴திமுக்தோ மஹாப³லிர்வாமனமேவ நௌதி .. 37-8..

பூமிக்குக் கீழே 7 லோகம். அதலம், விதலம், சுதலம், தலாதலம், ரசாதலம், மஹாதலம், பாதாளம்.. சுதலத்தைத் தவிர மற்ற 6 லோகங்களிலும் இது எப்பொழுது அழியுமோ என்ற பயம் உண்டு. ஏனென்றால் சுதலத்தில் பலிச்சக்ரவர்த்திக்கு விஷ்ணு மூர்த்தி அங்கு காவலாளியாக இருக்கிறார். சுதலத்தில் மகாபலிக்கு ரோகமோ, களைப்போ, இல்லை. அவர் பிரஹ்லாதனின் பேரனல்லவா? அவரை விஷ்ணு எப்படிக் கைவிடுவார்? மகாபலியும் வாமனரைத் துதித்துக் கொண்டு சுகமாக இருக்கிறார். தாத்தா பிரஹ்லாதன் செய்த புண்ணியம் பேரனுக்கும் வருகிறது.

9. ஸஹஸ்ர சீர்ஷ , சிரஸா ததத் க்ஷ்மாம்
ஹலீ ஹரேஸ்தாமஸமூர்த்திரார்யைஹி
ஸம்ஸ்தூயமான: ஸஹநாககன்யஹ
பாதள மூலே, ச ஸலீலமாஸ்தே

ஸஹஸ்ரஶீர்ஷ꞉ ஶிரஸா த³த⁴த் க்ஷ்மாம்ʼ ஹலீ ஹரேஸ்தாமஸமூர்திரார்யை꞉ . 

ஸம்ʼஸ்தூயமான꞉ ஸஹநாக³கன்ய꞉ பாதாலமூலே ச ஸலீலமாஸ்தே .. 37-9..

பாதாள லோகத்தின் மூலஸ்தானத்தில் அனந்தன் என்னும் பெயரில் பகவான் பூஜிக்கப் படுகிறார். ஸங்கர்ஷணர் என்னும் ருத்திரர் அங்கு 11 கணங்களுடனும், மூன்று கண்களுடனும், கையில் திரிசூலத்துடனும், மஹா பூதங்களை நாசம் செய்பவராக எழுந்தருளியிருந்தார். நாகங்கள் அவர் பாதத்தை நமஸ்கரித்துக் கொண்டிருந்தன. விஷ்ணுவின் தமோ குண ப்ரதான மூர்த்தி இவர். இவர் மஹத்துவத்தை நாரதர் பிரம்ம லோகத்தில் கூறுகிறார்.

10. விசித்ர ரூபம், ஜகதாம் ஹிதாய
ஸர்வே ஸ்துவந்த்யச், யுதமித்தபக்த்யா
ஏனம் குரு த்வம், வரதானதக்ஷம்
மாத:! க்ருபார்த்ரே!, வரதே! நமஸ்தே

விசித்ரரூபம்ʼ ஜக³தாம்ʼ ஹிதாய ஸர்வே ஸ்துவந்த்யச்யுதமித்³த⁴ப⁴க்த்யா . 

ஏனம்ʼ குரு த்வம்ʼ வரதா³னத³க்ஷம்ʼ மாத꞉ க்ருʼபார்த்³ரே வரதே³ நமஸ்தே .. 37-10..

எல்லோரும் உலகத்தின் நன்மைக்காக பலரூபத்தில் பலரூபம் கொண்ட விஷ்ணுவைத் துதிக்கிறார்கள். தேவீ! எல்லோரும் தங்கள் பக்தனான விஷ்ணுவைத் துதித்ததால், தங்களையேத் துதித்ததாக நினைத்து, எல்லோரையும் திருப்தி படுத்த விஷ்ணுவுக்குச் சக்தி தரவேண்டும் என ஆசிரியர் வேண்டுகிறார்.

முப்பத்தி ஏழாம் தசகம் முடிந்தது.

Saturday, 30 September 2023

vIribONi

 P: vIribONi ninnE kOri cAla marulu konnadirA

(muktAyisvara sAhitya)
sarasa vitaraNa suguNa catura tagaligina doreyanucu maguva madini dalaci
madhu virisaramula paravashamai viraha bharamunanu alasi solasi nanu galayuDakidi
taruNamani pilice parAku valadurA ikanu prANa manasAradanu sAreku rammanara
A: sarasuDau dakSiNa dvAraka sAmi shrI rAjagOpAla dEva
C: ciru navvu mOmuna
1: rA jANapai inta nIki tEDi calamA valaduraganumA celiya virALigoni
alasiyunnadira ikanu dAni nElukonumu sAmiga
2: sogasu nI hoyalu nI karuNa nI ghanatala tAnnennucunu nirantaramu
manamuna valacinadi nidu padamulAna vinu celuvuDA krpa salupa
3: sAmika ninukOri mOhamu madi mIriyunnadi jAgElarA vEra bAgAyenidi
tagunaTarA maguva rUpu maruni yEpu mukhambu sarOjamu vADi kurulanu
madhu karambugaLa mukhambu marALambu naTa hita mati rA ati maruniyala
virishara nikaramulaku veraci ninu sharaNamaniye neratanamunu doratanamunu
neravaDi viDici guriniliyA sudati mudamodana ghanamuka madavatiniyetanu tagadaya
kaligi bigi kavugiliya nerasara sada samambuga rati salupa nidi taruNamE vinavara sundara
anubandham: ciru cemaTalUraga garima mIraga tEjinekki gamakimpucura ganeravairi
ninu jUci I nelata nannentO vEDunura marukELi IdAni nElukO mA cakkani shrI rAjagOpAla dEva
||pdns rgmg rs ndpm gr sndp mpd nsrgm nsrgm pdp mndm ggrn sndn srgmp,,n|| ||smgrs pmgrs dpmgr ndp mgr sndpmgr srgm pd mpdn sr ngrn dm gm pd nns,,,|| ||ndpm grs, rgmpd mpdns rg mgrs ndn, mgrn dnpd mgrg nsrg mpdn srn s,s pd || mp, smgrg

Monday, 25 September 2023

36 ஷட்த்ரிம்ʼஶத³ஶக꞉ - மூலப்ரக்ருʼதிமஹிமா

36 ஷட்த்ரிம்ʼஶத³ஶக꞉ மூலப்ரக்ருʼதிமஹிமா  


த்வமேவ மூலப்ரக்ருʼதிஸ்த்வமாத்மா த்வமஸ்யரூபா ப³ஹுரூபிணீ ச . து³ர்கா³ ச ராதா⁴ கமலா ச ஸாவித்ர்யாக்²யா ஸரஸ்வத்யபி ச த்வமேவ .. 36-1.. து³ர்கா³ ஜக³த்³து³ர்க³திநாஶினீ த்வம்ʼ ஶ்ரீக்ருʼஷ்ணலீலாரஸிகா(அ)ஸி ராதா⁴ . ஶோபா⁴ஸ்வரூபா(அ)ஸி க்³ருʼஹாதி³ஷு ஶ்ரீர்வித்³யாஸ்வரூபா(அ)ஸி ஸரஸ்வதீ ச .. 36-2.. ஸரஸ்வதீ ஹா கு³ருஶாபநஷ்டாம்ʼ த்வம்ʼ யாஜ்ஞவல்க்யாய த³தா³த² வித்³யாம் . த்வாமேவ வாணீகவசம்ʼ ஜபந்த꞉ ப்ரஸாத்⁴ய வித்³யாம்ʼ ப³ஹவோ(அ)தி⁴ஜக்³மு꞉ .. 36-3.. த்வம்ʼ தே³வி ஸாவித்ர்யபி⁴தா⁴ம்ʼ த³தா⁴ஸி ப்ரஸாத³தஸ்தே க²லு வேத³மாது꞉ . லேபே⁴ ந்ருʼபாலோ(அ)ஶ்வபதிஸ்தனூஜாம்ʼ நாம்னா ச ஸாவித்ர்யப⁴வத்கிலைஷா .. 36-4.. ஸா ஸத்யவந்தம்ʼ ம்ருʼதமாத்மகாந்தமாஜீவயந்தீ ஶ்வஶுரம்ʼ விதா⁴ய . தூ³ரீக்ருʼதாந்த்⁴யம்ʼ தனயானஸூத யமாத்³கு³ரோராப ச த⁴ர்மஶாஸ்த்ரம் .. 36-5.. ஸ்கந்த³ஸ்ய பத்னீ க²லு பா³லகாதி⁴ஷ்டா²த்ரி ச ஷஷ்டீ²தி ஜக³த்ப்ரஸித்³தா⁴ . த்வம்ʼ தே³வஸேனா த⁴னதா³(அ)த⁴னாநாமபுத்ரிணாம்ʼ புத்ரஸுக²ம்ʼ த³தா³ஸி .. 36-6.. ஸத்கர்மலப்³தே⁴ தனயே ம்ருʼதே து ப்ரியவ்ரதோ(அ)தூ³யத ப⁴க்தவர்ய꞉ . தம்ʼ ஜீவயித்வா ம்ருʼதமஸ்ய த³த்வா ஸ்வப⁴க்தவாத்ஸல்யமத³ர்ஶயஸ்த்வம் .. 36-7.. த்வமேவ க³ங்கா³ துலஸீ த⁴ரா ச ஸ்வாஹா ஸ்வதா⁴ த்வம்ʼ ஸுரபி⁴ஶ்ச தே³வி . த்வம்ʼ த³க்ஷிணா க்ருʼஷ்ணமயீ ச ராதா⁴ த³தா⁴ஸி ராதா⁴மயக்ருʼஷ்ணதாம்ʼ ச .. 36-8.. த்வம்ʼ க்³ராமதே³வீ நக³ராதி⁴தே³வீ வனாதி⁴தே³வீ க்³ருʼஹதே³வதா ச . ஸம்பூஜ்யதே ப⁴க்தஜனைஶ்ச யா யா ஸா ஸா த்வமேவாஸி மஹானுபா⁴வே .. 36-9.. யத்³யச்ச்²ருதம்ʼ த்³ருʼஷ்டமபி ஸ்ம்ருʼதம்ʼ ச தத்தத்த்வதீ³யம்ʼ ஹி கலாம்ʼஶஜாலம் . ந கிஞ்சனாஸ்த்யேவ ஶிவே த்வத³ன்யத்³பூ⁴யோ(அ)பி மூலப்ரக்ருʼதே நமஸ்தே .. 36-10..

தசகம் 36

மூலப்ரக்ருதி மஹிமா

1. த்வமேவ மூல,ப்ரக்ருதிஸ்த்வமாத்மா
த்வமஸ்ய ரூபா, பஹுருபிணீச
துர்க்கா ச ராதா, கமலா ச ஸாவி-
-த்ர்யாக்யா ஸரஸ்வத்,யபி ச த்வமேவ

த்வமேவ மூலப்ரக்ருʼதிஸ்த்வமாத்மா த்வமஸ்யரூபா ப³ஹுரூபிணீ ச .
து³ர்கா³ ச ராதா⁴ கமலா ச ஸாவித்ர்யாக்²யா ஸரஸ்வத்யபி ச த்வமேவ .. 36-1..

ப்ரம்மம் ஆத்மா என்று தொடங்கிய பதங்களால் வேதாந்தம் எதைக் காண்கிறதோ அதுதான் மூலப்ரக்ருதி. அதை ஆதி மஹத் என்றும் சொல்கிறார்கள். மூலப்ரக்ருதி ரூபமில்லாதது. ஆனால் பல உருவங்கள் எடுக்கமுடியும். இந்த மூலப்ரக்ருதியின் அவதாரங்களில் முக்யமானது 5. துர்க்கா, ராதா, லக்ஷ்மி, சாவித்ரி, சரஸ்வதி. ஒவ்வொரு அவதாரத்திற்கும் தனிப்பட்ட சிறப்புகள் உண்டு.

2. துர்கா ஜகத் துர்க்,கதிநாசினீ த்வம்;
ஸ்ரீ கிருஷ்ண லீலா, ரஸிகாஸி ராதா;
சோபா ஸ்வரூபாSஸி, க்ருஹாதிஷு ஸ்ரீர்;
வித்யா ஸ்வரூபாSஸி, ஸரஸ்வதீ ச.

து³ர்கா³ ஜக³த்³து³ர்க³திநாஶினீ த்வம்ʼ ஶ்ரீக்ருʼஷ்ணலீலாரஸிகா(அ)ஸி ராதா⁴ .
ஶோபா⁴ஸ்வரூபா(அ)ஸி க்³ருʼஹாதி³ஷு ஶ்ரீர்வித்³யாஸ்வரூபா(அ)ஸி ஸரஸ்வதீ ச .. 36-2..

தன் உண்மை பக்தர்களின் துர்கதித் தீர்ப்பவள் துர்க்கா. தன்னை நம்பிச் சரண் அடைபவர்களை ஒரு நாளும் கைவிட மாட்டாள். துர்கமன் என்னும் அஸுரனை வதம் செய்தவள். அதன் காரணத்தாலும் துர்க்கா என அழைக்கப்படுகிறாள். ராதை கிருஷ்ணனின் லீலைகளை ரசிப்பவள்.கிருஷ்ணனுக்குப் பிரியமானவள்.ராஸ லீலை ஆடினவள். தன்னை ஆராதிப்பவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்பவள். அவர்களின் ஸமாகமத்திலிருந்து பிரம்மாண்டம் உற்பத்தி ஆனது. மூவுலகத்தின் அழகும் ஒருங்கே இணைந்தவள். லக்ஷ்மி மங்கள ரூபிணி. இவள் அனுக்ரஹம் பெற்றவர்கள் ஸோபையும், காந்தியும் உடையவர்களாக இருப்பார்கள். விவசாயியின் கர்த்தகலக்ஷ்மி, வாணிபனின் வாணித்யலக்ஷ்மி. கண்களால் காணும் ஸௌபாக்யம் எல்லாம் இவள் தான். கிரஹத்தில் கிரஹலக்ஷ்மி, கிராமத்தில் கிராமலக்ஷ்மி, நகரத்தில் நகரலக்ஷ்மி. ஸரஸ்வதி வித்யா ஸ்வரூபிணி. சாஸ்த்திரம், விஞ்ஞானம், பாட்டு, படிப்பு, பேச்சு, நாட்டியம், எழுத்து எல்லாம் தருபவள். பாணினி, காத்யாயனன், பதஞ்சலி, பாதராயணன் ஆகியோர் இவளின் அனுக்ரஹம் பெற்றவர்கள்.

3. ஸரஸ்வதீ ஹா! ,குருசாபநஷ்டாம்
த்வம் யாஜ்ஞ வல்க்யாய ததாத வித்யாம்
த்வாமேவ வாணீ, கவசம் ஜபந்தஹ
ப்ரஸாத்ய வித்யாம், பஹவோதி ஜக்முஹு

ஸரஸ்வதீ ஹா கு³ருஶாபநஷ்டாம்ʼ த்வம்ʼ யாஜ்ஞவல்க்யாய த³தா³த² வித்³யாம் . 

த்வாமேவ வாணீகவசம்ʼ ஜபந்த꞉ ப்ரஸாத்⁴ய வித்³யாம்ʼ ப³ஹவோ(அ)தி⁴ஜக்³மு꞉ .. 36-3..

வேத வ்யாஸரின் 4 வேத சிஷ்யர்களில் யஜுர்வேத சிஷ்யன் வைசம்பாயனன். சிஷ்யர்களில் முக்யமானவர் யாக்ஞவல்கியர். குரு சாபத்தால் சகல வித்தையையும் மறந்து சூரியனைத் துதித்தார். சூரியன் குதிரை ரூபத்தில் யஜுர் வேத வித்தையைக் கொடுத்தான். இதை பலப்படுத்த தேவியின் அருள் வேண்டும் என்றார். யாக்ஞவல்கியர் ஸரஸ்வதியைத் நினத்துத் தவம் செய்தார். ஒளிமயமாக தேவி காட்சி தந்தாள். வித்தைகளை மீண்டும் பெற்றார். அம்பாள் அனுக்ரஹம் இருந்தால் குருசாபமும் ஒன்றும் செய்யாது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஸரஸ்வதி கவசத்திற்கு விஸ்வஜெயம் என்றும் பெயர் உண்டு. இது வித்தைக்கு மிகவும் உகந்தது.

4. த்வம் தேவி! ஸாவித்ர்யபிதாம் ததாஸி;
ப்ரஸாததஸ்தே, கலு வேதமாதுஹு
லேபே ந்ருபாலோ,ச்வபதிஸ்தனூஜாம்
நாம்நா ச ஸாவித்ர்,யபவத் கிலைஷா

த்வம்ʼ தே³வி ஸாவித்ர்யபி⁴தா⁴ம்ʼ த³தா⁴ஸி ப்ரஸாத³தஸ்தே க²லு வேத³மாது꞉ .
லேபே⁴ ந்ருʼபாலோ(அ)ஶ்வபதிஸ்தனூஜாம்ʼ நாம்னா ச ஸாவித்ர்யப⁴வத்கிலைஷா .. 36-4..

மத்ர தேசத்தின் ராஜா அசுவபதி. அவன் மனைவி மாலதி. புத்திரப் பேறு வேண்டி, வசிஷ்டரின் உபதேசத்தால் மாலதி ஸாவித்ரியை ஆராதித்தாள். அன்னை அருள் கிடைக்கவில்லை. பின் அசுவதி மஹாராஜாவும் புஷ்கரக்ஷேத்ரத்தில் 100 வருடம் தவம் செய்தார். அப்பொழுதும் அன்னை காட்சி தரவில்லை. மனவருத்தம் கொண்டார்கள். அப்பொழுது “லக்ஷம் காயத்ரி ஜபம் செய்” என்று அசரீரி கேட்டது. அந்த சமயத்தில் பராசரமுனிவர் அங்கு வந்தார். காயத்ரியை ஒரு தரம் ஜபித்தால் ஒரு இரவும் பகலும் செய்த பாபமும், 100 தரம் ஜபித்தால் ஒரு மாதம் செய்த பாபமும், ஒரு லக்ஷம் ஜபித்தால் இந்த ஜன்ம பாபமும், 10 லக்ஷம் ஜபித்தால் முன் ஜன்ம பாபமும் போகும். இதுபோல் 10 தரம் ஜபித்தால் முக்தி கிடைக்கும். அந்த தேவியை ஸ்தோத்ரம் செய் என்று சொன்னார். அசுவபதி அப்படியே ஜபித்து பூஜிக்க தேவீ அருள் செய்தாள். அவர்களுக்கு ஒரு பெண் பிறந்தது. அந்தப் பெண்ணின் பெயர் சாவித்திரி.

5. ஸா, ஸத்யவந்தம், ம்ருதமாத் மகாந்தம்
ஆ ஜீவயந்தீ ச்வசுரம் விதாய
தூரீக்ருதாந்த்யம், தனயானஸூத;
யமாத் குரோராப ச தர்மசாஸ்த்ரம்

ஸா ஸத்யவந்தம்ʼ ம்ருʼதமாத்மகாந்தமாஜீவயந்தீ ஶ்வஶுரம்ʼ விதா⁴ய . 

தூ³ரீக்ருʼதாந்த்⁴யம்ʼ தனயானஸூத யமாத்³கு³ரோராப ச த⁴ர்மஶாஸ்த்ரம் .. 36-5..

  சாவித்திரி அழகும் யௌவனமும் நிறைந்து விளங்கினாள். த்யுமத்ஸேனருடைய மகன் ஸத்யவானை மணந்தாள். ஒரு வருடம் கழித்துத் தந்தையின் கட்டளைப்படி ஸத்யவான் பழமும், விறகும் கொண்டுவர சந்தோஷத்துடன் புறப்பட்டான். சாவித்திரியும் உடன் சென்றாள். விதியினால் ஸத்யவான் மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்தான். யமன் அவனைக் கொண்டு போக, சாவித்திரியும் யமனைத் தொடர்ந்து போனாள்.

யமன் சொன்னான் “சாவித்திரி நீ மனித உடலுடன் என் உலகம் வரமுடியாது. உன் கணவன் ஆயுள் முடிந்துவிட்டது. கர்மபலனை அனுபவிக்க அவன் என்னுடன் வருகிறான். கர்ம பலனால் தான் ஜீவன் பிறக்கிறான். அதனாலேயே மரணமும் அடைகிறான். சுகம், துக்கம், பயம், சோகம், தேவத்தன்மைகள், ஸாலோக்யம், ஸகல சித்திகள் இவைகளையும் அடைகிறான். அஸுர, தைத்ய பிறப்புகளும் அதன் காரணமே ” என்றான். சாவித்திரி கேட்டாள்” கர்மம்என்பது என்ன? அது எதனால் ஏற்படுகிறது? தேகம் என்பது எது? இந்த கர்மத்தைச் செய்பவன் யார்? அதை அனுபவிப்பவன் யார்? ஜீவன் யார்? பரமாத்மா யார்?” .

யமன் சொன்னான், வேதம் விதித்தது எதுவோ அது கர்மம். சங்கல்பமில்லாமல் செய்யும் கர்மம் உத்தமமானது. பிரம்ம பக்தன் எவனோ அவனே முக்தன். பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய், சோகம், பயம் இல்லாதவன். கர்ம வடிவினரும், கர்மத்தின் வித்து போலும் இருக்கும் பகவான் கர்ம பலனைத் தருகிறார். அவர் பரமாத்மா. பரா அல்லது பராசக்தி என்பது பிரகிருதி. இந்த பிரகிருதிக்குக் காரணமானவர் பகவான்தான். தேகம் என்பது அழியக் கூடியது. கர்மத்தைச் செய்பவன் தேகீ. போகம் என்பது ஐஸ்வர்யம். பரமாத்மா போகத்தை அனுபவிக்கச் செய்பவர். உடலையும், பிராணனையும் தாங்குபவன் ஜீவன். பிரம்மம் என்பது நிர்குணமாய், பிரகிருதிக்கு அப்பாற்பட்டதாய், எங்கும் வ்யாபித்திருக்கும் பரம் பொருள். அதுதான் பரமாத்மா. மேலும் சாவித்ரி எந்த கர்மாவினால் ஜீவன் பிறக்கிறான்? என்னவாகப் பிறக்கிறான்? ஸ்வர்கம், நரகத்திற்கு எந்த கர்மம் காரணம்? எதனால் யோகி ஆகிறான்? எதனால் ரோகி ஆகிறான்? என்று பல விஷயங்களைக் கேட்டாள். தருமராஜன் இதைக் கேட்டு ஆச்சர்யமடைந்து சிரித்தபடியே சொல்கிறார் “குழந்தாய் நீ சாவித்திரி தேவியின் ஒர் அம்சமாகப் பிறந்தவள். உன் ஞானம் ஞானிகளின் ஞானத்தைவிடச் சிறந்தது. விஷ்ணுவின் மார்பில் லக்ஷ்மியும், சிவனின் உடலில் பவானியையைப் போலும் நீ சத்யவானிடத்தில் சௌபாக்யவதியாக இருப்பாய் என்று வாழ்த்தி, நீ விரும்பும் வரத்தைக் கேள் என்றார்.

“ஸத்யவானிடம் எனக்கு 100 புத்திரர்களும், என் தந்தைக்கு 100 குழந்தைகளும், என் மாமனாருக்கு ராஜ்யலாபத்துடன் கண் பார்வையும், வேண்டும். லக்ஷம் வருஷங்கள் ஆனதும் என் கணவருடன் நானும் பரமபதம் அடைய வேண்டும்” என்று சாவித்திரி கேட்டாள். அப்படியே ஆகட்டும் என்று வரம் கொடுத்தார் தர்மராஜன். அதன் பின் ஜீவனின் கர்ம பயனையும், அதைக் கடக்க வழியும், எந்த சக்தி அனைவரையும் காக்கிறதோ, முக்தியும் சாகா நிலையும் தருகிறதோ அந்த சக்தி பூஜை செய்யும் முறைதனையும் கூறும் படிக் கேட்டாள். அந்த யமதர்மராஜனை பலவித ஸ்தோத்ரங்களால் நமஸ்கரித்தாள். யமன் சொன்னான் “அவனவன் செய்த கர்மப்படி, ஸ்வர்கமும் நரகமும் அடைகிறான். அந்தந்த வினைகளுக்கு ஏற்ப காலஸமுத்திரம், ஜ்வாலாமுகம், தூம்ராந்தம் போன்ற 86 நரக குண்டங்களை அடைகிறான். நரகத்தில் விழாமல் பிறவித் துன்பம் ஒழிக்கும் கர்மம் என்ன? என்று கேட்டாள். பஞ்ச தேவதா பூஜையைச் செய்யும் மனிதன் நரகத்தைப் பார்க்க மாட்டான் என்றார். பரமாத்ம சேவையே மேலான சுபகர்மம் என்று பலவித தர்ம சாஸ்த்திர விளக்கங்கள் கூறினார் தர்மராஜன். ஸத்யவானுக்கு உயிர் கொடுத்து அவளுக்கு மங்கள ஆசீர்வாதம் அளித்தார். அவள் தன் கணவனுடன் நீண்டநாள் வாழ்ந்து முக்தி அடைந்தாள்.

6. ஸ்கந்தஸ்ய பத்னீ, கலு பாலகாதி-
-ஷ்டாத்ரி ச ஷஷ்டீதி ஜகத்ப்ரஸித்தா
த்வம் தேவஸேனா, தனதா தனானாம்
அபுத்ரிணாம் புத்ர,ஸுகம் ததாஸி

ஸ்கந்த³ஸ்ய பத்னீ க²லு பா³லகாதி⁴ஷ்டா²த்ரி ச ஷஷ்டீ²தி ஜக³த்ப்ரஸித்³தா⁴ . 

த்வம்ʼ தே³வஸேனா த⁴னதா³(அ)த⁴னாநாமபுத்ரிணாம்ʼ புத்ரஸுக²ம்ʼ த³தா³ஸி .. 36-6..

மூலப்ரக்ருதியின் 5 அவதாரங்களை இதுவரை பார்த்தோம். அடுத்தது தேவஸேனா. பிரக்ருதியின் ஆறாவது அம்சத்தில் பிறந்தவள். ஆறாவதாக வருவதால் ஷஷ்டி என்றும் பெயர். குழைந்தைகளின் அதிஷ்டான தேவதை இவள். ஸ்கந்தனின் மனைவி. செல்வம் இல்லாதவர்க்குச் செல்வம் தருவாள். குழந்தை வேண்டுபவருக்குக் குழந்தைகளைத் தருவாள். குழந்தை இல்லாதவர்கள் இந்த தேவியை பூஜித்து ஷஷ்டி விரதம் இருந்தால் புத்திரர்கள் பிறப்பார்கள். பிறக்கும் குழந்தையும் குணவானாக இருப்பான்.

7. ஸத்கர்மலப்தே, தனயே ம்ருதே து
ப்ரியவ்ரதோSதூ,யத பக்த வர்யஹ
தம் ஜீவயித்வா, ம்ருதமஸ்ய தத்வா
ஸ்வ பக்தவாத்ஸல்,யமதர்சயஸ்த்வம்

ஸத்கர்மலப்³தே⁴ தனயே ம்ருʼதே து ப்ரியவ்ரதோ(அ)தூ³யத ப⁴க்தவர்ய꞉ . 

தம்ʼ ஜீவயித்வா ம்ருʼதமஸ்ய த³த்வா ஸ்வப⁴க்தவாத்ஸல்யமத³ர்ஶயஸ்த்வம் .. 36-7..

ஸ்வாயம்புவமனுவின் புத்திரன் பிரியவிரதன். இவன் தேவி பக்தன். புத்ரகாமேஷ்டி யாகம் செய்து ஒரு குழந்தயைப் பெற்றான். ஆனால் அந்தக் குழந்தை உயிரில்லாமல் பிறந்தது. அனைவரும் அழுதனர். தாய் மயக்கமடைந்தாள். தந்தையோ பிராணனைவிட முயற்சி செய்தார். இப்படி அனைவரும் கலங்கி நிற்கும் பொழுது அனேககோடி ரத்தினங்களால் அலங்கரிப்பட்டு, கருணைக் கடலாக, பக்தருக்கு அனுக்ரஹம் செய்ய ஆவல் கொண்டு அவர்கள் முன் தோன்றிய அந்த தேவியை அரசன் துதித்து, நீ யார் என்று கேட்டான். நான் பிரம்மாவின் மானஸ புத்ரி. தேவஸேனா என்று பெயர். ஸ்கந்தனின் பத்னி. சுகம், துக்கம், பயம், சோகம், மங்களம், மகிழ்ச்சி, ஸம்பத்து, விபத்து ஆகிய எல்லாம் கர்மத்தால் விளைகிறது. அந்த கர்மத்தாலேயே உயிரிழந்த புத்திரனும், சிரஞ்சீவியானவனும் தோன்றுகிறார்கள் என்று சொல்லி ஞான பலத்தால் குழந்தையை உயிர்ப்பித்துக் கொடுத்து, ப்ரியவிரதனுக்கு அனுக்ரஹமும் செய்தாள்.

8. த்வமேவ கங்கா, துளசீ, தரா ச
ஸ்வா: ஸ்வதா த்வம், ஸுரபிச்ச தேவி!
த்வம் தக்ஷிணா, கிருஷ்ண,மயீ ச ராதா,
ததாஸி ராதா,மயக்ருஷ்ணதாம் ச

த்வமேவ க³ங்கா³ துலஸீ த⁴ரா ச ஸ்வாஹா ஸ்வதா⁴ த்வம்ʼ ஸுரபி⁴ஶ்ச தே³வி . 

த்வம்ʼ த³க்ஷிணா க்ருʼஷ்ணமயீ ச ராதா⁴ த³தா⁴ஸி ராதா⁴மயக்ருʼஷ்ணதாம்ʼ ச .. 36-8..

 விஷ்ணுவின் பத்னிகளான கங்கா, லக்ஷ்மி, ஸரஸ்வதி மூவரும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டார்கள். சாபமும் கொடுத்துக் கொண்டார்கள். அதனால் மூவரும் நதிகளாக ஆனார்கள். கங்கா கங்கை நதி ஆனாள். சரஸ்வதி அந்தர்வாணி ஆனாள். லக்ஷ்மி பத்மாநதி ஆனாள். சாபத்தால் லக்ஷ்மி மரமாக ஜனிக்க வேண்டி இருந்தது. விஷ்ணுவின் அனுக்ரஹத்தால் தர்மத்வஜரிடத்தில் பெண்ணாக துளசி என்னும் பெயரில் ஜனித்தாள். பூமியில் துளசிச் செடியாக இருந்தாள். கங்கா கோலோகத்தில் ஒரு கோபிகையாக இருந்தாள். ஒருநாள் ஏகாந்தத்தில் ஸ்ரீ கிருஷ்ணனுடன் சங்கமித்தாள். ராதை அதைப் பார்த்துவிட்டாள். கிருஷ்ணன் கங்கையை காலின் அடியில் மறைத்து வைத்தான். கங்கை ஒளிந்தததால் எங்குமே ஜலம் இல்லாமல் போனது. ஒரு இடத்திலும் தண்ணீர் இல்லை. அனைவரும் கஷ்டப்பட்டார்கள். இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பிரம்மா கோலோகம் சென்றார். பீடத்தில் கிருஷ்ணன் அமர்ந்திருக்கக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே கிருஷ்ணன் ராதை ஆனார். உடனே கிருஷ்ணன் ஆனார். ராதையும் கிருஷ்ணனும் வெவ்வேறல்ல. ஒன்றுதான் என்று பிரம்மா உணர்ந்தார்.

பிரம்மாவின் கோரிக்கைப் படி கிருஷ்ணன் கங்கையை விட்டார். எங்கும் ஜலம் வந்து கஷ்டம் தீர்ந்தது. மனிதன் செய்யும் யக்ஜம், யாகம் இவைகளின் ஹவிர் பாகங்களை தேவர்களுக்கு எடுத்துச் செல்லும் அம்பாள் “ஸ்வாஹா’ ஆனாள். பித்ருக்களுக்குச் செய்யும் கர்ம பாகங்கள் கொண்டு செல்பவள் “ஸ்வதா” ஆனாள். கர்மத்தைச் செய்தவுடன் தக்ஷிணையைக் கொடுக்கும் பொழுது அவள் தக்ஷிணா தேவி ஆகிறாள். தக்ஷிணையுடன் கூடிய கர்மம் பயன் தரும். தக்ஷணை இல்லாத கர்மத்தை பலிச்சக்ரவர்த்தி புசிக்கிறார். இது அவர் பகவானின் வாமனாவதாரத்தில் பெற்ற வரம். பூ லோக பாரத்தைத் தாங்குபவள் பூமி தேவி. வஸுதையும் பூமிதான். ஹிரண்யாக்ஷன் பூமியைக் கவர்ந்து ஸமுத்திரத்தின் அடியில் ஒளித்தபோது பகவான் வராக ரூபம் எடுத்து அதைக் கொண்டு வந்தார். அந்த நிலையில் சுந்தரியாக நின்ற பூமியைக் கண்டு வராகமூர்த்தி மோஹித்து ஒரு வருட காலம் கிரீடித்தனர். கடேசன் என்னும் பிள்ளையையும் பெற்றனர். அதன் பின் தெளிவுபெற்று ஸ்ரீ தேவிக்குச் சமமான மனைவியாக நீயும் ஆனாய், அனைவராலும் பூஜிக்கப்படுவாய் என்றும் சொன்னார். தேவியும் உங்கள் ஆணைப்படி அனைத்துலகையும் வராகரூபிணியாகத் தாங்குகிறேன் என்று சொன்னாள். மேலும் முத்து, சிப்பி, சிவலிங்கம், புஸ்தகம், புஷ்பம், பூமாலை, துளசீ, ஜபமாலை, தேவி விஷ்ணு பிம்பங்கள், சந்தனம், சாலிக்ராமம், சங்கு, தீபம், யந்திரம், மாணிக்கம், பொன், வஜ்ரம், தீர்த்தம் ஆகியவைகளை ஆசனமில்லாமல் வைத்தால் அவைகளைத் தாங்கும் வல்லமையில்லாமல் நான் வருந்துவேன் என்றாள். இவைகளை உன் மீது வைப்பவர் காலசூத்திரம் என்னும் நரகத்தை அடையட்டும் என்று பகவான் சொல்லிச் சென்றார்

9. த்வம் க்ராமதேவி, நகராதிதேவி
வனாதிதேவி க்ருஹதேவதா ச
ஸம்பூஜ்யதே பக்த,ஜனைச்ச யா யா
ஸா ஸா த்வமே வாஸி, மஹானுபாவே!

த்வம்ʼ க்³ராமதே³வீ நக³ராதி⁴தே³வீ வனாதி⁴தே³வீ க்³ருʼஹதே³வதா ச . 

ஸம்பூஜ்யதே ப⁴க்தஜனைஶ்ச யா யா ஸா ஸா த்வமேவாஸி மஹானுபா⁴வே .. 36-9..பக்தர்களின் பூஜையை ஏற்றுக்கொள்ளும் எல்லா மூர்த்திகளும் மூலபிரக்ருதியின் பல ரூபங்கள் தான். நகரத்தில் நகரதேவதை. கிரமத்தைக் காக்கும் கிராம தேவதை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தேவதை. வீட்டில் உள்ள பூஜை அறை, துளசி மாடம் அனைத்து பூஜையும் ஏற்பவள் அவளே. இப்படி எல்லா இடத்திலும் இருப்பது மூலப்ரக்ருதிதான்.

10. யத் யத் ச்ருதம் த்ருஷ்டம், அபி ஸ்ம்ருதம் ச
தத் தத் த்வதீயம், ஹி கலாம்சஜாலம்
ந கிஞ்சனாஸ்த்யேவ, சிவே! த்வதன்யது
பூயோபி மூல,ப்ரக்ருதே! நமஸ்தே

யத்³யச்ச்²ருதம்ʼ த்³ருʼஷ்டமபி ஸ்ம்ருʼதம்ʼ ச தத்தத்த்வதீ³யம்ʼ ஹி கலாம்ʼஶஜாலம் . 

ந கிஞ்சனாஸ்த்யேவ ஶிவே த்வத³ன்யத்³பூ⁴யோ(அ)பி மூலப்ரக்ருʼதே நமஸ்தே .. 36-10..

அறிவுக்கு உள்பட்ட அனைத்தும் மூலப்ரக்ருதி. எல்லா உயிர்களிலும் இருப்பது மூலப்ரக்ருதி. யாரும் யாரையும் பழிப்பதோ, நிந்திப்பதோ, இழிவாகப் பேசுவதோ, தூஷிப்பதோ கூடாது. எல்லோருக்கும் மரியாதை தரவேண்டும். அப்பொழுது மூலப்ரக்ருதியை பூஜை செய்த பலன் கிடைக்கும். மூலப்ரக்ருதியை வணங்கி ஆசிரியர் இந்த தசகம் முடிக்கிறார்.

முப்பத்தி ஆறாம் தசகம் முடிந்தது


33 த்ரயஸ்த்ரிம்ʼஶத³ஶக꞉ - கௌ³தமகதா²

 https://www.youtube.com/watch?v=PIilbmEhWWI




33 த்ரயஸ்த்ரிம்ʼஶத³ஶக꞉ - கௌ³தமகதா²

ஶக்ர꞉ புரா ஜீவக³ணஸ்ய கர்மதோ³ஷாத்ஸமா꞉ பஞ்சத³ஶ க்ஷமாயாம் . வ்ருʼஷ்டிம்ʼ ந சக்ரே த⁴ரணீ ச ஶுஷ்கவாபீதடா³கா³தி³ஜலாஶயா(ஆ)ஸீத் .. 33-1.. ஸஸ்யானி ஶுஷ்காணி க²கா³ன் ம்ருʼகா³ம்ʼஶ்ச பு⁴க்த்வா(அ)ப்யத்ருʼப்தா꞉ க்ஷுத⁴யா த்ருʼஷா ச . நிபீடி³தா மர்த்யஶவானி சாஹோ மர்த்யா அநிஷ்டான்யபி பு⁴ஞ்ஜதே ஸ்ம .. 33-2.. க்ஷுதா⁴(அ)ர்தி³தா꞉ ஸர்வஜனா மஹா(ஆ)பத்³விமுக்திகாமா மிலிதா꞉ கதா³சித் . தபோத⁴னம்ʼ கௌ³தமமேத்ய ப⁴க்த்யா ப்ருʼஷ்டா முனிம்ʼ ஸ்வாக³மஹேதுமூசு꞉ .. 33-3.. விஜ்ஞாய ஸர்வம்ʼ முநிராட் க்ருʼபாலு꞉ ஸம்பூஜ்ய கா³யத்ர்யபி⁴தா⁴ம்ʼ ஶிவே த்வாம் . ப்ரஸாத்³ய த்³ருʼஷ்ட்வா ச தவைவ ஹஸ்தால்லேபே⁴ நவம்ʼ காமத³பாத்ரமேகம் .. 33-4.. து³கூலஸௌவர்ணவிபூ⁴ஷணான்னவஸ்த்ராதி³ கா³வோ மஹிஷாத³யஶ்ச . யத்³யஜ்ஜனைரீப்ஸிதமாஶு தத்தத்தத்பாத்ரதோ தே³வி ஸமுத்³ப³பூ⁴வ .. 33-5.. ரோகோ³ ந தை³ன்யம்ʼ ந ப⁴யம்ʼ ந சைவ ஜனா மிதோ² மோத³கரா ப³பூ⁴வு꞉ . தே கௌ³தமஸ்யோக்³ரதப꞉ப்ரபா⁴வமுச்சைர்ஜகு³ஸ்தாம்ʼ கருணார்த்³ரதாம்ʼ ச .. 33-6.. ஏவம்ʼ ஸமா த்³வாத³ஶ தத்ர ஸர்வே நின்யு꞉ கதா³சின்மிலிதேஷு தேஷு . ஶ்ரீநாரதோ³ தே³வி ஶஶீவ கா³யத்ர்யாஶ்சர்யஶக்திம்ʼ ப்ரக்³ருʼணன்னவாப .. 33-7.. ஸ பூஜிதஸ்தத்ர நிஷண்ண உச்சைர்நிவேத்³ய தாம்ʼ கௌ³தமகீர்திலக்ஷ்மீம் . ஸபா⁴ஸு ஶக்ராதி³ஸுரை꞉ ப்ரகீ³தாம்ʼ ஜகா³ம ஸந்தோ ஜஹ்ருʼஷு꞉ க்ருʼதஜ்ஞா꞉ .. 33-8.. காலே த⁴ராம்ʼ வ்ருʼஷ்டிஸம்ருʼத்³த⁴ஸஸ்யாம்ʼ த்³ருʼஷ்ட்வா ஜனா கௌ³தமமானமந்த꞉ . ஆப்ருʼச்ச்²ய தே ஸஜ்ஜனஸங்க³பூதா முதா³ ஜவாத்ஸ்வஸ்வக்³ருʼஹாணி ஜக்³மு꞉ .. 33-9..


தசகம் 33

கௌதமகதை

1. சக்ர: புரா ஜீவ,கணஸ்ய கர்ம
தோஷாத் ஸமா: பஞ்சதச க்ஷமாயாம்
வ்ருஷ்டிம் ந சக்ரே;, தரணீ ச சுஷ்க
வாபீத டாகாதி, ஜலாசயாSSஸீது

து³꞉கா²னி மே ஸந்து யதோ மனோ மே ப்ரதப்தஸங்க⁴ட்டிதஹேமஶோபி⁴ .
விஶுத்³த⁴மஸ்து த்வயீ ப³த்³த⁴ராகோ³ ப⁴வானி தே தே³வி நமோ(அ)ஸ்து பூ⁴ய꞉ .. 33-10..

முன்னொரு சமயம் உலகத்தில் பிராணிகளுடைய துஷ்கர்ம வினையால் இந்திரன் 15 வருஷங்கள் மழை பெய்யச் செய்யவில்லை.. ஆறு, ஏரி, குளம், குட்டை ,கிணறு எல்லாம் வற்றிப் போனது.

2. ஸஸ்யானி சுஷ்காணி, ககான் ம்ருகாம்ச்ச
புக்த்வாSப்ய த்ருப்தா:, க்ஷுதயா த்ருஷா ச
நிபீடிதா மர்த்ய, சவானி சாஹோ!
மர்த்யா அநிஷ்டான்,யபி புஞ்சதே ஸ்ம

செடி, கொடி, மரம் எல்லாம் வாடிப்போயின. மனிதர்கள் பசியால் வாடினார்கள். உலர்ந்த பழங்களைச் சாப்பிட்டனர். பறவைகளையும், மிருகங்களையும் கொன்று தின்றார்கள். இறந்தவனை உயிரோடு இருப்பவன் சாப்பிட்டான். பசிக் கொடுமையால் சாப்பிடக் கூடாததையெல்லாம் சாப்பிட்டான். என்ன கொடுமை இது? அதனால் தான் தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று சொல்லப் படுகிறது.

3. க்ஷுதாSர்திதா: ஸர்வ,ஜனா மஹாபத்
விமுக்திகாமா, மிளிதா: கதாசிது
தபோதனம் கௌ,தமமேத்ய பக்த்யா
ப்ருஷ்டா முனிம் ஸ்வா,கமஹேதுமூசுஹு

பிராமணர்கள் அனைவரும் ஒன்று கூடி எல்லோரும் யோசித்து, தபஸையே தனமாகக் கொண்ட கௌதம முனிவரிடம் போவோம். அவர் காயத்ரி மந்திரத்தை ஜபிப்பவர். அவர் ஆஸ்ரமம் செழிப்பாக இருக்கிறது. ஆகவே அவருடைய ஆஸ்ரமத்திற்குச் சென்றால் நம் வறுமையை நீக்குவார் என்று முடிவு செய்து, எல்லோரும் தத்தம் குடும்பத்துடனும், பசுக்கள், வேலைக்காரர்கள் அனைவருடனும் கௌதம முனிவரின் ஆஸ்ரமம் அடைந்தனர். கௌதமர் அவர்களை முறைப்படி உபசரித்துப் பின், ஏன் இப்படி எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்டமாக வந்தீர்கள்? காரணம் யாது? என்று கேட்டார். பிராமணர்கள் தங்கள் குறைகளையும், வறுமை நிலையையும் துக்கத்தோடு சொன்னார்கள். கௌதமர் அதைச் சிரத்தையுடன் கேட்டார்.

4. விஞ்ஞாய ஸர்வம், முனிராட் க்ருபாலுஹு
ஸம்பூஜ்ய காயத்ர்,யபிதாம் சிவே! த்வாம்
ப்ராஸாத்ய த்ருஷ்ட்வா ச, தவைவ ஹஸ்தாலு
லேபே நவம் கா,மதபாத்ரமேகம்

கௌதமர் அவர்களுக்கு அபயம் கொடுத்தார். பிராமணர்களே உங்கள் வரவால் என் இல்லம் சுத்தம் பெற்றது. நீங்கள் கவலையை விட்டுவிட்டு சந்தி ஜபம் செய்து ஓய்வெடுங்கள் என்று கூறினார். அதன் பின் அவர் காயத்ரி தேவியை துதித்தார். அவர் காயத்ரி உபாஸகர். ஜகன்மாதாவும், பரமகலாரூபியுமான காயத்ரி தேவி தரிசனம் தந்து, சர்வபோஷண ( அக்ஷய பாத்திரம்) பாத்திரம் ஒன்றைத் தந்து, “கௌதமா! நீ எதையெல்லாம் விரும்புகிறாயோ அவையெல்லாம் இப்பாத்திரம் தரும்” என்று சொல்லி தேவி மறைந்தாள்.

5. துகூலஸௌவர்ண, விபூஷணான்ன
வஸ்த்ராதி காவோ, மஹிஷாதயச்ச
யத் யத் ஜனைரீப்,ஸிதமாசு தத் தத்
தத்பாத்ரதோ தேவி! ஸமுத்பபூவ

கௌதமருக்கு தேவி கொடுத்தது சர்வ போஷணப் பாத்திரம். சூரியன் பாண்டவர்களுக்கு ஒரு அக்ஷய பாத்திரம் தந்தார். ஆனால் அது பாஞ்சாலி உண்டபின் அன்றைய தினம் மறுபடியும் ஏதும் தராது. ஆனால் கௌதமருக்கு அம்பாள் தந்த அக்ஷய பாத்திரம், அறுசுவைப் பதார்த்தங்கள், பூஷணங்கள், பட்டு வஸ்திரங்கள், ஆடு, மாடு, பசு, யக்ஞத்திற்கு வேண்டிய திரவியங்கள், பாத்திரங்கள் இப்படி எதை எல்லாம் கௌதமர் விரும்பினாரோ அதை எல்லாம் எப்பொழுதும் தந்தது. காத்திருக்காமல் நினைத்த உடனே எதுவும் கிடைத்தது.

6. ரோகோ ந, தைந்யம், ந, பயம் ந சைவ,
ஜனா மிதோ மோத,கரா பபூவுஹு
தே கௌதமஸ்யோக்ர,த ப: ப்ரபாவம்
உச்சைர் ஜகுஸ்தாம், கருணார்த்ரதாம் ச

அனைத்து ஜனங்களும் கௌதமரின் ஆஸ்ரமத்தில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்குத் தேவையானவைகள் எல்லாம் கிடைத்தன. அசூயை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தார்கள். ஒருவரை ஒருவர் மகிழ்வித்தார்கள். இதற்குக் காரணம் கௌதமரின் தவ சக்தியே. இதை அனைவரும் அறிந்ததால் கௌதமரின் புகழையும், பெருமையையும் பேசினார்கள். அவரின் தவ வலிமையையும் காருண்யத்தையும் பெருமையாகச் சொன்னார்கள்.

7. ஏவம் ஸமா த்வா,தச தத்ர ஸர்வே
நிந்யு:; கதாசின், மிளிதேஷு தேஷு
ஸ்ரீநாரதோ தேவி! சசீவ காயத்ரீ
ஆச்சர்ய சக்திம் ப்ரக்ருணன்னவாப

ஒரு நாள் நாரத மஹரிஷி “மகதி” என்னும் வீணையை மீட்டிக் கொண்டு, காயத்ரி தேவியின் புகழைப் பாடிக்கொண்டு, கௌதமரின் ஆஸ்ரமத்திற்கு வந்தார். சந்திரனைப் பார்த்தால் மனம் எப்படி குளிர்ச்சி அடையுமோ அப்படி நாரதரைப் பார்த்து அனைவரும் மகிழ்ந்தனர்.

8. ஸ பூஜிதஸ்தத்ர, நிஷண்ண உச்சைர்ஹி
நிவேத்ய தாம் கௌ,தமகீர்திலக்ஷ்மீம்
ஸபாஸு சக் ராதி,ஸுரை: ப்ரகீதாம்
ஜகாம; ஸந்தோ, ஜஹ்ருஷு: க்ருதஜ்ஞாஹா

நாரத மஹரிஷியை அனைவரும் பூஜித்தார்கள். “தேவ சபையில் தேவேந்திரன் கௌதம முனிவர் எல்லோரையும் போஷிக்கும் பெருமையைச் சொல்ல, அதைக் கேட்டு நான் கௌதமரைப் பார்க்க வந்தேன்” என்று கௌதமரின் கீர்த்தியை நாரதர் பெருமையுடன் சொன்னார். இந்திராதி தேவர்களும் கௌதமரை மிகவும் புகழ்ந்தார்கள். கௌதமரின் பெருமை பூ உலகம் மட்டும் இன்றி வானுலகிலும் பரவியிருப்பதைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டார்கள்.

9. காலே தராம் வ்ருஷ்டி,ஸம்ருத்தஸஸ்யாம்
த்ருஷ்ட்வா ஜனா கௌ,தமமானமந்த:
ஆப்ருச்ச்ய தே ஸஜ்,ஜனஸங்கபூதா
முதா ஜவாத் ஸ்வ,ஸ்வ க்ருஹாணி ஜக்முஹு

காலம் கனிந்தது. பூமியில் மழை பொழிந்தது. செடி கொடிகள் எல்லாம் தழைக்க ஆரபித்தன. கௌதமரால் போஷிக்கப் பட்ட ஜனங்கள் அவரை வணங்கி, நன்றி கூறி, அவரவர் இல்லம் மீண்டும் திரும்பினார்கள்.

10. துக்கானி மே ஸந்து, யதோ மனோ மே
ப்ரதப்தஸங்கட்,டித ஹேமசோபி
விசுத்தமஸ்துத்; த்வயி பத்தராகோ
பவானி; தே தேவி! நமோஸ்து பூய:

மழை இல்லாமல் பசிக் கொடுமையிலும், வறுமையிலும் வாடிய ஜனங்கள் ,கௌதமர் ஆஸ்ரமம் வந்தார்கள். ஆஸ்ரம வாசம் அவர்களின் மனதைத் தூய்மை படுத்தியது. மழையின்றி அவர்கள் பட்ட கஷ்டம் ,இப்படி அனுக்ரஹமாக மாறியது. நாமும் நம் வாழ்க்கையில் வரும் ஒவ்வொரு கஷ்டத்தையும் அனுக்ரஹமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். அதுதான் விவேகம். தங்கம் எப்படிப் பதமாகிறது? நெருப்பில் காய்ச்சி, நீரில் குளிரவைத்து, இரும்பால் அடிக்கிறார்கள். அதுபோல் என் மனமும் சுத்தமாக வேண்டும் என்று ஆசிரியர் வேண்டுகிறார். அதற்காகத் தான் எந்த துக்கத்தைத் தாங்கவும் தயார் என்று சொல்கிறார். மனம் தெளிந்து பக்தி வளர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் தேவியை வணங்குகிறார்.

முப்பத்தி மூன்றாம் தசகம் முடிந்தது

34 சதுஸ்த்ரிம்ʼஶத³ஶக꞉ - கௌ³தமஶாப꞉ rec

34 சதுஸ்த்ரிம்ʼஶத³ஶக꞉ - கௌ³தமஶாப꞉

ஸ்வர்வாஸிபி⁴ர்கௌ³தமகீர்த்திருச்சைர்கீ³தா ஸபா⁴ஸு த்ரித³ஶை꞉ ஸதே³தி . ஆகர்ண்ய தே³வர்ஷிமுகா²த்க்ருʼதக்⁴னா த்³விஜா ப³பூ⁴வு꞉ கில ஸேர்ஷ்யசித்தா꞉ .. 34-1.. தைர்மாயயா(ஆ)ஸன்னம்ருʼதி꞉ க்ருʼதா கௌ³꞉ ஸா ப்ரேஷிதா கௌ³தமஹோமஶாலாம் . அகா³ன்முனேர்ஜுஹ்வத ஏவ வஹ்னௌ ஹுங்காரமாத்ரேண பபாத சோர்வ்யாம் .. 34-2.. ஹதா ஹதா கௌ³ரிஹ கௌ³தமேனேத்யுச்சைர்த்³விஜா꞉ ப்ரோச்ய முனிம்ʼ நினிந்து³꞉ . ஸ சேத்³த⁴கோப꞉ ப்ரலயானலாப⁴ஸ்தான் ரக்தநேத்ர꞉ ப்ரஶபன்னுவாச .. 34-3.. வ்ரதேஷு யஜ்ஞேஷு நிவ்ருʼத்திஶாஸ்த்ரேஷ்வபி த்³விஜா வோ விமுக²த்வமஸ்து . நிஷித்³த⁴கர்மாசரணே ரதா꞉ ஸ்த ஸ்த்ரிய꞉ ப்ரஜா வோ(அ)பி ததா² ப⁴வந்து .. 34-4.. ஸத்ஸங்க³மோ மா(அ)ஸ்து ஜக³ஜ்ஜனன்யா꞉ கதா²ம்ருʼதே வோ ந ரதி꞉ க²லு ஸ்யாத் . பாஷண்ட³காபாலிகவ்ருʼத்திபாபை꞉ பீடா³ ப⁴வேத்³வோ நரகேஷு நித்யம் .. 34-5.. உக்த்வைவமார்யோ முநிரேத்ய கா³யத்ர்யாக்²யாம்ʼ க்ருʼபார்த்³ராம்ʼ ப⁴வதீம்ʼ நநாம . த்வமாத்த² து³க்³த⁴ம்ʼ பு⁴ஜகா³ய த³த்தம்ʼ தா³து꞉ ஸதா³(அ)னர்த²த³மேவ வித்³தி⁴ .. 34-6.. ஸதே³த்³ருʼஶீ கர்மக³திர்மஹர்ஷே ஶாந்திம்ʼ ப⁴ஜ ஸ்வம்ʼ தப ஏவ ரக்ஷ . மா குப்யதாமேவம்ருʼஷிர்நிஶம்ய மஹானுதாபார்த்³ரமனா ப³பூ⁴வ .. 34-7.. ஶப்தா த்³விஜா விஸ்ம்ருʼதவேத³மந்த்ரா லப்³த்⁴வா விவேகம்ʼ மிலிதா முனிம்ʼ தம் . ப்ராப்தா꞉ ப்ரஸீதே³தி முஹுர்வத³ந்தோ நத்வா த்ரபானம்ரமுகா² அதிஷ்ட²ன் .. 34-8..
க்ருʼபார்த்³ரநேத்ரோ முநிராஹ ந ஸ்யான்ம்ருʼஷா வசோ மே நரகே வஸேத .
ஜாயேத விஷ்ணுர்பு⁴வீ க்ருʼஷ்ணநாமா வந்தே³த தம்ʼ ஶாபவிமோசனார்த²ம் .. 34-9..

ஸ்வபாபமுக்த்யர்த²மனந்தஶக்திம்ʼ தே³வீம்ʼ ஸதா³ த்⁴யாயத ப⁴க்திபூதா꞉ .
ஸர்வத்ர பூ⁴யாச்சு²ப⁴மித்யுதீ³ர்ய கா³யத்ரி த³த்⁴யௌ ப⁴வதீம்ʼ மஹர்ஷி꞉ .. 34-10..

முஞ்சானி மா வாக்ஶரமன்யசித்தே க்ருʼதக்⁴னதா மா(அ)ஸ்து மமாந்தரங்கே³ .
நிந்தா³னி மா ஸஜ்ஜனமேஷ பீ⁴தோ ப⁴வானி பாபாத்³வரதே³ நமஸ்தே .. 34-11..



தசகம் 34

கௌதமசாபம்

1. ஸ்வர்வாஸிபிர் கௌ,தம கீர்த்திருச்சைர்ஹி
கீதா ஸபாஸு, த்ரிதசை: ஸதே தி
ஆகர்ண்ய தேவர்ஷி,முகாத் க்ருதக்னா
த்விஜா பபூவு: கில ஸேர்ஷ்ய சித்தாஹா

கௌதமரால் தங்களின் வறுமை தீர்ந்து வாழ்ந்தவர்கள் அனைவரும் மன சுத்தி அடைந்தார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால் பிராமணர்களுக்கு மட்டும் அது வரவில்லை. கௌதமரின் புகழ் வானுலகம் வரைப் பரவியிருக்கிறது என்று அறிந்தவுடன் பொறாமை கொண்டார்கள். இது நாள் வரை அவர் தயவில் வாழ்ந்ததை மறந்தார்கள். பிறர் வளர்வதைப் பார்க்க சகிக்காமல் இருப்பது தான் பொறாமை. நானும் பிராமணன், கௌதமரும் பிராமணன். அவருக்கு மட்டும் ஏன் இந்தப் புகழும், பெருமையும். இப்படிப் பலவாறு யோசித்து அவருடைய கீர்த்தியை அழிப்பதற்கான ஒரு வழியைக் கண்டு பிடித்தார்கள்.

2. தைர் மாயயாSSஸன்ன,ம்ருதி: க்ருதா கௌ:
ஸா ப்ரேஷிதா கௌ,தமஹோமசாலாம்
அகான்; முனேர் ஜுஹ்,வத ஏவ வஹ்னௌ
ஹீங்காரமாத்ரேண, பபாத சோர்வ்யாம்

அந்தணர்கள் மிகக் கிழமாயும், உயிர் போகும் நிலையிலும் உள்ள ஒரு மாயா பசுவைத் தோற்றுவித்து, அதை கௌதமர் ஹோமம் செய்யும் ஹோமசாலைக்கு அனுப்பி வைத்தார்கள். அந்தப் பசு தளர்ந்த நடையுடன் மெதுவாக ஹோமசாலை வந்தடைந்தது. ஹோம குண்டம் அருகே சென்றது. கௌதமர் அந்த மாட்டை அங்கிருந்து விரட்ட “ஹும்” “ஹும்” என்று சத்தம் போட, அந்த சப்தத்திற்குப் பயந்து, அந்த பசு அங்கேயே பிராணனை விட்டது.

3. ஹதா ஹதா கௌரி,ஹ கௌதமேனேஹி
உச்சைர் த்விஜா: ப்ரோ,ச்ய முனிம் நினிந்துஹு
ஸ சேத்த கோப:, ப்ரளயானலாபஹ
ஸ்தான் ரக்த நேத்ர:, ப்ரசபன்னுவாச

அங்கிருந்த ரிஷிகள் எல்லாம் துஷ்டரான கௌதமரால் பசு கொல்லப்பட்டது என்று கூச்சலிட்டு ஆரவாரம் செய்து அவரை நிந்தித்தனர். பசு இறந்ததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்த கௌதமர், தியானம் செய்து பசு இறந்ததன் காரணத்தை அறிந்து கொண்டார். பிரளய கால ருத்திரரைப் போல் கோபம் கொண்டு சாபம் தந்தார்.

4. “வ்ரதேஷு யஞ்நேஷு, நிவ்ருத்தி சாஸ்த்ரேஹு
வபி த்விஜா வோ, விமுகத்வமஸ்து;
நிஷித்த கர்மா,சரணே ரதா: ஸ்தவ
ஸ்த்ரிய: ப்ரஜாஹா வோ,பி ததா பவந்து”

“வேதமாதாவாகிய காயத்ரி தேவியையும், மந்திரங்களையும் சாஸ்திரங்களையும், தியானத்தையும், ஜபத்தையும் மறக்கக் கடவீர்கள். பிராமணர்களில் கடை நிலைக்கு வரக்கடவீர்கள். செய்யகூடாததைச் செய்தும், செய்யவேண்டியதைச் செய்யாமலும் வாழ்வீர்கள். லௌகீகத்திலிருந்து விடுபடும் நிவ்ருத்தி சாஸ்த்திரம் உங்களுக்கு மறந்து போகட்டும். உங்கள் வம்சத்தினருக்கும் இது தொடரும்” என்று சாபம் கொடுத்தார்.

5. ஸத்ஸங்கமோ மாஸ்து;, ஜகஜ்ஜனன்யாஹா
கதாம்ருதே வோ, ந ரதி: கலு ஸ்யாது
பாஷாண்டகாபா,லிக வ்ருத்தி பாபைஹீ
பீடா பவேத் வோ, நரகேஷு நித்யம்

நிவ்ருத்தி சாஸ்த்திரம் தெரியாவிட்டாலும் ஸத்சங்கம் இருந்தால் சம்சாரத்திலிருந்து கரையேறலாம். கௌதமரின் சாபத்தால் அந்தணர்களுக்கு அதுவும் இல்லை. தேவியை துதிக்க மறந்தார்கள். காபாலிகளைப் போல் அலைந்தார்கள். பாபங்களைச் சுமந்து கொண்டு நரகவேதனைகளை அனுபவித்தார்கள்.

6. உக்த்வைவ மார்யோ, முனிரேத்ய காய-
த்ர்யாக்யாம் க்ருபாத்ராம், பவதீம் நநாம;
தவமாப்த்தக்தம், புஜகாய தத்தம்
தாது: ஸதாநர்த்,ததமேவ வித்தி

அதன் பின் கௌதமர் “தாயே! கோபத்தில் மதியிழந்தேன். சொல்லக்கூடாததை எல்லாம் சொல்லிவிட்டேன்” என்று அன்னையின் முன் வணங்கினார். தேவி புன்சிரிப்புடன் சொன்னாள் “பாம்பிற்குப் பால்வார்த்தாலும் அது கொடுத்தவனைக் கொத்தும். பாம்பிற்குக் கொடுத்த பால் எப்படி விஷமாகிறதோ அதைப் போல் இவர்களுக்கு நீ செய்த உதவியும் ஆயிற்று. மஹா பாக்யசாலியான கௌதமா! மன வெப்பத்தை விட்டு மனச்சாந்தி அடைவாய்” என்று சொல்லி தேவி மறைந்தாள்.

7. ஸதே த்ருசீ கர்ம,கதிர் மஹர்ஷே!
சாந்திம் பஜ ஸ்வம், தப ஏவ ரக்ஷ;
மா குப்யதா மேவ, ம்ருஷிர் நிசம்ய
மஹானுதா,பார்த்ரமனா பபூவ

இது நாள் வரை அந்தணர்களுக்கு வேண்டியவைகள் அனைத்தும் செய்தும், கிடைத்த பலன் என்ன? நிந்தனைகள் தான். ஏன் இப்படி ஆனது? கர்மபலன் தான் காரணம். எந்தக் கர்மத்தால் இப்படி ஆனது? இது யோசிக்க வேண்டிய விஷயம்தான். இதைக் கண்டுபிடிக்க யாராலும் முடியாது. இதை அறிந்தவள் தேவி மட்டும் தான். இப்பொழுது நல்ல கர்மங்களைச் செய்தால் அனுகூல காலத்தில் பலன் கிடைக்கும். இனிமேலாவது கஷ்டங்கள் வராமல் இருக்க தீய கர்மங்கள் செய்யாமல் இருக்க வேண்டும். க்ரோதம் வந்த பொழுது எல்லாம் அறிந்த கௌதமருக்கும் ஞானம் மங்கிப் போனது. பச்சாதாபத்தால் தேவியை துதிக்கத் தொடங்கினார்.

8. சப்தா த்விஜா, விஸ்ம்ருதவேதமந்த்ரா
லப்த்வா விவேகம், மிளிதா முனிம் தம்
ப்ராப்தா: ப்ரஸீதே. தி முஹுர் வதந்தோ
நத்வா த்ரபானம்,ரமுகா அதிஷ்டனு

சாபம் பெற்ற அந்தணர்களுக்கு வேத மந்திரங்களும், காயத்ரி மந்திரமும் மறந்து போயிற்று. இது கௌதம முனிவரின் சாபம் என்று அறிந்த அவர்கள், மீண்டும் கௌதமரிடம் சென்று தலை வணங்கி மன்னிப்புக் கேட்டார்கள். எங்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்றும் பிரார்த்தித்தார்கள். அவர்களின் அசூயையும் மறைந்தது.

9. க்ருபாத்ர நேத்ரோ, முனிராஹ: – ந ஸ்யான்
ம்ருஷா வசோ மே;, நரகே வஸேத;
ஜாயேத விஷ்ணுர், புவி க்ருஷ்ண நாமா;
வந்தேத தம் சாப, விமோசனார்த்தம்

பிராமணர்களைச் சபித்ததில் கௌதமரும் வருத்த மடைந்தார். “கோபத்தில் சாபம் தந்துவிட்டேன். இருந்தாலும் என் சொல் பொய்யாகாது. நீங்கள் சில காலம் நரகத்தில் தான் இருக்க வேண்டும். த்வாபர யுகத்தின் முடிவில் விஷ்ணு கிருஷ்ணாவதாரம் செய்வார். அப்பொழுது நீங்கள் அவரை சரணடையுங்கள் சாப விமோசனம் கிடைக்கும்” என்றார்.

10. ஸ்வபாப முக்த்யர்த்தம் அனந்தசக்தீம்
தேவீம் ஸதா த்யா,யத பக்திபூதாஹா
ஸர்வத்ர பூயாத், சுப மித்யுதீர்ய
காயத்ரி! தத்யௌ, பவதீம் மஹர்ஷிஹி

கிருஷ்ணனை மட்டும் வணங்கினால் போதாது. நீங்கள் அனைவரும் மஹாசக்தி ஸ்வரூபிணியாகிய அம்பாளை துதிக்க வேண்டும். அவள் நினைத்தால் தான் எதுவும் நடக்கும். எல்லோருக்கும் மங்களம் உண்டாகும். அதனால் அந்த காயத்ரியின் பாத கமலத்தைச் சரண் அடையுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் காயத்ரி தேவியை ஸ்மரிக்கத் தொடங்கினார்.

11. முஞ்சானி மாவாக்,சரமன்ய சித்தே;
க்ருதக்னதா மாSஸ்து, மமாந்தர,ரங்கே
நிந்தானி மா ஸஜ்ஜன; மேஷ பீதோ
பவானி பாபாத்;, வரதே! நமஸ்தே

பிராமணர்கள் அசூயையால் கௌதமரை தூஷித்தார்கள். கௌதமரும் கோபத்தால் சாபம் தந்து தன் தவ வலிமையை இழந்தார். தவ வலிமை பெறுவது அத்தனை சுலபமான காரியம் அல்ல. ஆனால் கோபம் வந்ததால் ஒரு நிமிடத்தில் அவர் வலிமை எல்லாம் இழந்தார். தனக்கு இதுபோல் தன் புத்தியில் தோன்றக்கூடாது என்று இதன் ஆசிரியர் வேண்டிக்கொள்கிறார்.

முப்பத்தி நான்காம் தசகம் முடிந்தது