தேவீ நாராயணீயம் dn dasakam 1 tamIZH meaning
VIDEO
தே வீ மஹிமை அவிக்னம் அஸ்து
1. யஸ்மின்நிதம் , யத இதம் , யதிதம் , யதஸ்மாது
உத்தீர்ணரூபம் , அபிபச்யதி யத் சமஸ்தம்
நோ த்ருச்யதே ச , வசஸாம் மனஸச்ச தூரே
யத் பாதி சா தி மஹஸே ப்ரணமாமி தஸ்மை
ஆதி தேவியிடமிருந்து தான் அனைத்தும் உண்டாகிறது . அன்னையின் சக்தியை இவ்வளவு தான் என்று அளவிட்டுச் சொல்ல முடியாது . அனைத்திற்கும் அவளே காரண கர்த்தா . ஸ்ருஷ்டி , ஸ்திதி , ஸம்ஹாரம் அனைத்திற்கும் அவளே மூலகாரணம் .
யாருடைய உதவியும் தேவிக்குத் தேவையில்லை . நாம் நாராயணீயமோ அல்லது பாகவதமோ எதைப் படித்தாலும் அன்னைக்கு அது பற்றிக் கவலையில்லை . நமக்கு எதைச் செய்வதற்கும் இந்த்ரியங்களின் உதவி தேவை . அன்னைக்கு இந்த்ரியங்கள் கிடையாது . உபநிஷத்துக்களில் இது பற்றி சொல்லப்பட்டிருக்கிறது . ஆயினும் அன்னை புரிந்து கொள்ள முடியாத ப்ரம்மதத்வம் . அப்படிப்பட்ட தேவியை நான் வணங்குகிறேன் .
2. ந ஸ்த்ரீ புமான் ந சுரதைத்ய நராதயோ ந
க்ளீபம் ந பூதமபி கர்மகுணா தயச்ச
பூமம்ஸ்த்வமேவ ஸதநாத்ய விகார்ய நந்தம்
ஸர்வம் த்வயா ஜகதிதம் விததம் விபாதி
பூதா , பிரம்மம் , பரமாத்மா , ஆதி தேவி அனைத்தும் ஒன்றுதான் . இந்த ஆதி தேவியின் ரூபம் எப்படி இருக்கும் ? யாரும் சொல்ல முடியாது . ஆனாலும் நமக்கு அன்னையின் கருணையும் ஆசீர்வாதமும் கிடைக்கிறது . எதைப் பார்த்தாலும் இது பிரம்மமோ , அதற்கு இந்த குணம் இருக்குமோ , இந்த ரூபம் இருக்குமோ என்று கற்பனை செய்து கொள்கிறோம் . அது ஆணா , பெண்ணா , தேவனா , அசுரனா , அல்லது அலியா யாருக்கும் தெரியாது . எதுவானாலும் அது ப்ரம்மமே . அதற்கு ஆரம்பமோ முடிவோ இல்லை . ஜனனம் , மரணம் இல்லை . ஆனால் அது இல்லை யென்றால் எந்த வேலையும் நடக்காது . அந்த ப்ரம்மமான தேவியை நமஸ்கரிக்கிறேன் .
3. ரூபம்ந தே S பி பஹுரூப ப்ருதாத்த சக்திஹி
நாட்யம் தனோஷி நடவத் கலு விச்வரங்கே
வர்ஷாணி தே ஸரஸநாட்ய - கலாவிலீநா
பக்தா அஹோ ! ஸஹ்ருதயா க்ஷணவன்னயந்தி
ப்ரம்மம் ஒரு நடிகன் போலத்தான் . ஒரு நடிகன் நாடக மேடையில் திருடனாகவும் , போலீஸ்காரனாகவும் நடிக்கிறான் . நாடகம் முடிந்ததும் அவன் வேஷம் கலைகிறது . அவன் மீண்டும் முன்போலவே ஆகிறான் . அந்த நாடகத்தில் போடும் வேஷத்திற்கேற்ப அவன் செய்யும் பாவமோ அல்லது புண்யமோ அவனை பாதிப்பதில்லை . அதுபோல் நாம் செய்யும் செயல்கள் எதிலும் அது
பாவமோ , புண்யமோ பிரம்மத்திற்குச் சம்பந்தமில்லை . நாம் செய்யும் கர்மங்களின் புண்ணியம் பாபம் இரண்டும் நம்மையே சாரும் .
4. ரூபானுஸாரி கலு நாம ததோ புதைஸ்த்வம்
தேவீதி தேவ , இதி சாஸி நிகத்யமானா
தேவ்யாம் த்வயீர்யஸ உமா கமலா S த வாக்வா
தேவே து ஷண்முக உமா , பதி ரச்யுதோ வா
ப்ரம்மத்திற்கு ரூபம் , நாமம் இல்லை . ஆண் என்றால் ராமன் , கிருஷ்ணன் . பெண் என்றால் உமா , சரஸ்வதி , லக்ஷ்மி என்று சொல்கிறோம் . ஞானம் , முக்தி தேவை என்றால் பார்வதியை பூஜிக்கிறோம் . செல்வம் வேண்டும் என்றால் லக்ஷ்மியை பூஜிக்கிறோம் . படிப்பு , பாட்டு , அறிவுக்கு சரஸ்வதியை பூஜிக்கிறோம் . ஆனால் விஷ்ணு , ராமன் , லக்ஷ்மி , சரஸ்வதி எல்லாமே ஒன்று தான் . அதுவே அந்த ப்ரம்மம் .
5. த்வம் ப்ரம்ம சக்திரபி தாத்ரு ரமேசருத்ரைர்
ப்ரம்மாண்டஸர்க பரிபாலன சம்ஹ்ருதீச்ச
ராஜ்ஜீவ காரயஸி ஸுப்ரு ! நிஜாஞயைவ
பக்த்தேஷ்வனன்ய சரணே , ஷீ க்ருபாவதீ ச
ப்ரம்மம் அரூபமாக இருந்தாலும் எல்லா மதத்தினரும் அதை இஷ்ட தெய்வமாக ராமன் , சிவன் , விஷ்ணு , அல்லா , ஜீஸஸ் என்று அவரவர் விருப்பம் போல , ப்ரம்மத்தைத் தான் பூஜிக்கின்றனர் . ப்ரம்மத்தை சக்தி ரூபமாக பூஜிப்பது தேவீ நாராயணீயம் . சக்தியும் ப்ரம்மமே . ஒரு ராணி எல்லோருக்கும் இதைச் செய் , அதைச் செய் என்று கட்டளை இடுவது போல , சக்தியும் ப்ரம்மாவை நீ படைப்பினைச் செய் , விஷ்ணுவை நீ காக்கும் தொழிலைச் செய் , ருத்ரனை நீ அழிக்கும் தொழிலைச் செய் என்று புருவ அசைப்பில் கட்டளை தருகிறள் . அவர்கள் அனைவரும் , அன்னையை வணங்கிப் பின் அவரவர் தொழிலைச் செய்கின்றனர் .
6. மாதா கரோதி தனயஸ்ய க்ருதே சுபானி
கர்மாணி , தஸ்ய பதனே ப்ருசமேதி துக்கம்
வ்ருத்தௌ சுகம் ச : தவ கர்ம ந , நாபி துக்கம்
த்வம் ஹ்யேவ கர்மபலதா ஜகதாம் விதாத்ரீ
ஒரு செயலைச் செய்யும் போது அதனால் ஏற்படும் நல்லது , கெட்டது அனைத்திற்கும் நாமே
காரணம் . அந்த அந்த கர்ம பலனை நாம் அனுபவிக்க நேரிடுகிறது . இதன் காரணத்தால் துக்கம் , மகிழ்ச்சி , கஷ்டம் , நஷ்டம் , பிரிவு , சேர்க்கை போன்ற இரட்டைகளை அனுபவிக்க நேரிடுகிறது . தேவிக்குக் கர்மபந்தக் கட்டு இல்லை . அதனால் சுகம் , துக்கம் எதுவும் இல்லை . நமக்கு சுகம் தருபவள் அவள் . அதனால் அவளைப் பணிவதே
நமக்கு நல்வழி தரும் .
7. ஸர்வத்ர வர்ஷஸி தயா , மத யேவ வ்ருஷ்ட்யா
ஸிக்த : ஸுபீஜ இவ வ்ருத்திமுபைதி பக்தஹ
துர்பீஜவத் வ்ரஜதி நாசம் அபக்த ஏவ ;
த்வம் நிர்க்ருணா ந விஷமா ந ச லோகமாதஹ
உழுது பதப்படுத்தப்பட்ட நிலத்தில் விதைக்கும் விதைகள் எல்லாம் முளைப்பதில்லை . மழை எல்லா விதைக்கும் ஒரே மாதிரி தான் பெய்கிறது . அதற்கு எந்த பாரபக்ஷமும் இல்லை . அதைப் போல் நாம் அனவரும் அன்னையின் குழந்தைகள் . அன்னை காட்டும் கருணை மழையில் எந்த வித்தியாசமும் இல்லை . நாம் அனுபவிக்கும் துன்பங்களுக்கும் , சந்தோஷத்திற்கும் , கஷ்டத்திற்கும் கர்ம பலனே காரணம் . அன்னையின் கருணையில் பாரபக்ஷமில்லை .
8. ஸர்வோபரீச்வரி ! விபாதி ஸுதாஸ முத்ரஹ
ஸ்தன்மத்யத : பரிவ்ருதே விவிதை ; ஸுதுர்க்கைஹி
சத்ராயிதே த்ரிஜகதாம் பவதீ மணி த்வீ
பாக்யே சிவே ! நிஜபதே ஹஸிதான , னா ஸ்தே
அமிர்தகடலின் மத்தியில் , கடம்பவன காடுகளால் சூழப்பட்டு , சிந்தாமணி என்னும் ஒருவகை ரத்தினத்தால் நிர்மாணிக்கப்பட்ட மணித்வீபம் என்னும் அரண்மனையில் அந்தப்புரத்தில் பரமசிவனுடைய மடியில் , ஆனந்த சல்லாபத்துடன் சயனித்திருக்கும் அன்னையே ! உன்னை நா ன் வணங்குகிறேன் .
9. யஸ்தே புமானபிததாதி மஹத்வ முச்சைஹி
யோ நாம காயதி ச்ருணோதி ச தே விலஜ்ஜஹ
யச்சாதனோதி ப்ருசமாத்ம நிவேதனம் தே
ஸ ஸ்வான்யகானி விதுனோதி யதா தமோ S ர்க்கஹ
தேவியை நாம் ஸ்தோத்ரம் , பாராயணம் , பூஜை , பஜனை போன்றவைகளால் சந்தோஷப்படுத்த வேண்டும் . நம்மையே அர்ப்பணம் செய்ய வேண்டும் . அப்பொழுதான் நாம் செய்த பாபம் போகும் . அஞ்ஞான இருட்டு விலகி ஒளி கிடைக்கும் .
10. த்வாம் நிர்குணாம் ச ஸகுணாம் ச புமான்விரக்தோ
ஜானாதி , கிஞ்சிதபி நோ விஷயேஷு ஸக்தஹ
ஞேயா பவ த்வமிஹ மே பவதாபஹந்த்ரீம்
பக்திம் ததஸ்வ , வரதே ! பரிபாஹி மாம் த்வம்
இந்த்ரியங்களை அதனதன் போக்கில் அலையவிடாமல் தடுத்துக் கட்டுப்படுத்த வேண்டும் . உலக போக சுக ஆசையை விட்டுவிட வேண்டும் . அப்போது அன்னை நமக்குத் தெரிவாள் . அப்பொழுது பேரானந்த சுகம் கிடைக்கும் .
தாயே ! அப்பேர்பட்ட அந்த பக்தியை எனக்குத் தா என்று இந்நூலின் ஆசிரியர் வேண்டுகிறார் .
முதல் தசகம் முடிந்தது