ENQUIRY geetanjaliglobalgurukulam

Thursday, August 31, 2023

26 ஷட்³விம்ʼஶத³ஶக꞉ - ஸுரத²கதா²

 

PPT ADI0


26 ஷட்³விம்ʼஶத³ஶக꞉ - ஸுரத²கதா²

ராஜா புரா(ஆ)ஸித் ஸுரதா²பி⁴தா⁴ன꞉ ஸ்வாரோசிஷே சைத்ரகுலாவதம்ʼஸ꞉ . மன்வந்தரே ஸத்யரதோ வதா³ன்ய꞉ ஸம்யக்ப்ரஜாபாலனமாத்ரநிஷ்ட²꞉ .. 26-1.. வீரோ(அ)பி தை³வாத்ஸமரே ஸ கோலாவித்⁴வம்ʼஸிபி⁴꞉ ஶத்ருப³லைர்ஜித꞉ ஸன் . த்யக்த்வா ஸ்வராஜ்யம்ʼ வனமேத்ய ஶாந்தம்ʼ ஸுமேத⁴ஸம்ʼ ப்ராப முனிம்ʼ ஶரண்யம் .. 26-2.. தபோவனம்ʼ நிர்ப⁴யமாவஸந்த்³ருமச்சா²யாஶ்ரித꞉ ஶீதலவாதப்ருʼக்த꞉ . ஸ ஏகதா³ ராஜ்யக்³ருʼஹாதி³சிந்தாபர்யாகுல꞉ கஞ்சித³பஶ்யதா³ர்தம் .. 26-3.. ராஜா தமூசே ஸுரதோ²(அ)ஸ்மி நாம்னா ஜிதோ(அ)ரிபி⁴ர்ப்⁴ரஷ்டவிபூ⁴திஜால꞉ . க்³ருʼஹாதி³சிந்தாமதி²தாந்தரங்க³꞉ குதோ(அ)ஸி கஸ்த்வம்ʼ வத³ மாம்ʼ ஸமஸ்தம் .. 26-4.. ஶ்ருத்வேதி ஸ ப்ரத்யவத³த்ஸமாதி⁴நாமா(அ)ஸ்மி வைஶ்யோ ஹ்ருʼதஸர்வவித்த꞉ . பத்னீஸுதாத்³யை꞉ ஸ்வக்³ருʼஹாந்நிரஸ்தஸ்ததா²(அ)பி ஸோத்கண்ட²மிமான் ஸ்மராமி .. 26-5.. அனேன ஸாகம்ʼ ஸுரதோ² வினீதோ முனிம்ʼ ப்ரணம்யாஹ ஸமதி⁴நாமா . க்³ருʼஹாந்நிரஸ்தோ(அ)பி க்³ருʼஹாதி³சிந்தாம்ʼ கரோதி ஸோத்கண்ட²மயம்ʼ மஹர்ஷே .. 26-6.. ப்³ரஹ்மைவ ஸத்யம்ʼ பரமத்³விதீயம்ʼ மித்²யா ஜக³த்ஸர்வமித³ம்ʼ ச ஜானே . ததா²(அ)பி மாம்ʼ பா³த⁴த ஏவ ராஜ்யக்³ருʼஹாதி³சிந்தா வத³ தஸ்ய ஹேதும் .. 26-7.. ஊசே தபஸ்வீ ஶ்ருʼணு பூ⁴ப மாயா ஸர்வஸ்ய ஹேது꞉ ஸகு³ணா(அ)கு³ணா ஸா . ப³ந்த⁴ம்ʼ ச மோக்ஷம்ʼ ச கரோதி ஸைவ ஸர்வே(அ)பி மாயாவஶகா³ ப⁴வந்தி .. 26-8.. ஜ்ஞானம்ʼ ஹரேரஸ்தி விதே⁴ஶ்ச கிந்து க்வசித்கதா³சின்மிலிதௌ மித²ஸ்தௌ . விமோஹிதௌ கஸ்த்வமரே நு கஸ்த்வமேவம்ʼ விவாத³ம்ʼ கில சக்ரது꞉ ஸ்ம .. 26-9.. ஜ்ஞானம்ʼ த்³விதை⁴கம்ʼ த்வபரோக்ஷமன்யத்பரோக்ஷமப்யேதத³வேஹி ராஜன் . ஆத்³யம்ʼ மஹேஶ்யா꞉ க்ருʼபயா விரக்த்யா ப⁴க்த்யா மஹத்ஸங்க³மதஶ்ச லப்⁴யம் .. 26-10.. ய ஏததா³ப்னோதி ஸ ஸர்வமுக்தோ த்³வேஷஶ்ச ராக³ஶ்ச ந தஸ்ய பூ⁴ப . ஜ்ஞானம்ʼ த்³விதீயம்ʼ க²லு ஶாஸ்த்ரவாக்யவிசாரதோ பு³த்³தி⁴மதைவ லப்⁴யம் .. 26-11.. ஶமாதி³ஹீனோ ந ச ஶாஸ்த்ரவாக்யவிசாரமாத்ரேண விமுக்திமேதி . தே³வ்யா꞉ கடாக்ஷைர்லப⁴தே ச பு⁴க்திம்ʼ முக்திம்ʼ ச ஸா கேவலப⁴க்திக³ம்யா .. 26-12.. ஸம்பூஜ்ய தாம்ʼ ஸாகமனேன து³ர்கா³ம்ʼ க்ருʼத்வா ப்ரஸன்னாம்ʼ ஸ்வஹிதம்ʼ லப⁴ஸ்வ . ஶ்ருத்வா முனேர்வாக்யமுபௌ⁴ மஹேஶி த்வாம்ʼ பூஜயாமாஸதுரித்³த⁴ப⁴க்த்யா .. 26-13.. வர்ஷத்³வயாந்தே ப⁴வதீம்ʼ ஸமீக்ஷ்ய ஸ்வப்னே ஸதோஷாவபி தாவத்ருʼப்தௌ . தி³த்³ருʼக்ஷயா ஜாக்³ரதி சாபி ப⁴க்தாவாசேரதுர்த்³வௌ கடி²னவ்ரதானி .. 26-14.. வர்ஷத்ரயாந்தே ஸுமுகீ²ம்ʼ ப்ரஸன்னாம்ʼ த்வாம்ʼ வீக்ஷ்ய தௌ துஷ்டுவது꞉ ப்ரஹ்ருʼஷ்டௌ . தை³வாத்ஸமாதி⁴ஸ்த்வத³னுக்³ரஹேண லப்³த்⁴வா பரம்ʼ ஜ்ஞானமவாப முக்திம் .. 26-15.. போ⁴கா³விரக்த꞉ ஸுரத²ஸ்து ஶீக்⁴ரம்ʼ நிஷ்கண்டகம்ʼ ராஜ்யமவாப பூ⁴ய꞉ . மன்வந்தரே பூ⁴பதிரஷ்டமே ஸ ஸாவர்ணிநாமா ச மனுர்ப³பூ⁴வ .. 26-16.. த்வம்ʼ பு⁴க்திகாமாய த³தா³ஸி போ⁴க³ம்ʼ முமுக்ஷவே ஸம்ʼஸ்ருʼதிமோசனம்ʼ ச . கிஞ்சின்ன ப்ருʼச்சா²மி பரம்ʼ விமூடோ⁴ நமாமி தே பாத³ஸரோஜயுக்³மம் .. 26-17..

தசகம் 26

ஸுரதகதை

1. ராஜா புராஸீத், ஸுரதாபிதானஹ
ஸ்வாரோசிஷே சைத்ர,குலாவதம்ஸஹ
மன்வந்தரே ஸத்ய,ரதோ வதான்யஹ
ஸம்யக்ப்ரஜாபாலன மாத்ரநிஷ்டஹ

ஒரு குறிப்பிட்ட காலத்தின் அளவு, மன்வந்தரம் என்று சொல்லப்படுகிறது. அதுபோல 14 மன்வந்திரங்கள் உண்டு. ப்ரம்மாவின் ஒரு பகல் கல்பம் எனப்படும். 1000 சதுர் யுகமும் 14 மன்வந்திரமும் சமமான கால அளவைக் குறிக்கிறது. ஒவ்வொரு மன்வந்திரத்திற்கும் ஒரு மனு உண்டு. அந்த மனுவின் பெயரால் அந்த மன்வந்திரம் அழைக்கப்படும். முதல் மனு ஸ்வாயம்புவன். அந்த மன்வந்திரம் ஸ்வாயம்புவ மன்வந்திரம் எனப்படும். இரண்டாவது மனு ஸ்வாரோசிஷன். அந்த மன்வந்திரம் ஸ்வாரோசிஷ மன்வந்திரம் என்று அழைக்கப்படுகிறது. இந்த இரண்டாவது மன்வந்திரத்தில் நடந்த ஒருகதை இந்த தசகத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. சைத்ர வம்சத்தில் ஜனங்களை நன்கு காப்பவனும், விரோதிகள் இல்லாதவனும், தனுர்வேதத்தை அறிந்தவனும், பிராமணர்களை பூஜிப்பவனும், தான தர்மங்கள் செய்பவனும், ஸத்கர்மங்களில் ப்ரீதி உடையவனும் ஆகிய ஸுரதன் என்னும் ஒரு நல்ல ராஜா இருந்தான்.

2. வீரோSபி தைவாத், ஸமரே ஸ கோலா
வித்வம்ஸிபி: சத்ருபலைர் ஜித: ஸன்
த்யக்த்வா ஸ்வராஜ்யம், வனமேத்ய சாந்தம்
ஸுமேதஸம் ப்ராப முனிம் சரண்யம்

கோலங்கள் என்றால் பன்றிகள். இதை அடித்துச் சாப்பிடுபவர்கள் கோலாவித்வம்ஸிகள் எனப்படுவர். இவர்கள் தங்களிடம் பலம் இருக்கிறது என்று நினைத்து, மதத்தினால், ஸுரதன் ஆளும் ராஜ்யத்தைத் தன் வசம் ஆக்கிக்கொள்ளத் திட்டமிட்டனர். அதனால் ஸுரதனின் நகரை அடைந்து, அவனுடன் யுத்தம் செய்தனர். யுத்தத்தில் ஸுரதன் தோல்வி அடைந்தான். ராஜா ஸுரதன் மிலேஸ்ஸியர்களை விட பலத்தில் குறைந்தவன் அல்ல. ஆனாலும் தோல்வி அடைந்தது தெய்வத்தின் செயலே ஆகும். ஸுரதன் மிகுந்த வருத்தத்துடன் காட்டிற்குச் சென்று அங்கு சுமேதஸ் என்னும் ஒரு ரிஷியைச் சரண் அடைந்தான்.

3. தபோவனம் நிர்பயமாவஸன் த்ரு-
-ச்சாயாச்ரித: சீதளவாதப்ருத்தஹ
ஸ ஏகதா ராஜ்ய,க்ருஹாதிசிந்தா
பர்யாகுல: கம்,சிதபச்யதார்த்தம்

அந்த ஆஸ்ரமத்தில் முனிவரின் சீடர்கள் வேதாத்யயனம் செய்யும் சப்தம் கேட்டு மிக மகிழ்ச்சியுடன் அங்கு இருந்தான். பயமும் கவலையும் இல்லாமல் இருந்தான். அந்த வாழ்க்கை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு நாள் அவன் ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டு இருந்தான். குளிர்ந்த காற்று வீசியது. ஆனால் அவன் மனமோ தன்னுடைய ராஜ்யம், மனைவி, மக்கள், உறவினர்கள், தன்னுடைய செல்வம் இவைகளையே சுற்றிச் சுற்றி வந்தது. அவைகளிடம் அவனுக்கு அத்துணை பற்று. அவன் மனம் இவைகளின் நிலையை நினைத்துப் பதறியது. அப்பொழுது அங்கு ஒருவன் வந்தான். அவனும் துக்கத்தில் இருந்தான்.

4. ராஜா தமூசே ஸுரதோஸ்மி நாம்நா
ஜிதோSரிபிர் ப்ரஷ்ட,விபூதிஜாலஹ
க்ருஹாதி சிந்தா,மதிதாந்த ரங்கஹ
குதோSஸி, கஸ்த்வம், வத மாம் ஸமஸ்தம்

வந்தவன் துக்கத்தில் இருக்கிறான் என்பதைச் ஸுரதன் புரிந்து கொண்டான். அவனிடம் சென்றுத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, எல்லா விபரமும் கேட்டான்.

5. ச்ருத்வேதி ஸ ப்ரத்யவதத் – “ஸமாதி
நாமாஸ்மி வைச்யோ, ஹ்ருதஸர்வ வித்தஹ
பத்னீஸுதாத்யை:, ஸ்வ க்ருஹான்னிரஸ்த
ஸ்ததாSபி ஸோத்கண்ட மிமான் ஸ்மராமி”

வந்தவன் ஒரு வைசியன். அவன் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவன். வியாபாரத்தில் நிறைய பணம் சம்பாதித்தான். மனைவியும், மகன்களும் செல்வத்தை அபஹரித்துக் கொண்டு அவனை வீட்டிலிருந்து விரட்டி விட்டனர். அவர்கள் தன்னை விரட்டினாலும் அவர் மனம் அவர்களையே நினைத்துக் கவலைப் பட்டது. ஸுரதனும் சமாதியும் ஒரே நினைவுடன் கூடிய மன அவஸ்தையில் தான் இருந்தார்கள்.

6. அநேந ஸாகம், ஸுரதோ விநீதோ
முனிம் ப்ரணம் யாSS ஹ, ஸமாதிநாமா
க்ருஹாந்நிரஸ்தோSபி, க்ருஹாதி சிந்தாம்
கரோதி ஸோத் கண்ட,மயம் மஹர்ஷே!

ஸுரதன் சமாதியை சுமேதஸ் முனிவரிடம் அழைத்துச் சென்றான். அவருக்கு அவனை அறிமுகப் படுத்தினான். “இவர் பெயர் சமாதி. வியாபாரம் செய்பவர். வியாபாரத்தில் சம்பாதித்த அனைத்து செல்வத்தையும் பிடுங்கிக் கொண்டு, அவன் மனைவியும் மக்களும் இவரை விரட்டி விட்டனர். ஆனாலும் இவர் அவர்களிடம் அன்பும், பாசமும் கொண்டு அவர்களை நினைத்துக் கவலைப்படுகிறார் என்று சொன்னான். முனிவரை மஹர்ஷே! என்று அழைக்கிறான். மஹரிஷி என்றால் முன்னும் பின்னும் அதாவது நடந்தது நடக்கப்போவது எல்லாம் அறிந்தவர்கள் என்று பொருள் .

7. ப்ரம்மைவ ஸத்யம், பரமத்விதீயம்
மித்யா ஜகத் ஸர்வ,மிதம் ச ஜானே
ததாSபி மாம் பாத,த ஏவ ராஜ்ய
க்ருஹாதிசிந்தா, வத தஸ்ய ஹேதும்

மஹரிஷியே! சாமதியின் நிலையினை உங்களுக்குச் சொன்னேன். ஆனால் என் நிலையும் அதுதான். இந்த உலகம் கனவைப் போல் பொய் என்று தெரியும். இந்த ராஜ்யம், வீடு அனைத்தும் மித்தை என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த ஞானம் சமாதிக்கு இல்லை. அவருக்கு மோஹம் இருந்தால் ஆச்சர்யம் இல்லை. ஆனால் எல்லாம் தெரிந்த நானும் மோஹம் அடைகின்றேனே? இதற்குக் காரணம் என்ன? என்று கேட்டான். இங்கு நாம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் குழந்தைகள் எல்லாம் மரணம் அடைய, மனம் மிகவும் வருந்தித் தானும் தற்கொலைச் செய்து கொள்ள தண்ணீரில் குதிக்க முயற்சிக்கிறான். அவனைப் பற்றி நாம் என்ன நினைப்போம்? ஆத்மீகத்தில் உயர்ந்தவனா? அல்லது தாழ்ந்தவனா? உயர்ந்தவன் என்றால் எதையும் தாங்கும் இதயம் வேண்டும். தற்கொலை என்ற சிந்தனையே வரக்கூடாது. அப்படி வந்தால் அவர் ஒரு சாதாரண மனிதராகத்தான் இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி ஒருவர் இருந்தார்i. ஆனால் அவர் யார் தெரியுமா? அவர் தான் மஹானான வஸிஷ்ட முனிவர். அவருக்கு ஞானம் இருந்தாலும் பற்று போகவில்லை. அவருடைய அடுத்த ஜன்மத்தில் ஸுரதனாகப் பிறந்தார். அதனால் தான் எல்லாம் தெரிந்த நானும் ஏன் இப்படி என்று கேட்க்கிறார். ராஜ்ய பரிபாலனம் செய்து ஆனந்தம் அனுபவித்த பின் தான் முக்தி என்று தேவி அவருக்கு பின்னால் அனுக்ரஹம் செய்யப் போகிறாள். ஏன் என்றால் ஆசை மிச்சம் இருந்தால் மீண்டும் பிறக்க வேண்டும் என்பதே நியதி.

8. ஊசே தபஸ்வீ – ச்ருணு; பூப! மாயா
ஸர்வஸ்ய ஹேது; ஸகுணா குணா ஸா;
பந்தம் ச மோக்ஷம், ச கரோதி ஸைவ
ஸர்வேSபி மாயா,வசகா: பவந்தி

எல்லா உயிர்களின் பந்தத்திற்கும், மோக்ஷத்திற்கும் காரணம் மாயைதான். அந்த மாயா அகுணை. அம்பாள் நிர்குணை. அம்பாளின் காளி, லக்ஷ்மி அவதாரங்கள் ஸகுணை. ஒருவனுக்கு மனைவி, மக்கள், செல்வம் இவைகளில் ஏற்படும் ஆசைதான் பந்தம். இந்த மமதையையும் (மோஹம்), பந்தத்தையும் ஏற்படுத்துவது யார்? தேவிதான். இதிலிருந்து விடுதலை தருவதான அந்த மோக்ஷத்தைத் தருவது யார்? அதுவும் அந்த தேவிதான். இதில் எந்த சந்தேகமும் இல்லை. மூன்று உலகத்திலும் இந்த மாயையின் வசப்படாதவர்கள் யாரும் இல்லை.

9. ஞானம் ஹரேரஸ்தி, விதேச்ச, கிந்து
க்வசித் கதாசின், மிளிதௌ மிதஸ்தௌ
விமோஹிதௌ கஸ்த்வமரே! நு கஸ்த்வம்
ஏவம் விவாதம், கில சக்ரது: ஸ்ம

ப்ரம்மம் மட்டுமே ஸத்யம். இந்த உலகம் மாயை. இது ஸுரதனுக்கு நன்கு தெரியும். ஆனாலும் எனக்கு ஏன் மமதை வந்தது என்று கேட்கிறான். சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் நன்கு அறிந்து கொள்ளக்கூடிய ஞானத்தால் மட்டும் மாயா மோஹத்திலிருந்து விடுபட முடியாது. ப்ரம்மாவிற்கும் விஷ்ணுவிற்கும் ப்ரம்மமே ஸத்யம், மற்றதெல்லாம் மாயை என்கிற ஞானம் உண்டு. ஆனாலும் அவர்கள் இருவரும் ஒருமுறை சந்தித்த பொழுது, தங்களில் யார் பெரியவர்? என்ற சர்ச்சை ஏற்பட்டது. ப்ரம்மா சொன்னார் “நானே இந்த உலகைப் படைக்கும் கர்த்தா. அதனால் நானே பெரியவன்” என்றார். உனக்கு ஆபத்து வரும் காலங்களில் உன்னைக் காப்பாற்றியது யார்? நான் தானே! அதனால் நானே பெரியவன் என்றார் விஷ்ணு. அப்பொழுது அங்கு ஒரு சிவலிங்கம் தோன்றியது. உடனே ஒரு அசரீரியும் கேட்டது. “இந்த சிவலிங்கத்தின் அடியையோ அல்லது முடியையோ யார் காண்கின்றாரோ அவரே பெரியவர்” என்றது. உடனே விஷ்ணு அடியைக்காண பாதளம் நோக்கியும், ப்ரம்மா முடியைக் காண ஆகாயம் நோக்கியும் சென்றனர். விஷ்ணு தன்னால் முடியாமல் திரும்பி வந்துவிட்டார்.

பிரம்மா சிவனின் தலையிலிருந்து விழுகின்ற ஒரு தாழம் பூவைப் பார்த்து, அதனுடன் பேசி, அதைத் தான் சிவனின் முடியைக் கண்டதற்கானச் சாட்சியாகக் கொண்டு வந்தார். விஷ்ணு அந்த தாழம்பூவிடம் கேட்க, அதுவும் ப்ரம்மா தன்னைச் சிவனின் முடியிலிருந்தே கொண்டு வந்தார் என்று பொய் சாட்சி சொல்லியது. இதில் நம்பிக்கை இன்றி விஷ்ணு சிவனைத் த்யானித்தார். சிவனும் அங்கு வந்தார். ஏ தாழம்பூவே! நீ பொய் சொன்னதால் இனி என் பூஜைக்கு அருகதை ஆகமாட்டாய் என்று சிவன் சொன்னார். ப்ரம்மா வெட்கித் தலை குனிந்தார். சிவன் தாழம்பூவை நிராகரிப்பதற்கும், நம்மில் யார் பெரியவர் என்று ஞானம் மிகுந்த ப்ரம்மாவும் விஷ்ணுவும் விவாதம் செய்வற்கும் காரணம் என்ன? மாயைதான். எந்த நேரத்தில் இந்த மாயையில் அகப்படுவோம் என்று யாருக்கும் தெரியாது. இதில் அகப்படாமல் இருக்க ஒரேவழி தான் உண்டு. அந்த ஞானஸ்வரூபிணியான பராசக்தியை வணங்க வேண்டும். இந்த மோஹத்திலிருந்து காப்பாற்ற அவளால் மட்டுமே முடியும்.

10. ஞானம் த்விதைகம், த்வப்ரோக்ஷ, மன்யது
பரோக்ஷமப்யேத தவேஹி ராஜன்!
ஆத்யம் மஹேச்யா: க்ருபயா விரக்த்யா
பக்த்யா மஹத் ஸங்கமதச்ச லப்யம்

தனக்கு ஏன் இப்படி வீடு, மனைவி, ராஜ்யம் என்ற மோஹம் வந்தது என்ற ஸுரதனின் கேள்விக்குப் பதில் சொல்கிறார். இந்த புத்தி மோஹம் என்பது எந்த ஞானிக்கும் வரலாம். இதற்காகத்தான் ப்ரம்மா விஷ்ணுவின் கதையைச் சொன்னார். அதன் பின் ஞானத்தின் ரூபத்தையும் விளக்குகிறார். ஞானம் என்பது இரண்டு விதம். அபரோக்ஷ ஞானம், பரோக்ஷ ஞானம். அபரோக்ஷ ஞானம் ஒருவனை பந்த விமுக்தன் ஆக்கும். அது தேவி பக்தியாலும் மஹாத்மாக்களின் அனுக்ரஹாத்தாலும் மட்டுமே கிடைக்கும். போக விரக்தி வரவேண்டும். இது தேவியின் க்ருபை இருந்தால் தான் இது முடியும்.

11. ய ஏததாப்னோதி, ஸ ஸர்வமுக்தோ;
த்வேஷச்ச ராகச்ச, ந தஸ்ய பூப!;
ஞானம் த்விதீயம் கலு சாஸ்த்ரவாக்ய-
விசாரதோ புத்திமதைவ லப்யம்

அபரோக்ஷ ஞானம் உள்ளவனுக்கு ராகம், த்வேஷம் இல்லை. ப்ரம்மமே ஸத்யமானது. இந்த உலகம் மாயை. காண்பது, கேட்பது, அறிவது எல்லாமே ப்ரம்மம் தான் என்பதை உணர்வான். எல்லாம் ஒன்றுதான் என்றால் ராகம் ஏது? த்வேஷம் ஏது? ப்ரம்மத்தைத் தவிர வேறு பலதும் உண்டு என்றால் தான் ராக த்வேஷத்திற்கு இடம் உண்டு. ஒன்றிடமும் அவனுக்குப் பற்று இல்லை. அவன் பந்த விமுக்தன். ப்ரம்மம் மட்டும் ஸத்யம். இந்த உலகம் மாயை என்று அறிய, வேதாந்த சாஸ்திரங்கள் படித்தால் போதும். புத்தி உள்ளவனால் மட்டுமே இதைப் படிக்க முடியும். ஆனாலும் படித்தது எல்லாம் அனுபவத்தில் வரவேண்டும் என்ற அவஸ்யம் இல்லை. இது பரோக்ஷ ஞானம். சாஸ்திரங்கள் படித்தவன் பந்த விமுக்தன் என்று சொல்ல முடியாது. அவன் மனதில் ராகமும், த்வேஷமும் விலக வேண்டும். ஸுரதன் சாஸ்திரம் தெரிந்தவன் ஆனாலும் தான் ராஜா என்ற அபிமானம் அவனிடம் இன்னும் இருக்கிறது. பந்தம் விலகாததற்கு இதுதான் காரணம் என்று பதில் சொன்னார்.

12. சமாதிஹீணோ ந ச சாஸ்த்ரவாக்ய
விசாரமாத்ரேண, விமுக்திமேதி
தேவ்யா: கடாக்ஷைர், லபதே ச புத்திம்
முக்திம் ச ஸா கே,வல பக்திகம்யா

மஹாவாக்யங்களைப் படிப்பதால் சாஸ்திரங்களையும் சித்தாந்தங்களையும் தெரிந்து கொள்ளலாம். அது பரோட்க்ஷ ஞானம். சாதனைகளை நடைமுறையில் கொண்டு வந்தால் தான் அபரோக்ஷ ஞானம் வரும். அப்பொழுது தான் பந்தத்திலிருந்து முக்தி கிடைக்கும். ஸமம், தமம், திதிச்ச, உபரதி, ச்ரத்தா, சமாதானம் இவைகள் ஞான சாதனைகளின் வழிகள். விஷய போக சக்திகள் தோஷம் தான் தரும். மனதை போக விஷயங்களிலிருந்து விலக்கி கட்டுப் படுத்த வேண்டும். அதுதான் ஸமம். இந்திரியங்களை அதனதன் போக்கில் அலைய விடாமல் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். அது தமம். எந்த துக்கத்தையும் சகித்துக் கொள்ளப் பழக வேண்டும். இது திதிக்க்ஷா. மற்றவர்கள் நம்மை எப்படிப் பார்த்தாலும் நினைத்தாலும் பகவான் சிந்தனையுடன் இருக்கப் பழக வேண்டும். இது உபரதி. சாஸ்த்திரத்திலும் குருவிடமும் நம்பிக்கை வேண்டும். இது சிரத்தை. புத்தி ப்ரம்மத்திலேயே லயிப்பது. இது ஸமாதானம். இவைகளை நிரந்தரமாக அனுஷ்டித்தால் உள்மனதிற்குச் சக்தி கிடைக்கும். இப்படியாக பரோக்க்ஷ ஞானத்தை அபரோக்க்ஷ ஞானமாக மாற்றிக் கொள்ளலாம். ஸுரதன் தான் எல்லாம் அறிந்தவன் என்று சொன்னாலும் அவன் அபரோக்க்ஷ ஞானம் உடையவனாக மாட்டான்.

13. ஸம்பூஜ்ய தாம் ஸாக,மனேன துர்க்காம்
க்ருத்வா ப்ரஸன்னாம், ஸ்வஹிதம் லபஸ்வ
ச்ருத்வா முனேர் வாக்ய, முபௌ மஹேசி!
த்வாம் பூஜயாமா, ஸதுரித்தபக்த்யா

மஹரிஷி சொன்ன விபரங்களை ஸுரதனும், சமாதியும் கேட்டார்கள். மாயா பகவதியைப் பூஜித்து, அன்னையின் அனுக்ரஹம் பெற்றுவிட்டால், மாயை அருகில் வரமுடியாது. புத்தியும், முக்தியும் கிடைக்கும் என்று மஹரிஷி சொன்னதைக் கேட்டு, இருவரும் தேவி பூஜையைத் தொடங்கினார்கள்.

14. வர்ஷத்வயாந்தே, பவதீம் ஸ மீஷ்ய
ஸ்வப்னே ஸதோஷா,வபி தாவத்ருப்தௌ
தித்ருக்ஷ ய ஜாக்ரதி சாபி பக்தா-
வாசேரதுர் த்வௌ, கடின வ்ரதானி

பக்தியுடன் தேவியை இரண்டு வருட காலம் பூஜை செய்தார்கள். ஒருநாள் கனவில் தேவியைக் கண்டார்கள். மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனாலும் பூரண திருப்தி வராமல் தூங்காமல் விழித்திருக்கும் பொழுதும் தேவியைக் காண வேண்டும் என்று நினைத்துக், கடுமையான விரதம் இருந்தார்கள். ஒரு வருடம் ஓடியது. ஆனாலும் தேவி காட்சி தரவில்லை. தேவியைப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் மரணம் அடைய வேண்டும் என்று தீர்மானித்துத், தங்கள் உடலிலிருந்துச் சதையை வெட்டி மாமிசம், இரத்தம் இவைகளால் ஹோமம் செய்யத் தொடங்கினார்கள்.

15. வர்ஷத்ரயாந்தே, ஸுமுகீம் ப்ரஸன்னாம்
த்வாம் வீக்ஷ்ய தௌ துஷ்டுவது: ப்ரஹ் ருஷ்டௌ
தைவாத் ஸமாதிஸ் த்வதனு க்ரஹே ண
லப்த்வா பரம் ஞான, மவாப முக்தீம்

16. போகா விரக்த: ஸு ரதஸ்து சீக்ரம்
நிஷ் கண் டகம் ராஜ்யமவாப பூயஹ
மந்வந்தரே பூபதிரஷ்டமே ஸ
ஸாவர்ணி நாமா, ச மனுர் பபூவ

அவர்கள் மாமிசம் இரத்தம் இவைகளால் ஹோமம் செய்ய ஆரம்பித்ததும், தேவி அவர்கள் முன் காட்சி தந்தாள். இருவரும் தேவியை நமஸ்கரித்தனர். “வேண்டிய வரத்தைக் கேளுங்கள் என்றாள்” ஸுரதன் “சத்ரு பலத்தை அழித்து, என் அரசு மீண்டும் எனக்குக் கிடைக்க அருள் செய்ய வேண்டும்” என்று கேட்டான். தேவி ” உன் சத்ருவை நீ வெற்றி கொள்வாய். அதன் பின் ஆயிரம் ஆண்டுகள் ராஜ்ய பரிபாலனம் செய்து, உடல் வீழ்ந்த பின், சூர்யனிடம் பிறவி அடைந்து மனுவாக விளங்குவாய்” என்று வரம் தந்தாள். ஆனால் சமாதி ” தளைகளைப் போக்கக் கூடியதும் மோக்க்ஷத்தைத் தரக் கூடியதுமான ஞானம் வேண்டும்” என்று கேட்டான். அன்னை அவரவர் விருப்பப்படி வரம் தந்தாள். இருவருக்கும் தேவி ஒன்றாகத்தான் காட்சி தந்தாள். சமாதி விமுக்தன். ஸுரதன் போகா ஸக்தன். மந்திரிகளுடன் சென்று ஸுரதன் ராஜ்ய சுகம் அனுபவித்தான். இரண்டாவது மன்வந்திரத்தில் பிறந்த ஸுரதன் தேவி த்யானத்தால், அடுத்த பிறவியில் 8 ஆவது மன்வந்திரத்தில் ஸாவர்ணி என்னும் பெயருடன் பிறந்தான்.

17. த்வம் புக்திகாமாய, ததாஸி போகம்
மு முக்ஷவே ஸம்,ஸ்ருதிமோசனம் ச
கிஞ்சின்ன ப்ருச்சாமி, பரம் விமூடஹ
நமாமி தே பாத,ஸரோஜயுக்மம்

தேவி சக்திமயமானவள் கேட்டதைத் தரக் கூடிய கருணை உள்ளம் கொண்டவள். ஸுரதனுக்கும், சமாதிக்கும் அவரவர் விருப்பம் என்னவோ அதைத் தந்தாள். தேவியிடம் நான் என்ன கேட்பது? பக்தியா?புக்தியா? முக்தியா? நான் போக விமுக்தன் அல்ல. அதனால் முக்தி கேட்க முடியாது. மூடனான நான் அன்னையை வணங்க மட்டுமே முடியும் என்று இதன் ஆசிரியர் கூறுகிறார்.

இருபத்தி ஆறாம் தசகம் முடிந்தது

 



தான தனதன தான தனதன தான தனதன ...... தனதான pAdhi madhi nadhi pOdhum aNisadai:karaharapriya,பாதி மதிநதி


https://youtu.be/4nyqHmLhBkY 

தான தனதன தான தனதன
     தான தனதன ...... தனதான

......... பாடல் .........PAADIMADINADI

பாதி மதிநதி போது மணிசடை
     நாத ரருளிய ...... குமரேசா

பாகு கனிமொழி மாது குறமகள்
     பாதம் வருடிய ...... மணவாளா

காது மொருவிழி காக முறஅருள்
     மாய னரிதிரு ...... மருகோனே

கால னெனையணு காம லுனதிரு
     காலில் வழிபட ...... அருள்வாயே

ஆதி யயனொடு தேவர் சுரருல
     காளும் வகையுறு ...... சிறைமீளா

ஆடு மயிலினி லேறி யமரர்கள்
     சூழ வரவரு ...... மிளையோனே

சூத மிகவளர் சோலை மருவுசு
     வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
     வேலை விடவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பாதி மதிநதி போதும் ... பிறைச் சந்திரனையும், கங்கை நதியையும்,
கொன்றை மலரையும்

அணிசடை நாத ரருளிய குமரேசா ... அணிந்த சடைப் பெருமான்
சிவபிரான் அருளிய குமரேசனே,

பாகு கனிமொழி மாது ... சர்க்கரைப் பாகும், கனிகளும் போன்ற
இனிய மொழியை உடைய மாதரசி,

குறமகள் ... குறமகளாகிய வள்ளியின்

பாதம் வருடிய மணவாளா ... பாதத்தைப் பிடித்துவிடும் மணவாளனே,

காது மொருவிழி காகமுற அருள் ... பிரிக்கப்பட்ட ஒரு விழியை*
காகாசுரன் என்னும் காகம் அடையும்படி அருளிய

மாயன் அரி திரு மருகோனே ... ஸ்ரீராமர் மாய ஹரிக்கும்,
லக்ஷ்மிக்கும் மருமகனே,

காலனெனை யணுகாமல் ... யமன் என்னை அணுகாத வகைக்கு

உனதிரு காலில் வழிபட அருள்வாயே ... உன் இரு திருவடிகளில்
வழிபடும் புத்தியை அருள்வாயாக.

ஆதி யயனொடு தேவர் ... ஆதி பிரமனோடு அமரர்கள் அனைவரும்

சுரருலகு ஆளும் வகையுறு சிறைமீளா ... தேவலோகத்தை
ஆளும்படி சிறையினின்று அவர்களை மீட்டவனே,

ஆடு மயிலினி லேறி ... நடனம் ஆடும் மயில் மீது ஏறி

அமரர்கள் சூழ வர ... தேவர்கள் உன்னைச் சூழ்ந்துவர

வரும் இளையோனே ... வருகின்ற இளையவனே,

சூத மிகவளர் சோலை ... மாமரங்கள் மிகுந்து வளர்ந்த சோலைகள்

மருவு சுவாமிமலைதனில் உறைவோனே ... நிறைந்த
சுவாமிமலையில் வீற்றிருப்பவனே,

சூர னுடலற ... சூரனின் உடல் வீழ,

வாரி சுவறிட ... கடல் வற்றிப்போக,

வேலை விடவல பெருமாளே. ... வேலினைச் செலுத்தவல்ல
பெருமாளே.


* சீதையின் மார்பை தன் அலகால் கொத்தின காகத்தின் மீது புல்லையே
படையாக்கி ஸ்ரீராமர் செலுத்த, அப்படைக்கு அஞ்சி, காப்பவர் யாருமின்றி,
ஸ்ரீ ராமரையே காகம் சரணடைய, அவர் அக்காகத்திற்கு அருளி, காகத்தின்
ஒரு கண்மணியைப் பிரித்து, கண்களிரண்டிற்கும் ஒரு மணியேயென
தண்டித்தார். காகாசுரனாக சாபத்தினால் வந்தது தேவேந்திரனது
குமாரன் ஜயந்தன் ஆகும்.
Song 228 - pAdhi madhinadhi (SwAmimalai)

pAdhi madhi nadhi pOdhum aNisadai
     nAdhar aruLiya ...... kumarEsa

pAgu kanimozhi mAdhu kuRamagaL
     pAdham varudiya ...... maNavALA

kAdhum oruvizhi kAgam uRa aruL
     mAyan ari thiru ...... marugOnE

kAlan enai aNugAmal unadhiru
     kAlil vazhipada ...... aruLvAyE

Adhi ayanodu dhEvar surarula
     gALum vagai uRu ...... siRai meeLA

Adu mayilinil ERi amarargaL
     sUzha varavarum ...... iLaiyOnE

sUdha miga vaLar sOlai maruvu
     suvAmi malai thanil ...... uRaivOnE

sUran udal aRa vAri suvaRida
     vElai vida vala ...... perumALE.

......... Meaning .........



pAdhi madhi nadhi pOdhum aNisadai:
 With half a moon, river (Ganga) and flowers adorning His tress,

nAdhar aruLiya kumarEsa: Lord SivA has graciously delivered You to us, Kumaresa!

pAgu kanimozhi mAdhu kuRamagaL: That KuRavA damsel, VaLLi, whose voice is sweeter than sugar and fruits, -

pAdham varudiya maNavALA: You are her consort, gently caressing her feet.

kAdhum oruvizhi kAgam uRa: (In RAmAyaNA) the devilish crow (KAkAsuran)* was spared at least one pupil, being punished by removal of the other one

aruL mAyan ari thiru marugOnE: graciously by that mystic Hari (as RAmA); You are the nephew of Hari and Lakshmi.

kAlan enai aNugAmal: In order that Yaman (Death-God) never approaches me,

unadhiru kAlil vazhipada aruLvAyE: I have to surrender at Your two feet by Your grace.

Adhi ayanodu dhEvar surarula gALum vagai: Enabling good old BrahmA and all DEvAs to regain Heaven and rule again,

uRu siRai meeLA: You liberated them from prison under SUran.

Adu mayilinil ERi: Mounting the dancing peacock,

amarargaL sUzha varavarum iLaiyOnE: You come surrounded by DEvAs, Oh Divine Youth!

sUdha miga vaLar sOlai maruvu: There are many groves full of mango trees in

suvAmi malai thanil uRaivOnE: SwAmimalai, which is Your abode.

sUran udal aRa vAri suvaRida: You destroyed SUran's body and dried up the entire sea,

vElai vida vala perumALE.: by throwing Your powerful spear, Oh Great One!


* When SeethA's chest was maimed by the devilish crow (KAkAsuran) while RAmA was sleeping on her lap in the jungle, RAmA woke up and used a blade of grass as a weapon to destroy the crow. Finding no other means of rescue, the crow surrendered to RAmA seeking mercy. RAmA graciously spared its life but punished it by removing one pupil and letting the crow use the remaining pupil for both the eyes. KAkAsuran was none other than IndrA's son Jayanthan who came as an evil crow due to a curse.

guruRaGHAVENDRA ARADHANA rAga: janasammohini tALa: Adi Composer: Kamaleshadasa Language: Kannada karedare barabAradE guruve

 rAga: janasammohini


tALa: Adi Composer: Kamaleshadasa Language: Kannada ------------------------------------------------------------------------------- karedare barabAradE guruve varamantrAlaya pura mandira dolu charaNa sEvakaru karava mugidu ninna haridAsaru suswara sammELadi paravashadali bAi terudu kUgi ninna Pooshara pita kamalEsha viTThalana dAsAgrEsaru karava mugidu ninna

Raga Janasammohini


 Koi saagar dil ko behalaata nahi  famous song sung by Mohammed Rafi for Dilip Kumar is based on  Raga Janasammohini. It is a raga of the Carnatic system, but has become very popular in North India. This raga has been composed largely by using Rishabh in Raga Kalavati. 


Originally called Siva Kalyan, the raga went out of circulation, having heard Karnataka Janasammohini, Pt. Ravi Shankar ji brought it back with the Karnataka name. Pangs of separation, nostalgia, implicit faith in God are the moods of Janasammohini. It can be sung from 6.30 to 9.30pm.


This raga has been included in Khamaj Thaat. Apart from Komal Nishad, the remaining vowels are used pure. Since there is a middle class in both ascending and descending, its caste is Shadav Shadava. Singing time is the second part of the night. Gandhar voice has got the place of conversational voice of Vaadi and Dhaivat voice. Aaroh-sa regg, p, dhannidhi san. Descending - sannidhpa, g, re, sa. The catch - g paddhi nidhi p, g pagare, nidhisa.


Janasammohini can be derived, rather ambiguously, by introducing R to Kalavati. 


All notes in Janasammohini are Shuddha except Ni. The avaroh has a sixth note Re, which differentiates the raga from another soothing raga Kalavati. Kalavati has the same swaras as Janasammohini except for the absence of Re in the avaroh, i.e., Kalavati has the same five notes in both aaroh and avaroh.



Credits:

https://saptswargyan-in.translate.goog/

https://www.raagbased.com/

   Structure of Raga Janasammohini

Thaat : Khamaj

Jaati : Shadav-Shadav 

Aroha : S-R-G-P-D-n-S'

Avaroha : S'-n-D-P-G-P-G-R,S-'n-'D-

Vadi : S

Samvadi : P

Pakad : P-D-n-D-P-G-R,S-'n-'D-S

Similar Raagas : Kalavati

Time : First prahar of the night (6PM to 9PM)


Raag Janasammohini राग जनसम्मोहिनी के महत्वपूर्ण बिंदु

  • राग जनसम्मोहिनी को खमाज थाट में रक्खा गया है ।
  • कोमल निषाद के अलावे शेष स्वर शुद्ध ।
  • आरोह – अवरोह दोनों में मध्यम वर्ज्य
  • राग की जाति षाडव – षाडव है ।
  • गायन – समय रात्रि का द्वितीय प्रहर ।
  • ग वादी और ध सम्वादी है ।
  • आरोह– सा रे ग , प , ध नि ध सां ।
  • अवरोह – सां नि ध प , ग , रे , सा ।
  • पकड़- ग प ध नि ध ऽ प , ग प गरे , नि ध सा ।

न्यास के स्वर- रे , ग और प

समप्रकृति राग- राग कलावती

विशेषता

( 1 ) यह कर्नाटक पद्धति का राग है , किन्तु उत्तर भारत में बहुत लोकप्रिय हो गया है ।

( 2 ) मोटे तौर से राग कलावती में रिषभ प्रयोग करने से इस राग की रचना हुई है । 

( 3 ) हिन्दुस्तानी पद्धति की दृष्टि से इसके पूर्वाग में कल्याण और उत्तरांग में झिंझौटी के मिश्रण से इस राग का जन्म हुआ । इसमें सा रे ग प रे , से शुद्ध कल्याण , सा रे ग प ग रे से भूपाली और प ध नि ध प ध सां , रें सां नि नि ध ऽ प , से झिंझौटी राग की छाया आती है , किंतु कोमल निषाद का प्रयोग और धैवत का बहुत्व दिखाने से शुद्ध कल्याण और भूपाली की छाया समाप्त हो जाती है और मध्यम के वर्जित होने से राग झिंझौटी का आभास मिट जाता है ।

Aaneyu Karedare Aadimoola Bandante Ugabhoga Lyrics In English


https://youtu.be/lW8xj4CMZYI 

Aaneyu Karedare Aadimoola Bandante Ugabhoga Lyrics In English

Āneyu karedare ādimūla
bandante |
Ajāmiḷanu karedare
Nārāyaṇanu bandante |
aḍaviyalli Dhruvarāya karedare
Vāsudēva bandante |
sabheyalli Draupadi karedare
śrīkr̥ṣṇa bandante |
ninna dāsara dāsanu nā karedare |
enna pālisabēku Purandara viṭhala

Ugabhoga Lyrics In Kannada

ಆನೆಯು ಕರೆದರೆ ಆದಿಮೂಲ
ಬಂದಂತೆ |
ಅಜಾಮಿಳನು ಕರೆದರೆ ನಾರಾಯಣನು
ಬಂದಂತೆ |
ಅಡವಿಯಲ್ಲಿ ಧ್ರುವರಾಯ ಕರೆದರೆ
ವಾಸುದೇವ ಬಂದಂತೆ
ಸಭೆಯಲ್ಲಿ ದ್ರೌಪದಿ ಕರೆದರೆ
ಶ್ರೀಕೃಷ್ಣ ಬಂದಂತೆ |
ನಿನ್ನ ದಾಸರ ದಾಸನು ನಾ ಕರೆದರೆ |
ಎನ್ನ ಪಾಲಿಸಬೇಕು ಪುರಂದರ ವಿಠಲ

In this ugabhoga, Sri Purandaradasa pleads with God to save us.

He gives many examples of how god protected many bhaktas in the past.

Gajendra Moksha case-There, the crocodile bites and holds the elephant’s leg, for ten thousand years. Gajendra (the elephant) tried hard but could not take  out his leg from crocodile’s mouth. Finally Gajendra with at most devotion shouted, “Narayana, Narayana, save me”, Moola Narayana came with Garuda from Satya loka. Narayana killed the crocodile with his chakra, saved the elephant.

Ajamila called his son ‘Narayana’. Narayan rescued Ajamila, who was on death row.

Narayana’s troops chased the Yamabhata away. Ajamila was brought to life.

Dhruva’s history: Five year old baby Dhruva alone made a fierce penance filled with Bhakti. The Lord saved Dhruv by solving the many problems that came to him. Narayana admired his devotion and gave him the lordship of the Druva loka.

God protected Draupadi in the Mahabharata. Dharmaraja lost everything in chess and lost Draupadi. At a meeting filled with people, Draupadi tried to get dressed by Dushyasana. Draupadi pleads with devotion to Lord Krishna. Krishna protected Draupadi.

Purandaradasa invoke the Supreme Lord to protect him as he had saved all these great devotees.

For he is but a little man, the servant of god’s servants.Still he requests to protect him..

Whoever advocates bhakti, god will same them.

God’s name chanting is the investment and god himself is the insurance !!

Monday, August 28, 2023

24 சதுர்விம்ʼஶத³ஶக꞉ - மஹிஷாஸுரவத⁴ம் - தே³வீஸ்துதி꞉


ppt

https://youtu.be/AmTcKAm-R9w 


24 சதுர்விம்ʼஶத³ஶக꞉ - மஹிஷாஸுரவத⁴ம் - தே³வீஸ்துதி꞉

தே³வி த்வயா பா³ஷ்கலது³ர்முகா²தி³தை³த்யேஷு வீரேஷு ரணே ஹதேஷு . ஸத்³வாக்யதஸ்த்வாமனுனேதுகாமோ மோக⁴ப்ரயத்னோ மஹிஷஶ்சுகோப .. 24-1.. த்வாம்ʼ காமரூப꞉ கு²ரபுச்ச²ஶ்ருʼங்கை³ர்னானாஸ்த்ரஶஸ்த்ரைஶ்ச ப்⁴ருʼஶம்ʼ ப்ரஹர்தா . க³ர்ஜன் வினிந்த³ன் ப்ரஹஸன் த⁴ரித்ரீம்ʼ ப்ரகம்பயம்ʼஶ்சாஸுரராட்³யுயோத⁴ .. 24-2.. ஜபாருணாக்ஷீ மது⁴பானதுஷ்டா த்வம்ʼ சாரிணா(அ)ரேர்மஹிஷஸ்ய கண்ட²ம் . சி²த்வா ஶிரோ பூ⁴மிதலே நிபாத்ய ரணாங்க³ணஸ்தா² விபு³தை⁴꞉ ஸ்துதா(அ)பூ⁴꞉ .. 24-3.. மாதஸ்த்வயா நோ விபதோ³ நிரஸ்தா அஶக்யமன்யைரித³மத்³பு⁴தாங்கி³ . ப்³ரஹ்மாண்ட³ஸர்க³ஸ்தி²திநாஶகர்த்ரீம்ʼ கஸ்த்வாம்ʼ ஜயேத் கேன கத²ம்ʼ குதோ வா .. 24-4.. வித்³யாஸ்வரூபா(அ)ஸி மஹேஶி யஸ்மின் ஸ வை பரேஷாம்ʼ ஸுக²த³꞉ கவிஶ்ச . த்வம்ʼ வர்தஸே யத்ர ஸதா³(அ)ப்யவித்³யாஸ்வரூபிணீ ஸ த்வத⁴ம꞉ பஶு꞉ ஸ்யாத் .. 24-5.. க்ருʼபாகடாக்ஷாஸ்தவ தே³வி யஸ்மின் பதந்தி தஸ்யாத்மஜவித்ததா³ரா꞉ . யச்ச²ந்தி ஸௌக்²யம்ʼ ந பதந்தி யஸ்மின் த ஏவ து³꞉க²ம்ʼ த³த³தே(அ)ஸ்ய நூனம் .. 24-6.. பஶ்யாம நித்யம்ʼ தவ ரூபமேதத்கதா²ஶ்ச நாமானி ச கீர்தயாம . நமாம மூர்த்⁴னா பத³பங்கஜே தே ஸ்மராம காருண்யமஹாப்ரவாஹம் .. 24-7.. த்வமேவ மாதா(அ)ஸி தி³வௌகஸாம்ʼ நோ நான்யா த்³விதீயா ஹிததா³னத³க்ஷா . அன்யே ஸுதா வா தவ ஸந்தி நோ வா ந ரக்ஷிதா நஸ்த்வத்³ருʼதே மஹேஶி .. 24-8.. க்வ த்வம்ʼ வயம்ʼ க்வேதி விசிந்த்ய ஸர்வம்ʼ க்ஷமஸ்வ நோ தே³வ்யபராத⁴ஜாலம் . யதா³ யதா³ நோ விபதோ³ ப⁴வந்தி ததா³ ததா³ பாலய பாலயாஸ்மான் .. 24-9.. இதி ஸ்துவத்ஸு த்ரித³ஶேஷு ஸத்³ய꞉ க்ருʼபாஶ்ருநேத்ரைவ திரோத³தா⁴த² . ததோ ஜக³த்³தே³வி விபூ⁴திபூர்ணம்ʼ ப³பூ⁴வ த⁴ர்மிஷ்ட²ஸமஸ்தஜீவம் .. 24-10.. த்வாம்ʼ ஸம்ʼஸ்மரேயம்ʼ ந ச வா ஸ்மரேயம்ʼ விபத்ஸு மா விஸ்மர மாம்ʼ விமூட⁴ம் . ருத³ன் பி³டா³லார்ப⁴கவன்ன கிஞ்சிச்ச²க்னோமி கர்தும்ʼ ஶுப⁴தே³ நமஸ்தே .. 24-11.

தசகம் 24

மஹிஷாஸுரவதம், தேவீஸ்துதி

1. தேவி! த்வயா பாஷ்,களதுர்முகாதி
தைத்யேஷு, வீரேஷு, ரணே ஹதேஷு
ஸத்வாக்யதஸ்த்வாம், அனுநேது காமஹ
மோகப்ரயத்னோ, மஹிஷச்சுகோப

மீண்டும் மஹிஷன் அசிலோமன் பிடாலன் ஆகியோரை அனுப்புகிறான். அவர்களால் தேவியின் மனதை மாற்ற முடியுமா? முயற்சி செய்தார்கள். ஆனால் பலன் இன்றி தேவியுடன் யுத்தம் செய்து அவர்களும் மரணத்தையே தழுவினர். மஹிஷன், அனைவரும் மாண்டு போயினர் என்ற செய்தி கேட்டு கலக்கமடைந்து, ஒன்றும் புரியாமல் பிரமை பிடித்தவன் போல் இருந்தான். ஒரு முடிவுக்கு வருகிறான். தேவியைத் தன் வயப்படுத்துவதற்காக, ஒரு ஆணழகனாகத் தன்னை உருமாற்றிக் கொண்டு, மன்மதன் போல தனுர் பாணங்களையும் எடுத்துக் கொண்டு ரதத்தில் ஏறி தேவீ இருக்கும் இடம் சென்றான். அவன் சொன்னான் “தேவீ! விசாலாக்ஷி! உன் அழகில் நான் மயங்கி விட்டேன். உன் கட்டளைகளை நிறைவேற்ற நான் காத்திருக்கிறேன். நீ எனக்கு மஹிஷி ஆக வேண்டும்” என்று இது போல் காமவெறி வேகத்தில் பிதற்றினான். தேவீ சொன்னாள் “மஹிஷா! உன்னை நான் நன்கு அறிவேன். நான் ஸம்சார பந்தத்தில் சிக்கும் ஸம்சார சக்தி இல்லை. அந்த துக்கத்தை போக்குபவள். நீ என்னிடம் இனிமையான வார்த்தைகள் சொன்னதால் உன்னைக் கொல்லும் எண்ணம் எனக்கு இல்லை. தேவர்களிடம் த்வேஷத்தை விட்டு விட்டு பாதாளம் போய் சுகமாக இரு” என்றாள். மஹிஷன் சொன்னான்.

“மான்வியாழிளே! எந்த பெண்ணும் பர்த்தா இல்லாமல் சுகம் காண முடியாது. அதனால் என்னை விவாஹம் செய்து கொள்” என்று பிதற்றிய வண்ணம் இருந்தான். அன்னை சொன்னாள் ” நீ உயிருடன் இருக்க நினைத்தால் நான் சொன்னதைச் செய். இல்லையேல் என்னுடன் யுத்தம் செய்” என்றாள். தன் சொல்லுக்குச் செவி சாய்க்காமல் தேவீ இருப்பதைக் கண்டு, கோபத்துடன் யுத்தம் செய்யத் தொடங்கினான்.

2. த்வாம் காமரூப: குரபுச்ச,ச்ருங்கைர்ஹி
நாநாஸ்த்ர சஸ்த்ரைச்ச ப்ருசம் ப்ரஹர்த்தா
கர்ஜன், விநிந்தன், ப்ரஹஸன் தரித்ரீம்
ப்ரகம்பயம்ச்சா,ஸுரராட் யுயோத

மஹிஷன் மானிட ரூபம் விட்டு எருமையின் ரூபம் எடுக்கிறான். தேவியை வாலால் அடிக்கிறான். கொம்பால் குத்துகிறான். மனுஷ ரூபம் எடுக்கிறான். பாணங்களைப் பொழிகிறான். இப்படி இருவருக்கும் பயங்கர யுத்தம் நடக்கிறது. பூமியே இதனால் குலுங்குகிறதாம்.

3. ஜபாருணாக்ஷீ, மதுபானதுஷ்டா
த்வம் சாரிணாSரேர் மஹிஷஸ்ய கண்டம்
சித்வா சிரோ பூமிதலே நிபாத்ய
ரணாங்கணஸ்தா, விபுதை: ஸ்துதாபூஹூ

யுத்தம் உச்சகட்டத்திற்கு வருகிறது. அப்பொழுது தேவீ மது அருந்தினாளாம். கண்கள் செம்பருத்திப் பூ போலச் சிவந்து இருக்கின்றதாம். தன்னுடைய சக்ராயுதத்தால் மஹிஷனின் கழுத்தை அறுத்துக் கொன்று விடுகிறாள். தலையில்லாத உடல் பூமியில் விழுந்தது. அனைவரும் பரமானந்தம் அடைந்தனர். தேவர்கள் தேவியை நமஸ்கரித்து ஸ்துதி பாடினார்கள்.

4. மாதஸ்த்வயா நோ, விபதோ நிரஸ்தா
அசக்ய மன்யைர், இத மத்புதாங்கி!
ப்ரம்மாண்டஸர்க் க,ஸ்திதி நாசகர்த்ரீம்
கஸ்த்வாம் ஜயேத் கேன கதம் குதோ வா?

மஹிஷனின் வதத்தால் தேவர்கள் தங்கள் ஆபத்துக்கள் எல்லாம் நீங்கி ஸ்வர்கம் செல்கின்றனர். அவர்களின் யக்ஞ பாகத்தை மீண்டும் அடைகின்றனர். மஹிஷாஸுரனை யாராலும் ஜெயித்திருக்க முடியாது. அவன் இந்திராதி தேவர்களை வெற்றி கண்டவன். திரு மூர்த்திகளையும் ஜெயித்தவன். ஆனால் அம்பாளை அவனால் ஜெயிக்க முடியவில்லை. ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்யமுடியாது என நினைத்து வரத்தை வாங்கினான். ஆனால் பெண்ணான தேவியால் மரணம் அடைந்தான். அனேக கோடி பிரம்மாண்டங்களின் நாயகியை வெல்ல யாராலும் முடியாது. எந்த உபாயமும் தேவியிடம் செல்லுபடி ஆகாது. இங்கு ஒரு தத்துவம் ஒளிந்திருக்கிறது. எந்த தெய்வத்தைத் துதித்தாலும் முக்தி கிடைக்காது. ஏதேனும் ஒரு கெட்ட நினவு வந்து கொண்டே இருக்கும். கெட்ட எண்ணம் வந்தால் முக்தி நிச்சயம் இல்லை. மனத் தூய்மை இருக்கும் இடத்தில் தேவீ கட்டாயம் வருவாள்.

அதற்காக சந்யாசீ ஆக வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எந்த காரியம் செய்தாலும் அன்னையை நினைக்க வேண்டும். கை வேலை செய்தாலும் மனம் தேவியிடம் இருக்க வேண்டும். நமது அவசர வேலைகள் முடிந்த பின்னாவது அன்னைக்கு பாலோ, பழமோ அல்லது உணவோ கட்டாயம் நிவேதனம் செய்ய வேண்டும். எதைச் செய்யும் போதும் அது அன்னைக்கே என்ற நினைவு, துர்முகன், பாஷ்கலன் போன்ற துர் எண்ணங்களை விரட்டிவிடும். அன்னையை பூஜிப்பதற்கும் நாம் நன்கு அலங்காரம் செய்து கொள்ள வேண்டும். அது நமக்காக அல்ல. தேவியை பூஜை செய்வதற்காக. அவரவர் சக்திக்கு ஏற்ப பூஜை செய்ய வேண்டும். பிறர் செய்வதைப் போல் நாமும் செய்ய வேண்டும் என்ற நினைவுத் தேவை இல்லை. பகவானுக்குச் செய்கிறோம் என்ற நினைவுடன் நம்மால் முடிந்ததைச் செய்தால் அதுவே போதும்.

5. வித்யா ஸ்வரூபாSஸி மஹேசி! யஸ்மின்
ஸ வை பரேஷாம், ஸுகத: கவிச்ச;
த்வம் வர்த்தஸே யத்ர ஸதாப்யவித்யா-
-ஸ்வரூபிணீ ஸ த்வதம: பசு: ஸ்யாது

வித்யா ஸ்வரூபிணீயான தேவியை உபாஸிப்பவனுக்கு வித்தையில் எந்த குறைவும் வராது. அவனுக்கு ஞானம் கிடைக்கும். விபரீத புத்தி உள்ளவனிடம் தேவி அவித்யா ஸ்வரூபிணீ யாகத்தான் இருப்பாள். மஹிஷாசுரனிடத்தில் அப்படித்தான் இருந்தாள். எத்தனையோ நல்ல வழிகள் சொல்லியும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அல்லவா?

6. க்ருபாகடாக்ஷா,ஸ்தவ தேவி! யஸ்மின்
பதந்தி தஸ்யாSSத்,மஜ வித்ததாராஹா
யச்சந்தி சௌக்யம், ந, பதந்தி யஸ்மின்
த ஏவ து: கம்,தததேஸ்ய நூனம்

குடும்பத்தில் ஒருவன் பக்தியுடன் தேவியை உபாஸித்தால் அவன் மனைவி , குழந்தைகள் அனைவருக்கும் நல்லதே நடக்கும். தனம், தான்யம், சம்பத்துக்கள் இவைகளுக்குக் குறைவே வராது. தரித்ரம் என்பதே இருக்காது. தேவீயை பூஜிப்பது ஒருநாளும் வீணாகாது. அனைவருக்கும் நன்மையே ஏற்படும்.

7. பச்யாம நித்யம், தவ ரூபமேதது
கதாச்ச நாமானி, ச கீர்த்தயாம
நமாம மூர்த்னா பதங்கஜே தே
ஸ்மராம காருண்ய, மஹா ப்ரவாஹம்

தேவியை பக்தியுடன் ஸ்தோத்ரம் பண்ணவேண்டும். தேவர்கள் மஹிஷாஸுரமர்த்னியாகிய அம்பாளை பக்தியுடன் ஸ்தோத்ரம் செய்கின்றார்கள். நாங்கள் எப்போதும் உன்னை எங்கள் கண்ணால் பார்த்துக் கொண்டே இருக்கவேண்டும். நாங்கள் தினமும் மஹிஷாஸுரமர்த்தினியின் ஸ்தோத்ரம் பாடுவோம். உன்னுடைய கருணை எங்களுக்கு எப்போதும் வேண்டும் என்றார்கள் .

8. த்வமேவ மாதாSஸி, திவௌகஸாம் நோ
நான்யா த்விதீயா, ஹிததானதக்ஷா
அந்யே ஸுதா வா, தவ ஸந்தி நோவா;
ந ரக்ஷிதா நஸ்,த்வத்ருதே, மஹேசி!

தேவர்களுக்கு முன்னால் மஹிஷாஸுரமர்த்தினி நின்று கொண்டிருக்கிறாள். ஆனாலும் அவளுக்குப் பல வேலைகள் இருக்கிறதல்லவா? அவளை உபாஸிப்பவர்கள் எத்தனையோ பேர்கள். அவளுடைய குழந்தைகளுக்குக் கணக்கே இல்லையே? பல கோடிக் குழந்தைகள். அதனால் தேவர்கள் சொல்கிறார்கள் “அவர்களுக்கு யார் யாரோ இருக்கிறார்கள். ஆனால் நீ எங்களைவிட்டுப் போகாதே” என்கிறார்கள்.

9. க்வ த்வம்? வயம் க்வே தி, விசிந்த்ய ஸர்வம்
க்ஷமஸ்வ நோ தேவ்ய,பராதஜாலம்
யதா யதா நோ, விபதோ பவந்தி
ததா ததா பாலய பாலயாஸ்மான்

அஸுரர்களை ஜெயிப்பதற்காகத் தேவர்களும் ஆள்மாறாட்டம், திருட்டுத்தனம், கள்ளத்தனம் எல்லாம் செய்திருக்கிறார்கள். பிரகஸ்பதி சுக்ராச்சாரியார் போல் வேடம் பூண்டு, அஸுரர்களுக்கு தவறான வழிகளைச் சொல்லித் தருகிறார். இந்திரன், விருத்தாஸுரனிடம் அக்னியை சாட்சியாக வைத்து, நாம் இருவரும் நண்பர்கள் என்று சொல்லி, பின் அவனைக் கொல்கிறார். தேவர்கள் சொல்கிறார்கள் நாங்கள் இதுபோல் நிறையத் தவறுகளைச் செய்திருக்கிறோம். ஆனாலும் நாங்கள் உன் குழந்தைகள் அல்லவா? இதை நீ மன்னிக்க வேண்டும் என்று சரணடைகிறார்கள்.

10. இதி ஸ்துவத்ஸு த்ரிதசேஷு ஸத்யஹ
க்ருபாச்ருநேத்ரைவ, திரோததாத
ததோ ஜகத் தேவி! விபூதிபூர்ணம்
பபூவ தர்மிஷ்ட,ஸமஸ்தஜீவம்

இப்படித் தேவர்கள் துதிக்கும் பொழுது அன்னை மறைந்துவிடுகிறாள். பூமியில் எல்லா இடங்களிலும் ராஜாக்கள் அன்னையின் கோவில்களைக் கட்டினார்கள். மன்னன் எவ்வழி அவ்வழி மக்கள் என்பதற்கு ஏற்ப மக்களும் தேவியை வழிபட்டனர். எங்கும் மழை, தனம், தான்யம் பெருகியது. சுகமே நிலவியது. செல்வம் கொழித்தது. மக்கள் நிம்மதியாக ஆனந்தமாக இருந்தனர். மதுகைடபர் வதத்தில் தமோகுண ப்ரதானியாக அவதாரம் செய்தாள். மஹிஷ வதத்தில் ரஜோகுண ப்ரதானியாக மஹாலக்ஷ்மியாக அவதாரம் செய்தாள்.

11. த்வாம் ஸம்ஸ்மரேயம், ந ச வா ஸ்மரேயம்
விப்தஸு; மா விஸ்,மர மாம் விமூடம்
ருதன் பிடாலார்,ப கவன்ன கிஞ்சிது
சக்னோமி கர்தும்;, சுபதே! நமஸ்தே

அன்னையின் அனுக்ரஹம் இருந்தால் தான் ஆபத்துக் காலங்களில் கூட, நாம் அன்னையை பூஜை செய்ய முடியும். அதற்கு பாக்யம் வேண்டும். புண்ணியம் வேண்டும். அதனால் இந்தக் கவி சொல்கிறார் நான் உன்னை பூஜை செய்தாலும், செய்யாவிட்டாலும் நீ என்னை நினைக்க வேண்டும். பூனைக்கு அழத்தான் தெரியும். அதைப் போல கஷ்டம் வந்தால் எனக்கு அழத்தான் தெரியும். நான் மஹானில்லை. சில சமயம் சந்தர்ப்ப வசத்தால் நான் உன்னை மறந்திருக்கிறேன். மகன் தாயை மறந்தாலும், தாய் மகனை மறக்கக் கூடாது என்கிறார். ஏன் இப்படிச் சொல்கிறார் என்றால் சிலகாலம் அவர் தன் குல தேவியை மறந்திருந்தார். அதனால் பல கஷ்டங்களைச் சந்தித்தார். சௌகர்யமாக இருந்த போது பேரும் புகழும் வந்த போது அன்னையை மறந்தார். கடைசீ காலத்தில் தேவியிடம் முறையிட்டார். கஷ்டம் வந்த போது அழுதார். அவர் பரம பக்தர். அன்னை நல்ல மரணம் தந்து அவரைக் காப்பாற்றினாள். அவர் ஒரு நைஷ்டிக பிரம்மசாரி.

2008 ல் தான் இந்த ஸ்தோத்திரம் எழுதினார். 1976 ல் புட்டபர்த்தியில் நடந்த சண்டி ஹோமத்தில் அவர்தான் தேவீ பாகவத பாராயணம் செய்தார். வீட்டில் தினமும் தேவீ பூஜை செய்தார். அப்பொழுதான் அவருக்கு இதை எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது. நாமும் இந்த பெருமைவாய்ந்த தேவியை பூஜை செய்து சகல நன்மையையும் பெறுவோமாக!

இருபத்தி நான்காம் தசகம் முடிந்தது



23 த்ரயோவிம்ʼஶத³ஶக꞉ - மஹாலக்ஷ்ம்யவதார꞉





 ppt adi0   

vide0

https://youtu.be/JCAyhMwzc3E?si=_eiI21E-hay5cFFv

23 த்ரயோவிம்ʼஶத³ஶக꞉ - மஹாலக்ஷ்ம்யவதார꞉

ரம்ப⁴ஸ்ய புத்ரோ மஹிஷாஸுர꞉ ப்ராக் தீவ்ரைஸ்தபோபி⁴ர்த்³ருஹிணாத்ப்ரஸன்னாத் . அவத்⁴யதாம்ʼ பும்பி⁴ரவாப்ய த்⁴ருʼஷ்டோ ந மே ம்ருʼதி꞉ ஸ்யாதி³தி ச வ்யசிந்தீத் .. 23-1.. ஸ சிக்ஷுராத்³யைரஸுரை꞉ ஸமேத꞉ ஶக்ராதி³தே³வான்யுதி⁴ பத்³மஜம்ʼ ச . ருத்³ரம்ʼ ச விஷ்ணும்ʼ ச விஜித்ய நாகே வஸன் ப³லாத்³யஜ்ஞஹவிர்ஜஹார .. 23-2.. சிரம்ʼ ப்⁴ருʼஶம்ʼ தை³த்யனிபீடி³தாஸ்தே தே³வா꞉ ஸமம்ʼ பத்³மஜஶங்கராப்⁴யாம் . ஹரிம்ʼ ஸமேத்யாஸுரதௌ³ஷ்ட்யமூசூஸ்த்வாம்ʼ ஸம்ʼஸ்மரன் தே³வி முராரிராஹ .. 23-3.. ஸுரா வயம்ʼ தேன ரணே(அ)திகோ⁴ரே பராஜிதா தை³த்யவரோ ப³லிஷ்ட²꞉ . மத்தோ ப்⁴ருʼஶம்ʼ பும்பி⁴ரவத்⁴யபா⁴வான்ன ந꞉ ஸ்த்ரியோ யுத்³த⁴விசக்ஷணாஶ்ச .. 23-4.. தேஜோபி⁴ரேகா ப⁴வதீஹ நஶ்சேத்ஸைவாஸுரான் பீ⁴மப³லான்னிஹந்தா . யதா² ப⁴வத்யேதத³ரம்ʼ ததை²வ ஸம்ப்ரார்த²யாமோ(அ)வது நோ மஹேஶீ .. 23-5.. ஏவம்ʼ ஹரௌ வக்தரி பத்³மஜாதாத்தேஜோ(அ)ப⁴வத்³ராஜஸரக்தவர்ணம் . ஶிவாத³பூ⁴த்தாமஸரௌப்யவர்ணம்ʼ நீலப்ரப⁴ம்ʼ ஸாத்த்விகமச்யுதாச்ச .. 23-6.. தேஜாம்ʼஸ்யபூ⁴வன் விவிதா⁴னி ஶக்ரமுகா²மரேப்⁴யோ மிஷதோ(அ)கி²லஸ்ய . ஸம்யோக³தஸ்தான்யசிரேண மாத꞉ ஸ்த்ரீரூபமஷ்டாத³ஶஹஸ்தமாபு꞉ .. 23-7.. தத்து த்வமாஸீ꞉ ஶுப⁴தே³ மஹாலக்ஷ்ம்யாக்²யா ஜக³ன்மோஹநமோஹனாங்கீ³ . த்வம்ʼ ஹ்யேவ ப⁴க்தாப⁴யதா³னத³க்ஷா ப⁴க்தத்³ருஹாம்ʼ பீ⁴திகரீ ச தே³வி .. 23-8.. ஸத்³யஸ்த்வமுச்சைஶ்சக்ருʼஷே(அ)ட்டஹாஸம்ʼ ஸுரா꞉ ப்ரஹ்ருʼஷ்டா வஸுதா⁴ சகம்பே . சுக்ஷோப⁴ ஸிந்து⁴ர்கி³ரயோ விசேலுர்தை³த்யஶ்ச மத்தோ மஹிஷஶ்சுகோப .. 23-9.. த்வாம்ʼ ஸுந்த³ரீம்ʼ சாரமுகா²த் ஸ தை³த்யோ விஜ்ஞாய காமீ விஸஸர்ஜ தூ³தம் . ஸ சேஶ்வரீம்ʼ தை³த்யகு³ணான் ப்ரவக்தா த்வாம்ʼ நேதுகாமோ விப²லோத்³யமோ(அ)பூ⁴த் .. 23-10.. ப்ரலோப⁴னைஸ்த்வாமத² தே³வஶக்திம்ʼ ஜ்ஞாத்வா(அ)பி வாக்யைரனுனேதுகாம꞉ . ஏகைகஶ꞉ ப்ரேஷயதிஸ்ம தூ³தான் த்வாம்ʼ காமினீம்ʼ கர்துமிமே ந ஶேகு꞉ .. 23-11.. அவேஹி மாம்ʼ புச்ச²விஷாணஹீனம்ʼ பா⁴ரம்ʼ வஹந்தம்ʼ மஹிஷம்ʼ த்³விபாத³ம் . ஹிம்ʼஸந்தி மாம்ʼ ஸ்வர்தி²ஜனாஸ்த்வமேவ ரக்ஷாகரீ மே ஶுப⁴தே³ நமஸ்தே .. 23-12..

தசகம் 23

மஹாலக்ஷ்மி அவதாரம்

மஹிஷாஸுரன் என்பவன் யார்? அவனுக்கு மஹிஷ ரூபம் எப்படி வந்தது?

பூமண்டலத்தில் தனு என்பவனுக்கு, ரம்பன் கரம்பன் என்று இரு பிள்ளைகள். அதில் கரம்பன் பஞ்சநதம் என்னும் தீர்த்தத்தில் மூழ்கியும், ரம்பன் அந்த மரத்தின் அடியில் பஞ்சாக்னியின் மத்தியில் நன் மக்கள் பேறு வேண்டி தவம் செய்து வந்தனர். இதை அறிந்த இந்திரன் முதலை ரூபம் எடுத்து கரம்பன் நதியில் குளிக்கும் போது, அவன் காலைப் பிடித்து நீரில் இழுத்தான். அதனால் அவன் மரணம் அடைந்தான். இதைப் பொறுக்க முடியாத ரம்பன், தன் சிரஸை வெட்டி அக்னியில் ஹோமம் செய்யத் தலையை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, வாளால் வெட்டத் தொடங்கிய பொழுது, அக்னி பகவான் தோன்றினார். “சாவதால் என்ன பயன் ஏற்படப் போகிறது? உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்? என்றார்.” தேவ, தைத்ய, மானிடர்களால் ஜெயிக்க முடியாத மிகவும் பராக்ரமசாலியான புத்திரன் வேண்டும்” என்றான். “அப்படியேஆகட்டும்’ என்று சொல்லி அக்னி தேவர் மறைந்தார். ஒரு நாள் ரம்பன் அழகான ஒரு எருமையைக் கண்டு, காமவெறி கொண்டு, அதன் அருகில் சென்று புணர்ந்தான். அதுவும் கர்பமானது. அதை ரம்பன் பாதாளத்தில் மற்ற கடா எருமைகள் அதை நெருங்காமல் பாதுகாத்து வந்தான். ஒரு நாள் ஒரு கடா எருமை அதன் மேல் வெறி கொண்டு துரத்த, ரம்பன் அதனுடன் மோதி, அந்த எருமை ரம்பனைக் கொன்றது. அந்தக் கடா மேலும் எருமையைத் துரத்த, அந்த எருமைத் தன் அருகில் அதை நெருங்கவிடாமல், மீண்டும் தான் முன்பு இருந்த ஆலமரத்தடிக்குச் சென்று யக்ஷர்களைச் சரணடைந்தது. தன்னை விடாமல் துரத்தி வரும் கடாவை, நெருங்கவிடாமல் வரும் எருமையைக் கண்ட அவர்கள் அதைக் காப்பதற்குக் கடாவைக் கொன்றனர். தன் கணவனான ரம்பனோடு தானும் அக்னியில் விழ அந்த எருமை முயற்சித்த போது, யக்ஷர்கள் தடுத்தும் பயனின்றி அது அக்னியில் விழுந்தது. அப்போது அதன் கர்பத்திலிருந்து ரக்தபீஜனாகிய மஹிஷன் வெளிப்பட்டான்.

1. ரம்பஸ்ய புத்ரோ, மஹிஷாஸுர: ப்ராகு
தீவ்ரைஸ்தபோபிர், த்ருஹிணாத் ப்ரஸன்னாது
அவத்யதாம் பும்பிரவாப்ய த்ருஷ்டோ
ந மே ம்ருதி: ஸ்யா, திதி ச வ்யசிந்தீது

மஹிஷன் அரசாண்டு வரும் காலத்தில் அஸுரர்களுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் வந்தது. அதனால் மஹிஷன் மேரு மலைக்குச் சென்று, ப்ரம்மனை இருதய கமலத்தில் தியானித்து பதினாறாயிரம் வருடங்கள் தவம் செய்தான். பிரம்மனும் மகிழ்ச்சி கொண்டு ஹம்ஸ வாகனத்தில் காட்சி தந்து “என்ன வரம் வேண்டும் கேள்” என்றார். மஹிஷனும் “நான் மரணம் அடையாதிருக்கும் படி அனுக்ரஹம் செய்ய வேண்டும்” என்றான். ப்ரம்மன் சொன்னார் “ஜனனம் மரணம் இரண்டையும் யாராலும் மாற்ற முடியாது. நானும் அவ்விதிக்குக் காட்டுப்பட்டவனே. அதனால் இதை விட்டு வேறு வரம் கேள்” என்றார். மஹிஷன் சொன்னான் “எனக்கு தேவர்களாலோ, மனிதர்களாலோ, தைத்யர்களாலோ மற்றும் எந்த ஆணாலும் மரணம் வரக்கூடாது. அப்படியே மரணம் வந்தாலும், ஒரு பெண்ணால் வரட்டும்” என்றான். அவன் நினைத்தான் தானோ மிகவும் பலசாலி. அதனால் ஒரு பெண்ணால் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்று இப்படி வரம் கேட்டான். அவன் பெண்ணான அந்த பராசக்தியை மறந்து விட்டான்.

2. ஸ சிக்ஷுராத்யைர் அஸுரை: ஸமேதஹ
சக்ராதிதேவான், யுதி பத்மஜம் ச
ருத்ரம் ச விஷ்ணும் ச விஜித்ய நாகே
வஸன் பலாத், யக்ஞஹவிர் ஜஹார

மஹிஷன் சக்ஷுசுரன், மஹாவீரியன், மதோத்கடன், தனாத்யக்ஷன், தாம்பரன், அசிலோமன், உதர்க்கன், பிடலாக்கியன், பாஷ்கலன், த்ரிநேத்திரன், காலன், பந்தகன் ஆகியோரை சேனாதிபதிகளாகக் கொண்டு, உலகம் முழுவதையும் ஆக்ரமித்து, அதுமட்டும் இல்லாமல் தேவர்களையும் சொர்க்கலோகத்தில் இருந்து விரட்டி விடுகிறான். அவர்களுக்கான ஹவிர் பாகங்களையும் தானே எடுத்துக் கொள்கிறான். தேவர்களுக்கு இருக்க இடமும் இல்லை. சாப்பிட உணவும் இல்லை.

3. சிரம் ப்ருசம் தைத்ய, நிபீடிதாஸ்தே
தேவா: ஸமம் பத்மஜசங்கராப்யாம்
ஹரீம் ஸமேத்யாSSஸுரதௌஷ்ட்யம் ஊசூஹு
ஸத்வாம் ஸம்ஸ்மரன் தேவி! முராரிராஹ:

மஹிஷனின் சேனைகளால் எங்கு சென்றாலும் துன்பம் வர, தேவர்கள் ப்ரம்மாவிடம் சென்று உதவி கேட்கிறார்கள். சங்கரரையும், விஷ்ணுவையும் சந்தித்து, அதன் பின், நாம் யோசித்து முடிவு செய்ய வேண்டும். அதனால் கைலாஸம் போவோம் என்று அங்கு போனார்கள். பின் சிவனுடன் விஷ்ணுலோகம் போனார்கள். அதன் பின் அவர்கள் எல்லோரும் சேர்ந்துத் தேவியைச் சரண் அடைவோம் என்று அங்கு போனார்கள்.

4. ஸுரா வயம் தேந, ரணேSதிகோரே
பராஜிதா; தைத்ய,வரோ பலிஷ்டஹ
மத்தோ ப்ருசம் பும்பிர் அபத்யபாவாந்
ந ந: ஸ்த்ரியோ யுத்த விசக்ஷணாச்ச

இதற்கு முன்பே மும்முர்த்திகளும் தேவர்களுடன் சென்று, மஹிஷனுடன் சண்டை செய்து தோல்வியையேத் தழுவினர். காரணம் என்ன? அவன் பெற்ற வரமே. தேவர்கள், மனிதர்கள், தைத்யர்கள் யாரும், எந்த ஆணும் அவனை வெற்றி கொல்ல கொள்ள முடியாது. மும்மூர்த்திகளின் பத்னிகளுக்கோ தேவர்களின் பத்னிகளுக்கோ யுத்தம் செய்யத் தெரியாது. என்ன செய்வது என்று யோசிக்கிறார்கள்.

5. தேஜோபிரேகா, பவதீஹ நச்சேது
ஸைவாஸுரான் பீமபலான் நிஹந்தா
யதா பவத்யேததரம் ததைவ
ஸம்ப்ரார்த்தயாமோS,வது நோ மஹேசீ

விஷ்ணு ஒரு முடிவு செய்கிறார். எல்லா தேவர்களுடைய சக்தியையும் நம் மூவரின் சக்தியையும் ஒன்று சேர்த்து ஒரு பெண் உருவானால் அவளால் தான் அந்த துஷ்டனை வதம் செய்ய முடியும். நம்மிடம் இருக்கும் சக்திகள் அந்த தேவிசக்திகள் தந்தது தானே. அதனால் நாம் எல்லோரும் அந்த பராசக்தியை வழிபடுவோம் என்று துதிக்க ஆரம்பித்தனர்.

6. ஏவம் ஹரௌ வக்தரி பத்மஜாதாது
தேஜோSபவத் ராஜஸ ரக்தவர்ணம்
சிவாதபூத் தாம,ஸரௌப்யவர்ணம்
நீலப்ரபம் ஸாத்விக,மச்யுதாச்ச

அவர்கள் தேவியின் ஸ்துதி பாட ஆரம்பித்தவுடன், ப்ரம்மாவிடமிருந்து தீப் பொறி போல் ஒரு தேஜஸ் வெளிப்பட்டது. அது காணக் கண் கூசும்படி பிரகாசித்தது. சிவப்பு வர்ணமாக உஷ்ணமும், குளிர்ச்சியும் கலந்து இருந்தது. அது ரஜோகுணப் பிரதானமான தேஜஸ். சிவனிடமிருந்து தமோகுணத் தேஜஸ் வெண்மை நிறமுடன் வெளிப்பட்டது. விஷ்ணுவிடமிருந்து நீல நிறத்தில் ஸத்வ குண தேஜஸ் வந்தது. ஆக ஸத்வ, ரஜோ, தமோ குண தேஜஸுகள் மும் மூர்த்திகளிடமிருந்து வந்தன.

7. தேஜாம்ஸ்ய பூவன், விவிதானி சக்ர-
-முகாமரேப்யோ, மிஷதோ கிலஸ்ய
ஸம்யோகதஸ்தான்,யசிரேண மாதஹ!
ஸ்த்ரீரூபமஷ்டாத,சஹஸ்தமாபுஹு

இந்திரன் முதலான மற்ற எல்லா தேவர்களிடமிருந்தும் தேஜஸ் வந்தபடி இருந்தது. அது மஹா அற்புதமாக இருந்தது. எல்லாம் ஒன்று சேர்ந்து 18 கைகள் உடைய ஒரு பெண் உருவம் தோன்றியது. முகம் சங்கரரின் தேஜஸ், சுருண்டமுடி யமனின் தேஜஸ், 3 கண்களும் அக்னியின் தேஜஸ், மூக்கு குபேரனின் தேஜஸ், 18 கைகளும் விஷ்ணுவின் தேஜஸ் இதுபோன்று எல்லோருடைய தேஜஸும் சேர்ந்து ஒரு பெண் உருவம் தோன்றியது. யார் இப்படி எல்லோருடைய தேஜஸையும் ஒன்று சேர்த்து பெண் உருவாக ஆக்கியது? அந்த பராசக்தி தான். இதைத்தானே விஷ்ணுவும் சொன்னார். அந்த பெண்ணின் உருவத்தைக் கண்டதும், அனைத்து தேவர்களும் இனி பயமில்லை என்று சிறிது கவலையை விட்டனர்.

8. தத் து த்வமாஸீ: சுபதே! மஹால-
க்ஷ்ம்யாக்யா, ஜகன்மோஹன மோஹனாங்கீ
த்வம் ஹ்யேவ பக்தா,பயதானதக்ஷா
பக்த த்ருஹாம் பீதிகரீதேவி!

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

லக்ஷ்மீம் க்ஷீர சமுத்ர ராஜ தனயாம் சீரங்க ஶ்ரீ ரங்க தாமேஸ்வரீம்
தாஸீ பூத ஸமஸ்த தேவ வனிதாம் லோகைக தீபாங்க்ருபாம்
ஸ்ரீமன் மந்த கடாக்ஷ லப்த விபவாம் ப்ரஹ்மேந்த்ர கங்காதராம்
த்வாம் தைலோக்ய குடும்பினீம் ஸரஸிஜாம் வந்தே முகுந்த ப்ரியாம்

18 கைகளோடு தோன்றிய அந்த தேவி யார்? நினைத்த போது நினைக்கும் உருவம் எடுக்கக் கூடியவளல்லவா அன்னை? 

அந்த பகவதி தேவி தான் மஹாலக்ஷ்மியின் அவதாரம். பக்தர்களுக்கு அபயம் தர எடுத்த அவதாரம். பார்ப்பதற்கு மிக மிக சுந்தர ரூபம். பவழம் போன்ற உதடுகள், 18 கைகளிலும் ஆயுதங்கள், மூவர்ணக் கலர், சகலவிதமான ஆபரணங்கள், எல்லா தேவர்களும் அவரவர் ஆயுதங்களையும், ஆபரணங்களும், சிங்கவாஹனமும் கொடுத்தனர். இவைகளோடு பார்த்தால், பார்த்துக் கொண்டே இருக்கத் தோன்றும் அதி சுந்தர உருவம். ஆனால் அஸுரர்களான துஷ்டர்களுக்குப் பயம் தரும் உருவம்.

9. ஸ்த்யஸ்த்வ முச்சைச்,ச க்ருஹே&ட்டஹாஸம்;
ஸுரா: ப்ரஹ்ருஷ்டா; வஸுதா சகம்பே;
சுக்ஷோப ஸிந்துர்; கிரயோ விசேலூர்;
தைத்யஸ்ய மத்தோ மஹிஷச்சு கோப

தேவியின் ரூபத்தைக் கண்ட தேவர்கள் நம்மைக் காப்பாற்ற தேவி வந்துவிட்டாள் என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தனர். தாயே! நீயே சகல தேவர்களுக்கும் புகலிடம் என்று சொல்லி நமஸ்கரித்தனர். தேவியும் இனி நீங்கள் கவலையை விடுங்கள் என்று சொல்லி தான் அவதரித்த நோக்கத்தை நிறை வேற்ற அட்டகாஸமாகச் சிரித்தாள். சப்தம் கேட்டு எண்திசைகளும் நடுங்கின. இந்த அலறல் சப்தம் கேட்ட மஹிஷன் யார் இப்படி சிரிப்பது? என்று கோபம் கொண்டான்.

10. த்வாம் ஸுந்தரீம், சார முகாத் ஸ தைத்யோ
விஞ்ஞாய காமி, விஸஸர்ஜ தூதம்
ஸ சேச்வரீம் தைத்ய,குனான் ப்ரவக்தா
த்வாம் நேது காமோ, விபலோத்ய மோSபூது

அந்த சப்தம் கேட்ட மஹிஷன் உடனே தூதர்களை அழைத்து “யார் இப்படி சப்தம் செய்ததது? அவன் எங்கிருக்கிறான்? என்று பார்த்து வாருங்கள்” என்று அனுப்பி வைக்கிறான். சென்ற தூதர்கள் அங்கு தேவியைப் பார்த்து திக்பிரமையோடு ஓடி வந்து “ஐயா! கர்ஜனை செய்தது ஒரு பெண். அவள் வீரமும், சிருங்காரமும் ஒருங்கே இணைந்த அழகினை உடையவளாக இருக்கிறாள்” என்று சொன்னதும் மஹிஷனுக்கு காம உணர்வு எழுகிறது. அதனால் தூதுவனை மீண்டும் அனுப்பி என்னைக் கல்யாணம் செய்து கொள்ளச் சொல் என்று அனுப்புகிறான். அவனும் தேவியிடம் சென்று மஹிஷன் மிகுந்த பலசாலி, தேவர்களை வெற்றி கண்டவன், மிகுந்த அழகுடையவன், மன்மத லீலைகளில் வல்லவன் என்று மஹிஷாசுரனைப் பற்றிப் பலவாறு புகழ்ந்து, அவன் உங்கள் கடைக்கண் பார்வைக்கு ஏங்குகிறான். அதனால் நீங்கள் என்னுடன் வந்து, அவனை மணக்க வேண்டும் என்று சொன்னான். ஆனால் தேவியிடம் ஒன்றும் எடுபடவில்லை. அவன் அதை மஹிஷனிடம் சொல்கிறான். இருந்தாலும் மஹிஷன் ஆசையை விடாமல் மீண்டும் மீண்டும் முயற்சிக்கிறான்.

11. ப்ரலோபநைஸீத்வாம், அமத தேவசக்தீம்
ஞ்யாதவாSபி வாக்யைர் அனு நேது காமஹ
ஏகைகச: ப்ரஷயதிஸ்ம தூதானு
த்வாம் காமினீம் கர்தும் இமே ந சேகுஹு

மஹிஷன் முயற்சியைக் கைவிடாமல் தாம்பிரன் என்னும் மந்திரியை அனுப்புகிறான். அன்னை சொல்கிறாள். “ஏ மஹிஷனே! நீ எனக்குச் சமமாக ஆகமுடியுமா? என் லட்க்ஷணம் எங்கே? உன் அவலக்ஷணம் எங்கே? இந்த ஆசையை விட்டுவிடு. இந்திரனுக்குரிய யக்ஞபாகத்தையும் சுவர்கத்தையும் அவனிடம் திருப்பிக் கொடு. நீ உன் அஸுரர் கூட்டத்துடன் பாதாளம் போய்விடு. இல்லாவிட்டால் நான் உன்னைக் கொல்வது நிச்சயம்’ தாம்பிரனே போய் உன் அரசனிடம் சொல் என்று கர்ஜனைக் குரலில் சொன்னாள். தாம்பிரன் மஹிஷனிடம் இதைச் சொல்கிறான். ஆனாலும் மஹிஷனுக்கு ஆசை விடவில்லை. இவ்வளவு அழகாக இருக்கிறாளே எப்படியாவது அவளை அடைய வேண்டும் என்று முயற்சிக்கிறான். பல தூதர்களை அனுப்பிய படி இருக்கிறான். ஆனால் எந்த பலனும் இல்லை. தேவிக்கு அவனிடம் அன்போ பரிதாபமோ இல்லை. அதனால் பாஷ்கலன், துர்முகன், தாம்பிரன், சிக்ஷுரன் போன்றப் பல தூதர்களைத், துஷ்டர்களை வதம் செய்கிறாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர்.

12. அவேஹி மாம் புச்ச, விஷாணஹீனம்
பாரம் வஹந்தம், மஹிஷம் த்விபாதம்
ஹிம்ஸந்தி மாம் ஸ்வார்த்தி ஜனா; ஸ்தவமேவ
ரக்ஷாகரீ மே, சுபதே! நமஸ்தே

இந்தக் கவி சொல்கிறார் மஹிஷன் என்பது ஒரு மிருகம்:;

 புத்தி இல்லாதது. பாரம் சுமக்கும். பாரம் சுமக்க முடியாவிட்டால் கசாப்புக் கடைக்கு அனுப்பி விடுவார்கள். அதற்கு இது நல்ல பாரம், இது கெட்ட பாரம் என்பதும் தெரியாது. அதற்கும் எனக்கும் ஒரு வித்யாசம் தான். அதற்கு வாலும் கொம்பும் இருக்கிறது. எனக்கு இல்லை. அதுவும் அடி வாங்கும். என்னையும் பலர் பல விததில் துன்புறுத்தி இருக்கிறார்கள். என்னை ரக்ஷிப்பதற்கு நீ மட்டும் தான் இருக்கிறாய். நீதான் என்னை க் காக்க வேண்டும் என்கிறார்.

இருபத்தி மூன்றாம் தசகம் முடிந்தது