ENQUIRY geetanjaliglobalgurukulam

Saturday, August 26, 2023

24 ചതുർവിംശദശകഃ - മഹിഷാസുരവധം - ദേവീസ്തുതിഃ



















 https://youtu.be/2eemhJHrOHY

24 ചതുർവിംശദശകഃ - മഹിഷാസുരവധം - ദേവീസ്തുതിഃ


ദേവി ത്വയാ ബാഷ്കലദുർമുഖാദിദൈത്യേഷു വീരേഷു രണേ ഹതേഷു .
സദ്വാക്യതസ്ത്വാമനുനേതുകാമോ മോഘപ്രയത്നോ മഹിഷശ്ചുകോപ .. 24-1..

ത്വാം കാമരൂപഃ ഖുരപുച്ഛശൃംഗൈർനാനാസ്ത്രശസ്ത്രൈശ്ച ഭൃശം പ്രഹർതാ .
ഗർജൻ വിനിന്ദൻ പ്രഹസൻ ധരിത്രീം പ്രകമ്പയംശ്ചാസുരരാഡ്യുയോധ .. 24-2..

ജപാരുണാക്ഷീ മധുപാനതുഷ്ടാ ത്വം ചാരിണാഽരേർമഹിഷസ്യ കണ്ഠം .
ഛിത്വാ ശിരോ ഭൂമിതലേ നിപാത്യ രണാംഗണസ്ഥാ വിബുധൈഃ സ്തുതാഽഭൂഃ .. 24-3..

മാതസ്ത്വയാ നോ വിപദോ നിരസ്താ അശക്യമന്യൈരിദമദ്ഭുതാംഗി .
ബ്രഹ്മാണ്ഡസർഗസ്ഥിതിനാശകർത്രീം കസ്ത്വാം ജയേത് കേന കഥം കുതോ വാ .. 24-4..

വിദ്യാസ്വരൂപാഽസി മഹേശി യസ്മിൻ സ വൈ പരേഷാം സുഖദഃ കവിശ്ച .
ത്വം വർതസേ യത്ര സദാഽപ്യവിദ്യാസ്വരൂപിണീ സ ത്വധമഃ പശുഃ സ്യാത് .. 24-5..

കൃപാകടാക്ഷാസ്തവ ദേവി യസ്മിൻ പതന്തി തസ്യാത്മജവിത്തദാരാഃ .
യച്ഛന്തി സൗഖ്യം ന പതന്തി യസ്മിൻ ത ഏവ ദുഃഖം ദദതേഽസ്യ നൂനം .. 24-6..

പശ്യാമ നിത്യം തവ രൂപമേതത്കഥാശ്ച നാമാനി ച കീർതയാമ .
നമാമ മൂർധ്നാ പദപങ്കജേ തേ സ്മരാമ കാരുണ്യമഹാപ്രവാഹം .. 24-7..

ത്വമേവ മാതാഽസി ദിവൗകസാം നോ നാന്യാ ദ്വിതീയാ ഹിതദാനദക്ഷാ .
അന്യേ സുതാ വാ തവ സന്തി നോ വാ ന രക്ഷിതാ നസ്ത്വദൃതേ മഹേശി .. 24-8..

ക്വ ത്വം വയം ക്വേതി വിചിന്ത്യ സർവം ക്ഷമസ്വ നോ ദേവ്യപരാധജാലം .
യദാ യദാ നോ വിപദോ ഭവന്തി തദാ തദാ പാലയ പാലയാസ്മാൻ .. 24-9..

ഇതി സ്തുവത്സു ത്രിദശേഷു സദ്യഃ കൃപാശ്രുനേത്രൈവ തിരോദധാഥ .
തതോ ജഗദ്ദേവി വിഭൂതിപൂർണം ബഭൂവ ധർമിഷ്ഠസമസ്തജീവം .. 24-10..

ത്വാം സംസ്മരേയം ന ച വാ സ്മരേയം വിപത്സു മാ വിസ്മര മാം വിമൂഢം .
രുദൻ ബിഡാലാർഭകവന്ന കിഞ്ചിച്ഛക്നോമി കർതും ശുഭദേ നമസ്തേ .. 24-11..

Friday, August 25, 2023

20 ವಿಂಶದಶಕಃ - ದೇವಕೀಪುತ್ರವಧಂ

 PPT

AUDIO

VIDEO



https://youtu.be/li9kMWpp-4w


20 ವಿಂಶದಶಕಃ - ದೇವಕೀಪುತ್ರವಧಂ

ಅಥೋರುಪುಣ್ಯೇ ಮಥುರಾಪುರೇ ತು ವಿಭೂಷಿತೇ ಮೌಕ್ತಿಕಮಾಲಿಕಾಭಿಃ . ಶ್ರೀದೇವಕೀಶೌರಿವಿವಾಹರಂಗೇ ಸರ್ವೈಃ ಶ್ರುತಂ ವ್ಯೋಮವಚಃ ಸ್ಫುಟಾರ್ಥಂ .. 20-1.. ಅವೇಹಿ ಭೋ ದೇವಕನಂದನಾಯಾಃ ಸುತೋಽಷ್ಟಮಃ ಕಂಸ ತವಾಂತಕಃ ಸ್ಯಾತ್ . ಶ್ರುತ್ವೇತಿ ತಾಂ ಹಂತುಮಸಿಂ ದಧಾನಃ ಕಂಸೋ ನಿರುದ್ಧೋ ವಸುದೇವಮುಖ್ಯೈಃ .. 20-2.. ಅಥಾಹ ಶೌರಿಃ ಶೃಣು ಕಂಸ ಪುತ್ರಾನ್ ದದಾಮಿ ತೇಽಸ್ಯಾಃ ಶಪಥಂ ಕರೋಮಿ . ಏತದ್ವಚೋ ಮೇ ವ್ಯಭಿಚರ್ಯತೇ ಚೇನ್ಮತ್ಪೂರ್ವಜಾತಾ ನರಕೇ ಪತಂತು .. 20-3.. ಶ್ರದ್ಧಾಯ ಶೌರೇರ್ವಚನಂ ಪ್ರಶಾಂತಸ್ತಾಂ ದೇವಕೀಂ ಭೋಜಪತಿರ್ಮುಮೋಚ . ಸರ್ವೇ ಚ ತುಷ್ಟಾ ಯದವೋ ನಗರ್ಯಾಂ ತೌ ದಂಪತೀ ಚೋಷತುರಾತ್ತಮೋದಂ .. 20-4.. ಕಾಲೇ ಸತೀ ಪುತ್ರಮಸೂತ ತಾತಃ ಕಂಸಾಯ ನಿಶ್ಶಂಕಮದಾತ್ಸುತಂ ಸ್ವಂ . ಹಂತಾ ನ ಮೇಽಯಂ ಶಿಶುರಿತ್ಯುದೀರ್ಯ ತಂ ಪ್ರತ್ಯದಾದ್ಭೋಜಪತಿಶ್ಚ ತಸ್ಮೈ .. 20-5.. ಅಥಾಶು ಭೂಭಾರವಿನಾಶನಾಖ್ಯತ್ವನ್ನಾಟಕಪ್ರೇಕ್ಷಣಕೌತುಕೇನ . ಶ್ರೀನಾರದಃ ಸರ್ವವಿದೇತ್ಯ ಕಂಸಮದೃಶ್ಯಹಾಸಂ ಸಕಲಂ ಜಗಾದ .. 20-6.. ತ್ವಂ ಭೂಪ ದೈತ್ಯಃ ಖಲು ಕಾಲನೇಮಿರ್ಜಗತ್ಪ್ರಸಿದ್ಧೋ ಹರಿಣಾ ಹತಶ್ಚ . ತತೋಽತ್ರ ಜಾತೋಽಸಿ ಸುರಾ ಹರಿಶ್ಚ ತ್ವಾಂ ಹಂತುಮಿಚ್ಛಂತ್ಯಧುನಾಽಪಿ ಶತ್ರುಂ .. 20-7.. ದೇವಾಸ್ತದರ್ಥಂ ನರರೂಪಿಣೋಽತ್ರ ವ್ರಜೇ ಚ ಜಾತಾ ವಸುದೇವಮುಖ್ಯಾಃ . ನಂದಾದಯಶ್ಚ ತ್ರಿದಶಾ ಇಮೇ ನ ವಿಸ್ರಂಭಣೀಯಾ ನ ಚ ಬಾಂಧವಾಸ್ತೇ .. 20-8.. ತ್ವಂ ವ್ಯೋಮವಾಣೀಂ ಸ್ಮರ ದೇವಕಸ್ಯ ಪುತ್ರ್ಯಾಃ ಸುತೇಷ್ವಷ್ಟಮತಾಂ ಗತಃ ಸನ್ . ಸ ತ್ವಾಂ ನಿಹಂತಾ ಹರಿರೇವ ಶತ್ರುರಲ್ಪೋಽಪಿ ನೋಪೇಕ್ಷ್ಯ ಇತೀರ್ಯತೇ ಹಿ .. 20-9.. ಸರ್ವಾತ್ಮಜಾನಾಂ ನೃಪ ಮೇಲನೇಽಸ್ಯಾಃ ಸರ್ವೇಽಷ್ಟಮಾಃ ಸ್ಯುಃ ಪ್ರಥಮೇ ಚ ಸರ್ವೇ . ಮಾಯಾವಿನಂ ವಿದ್ಧಿ ಹರಿಂ ಸದೇತಿ ಗತೇ ಮುನೌ ಕ್ರೋಧಮಿಯಾಯ ಕಂಸಃ .. 20-10.. ಸ ದೇವಕೀಸೂನುಮರಂ ಜಘಾನ ಕಾರಾಗೃಹೇ ತಾಂ ಪತಿಮಪ್ಯಬಧ್ನಾತ್ . ತಯೋಃ ಸುತಾನ್ ಷಟ್ ಖಲು ಜಾತಮಾತ್ರಾನ್ ಹತ್ವಾ ಕೃತಂ ಸ್ವಂ ಹಿತಮೇವ ಮೇನೇ .. 20-11.. ಕಾಯೇನ ವಾಚಾ ಮನಸೇಂದ್ರಿಯೈರ್ವಾ ಮಾ ಜಾತು ಪಾಪಂ ಕರವಾಣಿ ದೇವಿ .

ಮಮಾಸ್ತು ಸತ್ಕರ್ಮರತಿಃ ಪ್ರಿಯಸ್ತೇ ಭವಾನಿ ಭಕ್ತಂ ಕುರು ಮಾಂ ನಮಸ್ತೇ .. 20-12..

20 ವಿಂಶದಶಕಃ - ದೇವಕೀಪುತ್ರವಧಂ

19 ಏಕೋನವಿಂಶದಶಕಃ - ಭೂಮ್ಯಾಃ ದುಃಖಂ 1

VIDEO 

PPT

AUDIO




19 ಏಕೋನವಿಂಶದಶಕಃ -    ಭೂಮ್ಯಾಃ ದುಃಖಂ 1

ಪುರಾ ಧರಾ ದುರ್ಜನಭಾರದೀನಾ ಸಮಂ ಸುರಭ್ಯಾ ವಿಬುಧೈಶ್ಚ ದೇವಿ .

ವಿಧಿಂ ಸಮೇತ್ಯ ಸ್ವದಶಾಮುವಾಚ ಸ ಚಾನಯತ್ಕ್ಷೀರಪಯೋನಿಧಿಂ ತಾನ್ .. 19-1..

ಸ್ತುತೋ ಹರಿಃ ಪದ್ಮಭವೇನ ಸರ್ವಂ ಜ್ಞಾತ್ವಾಽಖಿಲಾನ್ ಸಾಂಜಲಿಬದ್ಧಮಾಹ .
ಬ್ರಹ್ಮನ್ ಸುರಾ ನೈವ ವಯಂ ಸ್ವತಂತ್ರಾ ದೈವಂ ಬಲೀಯಃ ಕಿಮಹಂ ಕರೋಮಿ .. 19-2..

ದೈವೇನ ನೀತಃ ಖಲು ಮತ್ಸ್ಯಕೂರ್ಮಕೋಲಾದಿಜನ್ಮಾನ್ಯವಶೋಽಹಮಾಪ್ತಃ .
ನೃಸಿಂಹಭಾವಾದತಿಭೀಕರತ್ವಂ ಹಯಾನನತ್ವಾತ್ಪರಿಹಾಸ್ಯತಾಂ ಚ .. 19-3..

ಜಾತಃ ಪುನರ್ದಾಶರಥಿಶ್ಚ ದುಃಖಾದ್ದುಃಖಂ ಗತೋಽಹಂ ವಿಪಿನಾಂತಚಾರೀ .
ರಾಜ್ಯಂ ಚ ನಷ್ಟಂ ದಯಿತಾ ಹೃತಾ ಮೇ ಪಿತಾ ಮೃತೋ ಹಾ ಪ್ಲವಗಾಃ ಸಹಾಯಾಃ .. 19-4..

ಕೃತ್ವಾ ರಣಂ ಭೀಮಮರಿಂ ನಿಹತ್ಯ ಪತ್ನೀಂ ಚ ರಾಜ್ಯಂ ಚ ಪುನರ್ಗೃಹೀತ್ವಾ .
ದುಷ್ಟಾಪವಾದೇನ ಪತಿವ್ರತಾಂ ತಾಂ ವಿಹಾಯ ಹಾ ದುರ್ಯಶಸಾಽಭಿಷಿಕ್ತಃ .. 19-5..

ಯದಿ ಸ್ವತಂತ್ರೋಽಸ್ಮಿ ಮಮೈವಮಾರ್ತಿರ್ನ ಸ್ಯಾದ್ವಯಂ ಕರ್ಮಕಲಾಪಬದ್ಧಾಃ .
ಸದಾಽಪಿ ಮಾಯವಶಗಾಸ್ತತೋಽತ್ರ ಮಾಯಾಧಿನಾಥಾಂ ಶರಣಂ ವ್ರಜಾಮಃ .. 19-6..

ಇತೀರಿತೈರ್ಭಕ್ತಿವಿನಮ್ರಶೀರ್ಷೈರ್ನಿಮೀಲಿತಾಕ್ಷೈರ್ವಿಬುಧೈಃ ಸ್ಮೃತಾ ತ್ವಂ .
ಪ್ರಭಾತಸಂಧ್ಯೇವ ಜಪಾಸುಮಾಂಗೀ ತಮೋನಿಹಂತ್ರೀ ಚ ಪುರಃ ಸ್ಥಿತಾಽಽತ್ಥ .. 19-7..

ಜಾನೇ ದಶಾಂ ವೋ ವಸುದೇವಪುತ್ರೋ ಭೂತ್ವಾ ಹರಿರ್ದುಷ್ಟಜನಾನ್ ನಿಹಂತಾ .
ತದರ್ಥಶಕ್ತೀರಹಮಸ್ಯ ದದ್ಯಾಮಂಶೇನ ಜಾಯೇಯ ಚ ನಂದಪುತ್ರೀ .. 19-8..

ಯೂಯಂ ಚ ಸಾಹಾಯ್ಯಮಮುಷ್ಯ ಕರ್ತುಮಂಶೇನ ದೇವಾ ದಯಿತಾಸಮೇತಾಃ .
ಜಾಯೇಧ್ವಮುರ್ವ್ಯಾಂ ಜಗತೋಽಸ್ತು ಭದ್ರಮೇವಂ ವಿನಿರ್ದಿಶ್ಯ ತಿರೋದಧಾಥ .. 19-9..

ವಿಚಿತ್ರದುಷ್ಟಾಸುರಭಾವಭಾರನಿಪೀಡಿತಂ ಮೇ ಹೃದಯಂ ಮಹೇಶಿ .
ಅತ್ರಾವತೀರ್ಯೇದಮಪಾಕುರು ತ್ವಂ ಮಾತಾ ಹಿ ಮೇ ತೇ ವರದೇ ನಮೋಽಸ್ತು .. 19-10..

Thursday, August 24, 2023

18 ಅಷ್ಟಾದಶದಶಕಃ - ರಾಮಕಥಾ

ppt 

https://www.youtube.com/watch?v=VJyWyRGHlB8



18 ಅಷ್ಟಾದಶದಶಕಃ - ರಾಮಕಥಾ


ಸೂರ್ಯಾನ್ವಯೇ ದಾಶರಥೀ ರಮೇಶೋ ರಾಮಾಭಿಧೋಽಭೂದ್ಭರತೋಽಥ ಜಾತಃ . 

          ಜ್ಯೇಷ್ಟಾನುವರ್ತ್ತೀ ಖಲು ಲಕ್ಷ್ಮಣಶ್ಚ ಶತ್ರುಘ್ನನಾಮಾಽಪಿ ಜಗದ್ವಿಧಾತ್ರಿ .. 18-1..

ವಿಮಾತೃವಾಕ್ಯೋಜ್ಝಿತರಾಜ್ಯಭೋಗೋ ರಾಮಃ ಸಸೀತಃ ಸಹಲಕ್ಷ್ಮಣಶ್ಚ .
ಚರನ್ ಜಟಾವಲ್ಕಲವಾನರಣ್ಯೇ ಗೋದಾವರೀತೀರಮವಾಪ ದೇವಿ .. 18-2..

ತಂ ವಂಚಯನ್ ರಾವಣ ಏತ್ಯ ಮಾಯೀ ಜಹಾರ ಸೀತಾಂ ಯತಿರೂಪಧಾರೀ .
ರಾಮಸ್ಯ ಪತ್ನೀವಿರಹಾತುರಸ್ಯ ಶ್ರುತ್ವಾ ವಿಲಾಪಂ ವನಮಪ್ಯರೋದೀತ್ .. 18-3..

ಶ್ರೀನಾರದೋಽಭ್ಯೇತ್ಯ ಜಗಾದ ರಾಮಂ ಕಿಂ ರೋದಿಷಿ ಪ್ರಾಕೃತಮರ್ತ್ಯತುಲ್ಯಃ .
ತ್ವಂ ರಾವಣಂ ಹಂತುಮಿಹಾವತೀರ್ಣೋ ಹರಿಃ ಕಥಂ ವಿಸ್ಮರಸೀದಮಾರ್ಯ .. 18-4..

ಕೃತೇ ಯುಗೇ ವೇದವತೀತಿ ಕನ್ಯಾ ಹರಿಂ ಶ್ರುತಿಜ್ಞಾ ಪತಿಮಾಪ್ತುಮೈಚ್ಛತ್ .
ಸಾ ಪುಷ್ಕರದ್ವೀಪಗತಾ ತದರ್ಥಮೇಕಾಕಿನೀ ತೀವ್ರತಪಶ್ಚಕಾರ .. 18-5..

ಶ್ರುತಾ ತಯಾಽಭೂದಶರೀರಿವಾಕ್ ತೇ ಹರಿಃ ಪತಿರ್ಭಾವಿನಿ ಜನ್ಮನಿ ಸ್ಯಾತ್ .
ನಿಶಮ್ಯ ತದ್ಧೃಷ್ಟಮನಾಸ್ತಥೈವ ಕೃತ್ವಾ ತಪಸ್ತತ್ರ ನಿನಾಯ ಕಾಲಂ .. 18-6..

ತಾಂ ರಾವಣಃ ಕಾಮಶರಾರ್ದ್ದಿತಃ ಸಂಶ್ಚಕರ್ಷ ಸಾ ಚ ಸ್ತವನೇನ ದೇವೀಂ .
ಪ್ರಸಾದ್ಯ ಕೋಪಾರುಣಲೋಚನಾಭ್ಯಾಂ ನಿರೀಕ್ಷ್ಯ ತಂ ನಿಶ್ಚಲಮಾತತಾನ .. 18-7..
ಶಶಾಪ ತಂ ಚ ತ್ವಮರೇ ಮದರ್ಥೇ ಸಬಾಂಧವೋ ರಾಕ್ಷಸ ನಂಕ್ಷ್ಯಸೀತಿ . ಸ್ವಂ ಕೌಣಪಸ್ಪೃಷ್ಟಮಶುದ್ಧದೇಹಂ ಯೋಗೇನ ಸದ್ಯೋ ವಿಜಹೌ ಸತೀ ಸಾ .. 18-8.. ಜಾತಾ ಪುನಃ ಸಾ ಮಿಥಿಲೇಶಕನ್ಯಾ ಕಾಲೇ ಹರಿಂ ತ್ವಾಂ ಪತಿಮಾಪ ದೈವಾತ್ . ಸ ಹನ್ಯತಾಂ ಸತ್ವರಮಾಶರೇಂದ್ರಸ್ತನ್ನಾಶಕಾಲಸ್ತು ಸಮಾಗತಶ್ಚ .. 18-9.. ತದರ್ಥಮಾರಾಧಯ ಲೋಕನಾಥಾಂ ನವಾಹಯಜ್ಞೇನ ಕೃತೋಪವಾಸಃ . ಪ್ರಸಾದ್ಯ ತಾಮೇವ ಸುರಾ ನರಾಶ್ಚ ಕಾಮಾನ್ ಲಭಂತೇ ಶುಭಮೇವ ತೇ ಸ್ಯಾತ್ .. 18-10.. ಇತ್ಯೂಚಿವಾಂಸಂ ಮುನಿಮೇವ ರಾಮ ಆಚಾರ್ಯಮಾಕಲ್ಪ್ಯ ಸಲಕ್ಷ್ಮಣಸ್ತ್ವಾಂ . ಸಂಪೂಜ್ಯ ಸುಸ್ಮೇರಮುಖೀಂ ವ್ರತಾಂತೇ ಸಿಂಹಾಧಿರೂಢಾಂ ಚ ಪುರೋ ದದರ್ಶ .. 18-11.. ಭಕ್ತ್ಯಾ ನತಂ ತಂ ದ್ರುತಮಾತ್ಥ ರಾಮ ಹರಿಸ್ತ್ವಮಂಶೇನ ಮದಾಜ್ಞಯೈವ . ಜಾತೋ ನರತ್ವೇನ ದಶಾಸ್ಯಹತ್ಯೈ ದದಾಮಿ ತಚ್ಛಕ್ತಿಮಹಂ ತವೇಹ .. 18-12.. ಶ್ರುತ್ವಾ ತವೋಕ್ತಿಂ ಸ ಹನೂಮದಾದ್ಯೈಃ ಸಾಕಂ ಕಪೀಂದ್ರೈಃ ಕೃತಸೇತುಬಂಧಃ . ಲಂಕಾಂ ಪ್ರವಿಷ್ಟೋ ಹತರಾವಣಾದ್ಯಃ ಪುರೀಮಯೋಧ್ಯಾಮಗಮತ್ಸಸೀತಃ .. 18-13.. ಹಾ ದೇವಿ ಭಕ್ತಿರ್ನ ಹಿ ಮೇ ಗುರುಶ್ಚ ನ ಚೈವ ವಸ್ತುಗ್ರಹಣೇ ಪಟುತ್ವಂ . ಸತ್ಸಂಗತಿಶ್ಚಾಪಿ ನ ತೇ ಪತಂತು ಕೃಪಾಕಟಾಕ್ಷಾ ಮಯಿ ತೇ ನಮೋಽಸ್ತು .. 18-14..

17 ಸಪ್ತದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕೋಸಲಪ್ರಾಪ್ತಿಃ

PPT17 

https://youtu.be/uqWBL4kkKEY

17 ಸಪ್ತದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕೋಸಲಪ್ರಾಪ್ತಿಃ


ಯುಧಾಜಿತಂ ಶತ್ರುಜಿತಂ ಚ ಹತ್ವಾ ರಣಾಂಗಣಸ್ಥಾ ನುತಿಭಿಃ ಪ್ರಸನ್ನಾ . ಸುಬಾಹುಮುಖ್ಯಾನನುಗೃಹ್ಯ ಭಕ್ತಾನ್ ಸರ್ವೇಷು ಪಶ್ಯತ್ಸು ತಿರೋದಧಾಥ .. 17-1.. ಪೃಷ್ಟೋ ನೃಪಾನ್ ಪ್ರಾಹ ಸುದರ್ಶನಸ್ತಾನ್ ದೃಷ್ಟಾ ಭವದ್ಭಿಃ ಖಲು ಸರ್ವಶಕ್ತಾ . ಯಾ ನಿರ್ಗುಣಾ ಯೋಗಿಭಿರಪ್ಯದೃಶ್ಯಾ ದೃಶ್ಯಾ ಚ ಭಕ್ತೈಃ ಸಗುಣಾ ವಿನೀತೈಃ .. 17-2.. ಯಾ ರಾಜಸೀದಂ ಸೃಜತೀವ ಶಕ್ತಿರ್ಯಾ ಸಾತ್ವಿಕೀ ಪಾಲಯತೀವ ವಿಶ್ವಂ . ಯಾ ತಾಮಸೀ ಸಂಹರತೀವ ಸರ್ವಂ ಸದ್ವಸ್ತು ಸೈವಾನ್ಯದಸತ್ಸಮಸ್ತಂ .. 17-3.. ಭಕ್ತಾರ್ತಿಹಂತ್ರೀ ಕರುಣಾಮಯೀ ಸಾ ಭಕ್ತದ್ರುಹಾಂ ಭೀತಿಕರೀ ಪ್ರಕಾಮಂ . ವಸನ್ ಭರದ್ವಾಜತಪೋವನಾಂತೇ ಚಿರಾಯ ಮಾತ್ರಾ ಸಹ ತಾಂ ಭಜೇಽಹಂ .. 17-4.. ತಾಮೇವ ಭಕ್ತ್ಯಾ ಭಜತೇಹ ಭುಕ್ತಿಮುಕ್ತಿಪ್ರದಾಮಸ್ತು ಶುಭಂ ಸದಾ ವಃ . ಶ್ರುತ್ವೇದಮಾನಮ್ರಮುಖಾಸ್ತಥೇತಿ ಸಮ್ಮಂತ್ರ್ಯ ಭೂಪಾಶ್ಚ ತತೋ ನಿವೃತ್ತಾಃ .. 17-5.. ಸುದರ್ಶನೋ ಮಾತೃವಧೂಸಮೇತಃ ಸುಬಾಹುಮಾಪೃಛ್ಯ ರಥಾಧಿರೂಢಃ . ಪುರೀಮಯೋಧ್ಯಾಂ ಪ್ರವಿಶನ್ ಪುರೇವ ಸೀತಾಪತಿಸ್ತೋಷಯತಿ ಸ್ಮ ಸರ್ವಾನ್ .. 17-6.. ಲೀಲಾವತೀಂ ಪ್ರಾಪ್ಯ ವಿಮಾತರಂ ಚ ನತ್ವಾ ವಿಷಣ್ಣಾಂ ಹತಪುತ್ರತಾತಾಂ . ಸದುಕ್ತಿಭಿಃ ಕರ್ಮಗತೀಃ ಪ್ರಬೋಧ್ಯ ಸ ಸಾಂತ್ವಯಾಮಾಸ ಮಹೇಶಿ ಭಕ್ತಃ .. 17-7.. ಜನೇಷು ಪಶ್ಯತ್ಸು ಸುದರ್ಶನೋಽತ್ರ ತ್ವಾಂ ಪೂಜಯಿತ್ವಾ ಗುರುಣಾಽಭಿಷಿಕ್ತಃ . ರಾಜ್ಯೇ ತ್ವದೀಯಂ ಗೃಹಮಾಶು ಕೃತ್ವಾ ಪೂಜಾವಿಧಾನಾದಿ ಚ ಸಂವೃಧತ್ತ .. 17-8.. ತಸ್ಮಿನ್ ನೃಪೇ ತ್ವತ್ಸದನಾನಿ ಕೃತ್ವಾ ಜನಾಃ ಪ್ರತಿಗ್ರಾಮಮಪೂಜಯಂಸ್ತ್ವಾಂ . ಕಾಶ್ಯಾಂ ಸುಬಾಹುಶ್ಚ ತಥಾಽಕರೋತ್ತೇ ಸರ್ವತ್ರ ಪೇತುಃ ಕರುಣಾಕಟಾಕ್ಷಾಃ .. 17-9.. ನ ಕರ್ಮಣಾ ನ ಪ್ರಜಯಾ ಧನೇನ ನ ಯೋಗಸಾಂಖ್ಯಾದಿವಿಚಿಂತಯಾ ಚ . ನ ಚ ವ್ರತೇನಾಪಿ ಸುಖಾನುಭೂತಿರ್ಭಕ್ತ್ಯೈವ ಮರ್ತ್ಯಃ ಸುಖಮೇತಿ ಮಾತಃ .. 17-10.. ನಾಹಂ ಸುಬಾಹುಶ್ಚ ಸುದರ್ಶನಶ್ಚ ನ ಮೇ ಭರದ್ವಾಜಮುನಿಃ ಶರಣ್ಯಃ . ಗುರುಃ ಸುಹೃದ್ಬಂಧುರಪಿ ತ್ವಮೇವ ಮಹೇಶ್ವರಿ ತ್ವಾಂ ಸತತಂ ನಮಾಮಿ .. 17-11..

16 ಷೋಡಶದಶಕಃ - ಸುದರ್ಶನವಿವಾಹಂ PPT

 

16 ಷೋಡಶದಶಕಃ - ಸುದರ್ಶನವಿವಾಹಂ

PPT
https://www.youtube.com/watch?v=31R08P8WX5A

ಶ್ರುತ್ವಾ ವಧೂವಾಕ್ಯಮರಂ ಕುಮಾರೋ ಹೃಷ್ಟೋ ಭರದ್ವಾಜಮುನಿಂ ಪ್ರಣಮ್ಯ . ಆಪೃಛ್ಯ ಮಾತ್ರಾ ಸಹ ದೇವಿ ಸ ತ್ವಾಂ ಸ್ಮರನ್ ರಥೇನಾಪ ಪುರಂ ಸುಬಾಹೋಃ .. 16-1.. ಸ್ವಯಂವರಾಹೂತಮಹೀಭುಜಾಂ ಸ ಸಭಾಂ ಪ್ರವಿಷ್ಟೋ ಹತಭೀರ್ನಿಷಣ್ಣಃ . ಕನ್ಯಾ ಕಲಾ ಪೂರ್ಣಶಶೀ ತ್ವಸಾವಿತ್ಯಾಹುರ್ಜನಾಸ್ತಾಮಭಿವೀಕ್ಷಮಾಣಾಃ .. 16-2.. ವಧೂಶ್ಚ ತದ್ದರ್ಶನವರ್ಧಿತಾನುರಾಗಾ ಸ್ಮರಂತೀ ತವ ವಾಕ್ಯಸಾರಂ . ಸಭಾಂ ನೃಪಾಣಾಮಜಿತೇಂದ್ರಿಯಾಣಾಂ ನ ಪ್ರಾವಿಶತ್ಸಾ ಪಿತೃಚೋದಿತಾಽಪಿ .. 16-3.. ಶಂಕಾಕುಲಾಸ್ತೇ ನೃವರಾ ಬಭೂವುರುಚ್ಚೈರ್ಯುಧಾಜಿತ್ಕುಪಿತೋ ಜಗಾದ- . ಮಾ ದೀಯತಾಂ ಲೋಕಹಿತಾನಭಿಜ್ಞಾ ವಧೂರಶಕ್ತಾಯ ಸುದರ್ಶನಾಯ .. 16-4.. ಬಾಲೋಽಯಮಿತ್ಯೇಷ ಮಯಾಽಽಶ್ರಮೇ ಪ್ರಾಗುಪೇಕ್ಷಿತಃ ಸೋಽತ್ರ ರಿಪುತ್ವಮೇತಿ . ಮಾಽಯಂ ಚ ವಧ್ವಾ ವ್ರಿಯತಾಂ ವೃತಶ್ಚೇದ್ಧನ್ಯಾಮಿಮಂ ತಾಂ ಚ ಹರೇಯಮಾಶು .. 16-5.. ಶ್ರುತ್ವಾ ಯುಧಾಜಿದ್ವಚನಂ ನೃಪಾಲಾ ಹಿತೈಷಿಣಃ ಕೇಚಿದುಪೇತ್ಯ ಸರ್ವಂ . ಸುದರ್ಶನಂ ಪ್ರೋಚುರಥಾಪಿ ಧೀರಃ ಸ ನಿರ್ಭಯೋ ನೈವ ಚಚಾಲ ದೇವಿ .. 16-6.. ಏಕತ್ರ ಪುತ್ರೀ ಚ ಸುದರ್ಶನಶ್ಚ ಯುಧಾಜಿದನ್ಯತ್ರ ಬಲೀ ಸಕೋಪಃ . ತನ್ಮಧ್ಯಗೋ ಮಂಕ್ಷು ನೃಪಃ ಸುಬಾಹುರ್ಬದ್ಧಾಂಜಲಿಃ ಪ್ರಾಹ ನೃಪಾನ್ ವಿನಮ್ರಃ .. 16-7.. ನೃಪಾ ವಚೋ ಮೇ ಶೃಣುತೇಹ ಬಾಲಾ ನಾಯಾತಿ ಪುತ್ರೀ ಮಮ ಮಂಡಪೇಽತ್ರ . ತತ್ಕ್ಷಮ್ಯತಾಂ ಶ್ವೋಽತ್ರ ನಯಾಮ್ಯಹಂ ತಾಂ ಯಾತಾದ್ಯ ವೋ ವಿಶ್ರಮಮಂದಿರಾಣಿ .. 16-8.. ಗತೇಷು ಸರ್ವೇಷು ಸುದರ್ಶನಸ್ತು ತ್ವಾಂ ಸಂಸ್ಮರನ್ ಮಾತೃಹಿತಾನುಸಾರೀ . ಸುಬಾಹುನಾ ತನ್ನಿಶಿ ತೇನ ದತ್ತಾಂ ವಧೂಂ ಯಥಾವಿಧ್ಯುದುವಾಹ ದೇವಿ .. 16-9.. ಪ್ರಾತರ್ಯುಧಾಜಿತ್ಪ್ರಬಲೋ ವಿವಾಹವಾರ್ತಾಂ ನಿಶಮ್ಯಾತ್ತರುಷಾ ಸಸೈನ್ಯಃ . ಸುದರ್ಶನಂ ಮಾತೃವಧೂಸಮೇತಂ ಯಾತ್ರೋನ್ಮುಖಂ ಭೀಮರವೋ ರುರೋಧ .. 16-10.. ತತೋ ರಣೇ ಘೋರತರೇ ಸುಬಾಹುಃ ಕ್ಲೀಂ ಕ್ಲೀಮಿತೀಶಾನಿ ಸಮುಚ್ಚಚಾರ . ತತ್ರಾವಿರಾಸೀಃ ಸಮರಾಂಗಣೇ ತ್ವಂ ಸಿಂಹಾಧಿರೂಢಾ ಸ್ವಜನಾರ್ತಿಹಂತ್ರೀ .. 16-11.. ತ್ವನ್ನಾಮ ಗಾಯನ್ ಕಥಯನ್ ಗುಣಾಂಸ್ತೇ ತ್ವಾಂ ಪೂಜಯಂಶ್ಚಾತ್ರ ನಯಾಮಿ ಕಾಲಂ . ಸ್ವಪ್ನೇಽಪಿ ದೃಷ್ಟಾ ನ ಮಯಾ ತ್ವಮಂಬೇ ಕೃಪಾಂ ಕುರು ತ್ವಂ ಮಯಿ ತೇ ನಮೋಽಸ್ತು .. 16-12..

15 ಪಂಚದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕಥಾ - ದೇವೀದರ್ಶನಂ

video 

ppt edited audio


PPT




ಏವಂ ತವೈವ ಕೃಪಯಾ ಮುನಿವರ್ಯಶೀತಚ್ಛಾಯಾಶ್ರಿತೋ ಹತಭಯಃ ಸ ಸುದರ್ಶನೋಽಯಂ .
ವೇದಧ್ವನಿಶ್ರವಣಪೂತಹೃದಾಶ್ರಮಾಂತೇ ಸಮ್ಮೋದಯನ್ ಮುನಿಜನಾನ್ ವವೃಧೇ ಕುಮಾರಃ .. 15-1..

ಆಬಾಲ್ಯಮೇಷ ಮುನಿಬಾಲಕಸಂಗಮೇನ ಕ್ಲೀಂ ಕ್ಲೀಮಿತೀಶ್ವರಿ ಸದಾ ತವ ಬೀಜಮಂತ್ರಂ .
ತತ್ರೋಚ್ಚಚಾರ ಕೃಪಯಾಽಸ್ಯ ಪುರಃ ಕದಾಚಿದಾವಿರ್ಬಭೂವಿಥ ನತಂ ತಮಭಾಷಥಾಶ್ಚ .. 15-2..

ಪ್ರೀತಾಽಸ್ಮಿ ತೇ ಸುತ ಜಗಜ್ಜನನೀಮವೇಹಿ ಮಾಂ ಸರ್ವಕಾಮವರದಾಂ ತವ ಭದ್ರಮಸ್ತು .
ಚಂದ್ರಾನನಾಂ ಶಶಿಕಲಾಂ ವಿಮಲಾಂ ಸುಬಾಹೋಃ ಕಾಶೀಶ್ವರಸ್ಯ ತನಯಾಂ ವಿಧಿನೋದ್ವಹ ತ್ವಂ .. 15-3..

ನಷ್ಟಾ ಭವೇಯುರಚಿರೇಣ ತವಾರಿವರ್ಗಾ ರಾಜ್ಯಂ ಚ ಯೈರಪಹೃತಂ ಪುನರೇಷ್ಯಸಿ ತ್ವಂ .
ಮಾತೃದ್ವಯೇನ ಸಚಿವೈಶ್ಚ ಸಮಂ ಸ್ವಧರ್ಮಾನ್ ಕುರ್ಯಾಃ ಸದೇತಿ ಸಮುದೀರ್ಯ ತಿರೋದಧಾಥ .. 15-4..

ಸ್ವಪ್ನೇ ತ್ವಯಾ ಶಶಿಕಲಾ ಕಥಿತಾಽಸ್ತಿ ಭಾರದ್ವಾಜಾಶ್ರಮೇ ಪ್ರಥಿತಕೋಸಲವಂಶಜಾತಃ .
ಧೀಮಾನ್ ಸುದರ್ಶನ ಇತಿ ಧ್ರುವಸಂಧಿಪುತ್ರ ಏನಂ ಪತಿಂ ವೃಣು ತವಾಸ್ತು ಶುಭಂ ಸದೇತಿ .. 15-5..

ಸ್ವಪ್ನಾನುಭೂತಮನೃತಂ ಕಿಮೃತಂ ನ ವೇತಿ ಸುಪ್ತೋತ್ಥಿತಾ ತು ಮತಿಮತ್ಯಪಿ ನ ವ್ಯಜಾನಾತ್ .
ಪೃಷ್ಟಾತ್ಸುದರ್ಶನಕಥಾಂ ಸುಮುಖೀ ದ್ವಿಜಾತ್ಸಾ ಶ್ರುತ್ವಾಽನುರಕ್ತಹೃದಯೈವ ಬಭೂವ ದೇವಿ .. 15-6..

ಜ್ಞಾತ್ವಾ ಸುಬಾಹುರಿದಮಾಕುಲಮಾನಸಸ್ತಾಮಸ್ಮಾನ್ನಿವರ್ತ್ತಯಿತುಮಾಶು ಸಹೇಷ್ಟಪತ್ನ್ಯಾ .
ಕೃತ್ವಾ ಪ್ರಯತ್ನಮಖಿಲಂ ವಿಫಲಂ ಚ ಪಶ್ಯನ್ನಿಚ್ಛಾಸ್ವಯಂವರವಿಧಿಂ ಹಿತಮೇವ ಮೇನೇ .. 15-7..

ಕಶ್ಚಿತ್ಕದಾಚನ ಸುದರ್ಶನಮೇತ್ಯ ವಿಪ್ರಃ ಪ್ರಾಹಾಗತಃ ಶಶಿಕಲಾವಚಸಾಽಹಮತ್ರ .
ಸಾ ತ್ವಾಂ ಬ್ರವೀತಿ- ನೃಪಪುತ್ರ ಜಗಜ್ಜನನ್ಯಾ ವಾಚಾ ವೃತೋಽಸಿ ಪತಿರಸ್ಮಿ ತವೈವ ದಾಸೀ .. 15-8..

ಅತ್ರಾಗತಾ ನೃಪತಯೋ ಬಹವಸ್ತ್ವಮೇತ್ಯ ತೇಷಾಂ ಸುಧೀರ ಮಿಷತಾಂ ನಯ ಮಾಂ ಪ್ರಿಯಾಂ ತೇ .
ಏವಂ ವಧೂವಚನಮಾನಯ ತಾಂ ಸುಶೀಲಾಂ ಭದ್ರಂ ತವಾಸ್ತ್ವಿದಮುದೀರ್ಯ ಜಗಾಮ ವಿಪ್ರಃ .. 15-9..

ಸ್ವಪ್ನೇ ಚ ಜಾಗ್ರತಿ ಚ ಪಶ್ಯತಿ ಭಕ್ತವರ್ಯಸ್ತ್ವಾಂ ಸಂತತಂ ತವ ವಚೋ ಮಧುರಂ ಶೃಣೋತಿ .
ಐಶ್ವರ್ಯಮಾಶು ಲಭತೇಽಪಿ ಚ ಮುಕ್ತಿಮೇತಿ ತ್ವದ್ಭಕ್ತಿಮೇವ ಮಮ ದೇಹಿ ನಮೋ ಜನನ್ಯೈ .. 15-10..

14 ಚತುರ್ದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕಥಾ - ಭರದ್ವಾಜಾಶ್ರಮಪ್ರವೇಶಂ

 


14 ಚತುರ್ದಶದಶಕಃ - ಸುದರ್ಶನಕಥಾ - ಭರದ್ವಾಜಾಶ್ರಮಪ್ರವೇಶಂ

https://youtu.be/sl9IcJDLBGA

PPT ರಾಜಾ ಪುರಾಽಽಸೀತ್ಕಿಲ ಕೋಸಲೇಷು ಧರ್ಮೈಕನಿಷ್ಠೋ ಧ್ರುವಸಂಧಿನಾಮಾ . ಆಸ್ತಾಂ ಪ್ರಿಯೇ ಅಸ್ಯ ಮನೋರಮಾ ಚ ಲೀಲಾವತೀ ಚೇತಿ ದೃಢಾನುರಕ್ತೇ .. 14-1.. ಮನೋರಮಾಽಸೂತ ಸುದರ್ಶನಾಖ್ಯಂ ಕುಮಾರಕಂ ಶತ್ರುಜಿತಂ ಚ ಸಾಽನ್ಯಾ . ಸಂವರ್ಧಯಂಸ್ತೌ ಮೃಗಯಾವಿಹಾರೀ ವನೇ ನೃಪೋ ಹಾ ಹರಿಣಾ ಹತೋಽಭೂತ್ .. 14-2.. ವಿಚಿಂತಯನ್ ರಾಜಕುಲಸ್ಯ ವೃತ್ತಂ ತಜ್ಜ್ಯೇಷ್ಠಪುತ್ರಸ್ಯ ಸುದರ್ಶನಸ್ಯ . ರಾಜ್ಯಾಭಿಷೇಕಾಯ ಗುರುರ್ವಸಿಷ್ಠಶ್ಚಕಾರ ಮಂತ್ರಂ ಸಚಿವೈಃ ಸಮೇತಃ .. 14-3.. ಮಾತಾಮಹಃ ಶತ್ರುಜಿತೋ ಯುಧಾಜಿದಭ್ಯೇತ್ಯ ಸದ್ಯೋಽಮಿತವೀರ್ಯಶಾಲೀ . ರಾಜ್ಯೇ ಸ್ವದೌಹಿತ್ರಮಿಹಾಭಿಷಿಕ್ತಂ ಕರ್ತುಂ ಕುಬುದ್ಧಿಃ ಕುರುತೇ ಸ್ಮ ಯತ್ನಂ .. 14-4.. ಮನೋರಮಾಯಾ ಅಪಿ ವೀರಸೇನಃ ಪಿತಾಽಭ್ಯುಪೇತ್ಯಾಶು ರುರೋಧ ತಸ್ಯ . ಯತ್ನಂ ಬಲೀ ಸ್ವಸ್ವಸುತಾಸುತಾಭಿಷೇಕೈಕಬುದ್ಧೀ ಖಲು ತಾವಭೂತಾಂ .. 14-5.. ಕೃತ್ವಾ ವಿವಾದಂ ಚ ತತೋ ನೃಪೌ ದ್ವೌ ಘೋರಂ ರಣಂ ಚಕ್ರತುರಿದ್ಧರೋಷೌ . ಯುಧಾಜಿತಾ ತತ್ರ ತು ವೀರಸೇನೋ ದೈವಾದ್ಧತೋಽಭೂದ್ಧರಿಣಾ ಕರೀವ .. 14-6.. ರಾಜ್ಯೇಽಭಿಷಿಕ್ತಃ ಖಲು ಶತ್ರುಜಿತ್ಸ ಬಾಲಸ್ತತೋಽಯಂ ರಿಪುಭಿದ್ಯುಧಾಜಿತ್ . ದೌಹಿತ್ರರಾಜ್ಯಂ ಸುಖಮೇಕನಾಥಃ ಶಶಾಸ ವಜ್ರೀವ ದಿವಂ ಮಹೇಶಿ .. 14-7.. ಪತ್ಯುಃ ಪಿತುಶ್ಚಾಪಿ ಮೃತೇರನಾಥಾ ಭೀತಾ ವಿದಲ್ಲಾಭಿಧಮಂತ್ರಿಯುಕ್ತಾ . ಮನೋರಮಾ ಬಾಲಸುತಾ ತ್ವರಣ್ಯೇ ಯಯೌ ಭರದ್ವಾಜಮುನಿಂ ಶರಣ್ಯಂ .. 14-8.. ತಪೋನಿಧಿರ್ದೀನಜನಾನುಕಂಪೀ ಜ್ಞಾತ್ವಾ ಮುನಿಸ್ತಾಂ ಧ್ರುವಸಂಧಿಪತ್ನೀಂ . ಉವಾಚ- ವತ್ಸೇ ವಸ ನಿರ್ಭಯೈವ ತಪೋವನೇಽತ್ರಾಸ್ತು ಶುಭಂ ತವೇತಿ .. 14-9.. ಅಲ್ಪೋಽಪ್ಯುಪೇಕ್ಷ್ಯೋ ನ ರಿಪುರ್ನ ರೋಗೋಽಪ್ಯೇವಂ ಸ್ಮರನ್ನಾಶು ನೃಪೋ ಯುಧಾಜಿತ್ . ತಾಂ ಹರ್ತುಕಾಮಃ ಸಸುತಾಂ ಮಹರ್ಷೇಃ ಪ್ರಾಪಾಶ್ರಮಂ ಮಂತ್ರಿವರೇಣ ಸಾಕಂ .. 14-10.. ನ ಮಾನಿತಸ್ತೇನ ತಪಸ್ವಿನಾ ಸ ಮನೋರಮಾಂ ನೈವ ಸುತಂ ಚ ಲೇಭೇ . ಪ್ರಹರ್ತುಕಾಮೋಽಪಿ ಮುನಿಂ ಸ ಮಂತ್ರಿವಾಚಾ ನಿವೃತ್ತಃ ಶ್ರುತಕೌಶಿಕೋಽಭೂತ್ .. 14-11.. ಏವಂ ಮುನಿಸ್ತಾಂ ಸಸುತಾಂ ರರಕ್ಷ ಭೀತೋಽಸ್ಮಿ ಸಂಸಾರಯುಧಾಜಿತೋಽಹಂ . ನ ಮೇ ಸಹಾಯೋಽಸ್ತಿ ವಿನಾ ತ್ವಯೈಷ ಸನೂಪುರಂ ತೇ ಚರಣಂ ನಮಾಮಿ .. 14-12.
.<iframe src="https://onedrive.live.com/embed?resid=9854A1791CB05F1C%211012&amp;authkey=!AHwg3v3FfxcbnCg&amp;em=2&amp;wdAr=1.7777777777777777" width="476px" height="288px" frameborder="0">This is an embedded <a target="_blank" href="https://office.com">Microsoft Office</a> presentation, powered by <a target="_blank" href="https://office.com/webapps">Office</a>.</iframe>


23 ത്രയോവിംശദശകഃ - മഹാലക്ഷ്മ്യവതാരഃ DASAKAM23 MALAYALAM STORY@5G read by Swaminathan N

https://youtu.be/vY_D-J_0lDU 








23 ത്രയോവിംശദശകഃ - മഹാലക്ഷ്മ്യവതാരഃ

രംഭസ്യ പുത്രോ മഹിഷാസുരഃ പ്രാക് തീവ്രൈസ്തപോഭിർദ്രുഹിണാത്പ്രസന്നാത് .
അവധ്യതാം പുംഭിരവാപ്യ ധൃഷ്ടോ ന മേ മൃതിഃ സ്യാദിതി ച വ്യചിന്തീത് .. 23-1..

സ ചിക്ഷുരാദ്യൈരസുരൈഃ സമേതഃ ശക്രാദിദേവാന്യുധി പദ്മജം ച .
രുദ്രം ച വിഷ്ണും ച വിജിത്യ നാകേ വസൻ ബലാദ്യജ്ഞഹവിർജഹാര .. 23-2..

ചിരം ഭൃശം ദൈത്യനിപീഡിതാസ്തേ ദേവാഃ സമം പദ്മജശങ്കരാഭ്യാം .
ഹരിം സമേത്യാസുരദൗഷ്ട്യമൂചൂസ്ത്വാം സംസ്മരൻ ദേവി മുരാരിരാഹ .. 23-3..

സുരാ വയം തേന രണേഽതിഘോരേ പരാജിതാ ദൈത്യവരോ ബലിഷ്ഠഃ .
മത്തോ ഭൃശം പുംഭിരവധ്യഭാവാന്ന നഃ സ്ത്രിയോ യുദ്ധവിചക്ഷണാശ്ച .. 23-4..

തേജോഭിരേകാ ഭവതീഹ നശ്ചേത്സൈവാസുരാൻ ഭീമബലാന്നിഹന്താ .
യഥാ ഭവത്യേതദരം തഥൈവ സമ്പ്രാർഥയാമോഽവതു നോ മഹേശീ .. 23-5..

ഏവം ഹരൗ വക്തരി പദ്മജാതാത്തേജോഽഭവദ്രാജസരക്തവർണം .
ശിവാദഭൂത്താമസരൗപ്യവർണം നീലപ്രഭം സാത്ത്വികമച്യുതാച്ച .. 23-6..

തേജാംസ്യഭൂവൻ വിവിധാനി ശക്രമുഖാമരേഭ്യോ മിഷതോഽഖിലസ്യ .
സമ്യോഗതസ്താന്യചിരേണ മാതഃ സ്ത്രീരൂപമഷ്ടാദശഹസ്തമാപുഃ .. 23-7..

തത്തു ത്വമാസീഃ ശുഭദേ മഹാലക്ഷ്മ്യാഖ്യാ ജഗന്മോഹനമോഹനാംഗീ .
ത്വം ഹ്യേവ ഭക്താഭയദാനദക്ഷാ ഭക്തദ്രുഹാം ഭീതികരീ ച ദേവി .. 23-8..

സദ്യസ്ത്വമുച്ചൈശ്ചകൃഷേഽട്ടഹാസം സുരാഃ പ്രഹൃഷ്ടാ വസുധാ ചകമ്പേ .
ചുക്ഷോഭ സിന്ധുർഗിരയോ വിചേലുർദൈത്യശ്ച മത്തോ മഹിഷശ്ചുകോപ .. 23-9..

ത്വാം സുന്ദരീം ചാരമുഖാത് സ ദൈത്യോ വിജ്ഞായ കാമീ വിസസർജ ദൂതം .
സ ചേശ്വരീം ദൈത്യഗുണാൻ പ്രവക്താ ത്വാം നേതുകാമോ വിഫലോദ്യമോഽഭൂത് .. 23-10..

പ്രലോഭനൈസ്ത്വാമഥ ദേവശക്തിം ജ്ഞാത്വാഽപി വാക്യൈരനുനേതുകാമഃ .
ഏകൈകശഃ പ്രേഷയതിസ്മ ദൂതാൻ ത്വാം കാമിനീം കർതുമിമേ ന ശേകുഃ .. 23-11..

അവേഹി മാം പുച്ഛവിഷാണഹീനം ഭാരം വഹന്തം മഹിഷം ദ്വിപാദം .
ഹിംസന്തി മാം സ്വർഥിജനാസ്ത്വമേവ രക്ഷാകരീ മേ ശുഭദേ നമസ്തേ .. 23-12..











Wednesday, August 23, 2023

35 பஞ்சத்ரிம்ʼஶத³ஶக꞉ - அனுக்³ரஹவைசித்ர்யம் rec

 

35 பஞ்சத்ரிம்ʼஶத³ஶக꞉ - அனுக்³ரஹவைசித்ர்யம்

பா⁴க்³யோத³யே த்ரீணி ப⁴வந்தி நூனம்ʼ மனுஷ்யதா
ஸஜ்ஜனஸங்க³மஶ்ச . த்வதீ³யமாஹாத்ம்யகதா²ஶ்ருதிஶ்ச யத꞉ புமாம்ʼஸ்த்வத்பத³ப⁴க்திமேதி .. 35-1.. தத꞉ ப்ரஸீத³ஸ்யகி²லார்த²காமான் ப⁴க்தஸ்ய யச்ச²ஸ்யப⁴யம்ʼ ச மாத꞉ . க்ஷமாம்ʼ க்ருʼதாக³ஸ்ஸு கரோஷி சார்யோரன்யோன்யவைரம்ʼ ஶமயஸ்யனீஹா .. 35-2.. து³ஷ்கீர்திபீ⁴த்யா ப்ருʼத²யா குமார்யா த்யக்தம்ʼ தடின்யாம்ʼ ஸுதமர்கலப்³த⁴ம் . ஸம்ப்ரார்தி²தா த்வம்ʼ பரிபாலயந்தீ ப்ராத³ர்ஶய꞉ ஸ்வம்ʼ கருணாப்ரவாஹம் .. 35-3.. ஸுதான் குருக்ஷேத்ரரணே ஹதான் ஸ்வான் தி³த்³ருʼக்ஷவே மாத்ருʼக³ணாய க்ருʼஷ்ண꞉ . ஸம்ப்ரார்தி²தஸ்த்வத்கருணாபி⁴ஷிக்த꞉ ப்ரத³ர்ஶ்ய ஸர்வான் ஸமதோஷயச்ச .. 35-4.. வணிக் ஸுஶீல꞉ க²லு நஷ்டவித்தோ வ்ரதம்ʼ சரன் ப்ராங்னவராத்ரமார்ய꞉ . த்வாம்ʼ தே³வி ஸம்பூஜ்ய த³ரித்³ரபா⁴வான்முக்த꞉ க்ரமாத்³வித்தஸம்ருʼத்³தி⁴மாப .. 35-5.. தே³வத்³ருஹோ தே³வி ரணே த்வயைவ தை³த்யா ஹதா க³ர்ஹிதத⁴ர்மஶாஸ்த்ரா꞉ . ப்ரஹ்லாத³முக்²யானஸுரான் ஸ்வப⁴க்தான் தே³வாம்ʼஶ்ச ஸந்த்யக்தரணானகார்ஷீ꞉ .. 35-6.. புரந்த³ரே பாபதிரோஹிதே தத்ஸ்தா²னாதி⁴ரூடா⁴ன்னஹுஷாத்ஸ்மரார்தாத் . பீ⁴தா ஶசீ த்வாம்ʼ பரிபூஜ்ய த்³ருʼஷ்ட்வா பதிம்ʼ க்ரமாத்³பீ⁴திவிமுக்திமாப .. 35-7.. ஶப்தோ வஸிஷ்டே²ன நிமிர்விதே³ஹோ பூ⁴த்வா(அ)பி தே³வி த்வத³னுக்³ரஹேண . ஜ்ஞானம்ʼ பரம்ʼ ப்ராப நிமே꞉ ப்ரயோகா³ன்னிமேஷிணோ ஜீவக³ணா ப⁴வந்தி .. 35-8.. ஹா பா⁴ர்க³வா லோப⁴விகோபசித்தை꞉ ப்ரபீடி³தா ஹைஹயவம்ʼஶஜாதை꞉ . ஹிமாத்³ரிமாப்தா ப⁴வதீம்ʼ ப்ரபூஜ்ய ப்ரஸாத்³ய பீ⁴தே꞉ க²லு முக்திமாபு꞉ .. 35-9.. த³ஸ்ரௌ யுவானாம்ʼ ச்யவனம்ʼ பதிம்ʼ ச ஸமானரூபானபி⁴த்³ருʼஶ்ய முக்³தா⁴ . ஸதீ ஸுகன்யா தவ ஸம்ʼஸ்ம்ருʼதாயா ப⁴க்த்யா ப்ரஸாதா³த்ஸ்வபதிம்ʼ வ்யாஜானாத் .. 35-10.. ஸத்யவ்ரதோ விப்ரவதூ⁴ம்ʼ ப்ரஸஹ்ய ஹர்தா நிரஸ்தோ ஜனகேன ராஜ்யாத் . வஸிஷ்ட²ஶப்தோ(அ)பி தவ ப்ரஸாதா³த்³ராஜ்யே(அ)பி⁴ஷிக்தோ(அ)த² தி³வம்ʼ க³தஶ்ச .. 35-11.. ஹா ஹா ஹரிஶ்சந்த்³ரந்ருʼபோ விபத்ஸு மக்³ன꞉ ஶதாக்ஷீம்ʼ பரதே³வதாம்ʼ த்வாம் . ஸம்ʼஸ்ம்ருʼத்ய ஸத்³ய꞉ ஸ்வவிபந்நிவ்ருʼத்த꞉ காருண்யதஸ்தே ஸுரலோகமாப .. 35-12.. அக³ஸ்த்யபூஜாம்ʼ பரிக்³ருʼஹ்ய தே³வி விபா⁴ஸி விந்த்⁴யாத்³ரிநிவாஸினீ த்வம் . த்³ரக்ஷ்யே கதா³ த்வாம்ʼ மம தே³ஹி ப⁴க்திம்ʼ காருண்யமூர்த்தே ஸததம்ʼ நமஸ்தே .. 35-13..

3

தசகம் 35

அனுக்ரஹவைசித்ர்யம்

1. பாக்யோதயே த்ரீணி, பவந்தி நூநம்
மனுஷ்யதா, ஸஜ்,ஜன ஸங்கமச்ச,
த்வதீயமாஹாத்ம்ய, கதாஸ்ருதிச்ச;
யத: புமாம்ஸ்வத்,பதபக்திமேதி

ஈயாகவும், பூனையாகவும், நாயாகவும், நரியாகவும் ஜனனம் எடுத்துப் பின் பாக்யம் கிடைக்கும் பொழுது மனிதனாகப் பிறக்கிறான். வெற்றிகளுடன் இணையும் பொழுதுதான் இந்த மனித ஜன்மம் சிறப்படைகிறது. பக்தர்களுடன் சேரும் பொழுது நிறைய தேவியின் கதைகளும், சிறப்பும், பெருமையும் கேட்பதற்கு வாய்ப்புக் கிடைக்கிறது. அவர்களுடன் நிரந்தர தொடர்பு இருந்தால் அது தேவியிடம் பக்தியை வளர்க்கும். தேவி பக்தி ஆபத்திலும், சம்பத்திலும், துக்கத்திலும், சுகத்திலும் ஒரே மனநிலையில் இருக்கச் செய்யும்.

2. தத: ப்ரஸீதஸ்ய, அகிலார்த்த காமானு
பக்தஸ்ய யச்சஸ்ய, பயம் ச மாதஹ!
க்ஷமாம் க்ருதாங்கஸ்ஸு, கரோஷி சார்யோஹோ
அன்யோன்ய வைரம், சமயஸ்ய நீஹா

தன் பக்தர்களுக்குத் தேவையானதையும், விரும்புவனவற்றையும் தரக் கூடியவள் அந்த தயா மூர்த்தி. பக்தனின் பயத்தைப் போக்குபவளும் அவளே. இரு தேவி பக்தர்கள் ஒன்று கூடினால் அவர்களிடையே கருத்து வேற்றுமை வராமல் அவர்களை ஒன்று படுத்துவாள். இதனால் அன்னைக்கு என்ன லாபம்? அவள் அன்னை அல்லாவா? அதனால் எற்பட்ட கருணைதான் காரணம்.

3. துஷ்கீர்த்தி பீத்யா, ப்ருதயா குமார்யா
த்யக்தம் தடின்யாம், ஸுத மர்க்கலப்தம்
ஸம்ப்ரார்த்திதா த்வம், பரிபாலயந்தீ
ப்ராதர்சய: ஸ்வம், கருணா, ப்ரவாஹம்

து³ஷ்கீர்திபீ⁴த்யா ப்ருʼத²யா குமார்யா த்யக்தம்ʼ தடின்யாம்ʼ ஸுதமர்கலப்³த⁴ம் . 

ஸம்ப்ரார்தி²தா த்வம்ʼ பரிபாலயந்தீ ப்ராத³ர்ஶய꞉ ஸ்வம்ʼ கருணாப்ரவாஹம் .. 35-3.. 

சூரசேனனின் மகளான குந்திதேவி, பூஜைக்கு உரிய பணிவிடைகளைச் செய்வதற்காக, குந்திபோஜன் என்னுன் அரசனிடம் சிலகாலம் வளர்ந்து வந்தாள். சாதுர்மாஸ்ய விரத பூஜை பூர்த்தி செய்வதற்காக அங்கு வந்த துர்வாஸருக்கு பணிவிடைச் செய்ய குந்தியை அனுப்பினார். சிறிதும் தவறாமல் குறிப்புணர்ந்து பணிவிடை செய்யும் குந்திக்கு மனம் மகிழ்ந்து ஒரு மந்திரத்தை துர்வாஸர் உபதேசம் செய்தார். “இந்த மந்திரத்தை நீ எப்பொழுது உச்சரிக்கின்றாயோ அப்பொழுது அதற்குரிய தேவதைகள் உன் கண் முன் தோன்றுவார்கள்” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். அதன் பின் குந்தி மந்திரத்தின் மகிமையைத் தெரிந்து கொள்ள ஒரு மந்திரத்தை உச்சரித்தாள். அவள் கண் முன் சூர்ய மூர்த்தி தோன்ற அவள் கர்பவதி ஆனாள். கவச குண்டலத்தோடு ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். அதை ஒரு பெட்டியில் வைத்து “மகனே! ஸர்வாபரண சம்பன்னையாயும், பகவதியாயும், விஸ்வேஸ்வரியாயும் இருக்கும் அம்பிகை உனக்குப் பசிவராமல் பாலூட்டி வளர்க்கட்டும். அந்த ஜகன்மாதாவே உனக்குத் துணை” என்று குழந்தையை ஆற்றில் விட்டாள். அந்த தேவி குழந்தையைக் காப்பாற்றினாள். பக்தி உள்ளோருக்கு அன்னை அபயம் தருவாள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

4. ஸுதான் குருக்ஷேத்ர,ரணே ஹதான் ஸ்வான்
தித்ருக்ஷவே மாத்ருகணாய க்ருஷ்ணஹ
ஸம்ப்ரார்த்திதஸ்வத், கருணாபிஷிக்தஹ
ப்ரதர்ச்ய ஸர்வான், ஸமதோ ஷயச்ச

ஸுதான் குருக்ஷேத்ரரணே ஹதான் ஸ்வான் தி³த்³ருʼக்ஷவே மாத்ருʼக³ணாய க்ருʼஷ்ண꞉ . 

ஸம்ப்ரார்தி²தஸ்த்வத்கருணாபி⁴ஷிக்த꞉ ப்ரத³ர்ஶ்ய ஸர்வான் ஸமதோஷயச்ச .. 35-4.. 

குருக்ஷேத்ர யுத்தம் முடிந்ததும் தருமபுத்திரர் 36 வருஷங்கள் ராஜ்ய பரிபாலனம் செய்தார். துக்கத்தால் வருந்தும் திருதராஷ்டிரரையும் காந்தாரியையும் தருமர் தானே எல்லா பணிவிடைகளையும் செய்து கவனித்துக் கொண்டார். ஒரு நாள் திருதராஷ்ட்ரர் தான் வனவாசம் போக விரும்புவதாகச் சொல்ல, தருமர் திருதராஷ்ட்ரர், காந்தாரி, குந்தி, விதுரர் இவர்களை ஆரண்யம் கொண்டுச் சேர்த்தார். அங்கு அவர்கள் சதயூபர் ஆஸ்ரமத்தில் 6 வருடம் காலம் கழித்தார்கள். தருமர் ஒரு நாள் தன் சகோதரர்களுடனும், திரௌபதி, சுபத்திரை, உத்தரை மற்றும் நகரத்தாருடன், சதயூபர் ஆஸ்ரமம் சென்று அங்கு அனைவரையும் கண்டு மகிழ்ந்தார். விதுரர் மட்டும் தனியே ஓர் இடத்தில் தியானம் செய்வதை அறிந்து அங்கு சென்றார். ஆனால் விதுரருக்கு எந்த ஸ்மரணையும் இல்லை. இவர்களை அவர் அறிந்து கொள்ளவே இல்லை. யாரும் எதிர்பாராத அந்த நேரத்தில் விதுரர் முகத்திலிருந்து ஒரு ஒளி தருமரின் முகத்தில் ப்ரவேசித்தது. விதுரர் வாழ்வு முடிந்ததால் அனைவரும் வருத்தப் பட்டார்கள். அந்த சமயத்தில் வேத வ்யாஸர் அங்கு வந்தார். குருக்ஷேத்திரப் போரில் இறந்த தங்களின் புத்திரர்களைப் பார்க்க வேண்டும் என்று தாய்மார்கள் ஆசைப் பட்டனர். குந்தி கர்ணனையும், காந்தாரி துரியோதனையும், ஸுபத்திரை அபிமன்யுவையும் காண விழைந்தனர். வ்யாஸர் இவர்களைக் கண்டு மனமிரங்கி தேவியை தியானித்து, கங்கை கரையில் ஸ்நானம் செய்து மணித்வீப வாஸியான தேவியை தியானம் செய்தார். அன்னை கருணை புரிந்து கர்ணன், துரியோதனன், அபிமன்யு ஆகியோரைக் காட்டினாள். தாய்மார்கள் பார்த்து மகிழ்ந்தவுடன் அவர்கள் மறைந்து போனார்கள். அம்பாளின் அனுக்ரஹம் பெற்றவர்களுக்கு உலகில் எதுவுமே அசாத்யமில்லை.

5. வணிக் ஸுசீலஹ, கலு நஷ்டவித்தோ
வ்ரத்தம் சரன் ப்ராங், நவராத்ரமார்யஹ
த்வாம் தேவி! ஸம்பூஜ்ய, தரித்ரபாவான்
முக்த: க்ரமாத் வித்த, ஸம்ருத்திமாப

வணிக் ஸுஶீல꞉ க²லு நஷ்டவித்தோ வ்ரதம்ʼ சரன் ப்ராங்னவராத்ரமார்ய꞉ . 

த்வாம்ʼ தே³வி ஸம்பூஜ்ய த³ரித்³ரபா⁴வான்முக்த꞉ க்ரமாத்³வித்தஸம்ருʼத்³தி⁴மாப .. 35-5..

முன் ஒரு காலத்தில் கோசல தேசத்தில் சுசீலன் என்னும் ஒரு வைசியன், மிகவும் தரித்திரனாகவும், ஆனால் அனேக குழந்தைகள் உடையவனாகவும் இருந்தான். குழந்தைகள் பசியால் வாடினார்கள். மாலையில் யாரேனும் கொடுக்கும் அன்னத்தைச் சாப்பிட்டுக் காலத்தைக் கழித்தார்கள். இவன் தரித்திரன் தான். ஆனாலும் ஸத்யம் பேசுபவனாகவும், தர்மிஷ்டனாகவும், கோபம், பொறாமை, குரோதம் இல்லாதவனாகவும், தினமும் தேவ பித்ரு கடன்களை முடித்துப், பின் அதிதி பூஜை செய்து, அதன் பின் போஜனம் செய்யும் நியமம் தவறாதவனாக இருந்தான். ஒரு நாள் அவன் ஒரு பிராமணரைச் சந்தித்தான். அவரிடம் என் வறுமை நீங்கி குழந்தைகள் பசியாரவும், பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்துவைக்கவும் ஏதேனும் வழி சொல்ல வேண்டும் எனக் கேட்டான். பிராமணர் சொன்னார் “நீங்கள் கவலையை விடுங்கள். நவராத்ரி விரதம் அனுஷ்டித்து, தேவி பூஜையும், ஹோமமும், பிராமண போஜனமும், ஜபமும், உங்கள் சக்திக்கு ஏற்றவாறுச் செய்யுங்கள். நீங்கள் நினைப்பது நடக்கும். இதை விட சிறந்த விரதம் எதுவுமே இல்லை என்றார். அந்த வைசியன் அவரையேத் தன் குருவாக ஏற்று, நவராத்திரி விரதம் பூண்டு 9 வருஷம் “ஹ்ரீம்” என்னும் தேவியின் பீஜ மந்திரத்தை ஜபித்தான். தேவி பிரசன்னமானாள். அவனுக்கு வேண்டிய வரன்கள் தந்து, வறுமை அவனை நெருங்காத வண்ணம் அனுக்ரஹம் செய்தாள். தேவியின் கருணைக்கு இது ஒரு உதாரணம்.

6. தேவத்ருஹோ தேவி!, ரணே த்வயைவ
தைத்யா ஹதா கர்,ஹிததர்மசாஸ்த்ராஹா
ப்ரஹ்ளாதமுக்யான்,அஸுரான் ஸ்வ பக்தான்
தேவாம்ச்ச ஸ்ந்த்யக்த, ரணானகார்ஷீஹீ

தே³வத்³ருஹோ தே³வி ரணே த்வயைவ தை³த்யா ஹதா க³ர்ஹிதத⁴ர்மஶாஸ்த்ரா꞉ .
ப்ரஹ்லாத³முக்²யானஸுரான் ஸ்வப⁴க்தான் தே³வாம்ʼஶ்ச ஸந்த்யக்தரணானகார்ஷீ꞉ .. 35-6..

அஸுரர்கள் தேவர்களின் விரோதிகள். தர்ம சாஸ்திரங்களை ஆதரிக்க மாட்டார்கள். உதாரணம் சும்ப நிசும்பரகள். மஹிஷாஸுரன் போன்றவர்கள். இவர்களை அம்பாள் வதம் செய்தாள். ப்ரஹ்லாதனுக்கும் தேவர்களுக்கும் யுத்தம் நடந்தது. தேவர்கள் l தோற்றார்கள். தேவர்கள் அம்பாளை துதித்தார்கள். அம்பாள் ப்ரஹ்லாதன் முன் தோன்றினாள். தேவியைக் கண்டதும் அஸுரர்கள் பயந்தார்கள். சண்டமுண்டர்களையும், மதுகைடபர்களையும் கொன்றவள் அல்லவா? அதனால் ஓடிப்போனாலும் தேவி விடமாட்டாள். அவளை சரண் அடைவதே உகந்தது என்று அஸுரர்கள் தேவியைத் துதித்தனர். ப்ரஹ்லாதன் சொன்னான் “தாயே! நீ அனைவருக்கும் தாய். தேவர்களிடம் பிரியமிருந்தாலும், எங்களிடமும் பிரியம் வேண்டுமல்லவா? தேவர்கள் ஜயம் கிடைத்தால் தரும வார்த்தைகளைச் சுகமாகவும் சாமர்த்தியமாகவும் சொல்கிறார்கள். ஆனால் அபஜெயமானால் அதர்மத்தைச் செய்கிறார்கள். இது உண்மையோ பொய்யோ நீயே யோசித்துக்கொள், அஸுரர்களாகிய நாங்கள் இப்பொழுது உன்னைச் சரண் அடைந்தோம். எங்களைக் காப்பதும், கைவிடுவதும் உன் இஷ்டம்” என்றான். தேவி சொன்னாள் “அஸுரர்களே! லோப குணமுள்ளவர்களுக்கு மூன்று உலகிலும் சுகம் இல்லை. அதனால் நீங்கள் கோபத்தை விடுங்கள். சாந்த சித்தர்களுக்கு எவ்விடமும் சுகமே. அதனால் நீங்கள் பாதள லோகம் சென்று அங்கு சுகமாக இருங்கள் என்று அனுக்ரஹித்தாள். இரண்டு பக்தர்கள் பகைமையுடன் இருந்தாலும் அவர்களை அம்பாள் இணைப்பாள் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

7. புரந்தரே பாப, திரோஹிதே தத்
ஸ்தாநாதிரூடான்,ன ஹுஷாத் ஸ்மரார்த்தாது
பீதா சசீ த்வாம், பரிபூஜ்ய த்ருஷ்ட்வா
பதிம் க்ரமாத் பீதி,விமுக்திமாப

புரந்த³ரே பாபதிரோஹிதே தத்ஸ்தா²னாதி⁴ரூடா⁴ன்னஹுஷாத்ஸ்மரார்தாத் .
பீ⁴தா ஶசீ த்வாம்ʼ பரிபூஜ்ய த்³ருʼஷ்ட்வா பதிம்ʼ க்ரமாத்³பீ⁴திவிமுக்திமாப .. 35-7..

ஏகாந்தமாகத் தவம் செய்த த்ரிசிரஸை இந்திரன் வெட்டிக் கொன்றான். சத்ய சந்தனும் ஸாத்விகனுமான வ்ருத்தாஸுரனின் நண்பனாக நடித்து, அவனைச் சமயம் பார்த்துக் கொன்றான். இந்த மஹா பாபங்களின் பலனாக இந்திரன் யாருக்கும் தெரியாமல் ஓடி பதுங்கி வாழ்ந்தான். இந்திரனின் இடத்தை நகுஷன் பிடித்துக் கொண்டான். அவன் இந்திராணியிடம் காம வேட்கையுடன் அணுக, அவள் பயந்துத் தன்னைக் காத்துக் கொள்ள குருவைச் சரண் அடைந்தாள். குரு கூறியபடி தேவியை பூஜை செய்தாள். நேரில் அம்பாளைக் கண்டாள். தேவி அனுக்ரஹத்தால் இந்திரனையும் கண்டுபிடித்தாள், நகுஷனிடம் இருந்த பயமும் போனது.

8. சப்தோ வஸிஷ்டேன, நிமிர் விதேஹோ
பூத்வாபி தேவி! த்வதனுக்ரஹேண
ஞானம் பரம் ப்ராப;, நிமே; ப்ரயோகாது
நிமேஷிணோ ஜீவ,கணா பவந்தி

ஶப்தோ வஸிஷ்டே²ன நிமிர்விதே³ஹோ பூ⁴த்வா(அ)பி தே³வி த்வத³னுக்³ரஹேண . 

ஜ்ஞானம்ʼ பரம்ʼ ப்ராப நிமே꞉ ப்ரயோகா³ன்னிமேஷிணோ ஜீவக³ணா ப⁴வந்தி .. 35-8..இஷ்வாகு குலத்தில் நிமி என்னும் ஒரு அரசன் பிரஜைகளை நல்ல முறையில் ரக்ஷித்தும், பிராமணர்களை போஷித்தும் வந்தான். யாகத்தால் தேவியை பூஜிக்க ஆசை கொண்டு வஸிஷ்டர், ப்ருகு, வாமதேவர், புலகர் போன்ற பல முனிவர்களையும் வரவழைத்துத் தன் குருவான வஸிஷ்டரிடம் யாகத்தை நடத்தித் தரும் படி வேண்டினான். ஆனால் வஸிஷ்டரோ தேவேந்திரன் செய்யும் யாகத்திற்குத் தான் போக ஒத்துக் கொண்டதால் அதை முடித்த பின் வருவதாகக் கூறினார். என் குல குருவான நீர் இப்படிச் சொல்வது சரியல்ல என்று சொல்லியும், திரவிய ஆசையால் வஸிஷ்டர் இந்திரனிடம் சென்று விட்டார். அரசனும் மன வருத்ததுடன் கௌதம முனிவரை அணுகி, அவர்மூலம் யாகம் செய்தான். வஸிஷ்டர் திரும்பி வந்தார். தூங்கிக் கொண்டிருந்த அரசன் சேவர்கள் சொல்லியும், உடனே வராததால் கோபம் கொண்ட வஸிஷ்டர் “அவன் தேகமில்லாமல் போகட்டும். அவன் சரீரமும் இப்பொழுதே விழட்டும்” என்று சாபம் தந்தார். சேவகர்கள் முனிவரின் சாபத்தைத் தெரிவிக்க, அரசனும் விரைந்து வந்து, “குற்றமற்ற என்னைச் சபித்த உம்தேகமும் விழட்டும்” என சாபம் தந்தான். வஸிஷ்டர் ப்ரம்மனிடம் பிரார்த்தித்து மித்ராவருணரின் தேஜஸில் கலந்தார். மித்ராவருணர் ஊர்வசியிடம் காமம் கொண்டு அவர் வீரியம் ஒரு கும்பத்தில் விழ, அதனின்றும் அகஸ்த்தியர் முன்னும், வஸிஷ்டர் பின்னுமாக வெளிவந்தனர். அதனால் வஸிஷ்டருக்கு மித்ராவருணி என்ற பெயர் வந்தது

யாகத்தை முடிக்க எண்ணி நிமியின் உடலை முனிவர்கள் மந்திரத்தால் காத்து, யாகத்தை முடித்தனர். தேவர்கள் தோன்றி தேவ தேகம் வேண்டுமா? மனித தேகம் வேண்டுமா? என்று கேட்க, நிமி எனக்கு அழியும் உடலில் ஆசை இல்லை. அதனால் சர்வ ஜீவன்களின் கண்களிலும் காற்று ரூபமாக நான் வசிக்க வேண்டும் என்றான். தேவர்கள் தேவியை பிரார்த்திக்கும்படிச் சொன்னார்கள். அரசன் தேவியைத் துதித்தான். தேவி பிரசன்னமானாள். தேவர்களைத் தவிர மற்ற அனைத்து ஜீவர்களிடமும் இமை கொட்டும் ரூபத்தில் வசிக்க அருள் செய்தாள். அரசனுக்குப் புத்திரன் வேண்டும் என்று முனிவர்கள் அரசனின் உடலை சமஸ்காரம் செய்தும் முன், அவரின் உடலை அரணிக் கட்டையால் கடைய, நிமிச்சக்ரவர்த்தி போன்று ஒரு மகன் தோன்றினான். அரணிக் கட்டையால் பிறந்ததால் அவன் மிதி என்றும், ஜனகன் என்றும் பெயர் கொண்டான். நிமிச் சக்ரவர்த்திக்குத் தேகம் இல்லாமல் போனதால் அவர் வம்சத்தினர் விதேகர்கள் என்று அழைக்கப் பட்டனர். மிதி கங்கைகரையில் அழகிய மிதிலை நகரை நிர்மாணித்து ஆண்டுவந்தான். அவர் வம்ஸத்தில் பிறப்பவர் ஜனகனென்றும் விதேகர் என்றும் அழைக்கப் பட்டார்கள்.

9. ஹா! பார்க்கவா லோப, விகோப சித்தைஹீ
ப்ரபீடிதா ஹை,ஹய வம்ச ஜாதைஹீ
ஹிமாத்ரி மாப்தா, பவதீம் ப்ரபூஜ்ய
ப்ரஸாத்ய பீதே:, கலு முக்திமாபுஹு

ஹா பா⁴ர்க³வா லோப⁴விகோபசித்தை꞉ ப்ரபீடி³தா ஹைஹயவம்ʼஶஜாதை꞉ . 

ஹிமாத்³ரிமாப்தா ப⁴வதீம்ʼ ப்ரபூஜ்ய ப்ரஸாத்³ய பீ⁴தே꞉ க²லு முக்திமாபு꞉ .. 35-9..

ஹைஹய வம்சத்து ராஜாவான கார்த்தவீரியன் பல யக்ஜம் நடத்தினான். பிராமணர்களுக்கு நிறைய தட்சிணைகள் கொடுத்தான். அவருக்குப் பின் வந்த ஹைஹயர்கள் தரித்திரர்கள் ஆனார்கள். அவர்கள் பிராமணர்களிடம் யாசித்தார்கள். அவர்கள் தரவில்லை அதனால் அவர்களின் செல்வத்தைக் கொள்ளை அடித்தார்கள். அவர்கள் அனைவரையும் துன்புறுத்தினார்கள். பயந்து ஒடிய அந்தணர்கள் இமாலயம் சென்று தேவியை ஸ்தோத்திரம் செய்தார்கள். அம்பாள் காட்சி தந்து “தொடையில் கர்பம் தரித்த பெண் ஒருவள் உங்களுடன் இருக்கிறாள். அவளால் நீங்கள் காப்பாற்றப் படுவீர்கள்” என்று சொல்லி மறைந்தாள். தேவியின் அனுக்ரஹத்தால் தொடையில் கர்பம் தரித்த பெண்ணை ஹைஹயர்கள் அடித்துத் துன்புறுத்த வரும் பொழுது தாயின் அழுகுரல் கேட்டு தொடையிலிருந்து வேகமாய் வெளியே வந்தது ஒரு குழந்தை. ஔருவர் என்னும் முனிவரே இந்தக் குழந்தை. அந்தக் குழந்தையின் தேஜஸால் ஹைஹயர்களின் கண் குருடானது. அவர்கள் அழுது புலம்பி அந்தத் தாயிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அன்னையின் அருளால் கண்பார்வை மீண்டும் கிடைத்தது ஹைஹயமார்கள் காப்பாற்றப்பட்டார்கள்.

10. தஸ்ரௌ யுவானாம், ச்யவனம் பதிம் ச
ஸமானரூபான் அபித்ருச்ய முக்தா
ஸதீ ஸுகன்யா, தவ ஸம் ஸ்ம்ருதாயா
பக்த்யா ப்ரஸாதாத், ஸ்வபதிம் வ்யஜானாது

த³ஸ்ரௌ யுவானாம்ʼ ச்யவனம்ʼ பதிம்ʼ ச ஸமானரூபானபி⁴த்³ருʼஶ்ய முக்³தா⁴ .
ஸதீ ஸுகன்யா தவ ஸம்ʼஸ்ம்ருʼதாயா ப⁴க்த்யா ப்ரஸாதா³த்ஸ்வபதிம்ʼ வ்யாஜானாத் .. 35-10..

சர்யாதி என்னும் ஒரு அரசனுக்குச் சுகன்யை என்னும் ஒரு அழகான மகள் இருந்தாள். அவளை சவனன் என்னும் ஒரு குருடனான முனிவருக்குக் கல்யாணம் செய்து கொடுத்தான். ஏன் அழகான பெண்ணைக் குருடனுக்குக் கொடுத்தார்? ஒரு நாள் சர்யாதி தன் மனைவி மகளுடன் ஒரு தாமரைத் தடாகத்திற்கு வந்தார். அவர் தன் மனைவியுடன் தடாகத்தில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, அவர் மகளான சுகன்யை புற்றுருவமாக இருந்த பார்கவ முனிவரை அறியாமல் அதன் அருகில் சென்றாள். புற்றிலிருந்து மின்மினிப் பூச்சி போன்ற ஒளி வருவதைக் கண்டு அது என்ன என்று பார்க்க ஆவல் கொண்டு ஒரு முள் குச்சியால் அதைக் குத்தவந்தாள். வராதே! வராதே! என்று மஹரிஷி சொன்னார். ஆனால் அவள் அதைக் காதில் வாங்கவில்லை. அதைக் குச்சியால் குத்தினாள். அது முனிவரின் கண்ணைக் குத்த, பின் அது ஒரு முனிவர் என அறிந்து வருந்தினாள். முனிவர் மிகவும் துன்பமடைந்து, கண்நோயினால் அவதிப்பட்டு, மிகவும் கஷ்டத்தை அனுபவித்தார். அந்த நேரம் முதல் எல்லா ஜனங்களுக்கும் அரசன் உள்பட, மலஜலங்கள் போவது நின்று போனது. ஏதோ பெரியவருக்குத் தவறு நடந்திருக்கிறது என்று அறிந்து கொண்டார். தடாகத்தின் அருகில் புற்று ரூபமாக இருந்த வயோதிக முனிவருக்கு யாரோ தீங்கு செய்திருக்கிறார்கள். அதனால் தான் இப்படி ஆனது என்று தெரிந்தது. அப்பொழுது சுகன்யை தான் தெரியாமல் செய்த தவற்றைச் சொன்னாள். உடனே அரசன் முனிவரிடம் சென்று மன்னிப்புக் கேட்டான். முனிவர் சொன்னார் “நான் உன் மகளை சபிக்கவில்லை. ஆனால் நான் தேவி பக்தன். அதனால் தான் உங்களுக்குத் துன்பம் வந்தது. கண் இல்லாமல் நான் எப்படித் தவம் செய்வேன்? எனக்கு அனுகூலம் செய்ய நினைத்தால் உன் பெண்ணை எனக்குத் தருவாயா? எனக் கேட்டார்.

அரசன் மனக் கலக்கம் கொண்டு வருந்தும் போது, சுகன்யை அவரை மணக்க சம்மதம் தந்தாள். வயோதிகனான குருட்டுக் கிழவனுக்கு எப்படித் தரமுடியும் ? உனக்கு என்ன சுகம் கிடைக்கும் என்றார்? என் மனம் அற்ப சுக விஷயங்களில் அலையாது. நான் என் கற்பைக் காப்பாற்றிக் கொள்வேன் என்றாள். அரசனும் சுகன்யயை முனிவருக்குத் தத்தம் செய்து கொடுத்தான். சுகன்யை முனிவருக்குச் சகல பணிவிடையும் செய்து வந்தாள். ஒரு நாள் அஸ்வினீ குமாரர்கள் ஆஸ்ரமத்தின் அருகில் வந்து, நீராடி வரும் சுகன்யயைக் கண்டு மோகித்தனர். மோகினியே! கிழவனை மணந்து என்ன சுகம் காண்பாய்? எங்களில் ஒருவரை பர்த்தா ஆக்கிக்கொள் என்றனர். நான் என் கணவரிடத்தில் பக்தி கொண்டவள். இங்கிருந்து ஓடி விடுங்கள். இல்லை யென்றால் சாபம் தருவேன் என்றாள் சுகன்யை. அஸ்வினீ குமாரர்கள் சொன்னார்கள் நாங்கள் தேவ வைத்யர்கள். உன் கணவருக்குக் கண் கொடுத்து, அழகான யௌவனனாக மாற்றி நாங்கள் மூவரும் சேர்ந்து உன் முன் வருகிறோம். எங்களில் ஒருவரை நீ வரித்துக் கொள்வாய் என்று சொன்னார்கள். சுகன்யை அனைத்தையும் தன் கணவரிடம் சொல்லி அவர் சொன்னபடி சம்மதமும் தந்தாள். மூவரும் ஒரு தீர்த்தத்தில் நீராடி எழுந்தனர். என்ன ஆச்சர்யம்? மூவரும் ஒன்று போல் சுந்தர ரூப யௌவனர்களாக இருந்தனர். சுகன்யை ஏமாற்றி விட்டார்களே! எப்படித் தன் கணவரை அடையாளம் காண்பது எனக் கலங்கினாள். உடனே அந்த பரதேவதையான அன்னையை த்யானித்து, அவளின் அனுக்ரஹத்தால் தன் கணவனை அடையாளம் கண்டு, அவருக்கே மாலையிட்டாள். அஸ்வினீ தேவர்கள் அவர்களை ஆசீர்வதித்தனர்.

11. ஸத்யவ்ரதோ விப்,ரவதும் ப்ரஸஹ்ய
ஹர்த்தா நிரஸ்தோ, ஜனகேன ராஜ்யாது
வஸிஷ்ட சப்தோபி, தவ ப்ரஸாதாது
ராஜ்யேபிஷிக்தோத, திவம் கதச்ச

ஸத்யவ்ரதோ விப்ரவதூ⁴ம்ʼ ப்ரஸஹ்ய ஹர்தா நிரஸ்தோ ஜனகேன ராஜ்யாத் .
வஸிஷ்ட²ஶப்தோ(அ)பி தவ ப்ரஸாதா³த்³ராஜ்யே(அ)பி⁴ஷிக்தோ(அ)த² தி³வம்ʼ க³தஶ்ச .. 35-11..

அருணன் என்னும் சூர்ய வம்சத்து ராஜாவிற்கு ஸத்யவிரதன் என்னும் ஒரு மகன். அவன் காமுகன். மந்த புத்தியும் சஞ்சல மனதும் கொண்டவன். காமத்தால் அவன் ஒரு அந்தணனின் மனைவியை அபஹரித்துச் சென்றான். தந்தை அவனை ராஜ்யத்திலிருந்து விரட்ட, அவன் காட்டில் வாழ்ந்து வந்தான். தன் குல குருவான வஸிஷ்டர் தன் பிதாவின் கோபத்தைத் தடுக்காமல் இருந்து விட்டாரே என்று காரணமின்றி அவரிடம் கோபம் கொண்டான். ஒரு சமயம் காட்டில் விஸ்வாமித்ரரின் மனைவியும் குழந்தைகளும் பசியால் வாடி, வேறு வழியில்லாமல் ஒரு குழந்தயை விற்று மற்ற குழந்தைகளின் பசியைப் போக்க நினைத்தபொழுது, ஸத்யவிரதன் அவர்களைச் சந்தித்தான். அவர்களின் நிலைகண்டு மனம் இரங்கி, அவர்களைத் தான் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்தான். அதன்படி செய்தும் வந்தான். காய்களையும், பழங்களையும் மற்றும் மிருகங்களை அடித்துக் கொன்றும், ஆகாரமாக கொடுத்து வந்தான். ஒருநாள் ஏதும் கிடைக்காமல் அலைந்து கொண்டு வரும் பொழுது, வஸிஷ்டர் ஆஸ்ரமத்தையும் அங்குக் கட்டியிருக்கும் பசுவையும் பார்த்தான். அவனுடைய பழைய கோபம் தலை தூக்கியது. அந்தப் பசுவைக் கொண்டு போய் அடித்து, அதன் மாமிசத்தை விஸ்வாமித்திரர் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் தந்து, தானும் உண்டான்.

ரிஷி பத்னி அதை கோ மாமிசம் என்பதை அறியவில்லை. இதை அறிந்த விஸ்வாமித்திரர் “மூடனே! பிராமணப் பெண்ணை அபகரித்தது, தந்தையின் கோபத்திற்கு ஆளானது, பசுவைத் திருடிக் கொன்றது ஆகிய இந்த பாபங்களால் நீ திரிசங்கு என்ற பெயரில் மூன்று கொம்புகளுடன் பிசாசு ரூபமாய் அலையக் கடவாய்” என்று சாபம் தந்தார். பிசாசு ரூபம் கொண்ட அவன் அந்த ஆஸ்ரமத்தில் இருந்து கொண்டு, பூர்வஜன்ம புண்யத்தால் முனிகுமாரனிடமிருந்து நவாக்ஷரி மந்திரத்தை அறிந்து கொண்டான். அந்த பகவதியை தியானித்துத் தவமும் செய்தான். ஸத்யவிரதன் இந்த கஷ்டத்திலிருந்து விடுபட ஒரு ஹோமம் செய்ய நினைத்தான். பிராமணர்கள் பிசாசு ரூபத்தில் ஹோமம் செய்ய முடியாது என மறுத்தனர். அதனால் மனம் வருந்தி சண்டிதேவியை மனதில் நிருத்தி, அக்னியில் புக முயன்ற போது, தேவீ காட்சி தந்தாள். “உனக்கு ராஜ்யம் மீண்டும் கிடைக்கும்” என்று அருள் செய்தாள். அதன் படி அவன் தந்தையும் அவனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்து, வனத்திற்குத் தவம் செய்யச் சென்றார். தேவியின் அருளால் சுந்தரரூபனாக ஆனான். ஹரிச்சந்திரன் என்னும் மகனும் அவனுக்குப் பிறந்தான். ஒரு நாள் வஸிஷ்டரிடம் தான், உடலுடன் தேவலோகம் போக யாகம் செய்ய விரும்புவதாகச் சொன்னான். அவர் மனித உடலுடன் அங்கு போகமுடியாது. புண்ய கர்மாவினால் இறந்த பிறகே ஸ்வர்க்கம் போக முடியும் என்றார். கோபம் கொண்டு வேறு ஒருவரால் யாகம் செய்து கொள்கிறேன் என்றான் ஸத்யவிரதன். கோபத்துடன் வஸிஷ்டர் “நீ சண்டாளனாவாய்” என்று சபித்தார். ஸத்யவிரதன் சண்டாளனின் சரீரம் அடைந்தான். ஒரு நாள் விஸ்வாமித்திரர் வருவதைப் பார்த்தான். நடந்ததை சொன்னான். என் துக்கத்தைத் தீர்க்க வேண்டும் என்றும் சொல்லி அவர் பாதத்தில் விழுந்தான். தான் தவம் செய்யச் சென்ற பொழுதுத் தன் குடும்பத்தை ஸத்யவிரதன் காப்பாற்றியதால், விஸ்வாமித்திரர் இதற்காக ஒரு யாகம் செய்ய நினைத்தும், புரோகிதர்களை வஸிஷ்டர் தடுத்ததால் யாகம் செய்ய முடியவில்லை. அதனால் கையில் ஜலம் எடுத்து, காயத்ரியை ஜபித்து அவனுக்குத் தன் புண்ணியமெல்லாம் தானம் செய்தார்.

திரிசங்கு ஒரு பக்ஷி போல் பறந்து போனான். சொர்க்கம் போன அவனை உனக்கு இங்கு வர அருகதையில்லை திரும்பிப் போ என்று இந்திரன் விரட்டினான். திரிசங்கு விஸ்வாமித்திரரே! என்னைக் காப்பாற்றுங்கள் என்று கதறியபடியே கீழே விழுந்தான். குரல் கேட்ட முனிவர் தன் தவ வலிமையால் அவனை அங்கேயே அந்தரத்தில் நிறுத்தினார். அவனுக்காக ஒரு அங்கு ஒரு சொர்க்கலோகம் அமைக்க யாகம் செய்ய ஆரம்பித்தார். இந்திரன் உடனே பயந்து ஓடிவந்தான். முனிவரிடம் நான் என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் என்று கேட்டான். திரிசங்கு மஹாராஜனைச் சொர்க்கம் அழைத்துச் செல்லும் படிச் சொன்னார். முனிவரின் பலம், பிடிவாதம் அறிந்து, திரிசங்குவிற்கு திவ்ய தேகம் தந்து, விமானத்தில் இந்திரன் ஸ்வர்க்கம் அழைத்துச் சென்றான்.

12. ஹா! ஹா! ஹரிச்சந்த்ர,ந்ருபோ விபத்ஸு
மக்ன: சதாக்ஷீம், பரதேவதாம் த்வாம்
ஸம்ஸ்ம்ருத்ய ஸதய: ஸ்வவி பந்நிவ்ருத்தஹ
காருண் யதஸ்தே, ஸுரலோக மாப

ஹா ஹா ஹரிஶ்சந்த்³ரந்ருʼபோ விபத்ஸு மக்³ன꞉ ஶதாக்ஷீம்ʼ பரதே³வதாம்ʼ த்வாம் .
ஸம்ʼஸ்ம்ருʼத்ய ஸத்³ய꞉ ஸ்வவிபந்நிவ்ருʼத்த꞉ காருண்யதஸ்தே ஸுரலோகமாப .. 35-12..

ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். அயோத்தியில் ராஜசூய யாகம் செய்து பிரசித்தி பெற்ற சக்ரவர்த்தி ஆனான். அஹங்காரம் வந்தது. தேவியை மறந்தான். கஷ்டங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வர ஆரம்பித்தது. ஒரு நதிக்கரையில் விஸ்வாமித்திரர் ஒரு கிழ பிராமணர் வேடத்தில் வந்து, ஹரிச்சந்திரனை ஏமாற்றி அவன் ராஜ்யம் முழுவதையும் தானமாகப் பெற்று, தக்ஷணையாக இரண்டரை பாரம் பொன்னும் கேட்டார். தக்ஷணையைக் கொடுக்க முடியாமல் மனைவியையும் மகனையும் விற்றான். சுடு காட்டில் காவல் காரனாக இருந்தான். தன் மனைவியையும் வெட்டிக் கொல்லும் நிலைக்கு வந்தான். அந்த பரதேவதையான சதாக்ஷரியை மனதில் நினைத்தான். தேவி அவர்களின் கஷ்டத்தை எல்லாம் நீக்கினாள். பாம்பு கடித்து இறந்த மகன் லோகிதாசன், அன்னையின் அருளால் மீண்டும் உயிர் பெற்றான். அவனிடம் ராஜ்யத்தை ஒப்புவித்தான். இந்திரன் பூமிக்கு வந்து விமானத்தில் அவர்களை ஸ்வர்க்கம் அழைத்துச் சென்றான். அம்பாளை நினைத்தால் நன்மைவரும். மறந்தால் துன்பம்தான் வரும். பக்தி என்னும் பிரகாஸம் மனதில் இல்லை என்றால் வாழ்வே இருள் மயம் தான்.

13. அகஸ்த்ய பூஜாம், பரிக்ருஹ்ய தேவி!
விபாஸி விந்த்யாத்ரி, நிவாஸி நீ த்வம்
த்ரக்ஷ் யே கதா த்வாம், மம தேஹி பக்திம்,
காருண்ய மூர்த்தே, ஸததம் நமஸ்தே

அக³ஸ்த்யபூஜாம்ʼ பரிக்³ருʼஹ்ய தே³வி விபா⁴ஸி விந்த்⁴யாத்³ரிநிவாஸினீ த்வம் . 

த்³ரக்ஷ்யே கதா³ த்வாம்ʼ மம தே³ஹி ப⁴க்திம்ʼ காருண்யமூர்த்தே ஸததம்ʼ நமஸ்தே .. 35-13..க்தர்களுக்கு எப்படியெல்லாம் அனுக்ரஹம் செய்தாள் என்பதற்குச் சில உதாரணங்கள் சொல்லப் பட்டது. கஷ்டங்களும், துன்பங்களும் நீங்க ஒரே வழி அன்னையின் அனுக்ரகமே! தேவியை யாரும், எங்கும் எப்படியும் அழைக்கலாம். பக்தன் அழைத்தால் அம்பாள் ஓடி வருவாள். இந்த கருணையால் தான் பிரம்மாவின் மானஸ புத்திரன் ஸ்வாயம்புவன் பாற்கடல் தீரம் சென்று “ஐம்” என்னும் வாக்பீஜ மந்திரம் ஜபித்து தேவியை உபாஸித்த பொழுது, அன்னை “சத்ரு, இல்லாத ராஜ்யமும், புத்திர பாக்யமும், அம்பாளிடம் திட பக்தியும், இறுதிக் காலத்தில் மோக்ஷமும் அடைவாய்” என்று அருள் செய்து, விந்தியா பர்வதம் சென்றாள். ஒரு சமயம் நாரத மஹரிஷி விந்திய மலைக்குச் சென்றார். விந்தியன் அர்க்கிய, பாத்திய, ஆஸனாதிகள் கொடுத்து, முனிவரே! தங்கள் வருகைக்கு காரணம் என்ன? ஏதும் சங்கதி இருந்தால் சொல்லுங்கள் என்றான். நாரதர் சொன்னார் ” நான் மேரு மலையிலிருந்து வருகிறேன். பார்வதிக்குத் தந்தையும், சிவனுக்கு மாமனாருமான மேருவை அனைவரும் பூஜிப்பதால் அவன் கர்வமடைந்திருக்கிறான். மேருவின் இறுமாப்பை நான் என்னவென்று சொல்வது? கைலாயத்தில் சிவன் இருப்பதால் அதுவும் அனைவராலும் வணங்கப் படுகிறது. அதனால் தன்னைவிடச் சிறந்தவர்கள் யாரும் இல்லை என நினைக்கும் அவர்களை எண்ணி பெருமூச்சு விட்டேன், என்று சொல்லி நீ ஏதும் செய்தி உண்டா என்று கேட்டதால் இதைச் சொன்னேன் என்று சொல்லிவிட்டு பிரம்மலோகம் சென்றார்.

விந்தியன் யோசித்து, மற்ற மலைகளின் கர்வத்தை அடக்கித் தன் உயர்வைக் காட்ட, கணக்கில்லாமல் உயர்ந்து, சூரியன் மேருவை வலம் வருவதைத் தடுத்தான். தேவர்கள் ருத்ர மூர்த்தியிடம் செல்ல, அவருடன் விஷ்ணுவிடம் சென்றார்கள். விஷ்ணுவின் அறிவுரைப்படி தேவர்கள் காசியிலிருக்கும் அகஸ்த்தியரை வேண்ட, அகஸ்த்யமுனிவர் காசியிலிருந்து விந்தியமலை சமீபம் வந்தார். அகஸ்தியரைக் கண்ட விந்தியன் தலை தாழ்த்தி வணங்கினான். அகஸ்தியர் சொன்னார்” நான் தென் திசைப் போகவேண்டும். நீ இப்படி உயர்ந்து நின்றால் நான் எப்படிப் போக முடியும்? அதனால் நான் திரும்பி வரும் வரை நீ இப்பொழுது இருப்பது போலவே இருக்க வேண்டும் என்று சொல்லி அதன் மீது ஏறிச் சென்று அங்கேயே வசித்தார். இன்றும் அகஸ்த்யனின் நித்ய பூஜையை ஏற்றுக் கொண்டு விந்தியாசல வாஸினியாக அம்பாள் இருக்கிறாள் என்று சொல்லப் படுகிறது. நிரந்தரமாக பக்தர்களை அனுக்ரஹிக்கும் அம்பாளைத் தானும் காண வேண்டும் என்று விரும்பி, தனக்கு பக்தி வளரவேண்டும் என வேண்டி இந்த தசகத்தை முடிக்கிறார்.

முப்பத்தி ஐந்தாம் தசகம் முடிந்தது

30 த்ரிம்ʼஶத³ஶக꞉ - ஶ்ரீபார்வத்யவதாரDEVINARAYANEEYAM DASAKAM30 TAMIZH ST0RY@5G꞉82-97 sr

https://youtu.be/JLhgYVLiwx8
30 த்ரிம்ʼஶத³ஶக꞉  -    ஶ்ரீபார்வத்யவதார꞉
ஸமாதி⁴மக்³னே கி³ரிஶே விரிஞ்சாத்தப꞉ப்ரஸன்னாத்கில தாரகாக்²ய꞉ .
தை³த்யோ வரம்ʼ ப்ராப்ய விஜித்ய தே³வான் ஸபா³ந்த⁴வ꞉ ஸ்வர்க³ஸுகா²ன்யபு⁴ங்க்த 1 ..

வரை꞉ ஸ ப⁴ர்கௌ³ரஸபுத்ரமாத்ரவத்⁴யத்வமாப்தோ(அ)ஸ்ய ச பத்ன்யபா⁴வாத் .
ஸர்வாதி⁴பத்யம்ʼ ஸ்வப³லம்ʼ ச மோஹான்மத்தோ ப்⁴ருʼஶம்ʼ ஶாஶ்வதமேவ மேனே .. 30-2..

நஷ்டாகி²லா꞉ ஶ்ரீஹரயே ஸுராஸ்தே நிவேத³யாமாஸுரஶேஷது³꞉க²ம் .
ஸ சாஹ தே³வா அனயேன நூனமுபேக்ஷதே நோ ஜனனீ க்ருʼபார்த்³ரா .. 30-3..

தத்³விஸ்ம்ருʼதேர்ஜாதமித³ம்ʼ கரேண யஷ்ட்யா ச யா தாட³யதி ஸ்வபுத்ரம் .
தாமேவ பா³ல꞉ ஸ நிஜேஷ்டதா³த்ரீம்ʼ ஸாஸ்ரம்ʼ ருத³ன்மாதரமப்⁴யுபைதி .. 30-4..

மாதா ஹி ந꞉ ஶக்திரிமாம்ʼ ப்ரஸன்னாம்ʼ குர்யாம ப⁴க்த்யா தபஸா ச ஶீக்⁴ரம் .
ஸர்வாபத³꞉ ஸைவ ஹரிஷ்யதீதி ஶ்ருத்வாமராஸ்த்வாம்ʼ நுனுவுர்மஹேஶி .. 30-5..

நிஶம்ய தேஷாம்ʼ ஶ்ருதிவாக்யக³ர்ப⁴ஸ்துதிம்ʼ ப்ரஸன்னா விபு³தா⁴ம்ʼஸ்த்வமாத்த² .
அலம்ʼ விஷாதே³ன ஸுரா꞉ ஸமஸ்தம்ʼ ஜானே ஹரிஷ்யாமி ப⁴யம்ʼ த்³ருதம்ʼ வ꞉ .. 30-6..

ஹிமாத்³ரிபுத்ரீ விபு³தா⁴ஸ்தத³ர்த²ம்ʼ ஜாயேத கௌ³ரீ மம ஶக்திரேகா .
ஸா ச ப்ரதே³யா வ்ருʼஷப⁴த்⁴வஜாய தயோ꞉ ஸுதஸ்தம்ʼ தி³திஜம்ʼ ச ஹன்யாத் .. 30-7..

இத்த²ம்ʼ நிஶம்யாஸ்தப⁴யேஷு தே³வேஷ்வப்⁴யர்தி²தா தே³வி ஹிமாசலேன .
த்வம்ʼ வர்ணயந்தீ நிஜதத்த்வமேப்⁴ய꞉ ப்ரத³ர்ஶயாமாஸித² விஶ்வரூபம் .. 30-8..

ஸஹஸ்ரஶீர்ஷம்ʼ ச ஸஹஸ்ரவக்த்ரம்ʼ ஸஹஸ்ரகர்ணம்ʼ ச ஸஹஸ்ரநேத்ரம் .
ஸஹஸ்ரஹஸ்தம்ʼ ச ஸஹஸ்ரபாத³மனேகவித்³யுத்ப்ரப⁴முஜ்ஜ்வலம்ʼ ச .. 30-9..

த்³ருʼஷ்ட்வேத³மீஶ்வர்யகி²லைர்பி⁴யோக்தா த்வம்ʼ சோபஸம்ʼஹ்ருʼத்ய விராட்ஸ்வரூபம் .
க்ருʼபாவதீ ஸ்மேரமுகீ² புனஶ்ச நிவ்ருʼத்திமார்க³ம்ʼ கி³ரயே ந்யகா³தீ³꞉ .. 30-10..

உக்த்வா(அ)கி²லம்ʼ ஸம்ʼஸ்ருʼதிமுக்திமார்க³ம்ʼ ஸுரேஷு பஶ்யத்ஸு திரோத³தா⁴த² .
ஶ்ருத்வா(அ)த்³ரிமுக்²யாஸ்தவ கீ³தமுச்சைர்தே³வா ஜபத்⁴யானபரா ப³பூ⁴வு꞉ .. 30-11..

அதை²கதா³ ப்ராது³ரபூ⁴த்³தி⁴மாத்³ரௌ ஶாக்தம்ʼ மஹோ த³க்ஷக்³ருʼஹே யதா² ப்ராக் .
க்ரமேண தத்³தே³வி ப³பூ⁴வ கன்யா ஸா பார்வதீதி ப்ரதி²தா ஜக³த்ஸு .. 30-12..

ஹிமாத்³ரிணைஷா ச ஹராய த³த்தா தயோ꞉ ஸுத꞉ ஸ்கந்த³ இதி ப்ரஸித்³த⁴꞉ .
ஸ தாரகாக்²யம்ʼ தி³திஜம்ʼ நிஹத்ய ரரக்ஷ லோகாநகி²லான் மஹேஶி .. 30-13..

து³ர்வாஸஸ꞉ ஶாபப³லேன ஶக்ரோ நஷ்டாகி²லஶ்ரீர்வசனேன விஷ்ணோ꞉ .
க்ஷீரோத³தி⁴ம்ʼ ஸாஸுரதே³வஸங்கோ⁴ மமந்த² தஸ்மாது³த³பூ⁴ச்ச லக்ஷ்மீ꞉ .. 30-14..

யா பூஜிதேந்த்³ரேண ரமா தவைகா ஶக்தி꞉ ஸ்வரைஶ்வர்யபுன꞉ப்ரதா³னாத் .
ஶாபான்முனேர்தே³வக³ணான்விமோச்ய கடாக்ஷதஸ்தே ஹரிமாப பூ⁴ய꞉ .. 30-15..

த்வம்ʼ ஸர்வஶக்திர்ன ஜிதா(அ)ஸி கேனாப்யன்யான் ஜயஸ்யேவ ஸதா³ ஶரண்யா .
மாதேவ பத்னீவ ஸுதேவ வா த்வம்ʼ விபா⁴ஸி ப⁴க்தஸ்ய நமோ நமஸ்தே .. 30-16..

தசகம் 30

ஸ்ரீ பார்வதி அவதாரம்

1. ஸமாதிமக்னே, கிரிசே விரிஞ்சாது
தப: ப்ரஸ்ஸன்னாத், கில தாரகாக்யஹ
தைத்யோவரம் ப்ராப்ய, விஜித்ய தேவானு
ஸபாந்தவ: ஸ்வர்க்க,ஸுகான்ய பும்க்த

ஸதியைப் பிரிந்த சிவன் ஆழ்ந்த த்யானத்தில் ஆழ்ந்தார். அவருக்கு உலகத்தின் சிந்தனையே இல்லை. இந்த நேரத்தில் தாரகன் என்னும் ஒரு கொடிய அஸுரன் ப்ரம்மாவைக் குறித்துத் தவம் செய்து, வரத்தைப் பெற்று, ஸ்வர்கலோகத்தையும் ஆக்ரமித்து தேவர்களை அங்கிருந்து ஓடச் செய்தான். அஸுர பந்துக்களுடன் ஸ்வர்கலோகம் வந்து அங்கேயே சுகமாக வாழத் தொடங்கினான்.

2. வரை: ஸ பர்கௌரஸபுத்ரமாத்ர
வத்யத்வம் ஆப்தோSஸ்ய, ச பத்ன்யபாவாது
ஸர்வாதிபத்யம், ஸ்வபலம் ச மோஹானு –
மத்தோ ப்ருசம் சாச்,வதமேவ மேனே

“சிவனது புத்திரனால் மட்டுமே தனக்கு மரணம் ஏற்படவேண்டும்” என்று தாரகாஸுரன் ப்ரம்மனிடம் வரம் பெற்றான். ஸதியைப் பிரிந்து துக்கத்தில் இருக்கும் சிவன் வேறு கல்யாணம் செய் கொள்ள மாட்டார், அதனால் சிவனுக்குப் புத்திரன் பிறக்க மாட்டான். தன்னைக் கொல்ல யாராலும் முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடன், தன் சுகபோகமும் ஸ்வர்க்கலோகவாசமும் சாஸ்வதம் என்று நினைத்தான்.

3. நஷ்ட்டாகிலா: ஸ்ரீ, ஹரயே ஸீராஸ்தே
நிவேதயாமா,ஸுரசேஷ துக்கம்
ஸ சாSSஹ தேவா, அனயேன நூனம்
உபேக்ஷதே நோ, ஜனனீ க்ருபார்த்ரா

தாரகாஸுரனின் துன்பத்தைப் பொறுக்க முடியாமல் ஸ்வர்க்கத்தை விட்டுச் சென்ற தேவர்கள், தாரகாஸுரன் ப்ரம்மனிடம் பெற்ற வரத்தைத் தெரிந்து கொண்டார்கள். தேவி இல்லாத பொழுது, சிவனுக்கு எப்படிப் புத்திரன் பிறப்பான்? பாக்ய ஹீனர்களான நம்முடைய காரியம் என்ன ஆகப் போகிறதோ? என்று மிகவும் கவலையில் ஆழ்ந்து, விஷ்ணுவைப் பார்க்க வைகுண்டம் சென்றார்கள். “நாரயண மூர்த்தியே! எங்கள் கவலைத் தீர உபாயம் சொல்லுங்கள்” என வேண்டினர். விஷ்ணு சொன்னார் “தேவர்களே! கவலையை விடுங்கள். கேட்டதைத் தரும் கற்பக விருட்ஷம் போல், இந்த உலகத்தை ஆளும், மணித்வீப வாசியான தேவி இருக்கக் கவலை ஏன்? ஆனால் தேவியின் கருணைக் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யவில்லை. அதனால் அந்த தேவி இப்பொழுது நம்மைப் பாராதவள் போல் இருக்கிறாள். தேவிக்குக் கருணை உண்டு. ஆனால் நாம்தான் அதற்கு உகந்தவர்களாக இல்லை”.

4. தத்விஸ்ம்ருதேர், ஜாத,மிதம்! கரேண
யஷ்ட்யா ச யா தாட,யதி ஸ்வபுத்ரம்
தாமேவ பால: ஸ, நிஜேஷ்டதாத்ரீம்
ஸாஸ்ரம் ருதன் மாதரமப்யுன்பைதி

விஷ்ணு மேலும் சொன்னார் “நாம் கருணை மயமான அந்த அன்னையை மறந்து விட்டோம். அதனால் தான் நமக்கு இந்தத் துன்பம் ஏற்பட்டிருக்கிறது. தாய் தன் குழந்தையை நேர்வழியில் நடத்த அடிப்பாள். அடித்தாலும் குழந்தை அம்மா! என்று தானே அழும்? தனக்கு வேண்டியதைத் தருபவள் அம்மாதான் என்று குழந்தைக்குத் தெரியும். தான் குறும்பு செய்ததால் தான் தாய் அடித்தாள் என்பதும் தெரியும். குழந்தைக்குத் தாயின்றி வேறு யாரும் இல்லை. அதுபோல் நாம் எல்லோரும் குழந்தைகள். அந்த தேவியே நமக்குத் தாய்”.

5. மாதா ஹி ந: சக்தி,ரிமாம் ப்ரஸ்ஸன்னாம்
குர்யாம பக்த்யா, தபஸா ச சீக்ரம்;
ஸர்வாபத: ஸைவ, ஹரிஷ்யதீ தீ
ச்ருத்வாSமராஸ்த்வாம், நுனுவுர் மஹேசி!

விஷ்ணு தொடர்ந்து சொன்னார் ” நாம் பக்தியுடன் தவம் செய்து அன்னையைச் சந்தோஷப்படுத்த வேண்டும். அம்பாள் நமது கஷ்டத்தை எல்லாம் நீக்குவாள்” என்றார். அம்பாளின் கருணையை அனுபவத்தில் அவர்கள் உணர்ந்தவர்கள். அதனால் விஷ்ணு சொன்னதே சரி என்று நினைத்தார்கள். வேதாந்த வாக்யங்களால் தேவியைத் துதித்தார்கள்.

6. நிசம்ய தேஷாம், ச்ருதிவாக்யகர்ப-
– ஸ்துதிம் ப்ரஸன்னா, விபுதாம்ஸ்த்வமாத்த
அலம் விஷாதேன, ஸுரா:! ஸமஸ்தம்
ஜானே; ஹரிஷ்யாமி, பயம் த்ருதம் வஹ

விஷ்ணு தன் பத்னியுடனும், இந்திராதி தேவர்களுடனும், இமயமலைக்குச் சென்று, பல வருடங்கள் தேவியைத் துதித்தனர். அன்னை அவர்கள் முன் தோன்றி, “உங்களின் பயத்தைப் போக்குகிறேன்” என்று வாக்குக் கொடுத்தாள்.

7. ஹிமாத்ரிபுத்ரீ, விபுதாஸ்த தர்த்தம்
ஜாயேத கௌரீ, மம சக்திரேகா;
ஸா ச ப்ரதேயா, வ்ருஷபத் வஜாய;
தயோ: ஸுதஸ்தம், திதிஜம் ச ஹன்யாது

அம்பாள் எப்படி பயத்தைப் போக்குவாள்? அதையும் தேவியே சொன்னாள். “பர்வதராஜன் என்னை இருதய கமலத்தில் வைத்துப் பக்தியுடன் உபாஸிக்கிறான். என்னுடைய சக்தியான கௌரி இமயமலையில் பர்வதராஜனுக்கு மகளாகப் பிறப்பாள். அவளைச் சிவன் திருமணம் செய்ய வேண்டும். அவர்களுக்குப் பிறக்கும் மகன் தாரகாஸுரனை வதம் செய்வான்” என்றாள். சிவனும் விஷ்ணுவும் தங்களதுச் சக்திகளை மதிக்காததால் தங்களுக்குள் விவாதம் செய்து கொண்டதை முன்பு பார்த்தோம். அதற்குப் பரிகாரமாகத் தேவர்கள் தேவியைத் துதித்தார்கள். தேவீ அவர்கள் முன் தோன்றி “தக்ஷனது இல்லத்தில் தான் பிறப்பேன்” என்றாள். அப்படியே செய்தாள். இப்பொழுது ஹிமவானுக்கு மகளாகப் பிறப்பேன் என்று சொன்னாள். ஹிமவானுக்குக் கேட்காமலே கிடைத்த வரம் இது.

8. இத்தம் நிசம்யாஸ்த, பயேஷு தேவேஷு
அப்யர்த்திதா தேவி! ஹிமாசலேன
த்வம் வர்ணயந்தீ, நிஜதத்வமேப்யஹ
ப்ரதர்சயாமா,ஸித விச்வரூபம்

அம்மே நாராயணா, தேவீ நாராயணா
லக்ஷ்மி நாராயணா, பத்ரே நாராயணா

தேவீ தனக்கு மகளாகப் பிறக்கப் போகிறாள் என்பதை அறிந்த ஹிமவான் ஆவலுடன் காத்திருந்தான். தந்தையாகிய நான் எனது புத்ரியிடம் எனது மகள் என்ற உரிமையை எடுத்துக் கொள்ள முடியுமா? அப்படிச் செய்தால் அது தவறாகுமா? அம்பாளின் பரம ரகஸ்யம் என்ன என்று அறிந்து கொண்டால் ஜாக்கிரதையாக இருக்கலாமே? என்று நினைத்தான். தேவர்கள் எல்லோரும் கேட்க தேவீ தத்வ உபதேஸம் செய்தாள். இது தேவீ பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இதற்கு தேவி கீதை என்று பெயர். அம்பாளின் ஆதார தத்வம், ஸர்வவ்யாபித்வம் இவைகளை எல்லாம் கேட்ட தேவர்கள், அம்பாளின் விஸ்வரூபத்தைக் காண ஆவல் கொண்டார்கள்.

9. ஸஹஸ்ரசீர்ஷம் ச, ஸஹஸ்ரவகத்ரம்
ஸகஸ்ரகர்ணம் ச, ஸஹஸ்ரநேத்ரம்
ஸஹஸ்ரஹஸ்தம் ச, ஸஹஸ்ரபாதம்
அநேகவித்யுத் ப்ரபமுஜ்வலம் ச

சூரியன் என்பது ஒன்றுதான். ஆனால் அது ஆறு, குளம் குட்டை, கிணறு போன்ற பல நீர்நிலைகளில் பிரதிபலிக்கும் பொழுது பலவாகத் தோன்றுகிறது. பல சூரியன் இருப்பது போல் தோன்றுகிறது. அதுபோல அனைத்து ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான். அனைத்துச் சரீரங்களும் அம்பாள் சரீரம் தான். அனைத்துக் கை, கால்களும் அம்பாள் கை கால்கள். அதுபோல் தலைகள், கண்கள் எல்லாமே அம்பாள் தான். அதனால் தான் விஸ்வரூபத்தில் கணக்கிடமுடியாத தலைகள் கைகள், கால்கள், கண்கள் என்று, கோடி சூர்யப் பிரகாஸமாயும், கோடி மின்னல் மின்னுவதைப் போன்ற ஒளியும் பார்க்கவே கண்ணைக் கூசும்படி இருந்தது.

10. த்ருஷ்ட்வேதம் ஈச்வர்ய,கிலைர் பியோக்தா
த்வம் சோபஸம்ஹ்ருத்ய, விராட்ஸ்வரூபம்
க்ருபாவதீ ஸ்மேர, முகீ புனச்ச
நிவ்ருத்திமார்க்கம், கிரயே ந்யகாதீஹீ

கண்ணால் பார்க்கக் கூட முடியாத அந்த பயங்கர விஸ்வரூபத்தைக் கண்டு அனைவரும் பயந்தார்கள். தாயே! இந்த ரூபம் வேண்டாம், அழகிய சுந்தர மேனியாய்க் காட்சி தர வேண்டும் என்று வேண்டினார்கள். பகவத்கீதையில் கிருஷ்ணனின் விஸ்வரூபம் கண்ட அர்ஜுனனும் இப்படித்தான் சொன்னான். தேவி அழகிய சுந்தரியாகக் காட்சி தந்தாள். ஞானம், கர்மம், யோகம், பக்தி, ப்ரம்மத்யானம், பிரதிமா பூஜை ஆகியவைகளை விபரமாகச் சொன்னாள்.

11. உக்த்வாSகிலம் ஸம்,ஸ்ருதிமுக்திமார்க்கம்
ஸுரேஷு பச்யத்ஸு, திரோததாதஹ
ச்ருத்வாத்ரிமுக்யா,ஸ்தவ கீதமுச்சைர்ஹீ
தேவா ஜபத்யான அபரா பபூவுஹு

ஸம்சாரத்திலிருந்து முக்தி அடையக் கூடிய வழிகளை விரிவாகச் சொன்னாள். அதன் பின் தேவீ மறைந்தாள்.

12. அதைகதா ப்ரா,துரபூத் ஹி மாத்ரௌ
சாக்தம் மஹோ தக்ஷ கிருஹே யதா ப்ராகு
க்ரமேண தத் தேவி! பபூவ கன்யா;
ஸா பார்வதீதி ப்ரதிதா ஜகத்ஸு

ஸர்வமங்கள மாங்கல்யே சிவே ஸர்வார்த்த ஸாதகே
சரண்யே த்ரியம்பகே கௌரி நாராயணீ நமோஸ்துதே.

தக்ஷனது இல்லத்தில் தோன்றிய தேஜஸ் எப்படிக் குழந்தையாக மாறியதோ, அப்படியே இமாலயத்தில் இமவான் இல்லத்தில் தோன்றிய தேஜஸும் ஒரு கன்னிகையாகி ” பார்வதீ” என்னும் பெயருடன் பிரசித்தி பெற்றது.

13. ஹி மாத்ரிணைஷா, ச ஹராய தத்தா:
தயோர்: ஸு த: ஸ் கந்த, இதி ப்ரஸித்தஹ
ஸ தாரகாக்யம், திதிஜம் நிஹத்ய
ரரக்ஷ லோகாந் அகிலான் மஹே சி!

சிவன் பார்வதியை மணந்து கொண்டார். அவர்களுக்குக் ஸ்கந்தன் பிறந்தான். ஸ்கந்தரால் தாரகாஸுரன் வதம் செய்யப்பட்டான். ஸதியின் பிரிவால்வருந்திய சிவன் மீண்டும் பார்வதியை மணந்ததும் தேவியின் அருள் தான்.

14. துர்வாஸ ஸ: சாப,பலேன சக்ரோ
நஷ்ட்டாகிலஸ்ரீர், வசனேன விஷ்ணோஹோ
க்ஷீராததிம் ஸா,ஸு ரதேவஸங்கஹ
மமந்த; தஸ் மா,து தபுச்ச லக்ஷ்மீஹீ

ஒரு சமயம் விஷ்ணுவின் பாதத்தில் சிவன் புஷ்பத்தால் அர்ச்சனைச் செய்தார். அதில் ஒரு பூ துர்வாஸருக்குக் கிடைத்தது. அவர் அதை இந்திரனுக்குத் தந்தார். இந்திரன் அதை ஐராவதத்தின் தலையில் வைத்தான். அதனால் ஐராவதம் இந்திரனை விட்டுப் பிரிந்தது. துர்வாஸர் கோபத்தால் சாபம் தர, ஸ்வர்க்கலோக செல்வங்கள் நசித்தன. தேவர்களின் ஐஸ்வர்யம் நசித்து, இந்திரன் ப்ரம்மா, விஷ்ணுவிடம் செல்ல, விஷ்ணு பாற்கடலைக் கடைந்தால் லக்ஷ்மி உயர்ந்து வருவாள் என்றார். தேவர்கள் அஸுரர்களுடன் சேர்ந்து பாற்கடலைக் கடைய லக்ஷ்மி தோன்றினாள்.

15. யா பூஜிதேந்த்ரேண, ரமா தவைகா
சக்தி: ஸ் வரைச்வர்ய, புன: ப்ரதாநாது
சாபான் முனேர், தேவகணான் விமோச்ய
கடாக்ஷ தஸ்தே ஹரிமாப பூயஹ

லக்ஷ்மியை இந்திரன் முறைப்படி பூஜை செய்தான். சந்தோஷமடைந்த லக்ஷ்மி சகல ஐஸ்வர்யங்களையும் தேவர்களுக்குத் தந்தாள். துர்வாஸர் சாபத்திலிருந்து தேவர்கள் விடுபட்டார்கள். தேவர்கள் சந்தோஷமடைந்தனர். விஷ்ணுவை பிரிந்த சக்தி மீண்டும் கிடைத்தது. (தசகம் 28 ல் சொல்லப்பட்டிருக்கிறது)

16. த்வம் ஸர்வசக்திர், ந ஜிதாஸி கேனாபி
அந்யான் ஜயஸ்யே,வ ஸதா சரண்யா
மாதேவ பத்னீ,வ ஸுதேவ வா த்வம்
விபாஸி பக்தஸ்ய;, நமோ நமஸ்தே

சகல சக்தியும் உடையவள் அம்பாள். அவள் யாரிடமும் தோல்வி அடையமாட்டாள். அவள் வெற்றித் திருமகள். அந்த அம்பாளைத்தான் பக்தன் சரண் அடைய வேண்டும். அவள் எந்த ரூபத்திலும் வருவாள். இமவானுக்குப் புத்ரி, சிவனுக்குப் பத்னீ, விஷ்ணுவிற்குப் பத்னீ. ஆனால் அம்மா, புத்ரீ பத்னீ என்ற பந்தத்தில் சிக்க மாட்டாள். அவள் எப்போதும் சுதந்திரமானவள். அந்த தேவியை நான் நமஸ்கரிக்கிறேன்

முப்பதாம் தசகம் முடிந்தது.

Also, read