ENQUIRY geetanjaliglobalgurukulam

Friday, December 22, 2023

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 33–ஸ்ரீ அம்பரீஷ சரித்திரம் —

 

ஸ்ரீ நாராயணீயம் – தசகம் 33–ஸ்ரீ அம்பரீஷ சரித்திரம் —

வசந்த திலகம் -14 அச்சு எழுத்துக்கள் ஒவ்வொரு வரியிலும்

வைவஸ்வ தாக்ய மநு புத்ர நபாக ஜாத
நாபா கநாமக நரேந்திர ஸூதோ அம்பரீஷ
சப்தார்ண வாவ்ருத மஹீ தயிதோ அபி ரேமே
த்வத் சங்கிஷு த்வயி ச மக்ந மநாஸ் சதைவ –1-

நரேந்திர-நரர்களுக்கு தலைவன்
தாசாரதி
வாசுயதேவன்
போல் நாபாகன் நபாகனின் மகன்
சப்தார்ண வாவ்ருத-ஏழு கடலால் சூழப்பட்ட

த்வத் சங்கிஷு த்வயி ச–பாகவத கைங்கர்யம் ஏற்றம் -அது போகத் தான் பகவத் பக்தி

விவஸ் வான் ஸூர்ய புத்ரன் -வைவஸ்வத மனுவின் பிள்ளை நமுகன் -அவனுடைய பிள்ளை நாபாகன் –
அவனுக்கு அம்பரீஷன் என்ற மகன் பிறந்தான் -அவன் ஏழு கடல் சூழ்ந்த பூமிக்குத் தலைவனாய் இருந்தான் –
இருப்பினும் தங்கள் இடத்திலும் தங்கள் பக்தர்கள் இடத்திலும் அன்பு கொண்டு வாழ்ந்து வந்தான் –

சதைவ-எப்பொழுதும்

——-

த்வத் ப்ரீதயே சகலமேவ விதாந்வதோ அஸ்ய
பக்த் யைவ தேவா நசிராத்  (விரைவாக -சிரம் நீண்ட காலம் சிரஞ்சீவி ) ப்ருதா ப்ரஸாதம்(அநுக்ரஹம் )
யே நாஸ்ய யாசந ம்ருதே அப் யபி ரக்ஷணார்த்தம்
சக்ரம் பவாந் பிரவித தார ஸஹஸ்ர தாரம் –2-

பிரவித தார–பிரவித தார

தேவனே உம்மிடம் கொண்ட பக்தியால் –சகலமேவ-அனைத்து கர்மங்களையும் ஓன்று விடாமல் செய்தான் –
அவன் கேட்காமலேயே அவனை ரக்ஷித்து அருள
ஆயிரக் கணக்கான முனைகளை உடைய தங்கள் சக்ராயுதத்தை அவனுக்கு அளித்து அருளினீர்கள்

————

சத்வாதஸீ வ்ரதமதோ பவத் அர்சநார்தம்
வர்ஷம் ததவ் மது வநே யமுநோப கண்டே
பத்ந்யா சமம் ஸூ மனஸா மஹதீம் விதன்வந்
பூஜாம் த்விஜேஷு விஸ்ருஜன் பஸூ ஷஷ்டி கோடிம்–3-

பிறகு அம்பரீஷன் யமுனைக் கரையில் உள்ள மது வனத்தில் நற் குணங்கள் கொண்ட தன்
மனைவி உடன் தங்களைப் பூஜித்து வந்தான்
பஸூ ஷஷ்டி கோடிம்-அறுபது கோடிப் பசுக்களை –த்விஜேஷு விஸ்ருஜன்-வேதம் அறிந்தவர்களுக்குத் தானம் செய்தான்
ஒரு வருஷ காலம் துவாதசி விரதத்தை அனுஷ்ட்டித்து தங்களைப் பூஜித்து வந்தான்

மது வனத்தில்-துருவன் தவம் இருந்த இடம்
ராமாயணம் -லவணாசுரனை அழித்து நகரமாக மதுரா ஆகி மன்னு வடமதுரை ஆனது

சத்வாதஸீ வ்ரத-ஏகாதசி விரதம் -பாரணை பண்ணி துவாதசியில் பூர்த்தி
16-2 கீதா பாஷ்யம் -துவாதசி விரதம் என்றே கூறுகிறார்
துவாதச சமாராதனம் பண்ணுவதற்காகவே ஏகாதசி விரதம்-பகவானின் உவப்புக்காகவே விரதம் இருக்க வேண்டும்-
இதுவே முக்கிய காரணம் -தேசிகன் தாத்பர்ய சந்திரிகையில் காட்டி அருளுகிறார்

————-

தத்ராத பாரண திநே பவத் அர்சநாந்தே
துர்வாஸ ஸ அஸ்ய முனிநா பவனம் ப்ரபேதே
போக்தும் வ்ருதஸ் சஸ ந்ரு பேண பரார்தி சீலோ
மந்தம் ஜகாம யமுனாம் நியமாந் விதாஸ்யந் –4-

போக்தும் வ்ருதஸ் சஸ ந்ரு பேண-உண்பதற்கு வரித்தான் அரசன்

விரதம் முடிந்து பாரணை செய்ய வேண்டிய நாளில் துர்வாசர் அம்பரீஷனின் மது வனத்துக்கு வந்தார் –
அம்பரீஷன் அவரிடம் போஜனம் செய்ய வேண்டினார்
விரைவில் கோபம் கொள்ளும் அவரும் சம்மதித்து –மந்தம் ஜகாம-மெதுவே யமுனைக் கரைக்குச் சென்றார் –

————

ராஞ்ஞா அத பாரண முஹுர்த்த ஸமாப்தி கேதாத்
வாரைவ பாரணம் அகாரி பவத் பரேண
ப்ராப்தோ முநிஸ் தத் அத திவ்ய த்ருஸா விஜாநந்
ஷிப்யந் க்ருத உத்த்ருத ஜடோ விததாந க்ருத்யாம் –5-

அரசனான அம்பரீஷன் பாரணை செய்ய வேண்டிய திதி முடியப் போகிறதே என்ற கேதாத்-கவலையில்
தீர்த்தத்தைக் குடித்துப் பாரணையை முடித்தான்
ஞான த்ருஷ்டியால் அதை அறிந்த முனிவர் கோபத்துடன் கடும் சொற்களால் அம்பரீஷனைத் தூஷித்து
தன்னுடைய ஜடையைப் பிய்த்து எறிந்து அதில் இருந்து க்ருத்யை என்ற துர் தேவதையை உண்டாக்கினார் –

————

க்ருத்யாம் ச தாம் அஸி தராம் புவனம் தஹந்தீம்
அக்ரே அபி விஷ்யந் ரூபதிர்ந பதாச்ச கம்பே
த்வத் பக்த பாதம் அபி வீஷ்ய ஸூ தர்சனம் தே
க்ருத்யா நலம் சலபயன் முநிவந் வதா வீத் —6-

கையில் கத்தி யுடன் உலகங்களை எரிக்கும் அந்த துர் தேவதையை நேரில் கண்ட
அம்பரீஷன் சிறிதும் நகராமல் இருந்தான்
ஸூ தர்சன சக்ரமானது அவனுக்கு நேர்ந்த தீங்கைப் பார்த்து அந்த க்ருத்யை(சலபயன்-சலபம் போல் அழித்து )அழித்து
துர்வாசரைப் பின் தொடர்ந்து சென்றது –

———

தாவந் நசேஷ புவநேஷு பியா ஸ பஸ்யன்
விஸ் வத்ர சக்ரம் அபி தே கதவான் விரிஞ்சம்
க கால சக்ரம்  அதி லங்க யதீத் யபாஸ்த
சர்வம் யசவ் ச ச பவந்த மவந்த தைவ –-7–

கால சக்கரத்தோடு வெண் சங்கம் கை ஏந்தினாய் ஆழ்வார்

–யார் என்றும் ப்ரம்மாவாலும் முடியாதே

பயத்தினால் முனிவர் எல்லா உலகங்களுக்கும் ஓடினார் – எல்லா இடத்துக்கும் சக்ராயுதம் பின்
தொடர்ந்த்தத்தைக் கண்டு பிரமனைச் சரண் அடைந்தார்
கால சக்கரத்தை யாரால் எதிர்க்க முடியும் என்று பிரமதேவர் முனிவரை அனுப்பி விட்டார்
பிறகு பரம சிவன் இடம் சென்றார் -அவரும் தங்களையே சரணம் அடைய உபதேசம் செய்தார் –

பூயோ பவந் நிலய மேத்ய முனிம் நமந்தம்
ப்ரோஸே பவாந் அஹம் ருஷே தநு பக்த தாஸ
ஞானம் தபஸ் ச விநயாந் விதமேவ மாந்யம்
யாஹ் யம்பரீஷ பதமேவ பஜேதி பூமந் –8-

எங்கும் நிறைந்தவனே -கடைசியாக முனிவர் ஸ்ரீ வைகுந்தத்தை அடைந்து உம்மைச் சரண் அடைந்தார் –
தாங்கள் -முனிவரே நான் பக்தர்களுக்கு அடியவன்
அறிவும் தவமும் இருந்தாலும் அஹங்காரம் இல்லாமல் இருக்க வேண்டும்
நீங்கள் அம்பரீஷனையே சரணம் அடையுங்கோள் என்று உபதேசித்து அருளினீர்கள் –

பார்த்த சாரதியாக இருந்தானே –
கிரீடம் தலை மேல் இருக்க அஹங்காரம் -14 வருஷம் ஒதுக்கி வைத்து
பாதுகா -கைங்கர்ய ஸ்ரீ சிம்ஹாசனத்தில் இருத்தினான்
நனு -உறுதியாக பக்த தாஸன்

பூமந்–சாந்தோக்யம் -யத்ர நான்யத் பஸ்யதி –இத்யாதி பூமா ஸப்தம் –
பஹு மா சேர்ந்து பூமா –
வார்த்தை தொடங்கி –பலவற்றையும் சொல்லி -ஆர்வம் -ஜீவன் -சரீராத்மா மிக பெரியவன்
இவ்வளவு பெரியவன் பக்த தாஸன் சொல்லிக் கொள்வதே ஸ்ரேஷ்டம்
அதற்காகவே இந்தப் பத பிரயோகம்
நான் பெரியவன் —
செவியின் வழி புகுந்து என்னுள்ளாய் -ஆழ்வார்

——

தாவத் ச மேத்ய முனிநா ச க்ருஹீத பாதோ
ராஜா அபஸ்ருத்ய பவதஸ்த்ம சாவ் அநவ்ஷீத்
சக்ரே கதே முனிரதாத் அகிலாஸி ஷோ அஸ்மை
த்வத் பக்திமா கசி க்ருதே அபி க்ருபாம் ச ஸம் சந் –9-

முனிவரும் அம்பரீஷன் க்ருஹீத பாதோ-கால்களை பற்றினார் -அவன் விலகி சக்ராயுதத்தை ஸ்துதிக்க அது திரும்பிச் சென்றது
துர்வாசர் அம்பரீஷனின் பக்தியையும் தீங்கு செய்தவர்களுக்கும் நன்மை செய்யும் குணத்தையும்
மெச்சி அவனை ஆசீர்வதித்தார் –

குற்றம் செய்தவர் பக்கலில் பொறையும்–கிருபையும் உகப்பும் வேண்டும்

————

ராஜா ப்ரதீஷ்ய மும் ஏகச மாம் அ நாஸ்வாந்
ஸம் போஜ்ய ஸாது தம் ருஷிம் விஸ் ருஜன் ப்ரசன்னம்
புக்த்வா ஸ்வயம் த்வயி ததோ அபி த்ருடம் ரதோ அபூத்
ஸாயுஜ்யம் ஆப ச ச மாம் பவ நே ச பாயா –10-

அம்பரீஷன் ஒரு வருஷம் துர்வாசரை எதிர்பார்த்து உண்ணாமல் விரதம் இருந்து அவர் வந்ததும்
அவருக்கு உணவு அளித்து வழி அனுப்பி பிறகு பாரணை செய்தான்
முன்பு இருந்ததை விட அதிகமாக தங்கள் இடம் பக்தி கொண்டு முடிவில் தங்களை அடைந்தான்
அத்தகைய மகிமை வாய்ந்த குருவாயூரப்பா அடியேனை ரஷித்து அருள வேணும் –

நானே தான் ஆயிடுக -என்பதற்கு சிறந்த த்ருஷ்டாந்தம் அம்பரீஷன்

——————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ நாராயண பட்டத்ரி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ருக்மிணி சமேத குருவாயாரூப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Thursday, November 2, 2023

Jaya Jaya durge jita vyri vargE Narayana Teertha.Jaya Jaya durge 4 lesson@5G

 Slokam :


durgE durgata hAriNi trijagatAm sargAdi siddhArdhakE
swargAdheeshTa phala pradAna nipuNE trAyaswa na SSankari
sA twam sarva janAntarAntara chidanSAnanya siddhAtmikA
sArAsAra vivEka drushTi viditA sarvaika sAkshyAtmanA ||

Oh Mother Durga, you dispel afflictions of those who seek for refuge. You are the creator, the sustainer and destroyer of the three 'Lokas'. You are the bestower. You exist in our conscience. You are the cause of all our accomplishments. You bestow the power of discrimination, wisdom and knowledge. You are the Supreme witness of all ' Lokas'.

PJaya Jaya durge jita vyri vargE viyada nilAdi vichitra sarge ||Oh Mother Durga, the vanquisher of all enemies, victory to you. You create this wonderful universe, the air, the sky and every thing.
C 1sundara tara charaNAravinde
sukha paripAlita lOkabrunde
nanda sunandAdi yOgi vandye
nArAyana sOdari parAnande ||
Beautiful are your lotusfeet. You rule the vast humanity bestowing happiness. Nanda, Sunanda and other yogis bow to you. You are the sister of Sriman Narayana and you are blissfull.
C 2sarasa maNi noopura sangata pAde
samadhigatA khila sAngavEde
nara kinnara vara sura bahu geetE
nanda nutE nikhilA nanda bharite ||
Diamond studded dancing bells on your feet echo with melodious notes of samaveda. The celestial musicians, devatas and men sing your praise. Sage Nanda worships you. You are filled with supreme bliss.
C 3kanaka patAvruta ghana tara jaghanE
kaLyaNa dAyini kamaneeya vadanE
InakoTi sankAsa divyA bharaNE
IshTa janA bheeshTa dAna nipuNE ||
Your beautiful body is covered with golden dress. You bestow prosperity and your face is charming. Your divine ornaments radiate like million Suns. You skilfully bestow your favourite devotees their heart's desires.
C 4anudaya laya satchidAnanda latikE
AlOla maNi maya tATanka dhanikE
nAnA roopAdi kArya sAdhanikE
nArAyaNa teertha bhAvita phalakE ||


You are the embodiment of satchidanandam (existence conciousness, bliss) You are richly adorned with gem studded ear hangings . You are omnipotent, omnifarious (nanaroopa). You remain forever in the thoughts of Narayana Teertha.



ஜயாஜய jayajayadurge1
jayajaya durge 2
jayajaya durge 3ஜய ஜய
 durgehttps://youtu.be/hZgjj-vBEb8

Jaya Jaya durge 4 lesson@5G

Thursday, October 19, 2023

41 ஏகசத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரணாமம்

 

41 ஏகசத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரணாமம்

தே³வி த்வதா³வாஸ்யமித³ம்ʼ ந கிஞ்சித்³வஸ்து த்வத³ன்யத்³ப³ஹுதே⁴வ பா⁴ஸி . தே³வாஸுராஸ்ருʼக்பனராதி³ரூபா விஶ்வாத்மிகே தே ஸததம்ʼ நமோ(அ)ஸ்து .. 41-1.. ந ஜன்ம தே கர்ம ச தே³வி லோகக்ஷேமாய ஜன்மானி த³தா⁴ஸி மாத꞉ . கரோஷி கர்மாணி ச நிஸ்ப்ருʼஹா த்வம்ʼ ஜக³த்³விதா⁴த்ர்யை ஸததம்ʼ நமஸ்தே .. 41-2.. தத்த்வத்பத³ம்ʼ யத்³த்⁴ருவமாருருக்ஷு꞉ புமான் வ்ரதீ நிஶ்சலதே³ஹசித்த꞉ . கரோதி தீவ்ராணி தபாம்ʼஸி யோகீ³ தஸ்யை நமஸ்தே ஜக³த³ம்பி³காயை .. 41-3.. த்வதா³ஜ்ஞயா வாத்யனிலோ(அ)னலஶ்ச ஜ்வலத்யுதே³தி த்³யுமணி꞉ ஶஶீ ச . நிஜைர்நிஜை꞉ கர்மபி⁴ரேவ ஸர்வே த்வாம்ʼ பூஜயந்தே வரதே³ நமஸ்தே .. 41-4.. ப⁴க்திர்ன வந்த்⁴யா யத ஏவ தே³வி ராகா³தி³ரோகா³பி⁴ப⁴வாத்³விமுக்தா꞉ . மர்த்த்யாத³யஸ்த்வத்பத³மாப்னுவந்தி தஸ்யை நமஸ்தே பு⁴வனேஶி மாத꞉ .. 41-5.. ஸர்வாத்மனா யோ ப⁴ஜதே த்வத³ங்க்⁴ரிம்ʼ மாயா தவாமுஷ்ய ஸுக²ம்ʼ த³தா³தி . து³꞉க²ம்ʼ ச ஸா த்வத்³விமுக²ஸ்ய தே³வி மாயாதி⁴நாதே² ஸததம்ʼ நமஸ்தே .. 41-6.. து³꞉க²ம்ʼ ந து³꞉க²ம்ʼ ந ஸுக²ம்ʼ ஸுக²ம்ʼ ச த்வத்³விஸ்ம்ருʼதிர்து³꞉க²மஸஹ்யபா⁴ரம் . ஸுக²ம்ʼ ஸதா³ த்வத்ஸ்மரணம்ʼ மஹேஶி லோகாய ஶம்ʼ தே³ஹி நமோ நமஸ்தே .. 41-7.. பதந்து தே தே³வி க்ருʼபாகடாக்ஷா꞉ ஸர்வத்ர ப⁴த்³ராணி ப⁴வந்து நித்யம் . ஸர்வோ(அ)பி ம்ருʼத்யோரம்ருʼதத்வமேது நஶ்யந்த்வப⁴த்³ராணி ஶிவே நமஸ்தே .. 41-8.. நமோ நமஸ்தே(அ)கி²லஶக்தியுக்தே நமோ நமஸ்தே ஜக³தாம்ʼ விதா⁴த்ரி . நமோ நமஸ்தே கருணார்த்³ரசித்தே நமோ நமஸ்தே ஸகலார்திஹந்த்ரி .. 41-9.. து³ர்கே³ மஹாலக்ஷ்மி நமோ நமஸ்தே ப⁴த்³ரே மஹாவாணி நமோ நமஸ்தே . கல்யாணி மாதங்கி³ ரமே ப⁴வானி ஸர்வஸ்வரூபே ஸததம்ʼ நமஸ்தே .. 41-10.. யத் கிஞ்சித³ஜ்ஞாதவதேஹ தே³வீநாராயணீயம்ʼ ரசிதம்ʼ மயேத³ம் . அப⁴த்³ரநாஶாய ஸதாம்ʼ ஹிதாய தவ ப்ரஸாதா³ய ச நித்யமஸ்து .. 41-11..  

ஶுப⁴ம்ʼ

தசகம் 41

இந்த தசகத்தில் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் நமஸ்காரம் செய்யலாம்.

1. தேவி! த்வதாவாஸ்ய,மிதம்; ந கிஞ்சிது
வஸ்து த்வதன்யத்;, பஹுதேவ பாஸி
தேவாஸுரா ஸ்ருக், பனராதிரூபா
விச்வாத்மிகே! தே ஸததம் நமோஸ்து

அம்பாள் இந்த உலகம் முழுவதும் வியாபித்திருக்கிறாள். அவள் இல்லாமல் உலகில் ஒன்றுமே இல்லை. தங்கமானது, வளையல், செயின், மோதிரம் இப்படிப் பலவாக ஆகும். அதைப் போல் மண்ணும் குடம் ஆகும், சட்டி ஆகும், பொம்மை ஆகும். இதைப் போல் அம்பாளும் பல ரூபம் தரிக்கிறாள். “பஹுதேவ பாஸி”. பலவாக இருக்கிறாள். இந்த உலகம் முழுவதிலும் அம்பாள் ஸ்வரூபம் உண்டு. அதனால் தான் “ஸர்வ விஸ்வாத்மிகே” என்று சொல்லப்படுகிறாள்.

2. ந ஜன்ம தே கர்ம, ச தேவி! லோக –
– க்ஷேமாய ஜன்மானி, ததாஸி மாதஹ!
கரோஷி கர்மாணி, ச நிஸ்ப்ருஹா த்வம்
ஜகத்விதாத்ர்யை, ஸததம் நமஸ்தே

இந்த ஜீவன் கர்ம வினைக்குக் கட்டுப் பட்டவன். கர்ம வினையை அனுபவிக்கும் வரை ஜீவனும் இருக்கும். பிறப்பும் இறப்பும் கர்மவினைப்படி தான் நடக்கும். ஜனன மரணம் நம் ஆசைப்படி நடக்காது. அடுத்த ஜன்மம் என்னவாகப் பிறக்க வேண்டும் என்பதை ஜீவனால் நிச்சயிக்க முடியாது. கர்ம வினைதான் தேவனாகவோ, மனிதனாகவோ, புழு, பூச்சியாகவோ ஜன்மம் எடுக்க வைக்கிறது. அனைவரும் கர்மத்திற்குக் கட்டுப் பட்டவர்கள். ஆனால் தேவி கர்மாதீதை. கர்மங்களுக்கு அப்பாற்பட்டவள். நம்முடைய சரீரம் பிராரப்த சரீரம். தேவின் சரீரம் ஸுவேட்ஷா சரீரம். அவள் இச்சைப்படியானாது. ஒருவன் நாடகத்தில் பல வேஷம் போட்டு அதன்படி நடித்தாலும், உண்மையில் அவனுக்கு அதில் சம்பந்தமில்லை. அம்பாளின் லீலையும் அப்படியே, கேட்கலாம், படிக்கலாம், பாடலாம். ராகத்வேஷத்திலிருந்து மனதை தூய்மை படுத்தலாம். அம்பாளின் லீலைகளால் மற்றவர்களுக்கு நன்மை. அதுதான் அன்னையின் கருணாப் பிரவாகம். அப்படிப்பட்ட அம்பாளை வணங்குகிறார்.

3. தத் த்வத்பதம், யத், த்ருவமாருருக்ஷுஹு
புமான் வ்ரதீ நிச்,சல தேஹ சித்தஹ
கரோதி தீவ்ராணி, தபாம்ஸி யோகீ:
தஸ்யை நமஸ்தே ஜகதம்பிகாயை

இந்த உலகில் உள்ள அனைத்துப் பொருள்களும், நேற்று தோன்றியவை, இன்று தோன்றிக் கொண்டிருப்பவை, நாளையும் தோன்றப் போகின்றவை இவை எல்லாமே அழியக்கூடியவை. ஏன் இந்த உலகம் கூட ஒரு நாள் அழியப் போகிறது. ஆனால் அழியாத ஒன்று இருக்கிறது. அதுதான் அம்பாள். அந்த தேவியின் பாதகமலத்தை அடையத் தியானம், தவம், யக்ஞம், விரதம் எல்லாம் செய்கின்றனர். பரீக்ஷித்து மஹாராஜா தக்ஷகன் என்னும் பாம்பு கடித்து துர்மரணம் அடைந்தான். துர் மரணம் அடைந்தால் அவர்களுக்கு நல்லகதி இல்லை என்பது இந்து தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் அவன் மகனான ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்கிறான்.அந்த யக்ஞம் முடிந்ததும் பரீக்ஷித்து தேவின் பாதாரவிந்தத்தை அடைந்தான் என்று தேவீ பாகவதம் 12 ஆவது ஸ்கந்தம் 13 ஆவது அத்யாயத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு தந்தைக்கு முக்தி கிடைக்க வேண்டுமானால் அதற்கான வழியை ஒரு புத்திரனால் மட்டும் தான் தர முடியும். அவனால் தான் பரீஷித்து முக்தி அடைந்தான்.

4. த்வதாஜ்ஞயா வாத்ய,நிலோSநலச்ச
ஜ்வலத்யுதேதி, த்யுமணி: சசீ ச
நிஜைர் நிஜை: கர்ம,பிரேவ ஸர்வே
த்வாம் பூஜயந்தே: வரதே! நமஸ்தே

காற்று சுகமாக வீசுவதற்கும், அக்னி சுடர்விட்டு எரிவதற்கும், வானம் மழை பொழிவதற்கும், சூரியனும், சந்திரனும் உதிப்பதற்கும் அம்பாள் நினைத்தால் தான் முடியும். இந்த தேவர்களே அன்னையை வணங்கி அவள் அருளால் தான் பிரகாசிக்க முடிகிறது என்றால் நம் போன்ற மனிதர்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ? அந்த தேவியை ஆசிரியர் வணங்குகிறார்.

5. பக்திர் ந வந்த்யா:, யத ஏவ தேவி!
ராகாதி ரோகாபி,பவாத் விமுக்தாஹா
மர்த்யா தயஸ்த்வத் பதம் ஆப்னுவந்தி;
தஸ்யை நமஸ்தே, புவனேஸி! மாதஹ!

கடின விரதமும், தவமும் பக்தியும் இல்லாவிட்டால் பிரயோசனமில்லை. எவரும் தன்னை வருத்திக் கொண்டு கஷ்டப்பட வேண்டிய அவஸ்யமில்லை. தபஸ்விகளும், யோகிகளும் என்ன பயனை அடைவார்களோ அதை நாம் சுலபமாக தேவியின் கதைகளைக் கேட்பது, நாம சங்கீர்த்தனங்களில் பங்கு கொள்வது, போன்றவைகளால் அடைந்து விடலாம்.

6. ஸர்வாத்மனா யோ, பஜதே த்வதம்க்ரிம்
மாயா தவாமுஷ்ய, ஸுகம் ததாதி;
துக்கம் ச ஸா த்வத், விமுகஸ்ய தேவி!;
மாயாதி நாதே! , ஸததம் நமஸ்தே

ராகமும், த்வேஷமும் மாயையால் ஏற்படுகிறது. தேவியின் பக்தர்களுக்கு ராகமும், த்வேஷமும் இல்லை. அந்த மாயை தேவியின் தாசி. அதனால் தேவி பக்தர்களின் அருகில் கூட வரமாட்டாள். அந்த மாயாதீதையாகிய தேவியை நமஸ்கரிக்கிறார்.

7. துக்கம் ந துக்கம், ந ஸுகம் ஸுகம் ச;
த்வத் விஸ்ம்ருதிர் துக்க,மஸஹ்ய பாரம்
ஸுகம் – ஸதா த்வத்,ஸ்மரணம் மஹேசி!
லோகாய சம் தேஹி, நமோ நமஸ்தே

மனிதர்கள் பணமும், உறவினர்களும், நண்பர்களும் தனக்கு அனுகூலமாக இருந்தால், அதைச் சுகம் என்று நினைக்கிறார்கள். இவைகள் இல்லாமல் போனால் துக்கப் படுகிறார்கள். உண்மையில் சுகமும் துக்கமும் இவைகளில் இல்லை. தேவியின் ஸ்மரணையே உண்மையான நிலையான சுகத்தைத் தரும். அந்த தேவியை நாம் எப்பொழுது மறக்கின்றோமோ அப்பொழுது துக்கம் தானே வருகிறது. கண்ணைத் திறக்காவிட்டால் வெளிச்சத்தைக் காண முடியுமா? அனைவருக்கும் சுகமே தரும் அந்த தேவியை நமஸ்கரிக்கிறார்.

8. பதந்து தே தேவி! க்ருபாகடாக்ஷாஹா;
ஸர்வத்ர பத்ராணி, பவந்து நித்யம்;
ஸர்வோபி ம்ருத்யோர் அம்ருதத்வமேது:
நச்யந்த்வ – பத்ராணி; சிவே! நமஸ்தே

மிருத்யு என்றால் ராக, த்வேஷ ரூபமான ஸம்சாரம். ராகத்வேஷமில்லாத சாந்தியான நிலை அமிர்தத்வம். யாரிடமும் கோபமோ, விரோதமோ, மனதில் பயமோ, எதுவுமே இல்லாவிட்டால் மனம் அமைதியாக இருக்குமல்லவா? அந்த நிலைதான் அமிர்தத்வம். அபயம், சுகம், நல்லதையே நினைக்கும் மனம் இவைகள் அமிர்தத்வத்தில் லக்ஷணங்கள். கோபம் ,விரோதம், கெடுதலாக ஏதும் நடந்துமோ என்ற பயம் இவைகள் மிருத்யு லக்ஷணங்கள். அப்படி அமிர்தத்வ லக்ஷணம் கொண்ட மனப் பக்குவத்தை எனக்குத் தா என்று நமஸ்கரிக்கிறார்.

9. நமோ நமஸ்Sதே, கில சக்தியுக்தே!
நமோ நமஸ்Sதே, ஜகதாம் விதாத்ரி!
நமோ நமஸ்Sதே, கருணார்த்ர சித்தே!
நமோ நமஸ்Sதே, ஸகலார்த்திஹந்த்ரி!

கொழுந்து விட்டு எரியும் நெருப்பிலிருந்து வரும் தீப்பொறிகள் போல அனைத்து ஜீவன்களும் தேவியிடமிருந்து வந்தவைகளே. அனைத்து சக்தியும் அவளுள் அடக்கம். அம்பாள் ஸர்வ சக்திமயீ, கருணாமயீ. அந்த தேவிக்கு நமஸ்காரம்.

10. துர்கே மஹாலக்ஷ்மி, நமோ நமஸ்தே;
பத்ரே, மஹாவாணி, நமோ நமஸ்தே!
கல்யாணி! மாதங்கி! ரமே! பவானி!
ஸர்வஸ்வரூபே! ஸததம் நமஸ்தே

அம்பாள், பிரம்மம், பரமாத்மா, பலரூபம், பலநாமம், துர்க்கா, பத்ரா, கல்யாணீ, மாதங்கீ எல்லாமே ஒன்றுதான். எப்படி அழைத்தாலும் அன்னை அருள் செய்வாள். நதிகள் பலவாக ஆனாலும் அவைகள் போய்ச் சேருமிடம் ஒன்றுதான். அந்த தேவிக்கு நமஸ்காரம்.

11. யத் கிஞ்சித ஞா,தவ தேஹ! தேவீ –
-நாராயணீயம், ரசிதம் மயேதம்
அபத்ரநாசாய, ஸதாம் ஹிதாய
தவ ப்ரஸாதாய, ச நித்யமஸ்து

தேவியினுடைய அதாவது நாராயணீயின் மகத்துவத்தை வருணிக்கும் இந்த ஸ்தோத்திரத்திற்கு தேவீ நாராயணியம் என்று பெயர். ஒன்றுமே தெரியாமல் நான் இந்த ஸ்தோத்திரத்தை எழுதி இருக்கிறேன். இருந்தாலும் நான் எழுதிய இந்த ஸ்லோகம் உலக க்ஷேமத்திற்கும் இதைப் படிப்பவர்களுக்கும் தேவியின் அருள் கிடைக்க உதவட்டும் என்று சொல்லி தேவியை நமஸ்காரம் செய்து இந்த தேவீ நாராயணீயத்தைப் பூர்த்தி செய்கிறார்.

காயேன வாசா, மனஸேந்த்ரியைர்வா
மா ஜாது பாபம், கரவாணீ தேவி!
மமாஸ்து ஸத் கர்ம, ரதி:ப்ரியஸ்தே
பவானி; பக்தம் குரு மாம் நமஸ்தே.

முற்றும்.

40 சத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரார்த²னா

 






40 சத்வாரிம்ʼஶத³ஶக꞉ - ப்ரார்த²னா

ஆத்³யேதி வித்³யேதி ச கத்²யதே யா யா சோத³யேத்³பு³த்³தி⁴முபாஸகஸ்ய . த்⁴யாயாமி தாமேவ ஸதா³(அ)பி ஸர்வசைதன்யரூபாம்ʼ ப⁴வமோசனீம்ʼ த்வாம் .. 40-1.. ப்ரதிஷ்டி²தா(அ)ந்த꞉கரணே(அ)ஸ்து வாங்மே வதா³மி ஸத்யம்ʼ ந வதா³ம்யஸத்யம் . ஸத்யோக்திரேனம்ʼ பரிபாது மாம்ʼ மே ஶ்ருதம்ʼ ச மா விஸ்ம்ருʼதிமேது மாத꞉ .. 40-2.. தேஜஸ்வி மே(அ)தீ⁴தமஜஸ்ரமஸ்து மா மா பரத்³வேஷமதிஶ்ச தே³வி . கரோமி வீர்யாணி ஸமம்ʼ ஸுஹ்ருʼத்³பி⁴ர்வித்³யா பரா ஸா(அ)வது மாம்ʼ ப்ரமாதா³த் .. 40-3.. த்வம்ʼ ரக்ஷ மே ப்ராணஶரீரகர்மஜ்ஞானேந்த்³ரியாந்த꞉கரணானி தே³வி . ப⁴வந்து த⁴ர்மா மயி வைதி³காஸ்தே நிராக்ருʼதிர்மா(அ)ஸ்து மித²꞉ க்ருʼபார்த்³ரே .. 40-4.. யச்ச்²ரூயதே யத்க²லு த்³ருʼஶ்யதே ச தத³ஸ்து ப⁴த்³ரம்ʼ ஸகலம்ʼ யஜத்ரே . த்வாம்ʼ ஸம்ʼஸ்துவன்னஸ்தஸமஸ்தரோக³ ஆயு꞉ ஶிவே தே³வஹிதம்ʼ நயானி .. 40-5.. அவிக்⁴னமாயாத்விஹ விஶ்வதோ மே ஜ்ஞானம்ʼ ப்ரஸன்னா மம பு³த்³தி⁴ரஸ்து . நாவேவ ஸிந்து⁴ம்ʼ து³ரிதம்ʼ ஸமஸ்தம்ʼ த்வத்ஸேவயைவாதிதராமி தே³வி .. 40-6.. உர்வாருகம்ʼ ப³ந்த⁴னதோ யதை²வ ததை²வ முச்யேய ச கர்மபாஶாத் . த்வாம்ʼ த்ர்யம்ப³காம்ʼ கீர்திமதீம்ʼ யஜேய ஸன்மார்க³தோ மாம்ʼ நய விஶ்வமாத꞉ .. 40-7.. க்ஷீணாயுஷோ ம்ருʼத்யுக³தான் ஸ்வஶக்த்யா தீ³ர்கா⁴யுஷோ வீதப⁴யான் கரோஷி . ஸங்க³ச்ச²த꞉ ஸம்ʼவத³தஶ்ச ஸர்வான் பரோபகாரைகரதான் குருஷ்வ .. 40-8..ஹம்ʼ பா³லிஶபு³த்³தி⁴ரேவ த⁴ர்மானபி⁴ஜ்ஞோ(அ)ப்யபராத⁴க்ருʼச்ச . ஹா து³ர்லப⁴ம்ʼ மே கபிஹஸ்த
மர்த்யோ ஹ்யபுஷ்பஸுமால்யவச்சீ²ர்ணமித³ம்ʼ ந்ருʼஜன்ம .. 40-9.. யதா² பதா² வாரி யதா² ச கௌ³꞉ ஸ்வம்ʼ வத்ஸம்ʼ ததா²(ஆ)தா⁴வது மாம்ʼ மனஸ்தே . விஶ்வானி பாபானி விநாஶ்ய மே யத்³ப⁴த்³ரம்ʼ ஶிவே தே³ஹி ததா³ர்திஹந்த்ரி .. 40-10.. ப³ஹூக்திபி⁴꞉ கிம்ʼ விதி³தஸ்த்வயா(அ)ஹம்ʼ புத்ர꞉ ஶிஶுஸ்தே ந ச வேத்³மி கிஞ்சித் . 

ஆக³ச்ச² பஶ்யானி முகா²ரவிந்த³ம்ʼ பதா³ம்பு³ஜாப்⁴யாம்ʼ ஸததம்ʼ நமஸ்தே .. 40-11..



தசகம் 40

இந்த 40 ஆவது தசகமும் 41 ஆவது தசகமும் நித்ய ஜபத்திற்கு உகந்தது. 40 ஆவது தசகத்தில் தேவி பாகவதத்திலுள்ள தேவீ காயத்ரீ மந்திரத்தை முதல் ஸ்லோகத்தில் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து உபநிஷத் மந்திரங்களைக் குறிக்கும் பிரார்த்தனைகள். “வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்” இது 2 ஆவது ஸ்லோகத்தில் வருணிக்கப் படுகிறது. “ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” இது 3 ஆவ்து ஸ்லோகத்திலும் “அணிதாகரணமஸ்து” இது 4 ஆவது ஸ்லோகத்திலும், “ஸ்திரைர் அங்கை சுற்றுவாம் ஸஷ்டுதிர் வஸே தேவஹிதம் யதாது” இது 5 ஆவது ஸ்லோகத்திலும், “ஓம் த்ரியம்பகம் யஜாமஹே ஸுகந்திம் புஷ்டிவர்தனம் ஊர்வாருகமிவ பந்தனாத், ம்ருத்யோர் முக்ஷீய மாம் ருதாத்” என்னும் மிருத்யுஞ்ய மந்திரத்தை நினைவு கூ றும் 7 ஆவது ஸ்லோகம், இவைகள் எல்லாம் தினமும் சொல்வதற்கு உகந்தது

”ஸர்வ சைதன்ய ரூபாம் தாம் ஆத்யாம் வித்யாம் சதீமஹீ புத்திம் யோன: ப்ரோசோதயாது” இதுதான் தேவி காயத்ரீ.

1. ஆத்யேதி வித்யேதி, ச கத்யதே யா
யா சோதயேத் புத்தி,முபாஸகஸ்ய
த்யாயாமி தாமேவ, ஸதாSபி ஸர்வ
சைதன்ய ரூபாம், பவமோசனீ த்வாம்

அம்பாள் ஆத்யை. அவள் இல்லை என்ற காலமே இல்லை. அதனால் தான் அவள் ஆத்யை. வித்யையும் அவித்யையும் அவளே. யாரிடம் வித்யா ஸ்வ்ரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு முக்தியையும், யாரிடம் அவித்யா ஸ்வரூபிணியாக இருக்கிறாளோ அவர்களுக்கு பந்தத்தையும் தருகிறாள். எல்லா ஜீவராசிகளிலும் இருப்பவள் அம்பாள் தான். இதுதான் தேவி காயத்ரியின் அர்த்தம்.

2. ப்ரதிஷ்டிதாSந்த:, கரணேஸ்து வாங் மே;
வதாமி ஸத்யம், ந வதாம்ய ஸத்யம்;
ஸத்யோக்திரேனம், பரிபாது மாம், மே
ச்ருதம் ச மா விஸ்,ம்ருதிமேது மாதஹ

ஒருவன் எப்படி நினைக்கிறானோ அதற்கு ஏற்ப அவன் வார்த்தைகளும் இருக்கும். வார்த்தைகள் எப்படியோ செயலும் அப்படியே. சொல், செயல், சிந்தனை எல்லாம் ஒன்று போல் இருந்தால் அவன் அதிர்ஷ்டசாலி. நல்ல சிந்தனை இருந்தால் தான், சொல்லும் செயலும் நல்லதாக இருக்கும். இதை இயக்கும் சக்தி நம்முடைய உள்மனம். தன்னுடைய உள்மனமும் நல்ல சிந்தனையோடு இருக்க வேண்டும் என்று ஆசிரியர் விரும்புகிறார். இந்த நல்ல எண்ணம் தன்னைக் காப்பாற்றும் என்று நம்புகிறார். எவ்வளவு நல்ல விஷயங்களைக் கேட்கிறோமோ அத்தனை அறிவும் வளரும். கேட்டதை மறந்தால் எந்த பயனும் இல்லை. அம்பாளின் அனுக்ரஹம் இருந்தால் கேட்டவைகள் மனதில் நிலைக்கும். நிறைய ஸ்ருதி வாக்யங்களின் அர்த்தம் இந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. ” வாங்மே மனஸி ப்ரதிஷ்டிதாம் மனோமே வாஸி ப்ரதிஷ்டிதம்” இதற்கு இதுதான் அர்த்தம்.

3. தேஜஸ்வி மேSதீத,மஜஸ்ரமஸ்து;
மா மா பரத்வேஷ,ம திஸ்ச தேவி!
கரோமி வீர்யாணி, ஸமம் ஸுஹ்ருத்பிர்;
வித்யா பரா ஸாSவது மாம் ப்ரமாதாது

எதைக் படிக்கிறோமோ, அதாவது கற்றுக் கொள்கிறோமோ அதை இயன்றவரையில் வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும். நாராயணீயம், தேவீ நாராயணீயம், பகவத் கீதை எல்லாம் படித்துவிட்டு, நல்ல தத்துவங்களை அறிந்து கொண்டு, பிறரிடம் அன்பில்லாமல் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் அதனால் பயன் இல்லை. பிறரிடம் த்வேஷத்துடன் நடந்து கொண்டால் மன அமைதி இருக்காது. இதை அனுபவத்தில் உணரலாம். அன்பிருந்தால் மன அமைதி கிடைக்கும். தனக்கு மன அமைதி இல்லாமல் போய்விடக் கூடாது என்று ஆசிரியர் பிரார்த்திக்கிறார். எல்லோரும் ஒன்று போல் ஸத் கர்மங்களைச் செய்து ஒன்று போல் பயனைப் பெற வேண்டும். அப்பொழுதான் ஜீவசமூகத்தில் சாந்தி இருக்கும். நம்முடைய செயல் தவறாக ஆகாமல் இருக்க பரமவித்யையை அப்யாசம் செய்ய வேண்டும். பரம ஞானம் வந்தால் தவறு செய்ய மாட்டான். ஓம் ஸஹ னாவவது, ஸஹ னௌ புனக்து, ஸஹ வீர்யம் கரவாவஹை, தேஜஸ்வினாவதிதமஸ்து, மா வித்விஸாவஹை, ஓம் சாந்தி சாந்தி சாந்தி” என்பதன் பொருள் இதுதான்.

4. த்வம் ரக்ஷ மே, ப்ராணசரீர கர்ம
ஞானேந்த்ரியாந்த:, கரணானி தேவி!
பவந்து தர்மா, மயி வைதிகாஸ்தே;
நிராக்ருதிர்மாSஸ்து, மித: க்ருபார்த்ரே!

பிராண சக்தி ஒருவனை சக்தனாக்கும். பிராணன் துர்பலன் ஆனால் சரீரமும் மனசும் துர்பலன் ஆகும். வாக்கு, கை, கால், ஆண்-பெண் குறி, புட்டம் இவைகள் செயற்புலன்கள். காது, சருமம், கண், நாக்கு, மூக்கு இவைகள் அறிவுப்புலன்கள். சித்தம், அஹங்காரம், புத்தி, மனம் இவைகள் அந்தகரணத்தின் விருத்தி பேதங்கள். இவை எல்லாம் சேர்ந்தது இந்த சரீரம். இந்த ச்ரீரத்தைக் காப்பாற்றும் பொறுப்பை யார் செய்வது? நாம் எவ்வளவு முயற்சித்தாலும் நம்மால் அது முடியாது. அம்பாள் தான் அதைச் செய்ய வேண்டும். இந்த ஸ்தோத்திரதின் ஆசிரியர் அதை அம்பாள் பொறுப்பில் விட்டு விடுகிறார். வேதம் செய்யக் கூடிய, செய்யக் கூடாத கர்மங்களைப் பற்றிச் சொல்கிறது. வேதம் சொல்லும் செய்யக்கூடிய கர்மங்களை நான் செய்ய வேண்டும். செய்யக்கூடாத கர்மங்களை நான் செய்யக்கூடாது. அப்படியான புத்தியை எனக்குத் தா என வேண்டுகிறார். எனக்கு அம்பாளிடம் பக்தியும், அம்பாளுக்கு என்னிடம் கருணையும் வரவேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.

5. யத் ச்ரூயதே யத், கலு த்ருச்யதே ச;
ததஸ்து பத்ரம், ஸகலம் யஜத்ரே!
த்வாம் ஸம்ஸ்துவன் அஸ்த ஸமஸ்தரோக
ஆயு: சிவே! தேவ,ஹிதம் நயானி

யாரைத் திருப்தி படுத்த யக்ஞம் செய்யப்படுகிறதோ அது அம்பாள் தான். அவள் கேட்பதும் காண்பதும் நல்லதாக இருக்க வேண்டும். அந்த தேவியிடம் தனக்கு தேவஹிதமான ஆயுள் வேண்டும் என வேண்டிக்கொள்கிறார். அதாவது தான் செய்ய நினைத்திருக்கும் காரியங்கள் நிறைவேறும் வரை ( பூஜை, பாராயணம் போன்ற கடமைகளும் ஆசைகளும்) எந்த காரணத்தாலும் அதாவது நோய் போன்றவைகளால் பீடிக்கப்பட்டுத் தன் ஆயுள் முடிந்து விடக்கூடாது என வேண்டிக்கொள்கிறார்.

6. அவிக்னமாயாத்,விஹ விச்வதோ மே
ஞானம், ப்ரஸன்னா, மம புத்திரஸ்து;
நாவேவ ஸிந்தும், துரிதம் ஸமஸ்தம்
த்வஸேவயைவாதி,தராமி தேவி

காண்பவைகளும், கேட்பவைகளும் புதுப் புது அறிவைத் தரவேண்டும். எல்லாவிதத்திலிருந்தும் அறிவு வளர வேண்டும். அறிவு வளர வளர புத்திப் பிரகாஸமாகும். புத்தி தெளிந்தால் பாப வாஸனைகள் நசிக்கும். ஒரு கடலைக் கடக்க ஒரு கப்பல் வேண்டும். அதுபோல தேவி த்யானம் என்ற கப்பலின் உதவியால் துரித ஸாகரத்தைக் கடக்கலாம். அதாவது துன்பம் தரும் ஸம்சார ஸாகரத்தைக் கடக்கலாம்.

7. உர்வாருகம் பந்,தனதோ யதைவ
ததைவ முச்யேய, ச கர்மபாசாத்
த்வாம் த்ர்யம்பகாம் கீர்த்தி,மதிம் யஜேய;
ஸன்மார்க்கதோ மாம், நய விச்வமாதஹ

பழைய நாட்களில் பூஷணிக்காய், பறங்கிக்காய் போன்றவைகளை ஒரு உறி போன்ற கயிற்றில் கட்டி வைத்திருப்பார்கள். குளிர் சாதனப் பெட்டி இல்லாத காலம் அது. நாட்கள் பல ஆனாலும் பூசனிக்காய் ஒன்றும் ஆகாது. ஆனால் அதைக் கட்டி இருக்கும் கயிறு நைந்து போனால் பூசணிக்காய் கீழே விழுந்து உடைந்துவிடும். அதைப் போல நம்முடைய கர்மம் தீரும் வரை நாமும் பூசணிக்காய் போலத்தான். கர்மம் முடிந்ததும் எங்கிருந்து வந்தோமோ அங்கேயே சென்று விடுவோம். கர்மம் என்ற கயிற்றிலிருந்துத் தனக்கு விமோசனம் வேண்டும் என்று ஆசிரியர் வேண்டிக் கொள்கிறார். அதாவது தன்னுடைய கர்மம் தீரும் வரை, என்னை இந்த உலகில் விட்டு வை என்று வேண்டிக் கொள்கிறார். ( கர்மம் முடியாவிட்டால் மீண்டும் பிறக்க வேண்டும்) தேவிக்கு மூன்று கண். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம். ஜாக்ரத், ஸ்வப்ன, ஸுசுக்தி. பூதம், வர்த்தமானம், பாவி (past, present, future). இப்படி எல்லாவற்றிலும் தேவியின் பார்வை இருக்கிறது. அவள் திருஷ்டி படாத இடமே இல்லை. என்னை நீ நேர்வழியில் நடத்த வேண்டும் என்று வேண்டுகிறார்.

8. க்ஷீணாயுஷோ ம்ருத்யுகதான் ஸ்வசக்த்யா
தீர்க்காயுஷோ வீத,பயான் கரோஷி;
ஸங்கச்சத: ஸம்,வதஸ் ச ஸர்வான்
பரோபகாரை, கரதான் குருஷ்வ

இறந்தவனுக்கும் உயிர் கொடுக்க தேவியால் முடியும். 36 ஆவது தசகத்தில் பிரியவிரதனின் இறந்த மகனுக்கு தேவஸேனா உயிர் கொடுத்தாள் என்பதைப் பார்த்தோம். எல்லோரையும் பரோபகாரர்களாக்க அன்னையால் முடியும். மனித வாழ்க்கையின் யாத்திரையிலும், அனைவருக்கும் ஒற்றுமை வேண்டும்.அந்த ஒற்றுமை உணர்வை அனைவருக்கும் உண்டாக்க அம்பாளால் முடியும். அதனால் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க தேவியை ஆசிரியர் வேண்டுகிறார்.

9. மர்த்யோ ஹ்யஹம் பாலிச,புத்திரேவ
தர்மானபிஞ்ஞோ, ப்யபராத க்ருச்ச;
ஹா! துர்லபம் மே, கபிஹஸ்த புஷ்ப
ஸுமால்யவத் சீர்ண,மிதம் ந்ருஜன்ம

ஒரு ஜீவன் மனிதனாகப் பிறப்பது அவனுடைய பாக்யம். அப்படிக் கிடைத்தற்கரிய மனிதப் பிறவியை விவேகியானவன் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அறிவுள்ள மனிதர்களைத் தேடி, ஸ்வதர்மத்தைத் தெரிந்து கொண்டு, அதைத் தவறாமல் அனுஷ்டிக்க வேண்டும். அதனால் ராக த்வேஷம் என்ற அழுக்கு அழியும், மனம் தூய்மை யாகும். தூய்மையான மனதில் தூய்மையான தேவி பக்தி வளரும். அவன் பரமபதம் அடைவான். இதையெல்லாம் அடையாத மனித ஜன்மம் வீண். அவன் பிறப்பு குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை போல் ஆகும். தன் ஜன்மம் அப்படி ஆகிவிடக் கூடாது என ஆசிரியர் வேண்டுகிறார்.

10. யதா பதா வாரி, யதா ச கௌ: ஸ்வம்
வத்ஸம் ததாSSதாவது மாம் மனஸ்தே;
விச்வானி பாபானி, வினாச்ய மே யது
பத்ரம் சிவே! தேஹி ததார்த்திஹந்த்ரி!

ஆறு, குளம் போன்ற இடங்களிலிருந்து தண்ணீரை ஒரு குழாயின் மூலம் திறந்து விட்டால் தண்ணீர் சீராக வீணாகாமல் வரும்.அதைப் போல ஒரு பசுவை அவிழ்த்துவிட்டால் அது கன்றைத் தேடி வரும். இதைப் போல அம்பாளின் கருணையும் என்னை நோக்கி வரவேண்டும். நான் ஏதும் பாபம் செய்திருந்தால் அதையும் நீ போக்கி விடு .அது உன் கருணைக்குத் தடையாக இருக்கக் கூடாதுஎன்று பிரார்த்திக்கிறார்.

11. பஹூக்திபி: கிம்? விதிதஸ்த்வயாSஹம்
புத்ர: சிசுஸ்தே, ந ச வேத்மி கிஞ்சிது;
ஆ கச்ச பச்யானி, முகாரவிந்தம்;
பதாம்புஜாப்யாம், ஸததம் நமஸ்தே

அம்பாள் லோகமாதா. ஸகல ஜீவன்களுக்கும் அன்னை. இந்த ஸ்தோத்திரக்காரர் ஒரு குழந்தை. அவரால் அதிகமாகப் பேச முடியாது. அதனால் தேவியைக் கண்முன் வருமாறு அழைக்கிறார். எனக்கு ஒரு தரிசனம் தரகூடாதா? உன் முகத்தை ஒருமுறை காட்டக் கூடாதா? என்று கேட்கிறார். அதற்காக மனமுருகி தேவியின் பாதத்தில் நமஸ்கரிக்கிறார்.

நாற்பதாம் தசகம் முடிந்தது

39 ஏகோனசத்வாரிம்ʼஶத³ஶக꞉ - மணித்³வீபநிவாஸினீ

39 ஏகோனசத்வாரிம்ʼஶத³ஶக꞉ - மணித்³வீபநிவாஸினீ

ஸுதா⁴ஸமுத்³ரோ ஜக³தாம்ʼ த்ரயாணாம்ʼ ச²த்ரீப⁴வன் மஞ்ஜுதரங்க³பே²ன꞉ . ஸவாலுகாஶங்க²விசித்ரரத்ன꞉ ஸதாரகவ்யோமஸமோ விபா⁴தி .. 39-1.. தன்மத்⁴யதே³ஶே விமலம்ʼ மணித்³வீபாக்²யாம்ʼ பத³ம்ʼ தே³வி விராஜதே தே . யது³ச்யதே ஸம்ʼஸ்ருʼதிநாஶகாரி ஸர்வோத்தரம்ʼ பாவனபாவனம்ʼ ச .. 39-2.. தத்ராஸ்த்யயோதா⁴துமயோ மனோஜ்ஞ꞉ ஸாலோ மஹாஸாரமயஸ்ததஶ்ச . ஏவம்ʼ ச தாம்ராதி³மயா꞉ கிலாஷ்டாத³ஶாதிசித்ரா வரணா லஸந்தி .. 39-3.. தைராவ்ருʼதம்ʼ தே பத³மத்³விதீயம்ʼ விபா⁴தி சிந்தாமணிஸத்³ம தே³வி . ஸந்த்யத்ர ஸத்ஸ்தம்ப⁴ஸஹஸ்ரரம்யஶ்ருʼங்கா³ரமுக்த்யாதி³கமண்ட³பாஶ்ச .. 39-4.. ப்³ரஹ்மாண்ட³கோடீ꞉ ஸுக²மாவஸந்த உபாஸகாஸ்தே மனுஜா꞉ ஸுராஶ்ச . தை³த்யாஶ்ச ஸித்³தா⁴ஶ்ச ததே²தரே ச யத³ந்ததோ யாந்தி பத³ம்ʼ ததே³தத் .. 39-5.. த்வம்ʼ மண்ட³பஸ்தா² ப³ஹுஶக்தியுக்தா ஶ்ருʼணோஷி தே³வீகலகீ³தகானி . ஜ்ஞானம்ʼ விமுக்திம்ʼ ச த³தா³ஸி லோகரக்ஷாமஜஸ்ரம்ʼ குருஷே ச தே³வி .. 39-6.. மஞ்சோ(அ)ஸ்தி சிந்தாமணிகே³ஹதஸ்தே ப்³ரஹ்மா ஹரீ ருத்³ர இஹேஶ்வரஶ்ச . கு²ரா ப⁴வந்த்யஸ்ய ஸதா³ஶிவஸ்து விராஜதே ஸத்ப²லகத்வமாப்த꞉ .. 39-7.. தஸ்யோபரி ஶ்ரீபு⁴வனேஶ்வரி த்வம்ʼ ஸர்வேஶவாமாங்கதலே நிஷண்ணா . சதுர்பு⁴ஜா பூ⁴ஷணபூ⁴ஷிதாங்கீ³ நிர்வ்யாஜகாருண்யவதீ விபா⁴ஸி .. 39-8.. ப்ரதிக்ஷணம்ʼ காரயஸி த்வமிச்சா²ஜ்ஞானக்ரியாஶக்திஸமன்விதா(அ)த்ர . த்ரிமூர்திபி⁴꞉ ஶக்திஸஹஸ்ரயுக்தா ப்³ரஹ்மாண்ட³ஸர்க³ஸ்தி²திஸம்ʼஹ்ருʼதீஶ்ச .. 39-9.. ஸா த்வம்ʼ ஹி வாசாம்ʼ மனஸோ(அ)ப்யக³ம்யா விசித்ரரூபா(அ)ஸி ஸதா³(அ)ப்யரூபா . புர꞉ ஸதாம்ʼ ஸந்நிஹிதா க்ருʼபார்த்³ரா ஸதா³ மணித்³வீபநிவாஸினீ ச .. 39-10.. மாதர்மத³ந்த꞉கரணே நிஷண்ணா வித்³யாமயம்ʼ மாம்ʼ குரு ப³ந்த⁴முக்தம் . ப³ந்த⁴ம்ʼ ச மோக்ஷம்ʼ ச த³தா³ஸ்யஸக்தா தா³ஸோ(அ)ஸ்மி தே தே³வி நமோ நமஸ்தே .. 39-11..

 

தசகம் 39

மணித்வீபநிவாஸினி

1. ஸுதாஸமுத்ரோ, ஜகதாம் த்ரயாணாம்
சத்ரீபவன் மஞ்சு தரங்க: பேனஹ
ஸவாலுகாசக,விசித்ரரத்னஹ
ஸதாரகவ்யோ,மஸமோ விபாதி

ஸுதா⁴ஸமுத்³ரோ ஜக³தாம்ʼ த்ரயாணாம்ʼ ச²த்ரீப⁴வன் மஞ்ஜுதரங்க³பே²ன꞉ . ஸவாலுகாஶங்க²விசித்ரரத்ன꞉ ஸதாரகவ்யோமஸமோ விபா⁴தி .. 39-1.

பூமிக்கு மேலே ஸ்வர்க்க லோகம், பிரம்மலோகம், கைலாயம், வைகுண்டம் அதற்கும் மேல் அமுத ஸமுத்திரம். பிரம்மாண்டங்கள் கோடிக்கணக்கில் உண்டு. ஒவ்வொன்றிலும் சிவனும் விஷ்ணுவும் அவரவர் உலகங்களும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலே அமுத ஸமுத்திரம். அதனால் அதை பிரம்மாண்டங்களின் குடை என்று சொல்லப்படுகிறது. இந்த அமுத ஸமுத்திரத்தைப் பார்த்தால் நக்ஷத்திரங்களோடு கூடிய ஆகாயம் போல் தோன்றும். அமுத ஸமுத்திரத்தில் உள்ள ரத்தினங்களும் முத்துக்களும் சங்குகளும் ஆகாய நக்ஷத்திரங்கள் போல் ஜொலிக்கின்றன. இரண்டும் பிரகாசமான இடம் தான்.

2. தன்மத்யதேசே, விமலம் மணித்வீ-
-பாக்யம் பதம் தேவி!, விராஜதே தே;
யதுச்யதே ஸம்,ஸ்ருதி நாசகாரி
ஸர்வோக்தரம் பா,வனபாவனம் ச

தன்மத்⁴யதே³ஶே விமலம்ʼ மணித்³வீபாக்²யாம்ʼ பத³ம்ʼ தே³வி விராஜதே தே .
யது³ச்யதே ஸம்ʼஸ்ருʼதிநாஶகாரி ஸர்வோத்தரம்ʼ பாவனபாவனம்ʼ ச .. 39-2..

அமுதக் கடலின் நடுவில் மணித்வீபம் இருக்கிறது. அதுதான் புவனேஸ்வரியின் இருப்பிடம். மும்மூர்த்திகளும் இங்குதான் விமானத்தில் வந்து புவனேஸ்வரியை தரிசித்தார்கள். இங்கு வந்தால் ஜீவனின் ஸம்சார துக்கம் தீரும். கிருஷ்ணனும் ராதையும் கோலோகத்தில் ராஸமாடினார்கள். அதைவிட மகத்தான இடம் மணித்வீபம்.

3. தத்ராஸ்த்யயோதா,துமயோ மனோஜ்ஞஹ
ஸாலோ; மஹாஸார,மயஸ்த தச்ச
ஏவம் ச தாம்ராது,மயா: கிலாஷ்டா-
தசாதி சித்ரா, வரணா லஸந்தி

தத்ராஸ்த்யயோதா⁴துமயோ மனோஜ்ஞ꞉ ஸாலோ மஹாஸாரமயஸ்ததஶ்ச .
ஏவம்ʼ ச தாம்ராதி³மயா꞉ கிலாஷ்டாத³ஶாதிசித்ரா வரணா லஸந்தி .. 39-3..

மணித்வீபத்தைச் சுற்றி அமுத ஸமுத்திரம். அதைச் சுற்றி 18 கோட்டைகள். இரும்பு, வெண்கலம், தாமிரம், ஈயம், பித்தளை, பஞ்சலோகம், வெள்ளி, தங்கம், புஷ்பராகம், பத்மராகம், கோமேதகம், வஜ்ரம், வைடூர்யம், இந்திரநீலம், முத்து, மரகதம், பவழம், நவரத்னம், அடுத்து இருப்பது சிந்தாமணி கிருஹம். இந்த ஒவ்வொரு கோட்டையிலும் ஒவ்வொருவிதமான காட்சிகளைக் காணலாம். காவல் வீரர்கள், நடமாடும் மயில் கூட்டங்கள், கிணறுகள், தடாகங்கள், அழகான வீடுகள், ஒட்யாணங்கள், சித்தர்கள், திக்பாலர்கள், ஆயுதங்கள், சக்திகள், தேவியின் சேடிகள், மஹேஸ்வரியின் வாகனங்கள், தாமரை மலர், இதுபோன்று பல காட்சிகள் காணலாம். இதுதான் சோடசீ பூஜை என்பதாகும். சாதகன் அம்பாளை மனதில் நிலை நிறுத்தி, பிந்துவைக் குறிவைத்து, ஒவ்வொரு கோட்டையாகத் தாண்டி தேவியிடம் செல்கிறான். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு அனுபவம். இறுதியில் வரும் போது தடைகள் அதிகமாகவே வரக்கூடும். அதுதான் யுத்தம் செய்யத் தயாராக இருக்கும் சக்திகள்.

4. தைராவ்ருதம் தே, பதமத்விதீயம்
விபாதி சிந்தா,மணி ஸத்ம தேவி!
ஸந்த்யத்ர ஸத்ஸ்தம்ப, ஸஹஸ்ரரம்ய
ச்ருங்கார முக்த்யா,தித மண்டபாச்ச

தைராவ்ருʼதம்ʼ தே பத³மத்³விதீயம்ʼ விபா⁴தி சிந்தாமணிஸத்³ம தே³வி . 

ஸந்த்யத்ர ஸத்ஸ்தம்ப⁴ஸஹஸ்ரரம்யஶ்ருʼங்கா³ரமுக்த்யாதி³கமண்ட³பாஶ்ச .. 39-4..

18 மதில்களையும் தாண்டினால் சிந்தாமணி கிருஹம். அதன் மத்தியில் தேவியின் இருப்பிடமான, ஆயிரங்கால் மண்டபம். அம்மண்டபத்தின் நான்கு பக்கத்திலும் 4 மண்டபங்கள். சிருங்கார மண்டபம், முக்திமண்டபம், ஞான மண்டபம், ஏகாந்த மண்டபம். அவைகள் பலவிதமான நறுமணங்களோடும், சூரியனுக்குச் சமமான காந்தியுடனும் பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

5. ப்ரஹ்மாண்டகோடீ;, ஸுகமாவஸந்த
உபாஸகாஸ்தே, மனுஜா: ஸுராச்ச
தைத்யாச்ச ஸித்தாச்ச, ததே தரே ச
யதந்ததோ யாந்தி, பதம், ததேதது

ப்³ரஹ்மாண்ட³கோடீ꞉ ஸுக²மாவஸந்த உபாஸகாஸ்தே மனுஜா꞉ ஸுராஶ்ச . 

தை³த்யாஶ்ச ஸித்³தா⁴ஶ்ச ததே²தரே ச யத³ந்ததோ யாந்தி பத³ம்ʼ ததே³தத் .. 39-5..

மனிதர்கள் பூமியிலும், தேவர்கள் தேவலோகத்திலும் அவரவர்கள் இடத்திலிருந்து தேவியை த்யானம் செய்கிறார்கள். எல்லோரும் விரும்புவது பரமபதம். அதுதான் மணித்வீபம். இதைவிட மஹத்தான இடம் எதுவும் இல்லை.

6. த்வம் மண்டபஸ்தா, பஹுசக்தியுக்தா
ச்ருணோஷி தேவீ, களகீதகானி,
ஞானம், விமுக்திம், ச ததாஸி, லோக
ரக்ஷாமஜஸ்ரம், குருஷே ச தேவி!

த்வம்ʼ மண்ட³பஸ்தா² ப³ஹுஶக்தியுக்தா ஶ்ருʼணோஷி தே³வீகலகீ³தகானி . 

ஜ்ஞானம்ʼ விமுக்திம்ʼ ச த³தா³ஸி லோகரக்ஷாமஜஸ்ரம்ʼ குருஷே ச தே³வி .. 39-6..

மண்டபங்களின் 4 பக்கத்திலும் நறுமணம் கொண்ட மல்லிகை, குந்தம் போன்றவனங்களும், தாமரைத் தடாகங்களும், அமிர்த ரசத்தோடு ரீங்காரம் செய்யும் வண்டுகளும், அன்னங்களும் நிறைந்து இருக்கும்.சிருங்கார மண்டபத்தில் தேவியின் கணங்களின் கானங்கள். மத்தியில் அமர்ந்திருக்கும் தேவியும் மற்றவர்களும் அதைக் கேட்டு மகிழ்வார்கள். முக்தி மண்டபத்தில் ஆத்மாக்களின் பாசத்தை மோசனம் செய்யும் விதத்தை எண்ணியிருப்பாள். ஞான மண்டபத்தில் பாச மோசனத்திற்கான ஞான உபதேசம் செய்கிறாள். அங்கு வருபவர்களுக்கு அருகதை இருந்தால் முக்தியும், ஞானமும் தருகிறாள். ஏகாந்த மண்டபத்தில், இந்த உலகை ரக்ஷிப்பதற்காக மந்திரிணிகளோடு கூடி சிந்திப்பாள். இவைகள் எல்லாம் அம்பாளுக்கு ஒரு லீலைதான்.

7. மஞ்சோஸ்தி சிந்தா,மணிகேஹதஸ்தே;
ப்ரம்மா ஹரீ ருத்ர, இஹே ச்வரச்ச
குரா பவந்த்யஸ்ய;, ஸதாசிவஸ்து
விராஜதே ஸத்,பல கத்வமாப்தஹ

மஞ்சோ(அ)ஸ்தி சிந்தாமணிகே³ஹதஸ்தே ப்³ரஹ்மா ஹரீ ருத்³ர இஹேஶ்வரஶ்ச . 

கு²ரா ப⁴வந்த்யஸ்ய ஸதா³ஶிவஸ்து விராஜதே ஸத்ப²லகத்வமாப்த꞉ .. 39-7..

சிந்தாமணிக்ரஹத்தில் சக்தி தத்வாத்மகமாக இருக்கின்ற 10 படிகளோடு கூடிய ஒரு கட்டில். பிரம்மா, விஷ்ணு, ருத்திரர், ஈஸ்வரன் ஆகிய நால்வரும் அதன் கால்கள். சதாசிவன் அந்த நால்வரையும் இணைக்கும் பலகை. ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்ரஹம் இவைகளைச் செய்கிறார்கள். சைவர்கள் இந்த ஈஸ்வர ஸ்வரூபங்களைத் தான் சங்கல்பமாக வணங்கிறார்கள்.

8. தஸ்யோபரி ஸ்ரீ, புவனேஸ்வரி! த்வம்
ஸர்வேசவாமா,கதலே நிஷண்ணா
சதுர்புஜா பூ,ஷண பூஷிதாங்கீ
நிர்வ்யாஜ காருண்யவதீ விபாஸி

தஸ்யோபரி ஶ்ரீபு⁴வனேஶ்வரி த்வம்ʼ ஸர்வேஶவாமாங்கதலே நிஷண்ணா . 

சதுர்பு⁴ஜா பூ⁴ஷணபூ⁴ஷிதாங்கீ³ நிர்வ்யாஜகாருண்யவதீ விபா⁴ஸி .. 39-8..

புவனேஸ்வரி இந்த மஞ்சத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். சர்வ சௌந்தர்யத்தின் ஒருமித்த ரூபம் தான் அம்பாள். எல்லா பிரம்மாண்டங்களுக்கும் மணித்வீபம் ஒன்றுதான். புவனேஸ்வரியும் ஒன்றுதான். மணித்வீபம் பிரம்மாண்ட கோடிகளின் ஸமஷ்டி. ஸமஷ்டியின் பிரதிபலிப்பே வெஷ்டி. இதுதான் பிரம்மாண்டத்தில் நடக்கிறது.

9. ப்ரதிக்ஷணம் கார,யஸி த்வமிச்சா –
– ஞானக்ரியா- சக்தி,ஸமன்விதாSத்ர
த்ரிமூர்த்திபி! சக்தி,ஸஹஸ்ரயுக்தா
ப்ரமாண்ட ஸர்க்,ஸ்திதி, ஸம்ஹ்ருதீச்ச

ப்ரதிக்ஷணம்ʼ காரயஸி த்வமிச்சா²ஜ்ஞானக்ரியாஶக்திஸமன்விதா(அ)த்ர .
த்ரிமூர்திபி⁴꞉ ஶக்திஸஹஸ்ரயுக்தா ப்³ரஹ்மாண்ட³ஸர்க³ஸ்தி²திஸம்ʼஹ்ருʼதீஶ்ச .. 39-9..

பிரதானமான இச்சாசக்தி, ஞானசக்தி, க்ரியாசக்தி ஆகிய மூன்று சக்திகளும் தேவியின் கூடவே இருப்பார்கள். நிறைய சக்திகள் உண்டு. ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் அவரவருக்குத் தேவையான சக்திகளை அம்பாள் தருகிறாள். இந்த சக்திகள் இல்லாமல் ஒரு அணுவும் அசையாது. மணித்வீப வாஸியே அனைத்திற்கும் ஆதாரம். இவள் கண் திறந்தால் ஸ்ருஷ்டியும், கண்மூடினால் பிரளயமும் உண்டாகிறது.

10. ஸா த்வம் ஹி வாசாம், மனஸோSப்யகம்யா
விசித்ரரூபாSஸி, ஸதாSப்ய ரூபா
புர: ஸதாம் ஸன்னி,ஹிதா க்ருபார்த்ரா
ஸதா மனுத்வீப, நிவாஸினீச

ஸா த்வம்ʼ ஹி வாசாம்ʼ மனஸோ(அ)ப்யக³ம்யா விசித்ரரூபா(அ)ஸி ஸதா³(அ)ப்யரூபா . 

புர꞉ ஸதாம்ʼ ஸந்நிஹிதா க்ருʼபார்த்³ரா ஸதா³ மணித்³வீபநிவாஸினீ ச .. 39-10..

ஸுதா ஸிந்தோர் மத்யே ஸுரவிடபி வாடீ பரிவ்ருதே
மணித்வீபே நீபோபவனவதி சிந்தாமணி க்ருஹே/
சிவாகாரே மஞ்சே பரமசிவ பர்யங்க நிலயாம்
பஜந்தி த்வாம் தந்யா: கதிசந சிதாநந்த லஹரீம்//

அந்த தேவியை வருணிக்க எந்த மொழியிலும் வார்த்தைகள் இல்லை. மனதாலும் எட்டமுடியாது. அவள் ஸகுணை அல்ல. நிர்குணை. உண்மை பக்தர்கள் அழைத்தால் உடன், எப்பொழுதும் அவர்கள் முன் வருவாள். அவளே எப்பொழுதும் மணித்வீபத்திலும் இருக்கிறாள். இப்படிப் பெருமைகளைக் கொண்ட அம்பாளை வார்த்தைகளால் வருணிக்க முடியுமா? 18 கோட்டைகளைத் தாண்டி சிந்தாமணி க்ரஹம். அதில் தேவியைக் காண்கிறோம். அது நம்முடைய சிந்தனைச் சக்தியை தட்டி எழுப்புகிறது. பஞ்ச பூதங்களால் ஆனது இந்த சரீரம். அதற்குள் ஒரு ஸூஷ்ம சரீரம். அதில் 5 பிராணன்கள் இருக்கிறது. பிராணன், அபாணன், வியாணன், உதாணன் , ஸமாணன். 10 இந்திரியங்கள். மனம், புத்தி இவைகளுடன் 17 ஆகிறது. அதற்குப் பிறகு அவித்தையால் சூழப்பட்ட காரண சரீரம். மொத்தம் 18. இதற்கும் மேல் தேவி. பிராணன்களையும் இந்திரியங்களையும் அடக்கி, கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால் அந்த யோகிக்கு ஆத்ம தரிசனம் கிடைக்கும். நமது உடலே மணித்வீபம். அதில் இருக்கும் ஆத்மாதான் அம்பாள். உபாஸனையினால் ஆத்ம தரிசனம் கிடைக்கும். அதனால் கிடைக்கும் ஆனந்தமே அமுத ஸமுத்திரம்.

11. மாதர் மதந்தஹ, கரணே நிஷண்ணா
வித்யாமயம் மாம், குரு பந்தமுக்தம்
பந்தம் ச மோக்ஷம், ச ததாஸ்ய ஸக்தா
தாஸோSஸ்மி தே தேவி!, நமோ நமஸ்தே

மாதர்மத³ந்த꞉கரணே நிஷண்ணா வித்³யாமயம்ʼ மாம்ʼ குரு ப³ந்த⁴முக்தம் .
ப³ந்த⁴ம்ʼ ச மோக்ஷம்ʼ ச த³தா³ஸ்யஸக்தா தா³ஸோ(அ)ஸ்மி தே தே³வி நமோ நமஸ்தே .. 39-11.. 

 சிந்தாமணிக் ரஹத்தில் தேவீ எப்படி இருக்கிறாளோ அப்படியே தன் மனதிலும் இருக்க வேண்டும் என்று இதன் ஆசிரியரான பாலேலி நம்பூதிரி ஆசைப்படுகிறார். தேவிக்கு யாரிடமும் ராகமோ த்வேஷமோ இல்லை. தனக்கு அவித்யையை நீக்கி வித்யையைத் தருமாறு வேண்டிக் கொள்கிறார். அதற்காக மீண்டும் மீண்டும் நமஸ்காரம் செய்கிறார்.

முப்பத்தி ஒன்பதாம் தசகம் முடிந்தது

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்

 

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்



https://clipchamp.com/watch/8352lgPce6m

38 அஷ்டாத்ரிம்ʼஶத³ஶக꞉ - சித்தஶுத்³தி⁴ப்ராதா⁴ன்யம்

அந்தர்முகோ² ய꞉ ஸ்வஶுபே⁴ச்ச²யைவ ஸ்வயம்ʼ விமர்ஶேன மனோமலானி . த்³ருʼஷ்ட்வா ஶமாத்³யைர்து⁴னுதே ஸமூலம்ʼ ஸ பா⁴க்³யவாந்தே³வி தவ ப்ரியஶ்ச .. 38-1.. ந வேத³ஶாஸ்த்ராத்⁴யயனேன தீர்த²ஸம்ʼஸேவயா தா³னதபோவ்ரதைர்வா . ஶுத்³தி⁴ம்ʼ மனோ யாதி தவ ஸ்ம்ருʼதேஸ்தத்³வைஶத்³யமாத³ர்ஶவதே³தி மாத꞉ .. 38-2.. ஶுத்³தி⁴ர்ன யஜ்ஞேன யஜன் ஶஶாங்க꞉ பத்னீம்ʼ கு³ரோ꞉ ப்ராப ப்⁴ருʼஶம்ʼ ஸ்மரார்த꞉ . ஶதக்ரதுர்கௌ³தமத⁴ர்மபத்னீமகா³த³ஹல்யாம்ʼ மத³னேஷு வித்³த⁴꞉ .. 38-3.. ஸ விக்⁴னகாரீ தபஸாம்ʼ முனீனாம்ʼ க³தஸ்ப்ருʼஹம்ʼ யோகி³வரம்ʼ ப்ரஶாந்தம் . ஹா விஶ்வரூபம்ʼ பவினா ஜகா⁴ன ந கிஞ்சனாகார்யமத⁴ர்மபு³த்³தே⁴꞉ .. 38-4.. முநிர்வஸிஷ்ட²꞉ க²லு தீர்த²ஸேவீ தபோநிதி⁴ர்கா³தி⁴ஸுதஶ்ச கோபாத் . உபௌ⁴ மித²꞉ ஶேபதுராடி³பா⁴வம்ʼ ப்ராப்த꞉ கிலைகோ ப³கதாம்ʼ பரஶ்ச .. 38-5.. த⁴னானி ப்ருʼஷ்டானி கு³ரூனதா³த்ரூʼன் ஸ்வான் பா⁴ர்க³வான் புத்ரகலத்ரபா⁴ஜ꞉ . க்ருத்³தா⁴꞉ பரம்ʼ ஹைஹயபூ⁴மிபாலா ந்யபீட³யன் கோ(அ)த்ர விஶுத்³த⁴சித்த꞉ .. 38-6.. குர்யான்ன கிம்ʼ லோப⁴ஹதோ மனுஷ்யோ யுதி⁴ஷ்டி²ராத்³யா அபி த⁴ர்மநிஷ்டா²꞉ . பிதாமஹம்ʼ ப³ந்து⁴ஜனான் கு³ரூம்ʼஶ்ச ரணே நிஜக்⁴னு꞉ க²லு ராஜ்யலோபா⁴த் .. 38-7.. க்ருʼஷ்ணோபதி³ஷ்டோ ஜனமேஜயஸ்து ஶுத்³தா⁴ந்தரங்க³꞉ பிதரம்ʼ மகே²ன . பரீக்ஷிதம்ʼ பாபவிமுக்தமார்யம்ʼ விதா⁴ய தே ப்ராபயதிஸ்ம லோகம் .. 38-8.. ஸதா³ ஸதா³சாரரதோ விவிக்தே தே³ஶே நிஷண்ணஶ்சரணாம்பு³ஜே தே . த்⁴யாயன்னஜஸ்ரம்ʼ நிஜவாஸனா யோ நிர்மார்ஷ்டி ஸ த்வன்மயதாமுபைதி .. 38-9.. ஜ்ஞானம்ʼ ந ப⁴க்திர்ன தபோ ந யோக³பு³த்³தி⁴ர்ன மே சித்தஜயோ(அ)பி மாத꞉ . அந்த⁴ம்ʼ தமோ(அ)ஹம்ʼ ப்ரவிஶாமி ம்ருʼத்யோ꞉ ஸமுத்³த⁴ரேமம்ʼ வரதே³ நமஸ்தே .. 38-10..

தசகம் 38

சித்த சுத்திப்ராதான்யம்

1. அந்தர்முகோ ய: ஸ்வ,சுபேச்சயைவ
ஸ்வயம் விமர்சேன, மனோமலானி
த்ருஷ்ட்வா சமாத்யைர், துனுதே ஸமூலம்
ஸ பாக்யவான்; தேவி! , தவ பிரியச்ச

அந்தர்முகோ² ய꞉ ஸ்வஶுபே⁴ச்ச²யைவ ஸ்வயம்ʼ விமர்ஶேன மனோமலானி . 

த்³ருʼஷ்ட்வா ஶமாத்³யைர்து⁴னுதே ஸமூலம்ʼ ஸ பா⁴க்³யவாந்தே³வி தவ ப்ரியஶ்ச .. 38-1..

அனேக மனிதர்கள் பணம் ,பதவி, மனைவி, மக்கள் என்று இவைகளில் மோஹம் கொண்டு காலத்தைப் பாழாகக் கழிக்கிறார்கள். துச்சமாக நினைக்க வேண்டிய இந்த விஷயங்களில் மன நாட்டம் இல்லாமல் யாரேனும் ஒருவன் தான் மனிதப் பிறவி எடுத்ததை சரியாகப் பயன் படுத்திக் கொண்டால் அது அற்புதம் தான். அதுதான் அவனின் ஆசையும் கூட. அப்படி மோகத்திற்கும் காமத்திற்கும் அடிமையாகாமல் சுதந்திரமாக இருக்க நினைப்பவன் முதலில் தன் மனதைத் தானே விமர்சனம் செய்து கொண்டு, மனதைத் தூய்மை படுத்திக் கொள்ள வேண்டும். மனதில் உள்ள அழுக்குகளான காமம், க்ரோதம் போன்றவைகளையும், இது போலவே நல்ல செயல், சொல், சிந்தனைகளையும் அறிந்து கொள்ள வேண்டும். நல்ல செயல்களையும் சிந்தனைகளையும் அதிகரிக்க மனதை ஸமப் படுத்திக்கொள்ள வேண்டும். ஸமம், தமம் இவைகளைப் பழக்கப்படுத்திக் கொண்டால் மன அழுக்குகளைக் களையலாம். இப்படித் தன்னைத் தானே தூய்மைபடுத்திக் கொள்பவன் தேவிக்கு மிகவும் பிரியமானவன் ஆகிறான்.

2. ந வேதசாஸ்த்ராத், யயனேன தீர்த்த
ஸம்ஸேவயா தான, தபோ வ்ரதைர் வா
சுத்திம் மனோ யாதி, தவ ஸ்ம்ருதே ஸ்தத்
வைசத்யமாதர், சவதேதி மாத ஹ!

ந வேத³ஶாஸ்த்ராத்⁴யயனேன தீர்த²ஸம்ʼஸேவயா தா³னதபோவ்ரதைர்வா . 

ஶுத்³தி⁴ம்ʼ மனோ யாதி தவ ஸ்ம்ருʼதேஸ்தத்³வைஶத்³யமாத³ர்ஶவதே³தி மாத꞉ .. 38-2..

தன்னைத் தானே விமர்சித்துக் கொள்ளாவிட்டால் மன அழுக்கைக் களைய முடியாது. புண்ணியதீர்த்த ஸ்நானம், விரதம், தானதருமம், வேத சாஸ்திரங்களைப் படிப்பது இவைகள் நல்லவைகள் தான். ஆனால் மனம் தூய்மை அடையாது. நிரந்தர தேவி த்யானம் தான் சிறந்த வழி.

3. சுத்திர் ந யக்ஞேன – யஜன் சசாங்கஹ
பத்னீம் குரோ: ப்ராப, ப்ருசம் ஸ்மரார்த்தஹ
சதக்ரதுர் கௌ,தம தர்ம பத்னீம்
அகாத ஹல்யாம், மதனேஷு வித்தஹ

ஶுத்³தி⁴ர்ன யஜ்ஞேன யஜன் ஶஶாங்க꞉ பத்னீம்ʼ கு³ரோ꞉ ப்ராப ப்⁴ருʼஶம்ʼ ஸ்மரார்த꞉ . 

ஶதக்ரதுர்கௌ³தமத⁴ர்மபத்னீமகா³த³ஹல்யாம்ʼ மத³னேஷு வித்³த⁴꞉ .. 38-3..

ஒருவன் யக்ஞம் செய்வதால் மட்டும் மனத்தூய்மை பெறமுடியாது என்பதற்கு சந்திரனின் கதை ஒரு உதாரணமாகிறது. சந்திரன் யக்ஞம் செய்தான். ஆனால் தன் குருவான பிரகஸ்பதியின் மனைவி தாரையிடம் ஆசை கொண்டு ஒரு மகனையும் பெற்றான். தேவேந்திரன் 100 யாகம் செய்தான். ஆனால் கௌதமரின் மனைவி அகலிகையை மயக்கினான். யாகமும் செய்த இந்திரனும் சந்திரனும் காமத்தை ஜெயிக்கவில்லை.

4. ஸ விக்னகாரீ, தபஸாம் முனீனாம்;
கதஸ்ப்ருஹம் யோகி,வரம் ப்ரசாந்தம்
ஹா! விச்வரூபம், பவினா ஜகான;
ந கிஞ்சனா கார்ய, மதர்ம புத்தேஹே

ஸ விக்⁴னகாரீ தபஸாம்ʼ முனீனாம்ʼ க³தஸ்ப்ருʼஹம்ʼ யோகி³வரம்ʼ ப்ரஶாந்தம் .
ஹா விஶ்வரூபம்ʼ பவினா ஜகா⁴ன ந கிஞ்சனாகார்யமத⁴ர்மபு³த்³தே⁴꞉ .. 38-4..

100 யாகம் செய்த இந்திரன் மனதில் காமம், குரோதம், பொறாமை எல்லாம் இருந்தது. பூமியில் நடக்கும் நல்ல கர்மங்களைத் தடுக்க இந்திரன் செய்த முயற்சிகளைப் புராணங்கள் சொல்கின்றன. நர நாராயணர்களின் தவத்தைக் கலைக்க இந்திரன் செய்த முயற்சி தோல்வியை அடைந்தது. எதிலும் விருப்பம் இல்லாமல் தவம் செய்த விஸ்வரூபன் தலையைக் காரணமில்லாமல் இந்திரன் வெட்டினான். புத்தியில் அதர்மம் புகுந்தால் யாரும் எதையும் செய்வார்கள் என்பதற்கு இது உதாரணம்.

5. முனிர் வஸிஷ்ட:, கலு தீர்த்தஸேவீ
தபோநிதிர் காதி, ஸுதச்ச கோபாது
உபௌ மித: சேப,து; ராடி பாவம்
ப்ராப்த: கிலைகோ, பகதாம் பரச்ச

முநிர்வஸிஷ்ட²꞉ க²லு தீர்த²ஸேவீ தபோநிதி⁴ர்கா³தி⁴ஸுதஶ்ச கோபாத் . 

உபௌ⁴ மித²꞉ ஶேபதுராடி³பா⁴வம்ʼ ப்ராப்த꞉ கிலைகோ ப³கதாம்ʼ பரஶ்ச .. 38-5..

புண்ணிய தீர்த்தத்தில் நீராடினாலும் மனம் சுத்தியாகாது. உதாரணம் வஸிஷ்டர். வஸிஷ்டர் கங்கை கரையில் வசித்து, கங்கையில் நீராடி, கங்கை நீரையே பருகியும் வந்தார். ஆனாலும் ராகத்வேஷம் நீங்கவில்லை. அதனால் தானே விஸ்வாமித்திரருடன் விவாதம் செய்தார். நிறைய தவங்கள் செய்த விஸ்வாமித்திரர்க்கும் மனத் தூய்மை இல்லை. சூர்ய வம்சத்து ராஜாவான ஸத்யவிரதனை வஸிஷ்டருக்குப் பிடிக்கவில்லை. ஆனால் விஸ்வாமித்திரன் அவனை உடலுடன் ஸ்வர்க்கம் அனுப்பினார். ஸத்யவிரதனின் மகன் ஹரிச்சந்திரன். இவனை வஸிஷ்டருக்குப் பிடிக்கும். ஆனால் விஸ்வாமித்திரர் அவனைப் பொய்சொல்ல வைக்கிறேன் என்று அவன் ராஜ்யம் முழுவதையும் எழுதி வாங்கினார். வஸிஷ்டர் விஸ்வாமித்திரரைக் கொக்காகப் போகச் சாபம் தந்தார். விஸ்வாமித்திரர் வஸிஷ்டரைப் சபித்தார். இருவரும் தனித்தனி மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தார்கள். வருஷங்கள் பல ஓடின. பிரம்மா இருவரையும் சமாதானம் செய்தார். சாபவிமோசனம் பெற்றார்கள்ஹரிச்சந்திரன் புத்திர பாக்யம் பெறுவதற்காக வஸிஷ்டர் உபதேசப்படி வருணனை உபாஸித்தான். புத்திரனை யாகத்தில் தானமாகத் தர வேண்டும் என்று வருணன் சொன்னான். ஹரிச்சந்திரனும் புத்திரன் பிறந்தால் போதும் என்று அப்பொழுது சம்மதித்தான். லோகிதாஸனும் பிறந்தான். ஆனால் ஒவ்வொரு சமயமும் குழைந்தைக்குப் பத்து நாள் கூட ஆகவில்லை, பசுவிற்குப் பல் முளைக்கவில்லை, உபநயனம் நடக்கவில்லை என்று இப்படி சாக்குகள் சொல்லி வந்தான். லோகிதன் வருணனுக்குப் பயந்துத் தலைமறைவானான். வருண சாபத்தால் அரசனுக்கு மஹோதரம் என்னும் நோய் வந்தது. ஒரு அந்தணப் பையனைப் பணம் கொடுத்து வாங்கி வருணனுக்குத் தந்தார். அதனால் விஸ்வாமித்திரர் ஹரிச்சந்திரனிடம் கோபம் கொண்டார்.

தனானீ ப்ருஷ்டானி, குரூன் அதாத்ருன்
ஸ்வான் பார்க்கவான் புத்ர,களத்ர பாஜஹ
க்ருத்தா: பரம் ஹை,ஹைய,பூமிபாலா
ன்யபீடயன்; கோத்ர, விசுத்த சித்தஹ?

த⁴னானி ப்ருʼஷ்டானி கு³ரூனதா³த்ரூʼன் ஸ்வான் பா⁴ர்க³வான் புத்ரகலத்ரபா⁴ஜ꞉ .
க்ருத்³தா⁴꞉ பரம்ʼ ஹைஹயபூ⁴மிபாலா ந்யபீட³யன் கோ(அ)த்ர விஶுத்³த⁴சித்த꞉ .. 38-6..

காமம், குரோதம், லோபம் மனதில் வந்தால் அவர்கள் எதையும் செய்யும் துணிவைப் பெறுகிறார்கள். இதற்கு உதாரணம் ஹைஹயமார்கள். கார்த்தவிராஜன் காலம் கழிந்ததும் ஹைஹயமார்கள் வறுமையால் கஷ்டப்பட்டர்கள். தன் தந்தையிடம் நிறைய தக்ஷணைகள் பெற்ற அந்தணர்களை அணுகிய போது அவர்களும் ஏதும் தர மறுத்தனர். அதனால் ஹைஹயமார்கள் அவர்களையும், அவர்களின் மனைவிகளையும் துன்புறுத்தினார்கள். இறுதியில் தேவியின் அனுக்ரஹத்தால் காப்பாற்றப் பட்டார்கள். ஹைஹயர்களுக்கு மனதில் தூய்மை இருந்திருந்தால் அந்தணர்களைத் துன்புறுத்துவார்களா?அந்தணர்களும் மனதில் சுத்தம் இருந்தால் உதவி செய்திருப்பார்கள் அல்லவா? காம குரோதத்தால் இருவருமே கஷ்டத்தைத் தான் அனுபவித்தார்கள்.

7. குர்யான்ன கிம் லோப,ஹதோ மனுஷ்யோ;
யுதிஷ்டிராத்யா, அபி தர்மநிஷ்டாஹா
பிதாமஹம் பந்து,ஜனான் குரூம்ச்ச
ரணே நிஜக்னுஹு, கலு ராஜ்யலோபாது

குர்யான்ன கிம்ʼ லோப⁴ஹதோ மனுஷ்யோ யுதி⁴ஷ்டி²ராத்³யா அபி த⁴ர்மநிஷ்டா²꞉ . 

பிதாமஹம்ʼ ப³ந்து⁴ஜனான் கு³ரூம்ʼஶ்ச ரணே நிஜக்⁴னு꞉ க²லு ராஜ்யலோபா⁴த் .. 38-7.

.லோபம் மனதில் இருந்தால் என்ன ஆகும்? சிநேகம், பந்தம் இல்லை என்று ஆகும். இதற்குப் பாண்டவர்களே உதாரணம். யுதிஷ்ட்ராதிகள் தர்மிஷ்டர்கள். ஆனால் லோபத்தால் தர்மத்தையும் மறந்தனர். பிதாமகர் பீஷ்மர். குரு த்ரோணாச்சாரியார், சகோதரகளான துரியோதனாதிகள் அனைவரும் யுத்தத்தில் இறந்தனர். இதற்குக் காரணம் என்ன? ராஜ்ய ஆசைதான். ஆசை வந்துவிட்டால் நல்லவர்கள் கூட எதையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

8. க்ருஷ்ணோபதிஷ்டோ, ஜனமேஜயஸ்து
சுத்தாந்தரங்கஹ, பிதரம் மகேன
பரீக்ஷிதம் பாப, விமுக்த மார்யம்
விதாய தே ப்ராப,யதிஸ்ம லோகம்

க்ருʼஷ்ணோபதி³ஷ்டோ ஜனமேஜயஸ்து ஶுத்³தா⁴ந்தரங்க³꞉ பிதரம்ʼ மகே²ன . 

பரீக்ஷிதம்ʼ பாபவிமுக்தமார்யம்ʼ விதா⁴ய தே ப்ராபயதிஸ்ம லோகம் .. 38-8..

பாண்டவர்களுக்கு ராஜ்ய ஆசை இருந்தது என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பேரனான பரீக்ஷித்து லோபி அல்ல. தெரியாமல் ஒரு முனிவரை அவமதித்தான். அதனால் தக்ஷகன் அவனைக் கடித்து துர் மரணம் அடைந்தான். அவர் மகனான ஜனமேஜயன் வேத வ்யாஸரிடமிருந்து தேவியின் மகிமையை அறிந்து கொண்டான். காம, குரோத லோபங்களைப் பற்றித் தெரிந்து கொண்ட ஜனமேஜயன் தேவியைக் குறித்து யக்ஞம் செய்தான். மகன் செய்த யக்ஞத்தால், பரீக்ஷித்து பாபங்கள் அழிந்து நற்கதி அடைந்தான். பாண்டவர்கள் ஆடம்பரமாக செய்த ராஜசூய யாகம் நல்லமுறையில் சம்பாதித்த பொருள்களால் செய்யப் படவில்லை. ஆகவே அதன் பலனை அவர்கள் அடையவில்லை. ஆனால் எளிய முறையில் சுத்தமான மனதுடன் செய்த யக்ஞம் பலன் தந்தது. மனத்தூய்மைதான் எதற்கும் முக்கியம்.

9. ஸதா ஸதாசார,ரதோ விவிக்தே
தேசே நிஷண்ணச்,சரணாம்புஜே தே
த்யாயன்ன ஜஸ்ரம், நிஜவாஸனாயோ
நிமார்ஷ்டி ஸ த்வன், மயதாமுபைதி

ஸதா³ ஸதா³சாரரதோ விவிக்தே தே³ஶே நிஷண்ணஶ்சரணாம்பு³ஜே தே .
த்⁴யாயன்னஜஸ்ரம்ʼ நிஜவாஸனா யோ நிர்மார்ஷ்டி ஸ த்வன்மயதாமுபைதி .. 38-9..

தன்னைத் தானே விமர்சித்துக் கொண்டு மனதில் உள்ள தோஷங்களைக் களைய வேண்டும். ராக த்வேஷங்களை நீக்க வேண்டும். ஸத்கர்மங்களைச் செய்ய வேண்டும். இப்படிச் செய்பவர்கள் ஸாயுஜ்ய முக்தி அடைவார்கள்.

10. ஞானம் ந பக்திர் ந, தபோ ந, யோக
புத்திர் ந மே சித்த,ஜயோSபி மாத ஹ!
அந்தம் தமோஹம், ப்ரவிசாமி; ம்ருத்யோஹோ
ஸமுத்தரேமம்;, வரதே! நமஸ்தே

இது போன்ற மன சுத்தியோ, பக்தியோ, ஞானமோ எதுவுமே தனக்கு இல்லை. enave தன்னுடைய காலம் முடிவதற்கு முன் தன்னைக் காப்பாற்று என்று இதன் ஆசிரியர் தேவியை வேண்டிக் கொள்கிறார்.

முப்பத்தி எட்டாம் தசகம் முடிந்தது